என் மலர்
நீங்கள் தேடியது "Tirupati"
- அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி கோவிலுக்கு ரூ.44 லட்சம் நன்கொடை கொடுத்ததாக தகவல் வெளியானது
- அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அண்மையில், அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி கோவிலுக்கு ரூ.44 லட்சம் நன்கொடை கொடுத்ததாக கூறப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கே.என்.நேரு, "நான் பணம் கொடுக்க கூடாதா? நான் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு ரூ.44 லட்சம் காணிக்கை வழங்கியது குறித்து விமர்சனம் செய்யட்டும்... எல்லோரும் என்னை நல்லவன் என்று சொல்வார்களா?" என்று கோவமாக பதில் அளித்தார்.
இந்நிலையில், இன்று அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து மீண்டும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "திருப்பதி கோவிலுக்கு நான் நன்கொடை கொடுக்கவில்லை. என்னிடம் அவ்வளவு பணமில்லை. என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் என் பெயரில் நன்கொடை கொடுத்துள்ளார். எனக்கு இது முன்னரே தெரிந்திருந்தால் வேண்டாம் என்று கூறியிருப்பேன்" என்று தெரிவித்தார்.
- கடந்த 10 நாட்களுக்கு முன்பு காதல் ஜோடி இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
- போலீசார் இருவரின் குடும்பத்தினரையும் வரவழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் பாப்பட்லா மாவட்டம், கொலக்கலூவை சேர்ந்தவர் நாக கணேஷ். இவர் குண்டூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஷிப்ட் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் தூரத்து உறவினரான தெனாலி அடுத்த எடவூருவை சேர்ந்த கீர்த்தி அஞ்சனாதேவி என்பவரை பெண் கேட்டு சென்றனர். நாக கணேஷ் தங்களது மகளை விட உயரம் குறைவாக இருப்பதால் பெண் தர அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர்.
நாக கணேஷ், கீர்த்தி அஞ்சனாதேவி இருவரும் சந்தித்த முதல் பார்வையிலேயே காதல் வயப்பட்டனர். இருவரும் தங்களது பெற்றோர்களுக்கு தெரியாமலேயே செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர். நீண்ட நேரம் செல்போனில் பேசி அரட்டை அடித்து காதலை வளர்த்து வந்தனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு காதல் ஜோடி இருவரும் வீட்டிலிருந்து வெளியேறினர். அமராவதியில் உள்ள கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். தங்களது உயிருக்கு கீர்த்தியின் பெற்றோர் மூலம் அச்சுறுத்தல் இருப்பதால் நல்லபாடு போலீசில் பாதுகாப்பு கேட்டு சரணடைந்தனர்.
போலீசார் இருவரின் குடும்பத்தினரையும் வரவழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். தங்களது திருமணம் கோவிலில் எளிமையான முறையில் நடந்ததால் உறவினர்கள், நண்பர்களை அழைத்து பிரம்மாண்ட முறையில் திருமண வரவேற்பு விழா நடத்த புதுமணத் தம்பதியினர் முடிவு செய்தனர்.
நாக கணேஷ் நேற்று காலை வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு நண்பர் ஒருவருடன் வங்கிக்கு சென்றார். நகைகளை அடகு வைத்து பணத்தைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பைக்கில் வீடு திரும்பி வந்து கொண்டு இருந்தார். நாக கணேஷ் வங்கிக்கு சென்றதை அறிந்த கீர்த்தியின் தந்தை, மகன் துர்காவிடம் எத்தனை பேர் இருந்தாலும் வெட்டி சாய்த்து விட்டு வா நான் பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
இதையடுத்து கீர்த்தியின் சகோதரர் தனது 2 நண்பர்களுடன் பைக்கில் வந்து நாக கணேசின் பைக்கை வழிமறித்தார்.
தன்னிடமிருந்த கத்தியை எடுத்து நாக கணேஷை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த நாக கணேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
துர்கா ராவ், நாக கணேஷை வெட்டி கொலை செய்வதை அந்த வழியாக சென்றவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இந்த வீடியோவை பார்த்தவர்கள் தாலியில் உள்ள ஈரம் காய்வதற்கு முன்பாகவே தங்கையின் கணவரை கொலை செய்து பூவையும் பொட்டையும் பறித்த கல் நெஞ்சம் படைத்த துர்கா ராவிற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பதிவு செய்து வருகின்றனர்.
கொலை குறித்து நல்லபாடு போலீசார் வழக்கு பதிவு செய்து துர்கா ராவ் அவரது 2 நண்பர்கள், கீர்த்தியின் தந்தை ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு Fastag கட்டாயம்.
- ICICI வங்கியுடன் இணைந்து அலிபிரி மலைப்பாதையில் Fastag வழங்கும் மையம் .
ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு Fastag கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ICICI வங்கியுடன் இணைந்து அலிபிரி மலைப்பாதையில் Fastag வழங்கும் மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
திருப்பதி அலிபிரி மாலைப்பாதையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த 2022ஆம் ஆண்டு Fasttag முறையை அறிமுகம் செய்தது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), பாதுகாப்பை மேம்படுத்தவும், கூட்ட நெரிசலைக் குறைக்கவும், வெளிப்படையான கட்டண வசூலை உறுதி செய்யவும் Fastag-ஐ கட்டாயமாக்கியுள்ளது.
