என் மலர்
நீங்கள் தேடியது "தேவஸ்தானம்"
- திருவண்ணாமலை கோவில் ராஜகோபுரம் முன் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு.
- கோவில் நிலமாக இருந்தாலும் அரசு புறம