- உள்நாட்டு மாடுகளின் பாலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- இதுபோன்ற முக்கியமற்ற பிரச்சினைகளை விட சமூகத்தில் மிகவும் முக்கியமான பல பிரச்சினைகள் உள்ளன.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பெருமாள் வழிபாட்டிற்கு உள்நாட்டு மாடுகளின் பாலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
யுக துளசி என்ற அறக்கட்டளை தாக்கல் செய்த மனுவை நேற்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அந்த மனுவில், ஆகம சாஸ்திரங்களின் படி வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்றும், உள்நாட்டு மாடுகளின் பாலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற ஏற்கனவே உள்ள தீர்மானத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் என். கோடிஸ்வர சிங், "இதுபோன்ற முக்கியமற்ற பிரச்சினைகளை விட சமூகத்தில் மிகவும் முக்கியமான பல பிரச்சினைகள் உள்ளன.
கடவுள் மீதான உண்மையான அன்பு சக உயிரினங்களுக்கு சேவை செய்வதில் உள்ளது, இத்தகைய விஷயங்களில் அல்ல," என்று தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
- பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.
- கோவிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள ஷீலா தோரணம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.
இன்று பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.
பக்தர்கள் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது. இதனால் கோவிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள ஷீலா தோரணம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
திருப்பதியில் நேற்று 90,087 பேர் தரிசனம் செய்தனர். 41891 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.30 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 25 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- திருப்பதி கோவிலில் இருந்து என்.ஜி.செட் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர்.
- நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒரு வாரமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கட்டுக்கடங்காத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்திருந்தனர்.
வைகுண்டம் பக்தர்கள் காத்திருப்பு அறைகள், நாராயணகிரி தோட்டம், 4 மாட வீதிகள் என அனைத்து இடங்களிலும் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர்.
இதனால் திருப்பதி கோவிலில் இருந்து என்.ஜி.செட் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர்.
திருப்பதியில் நேற்று 90, 802 பேர் தரிசனம் செய்தனர். 35,776 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 3.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- ஸ்ரேயா தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
- ரெட்ரோ படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ரேயா நடனமாடி இருந்தார்.
நடிகை ஸ்ரேயா தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், என பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பின்பு திரைப்படங்களில் நடிப்பதை ஸ்ரேயா குறைத்து கொண்டார். இந்நிலையில், அண்மையில் வெளியான ரெட்ரோ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி மீண்டும் தமிழ் திரையுலகில் அவர் அடியெடுத்து வைத்துள்ளார்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
- யாக குண்டத்தில் இருந்த தீயில் அனுமன் உருவம் தோன்றியது.
- நடிகை அவருடைய வீட்டிற்கு சஞ்சீவினி இல்லம் என பெயரிட்டுள்ளார்.
திருப்பதி:
தெலுங்கு டி.வி. நடிகை அனசுயா பரத்வாஜ். சமீபத்தில் ஒரு புதிய வீட்டிற்குக் குடிபெயர்ந்தார். அப்போது வீட்டில் கணபதி ஹோமம் பூஜை நடத்தினர்.
யாக குண்டத்தில் இருந்த தீயில் அனுமன் உருவம் தோன்றியது. இதனை செல்போனில் படம் பிடித்த நடிகை அந்தப் படத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில் ஜெய் ஹனுமான் என்று நினைக்காமல் நான் எதையும் செய்வதில்லை. நான் அனுமனை என் தந்தையாகக் கருதுகிறேன் என்பது என் அன்புக்குரிய அனைவருக்கும் தெரியும்.
நாம் எந்த கடவுளுக்கும் சத்தமாக ஏதாவது சொல்ல விரும்பினால் அதை ஒரு ஹோமம் மூலம் சொல்கிறோம். அனுமன்ஜி எங்கள் குடும்பப் பெயரையும், எங்கள் வீட்டையும் எங்களையும் ஆசீர்வதிக்க வந்தார்.
எல்லோரும் ஆன்மீகவாதிகள் அல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு ஏற்பட்ட உணர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது என தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகை அவருடைய வீட்டிற்கு சஞ்சீவினி இல்லம் என பெயரிட்டுள்ளார்.
- முதல் தளத்தில் பஸ்கள் நிறுத்துவதற்காக 98 நடைமேடைகள் அமைக்கப்பட உள்ளன.
- மின்சார பஸ்கள் சார்ஜ் வசதி செய்யபட உள்ளது.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ. 500 கோடியில், 1.54 லட்சம் சதுர அடியில், 10 மாடிகள் கொண்ட அதிக நவீன பஸ் நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பஸ் நிலையம் அமைக்க ஆந்திர மாநில அரசு போக்குவரத்து துறைக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை தளவாட மேலாண்மை இதற்கான நிதியை வழங்குகிறது.
தனியார் ஒப்பந்ததாரர் மூலம் இந்த பணிகள் நடைபெற உள்ளது. தற்போது உள்ள பஸ் நிலையத்தில் 3 பக்கங்களில் சாலைகள் உள்ளன தற்போது கட்டப்பட உள்ள நவீன பஸ் நிலையத்தில் 4 பக்கம் சாலைகள் கொண்டதாக வடிவமைக்கப்படும்.
முதல் தளத்தில் பஸ்கள் நிறுத்துவதற்காக 98 நடைமேடைகள் அமைக்கப்பட உள்ளன. 2-வது தளத்தில் கார், பைக் நிறுத்துவதற்காக இடம் ஒக்கப்பட உள்ளன. மின்சார பஸ்கள் சார்ஜ் வசதி செய்யபட உள்ளது.
அரசு போக்குவரத்து கழக அலுவலகம் உணவகங்கள் கடைகளும் 3-வது தளத்தில் மின் மேலாண்மை அலுவலகம், சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது.
4 முதல் 7-வது தளங்களில் வணிக வளாகங்களும் 8 முதல் 10 மாடி வரை வங்கிகள் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளது. 10-வது மாடியில் ஹெலிகாப்டர்கள் நிறுத்துவதற்கான ஹெலி பேட் அமைக்கப்பட உள்ளன.
பஸ் நிலைய கட்டுமான பணி தொடங்கியவுடன் 3 இடங்களில் பஸ் நிலையங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளது.
ரெயில் நிலையத்தில் இருந்து பயணிகள் நேரடியாக பஸ் நிலையம் வருவதற்காக ஸ்கை வாக் அமைக்கப்படும். இந்த பஸ் நிலையம் நுழைவு வாயில் திருப்பதி கோவிலை போன்று வடிவமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- எடப்பாடி பழனிசாமி நேற்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
- எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் இன்று திருப்பதிக்கு சென்றுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

பிறந்தநாள் முடிந்த கையொடு எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் இன்று திருப்பதிக்கு சென்றுள்ளார். அங்கு திருமலையில் உள்ள ஹயக்ரீவர் மற்றும் வராக சுவாமி கோயிலில் குடும்பத்தினருடன் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். அவருடன் பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
- ரெயில் திருப்பதி வந்ததும் ரெயிலில் நடந்த கொள்ளை குறித்து பயணிகள் புகார் தெரிவித்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் நேற்று இரவு நிஜமாபாத்தில் இருந்து புறப்பட்டு வந்தது. இன்று அதிகாலை 1.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் குத்தி ரெயில் நிலையம் அருகே சிக்னலுக்காக ரெயில் நிறுத்தப்பட்டது.
அப்போது 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளின் பெட்டியில் ஏறினர். அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளை தட்டி எழுப்பினர்.
மேலும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி நகை, பணத்தை பறித்தனர். யாராவது சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி சென்றனர்.
மொத்தம் 10 பெட்டிகளில் இருந்த பயணிகளை மிரட்டி நகை பணம் மற்றும் பொருட்களை கொள்ளையர்கள் பறித்து சென்று விட்டனர்.
இதனால் பயத்தில் பயணிகள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்தனர். ரெயில் திருப்பதி வந்ததும் ரெயிலில் நடந்த கொள்ளை குறித்து பயணிகள் புகார் தெரிவித்தனர்.
பயணிகள் 20 பேர் திருப்பதி ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தால் திருப்பதி ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிக்னலுக்காக ரெயில் நிறுத்தப்படும் இடத்தை முன்கூட்டியே அறிந்து திட்டமிட்டு கும்பல் கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர்.
இதில் வட மாநில கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அலிபிரி சோதனை சாவடி வழியாக வியாபாரிகள் மதுபானம் மற்றும் கஞ்சா கடத்திச் சென்று பிடிபட்டனர்.
- கோடைகால விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
திருப்பதி:
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்கு முன்தினம் மேற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த ஜனவரி 20-ந் தேதி பாதுகாப்பு விதிமுறைகளை மீறி முட்டை பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகள் திருப்பதி மலைக்கு கொண்டு செல்லப்பட்டன
மார்ச் மாதத்தில் அலிபிரி சோதனை சாவடி வழியாக வியாபாரிகள் மதுபானம் மற்றும் கஞ்சா கடத்திச் சென்று பிடிபட்டனர். ஏப்ரல் 10-ந் தேதி தடையை மீறி கோவிலுக்கு அருகில் டிரோன் ஒன்று பறந்தது.
இது பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியது உள்ளிட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து திருப்பதி எம்.பி. புகார் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் பஹல் காமில் பயங்கரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்றனர். இதன் காரணமாகவும் திருப்பதி கோவிலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கைத் விடுத்துள்ளது.
கோவிலுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் அலிபிரியில் தீவிர சோதனைக்கு பிறகு மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
கோடைகால விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அலிபிரி சோதனை சாவடியில் காலை 8 மணி முதல் 12 மணி வரை வாகனங்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் ஆர்ச் வரை காத்துக் நின்றன. போதிய அளவு வாகன சோதனை செய்யும் பாதுகாப்பு படையினர் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருப்பதியில் கடும் வெயில் கொளுத்தி வருவதால் பக்தர்களிள் வாகனங்கள் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.






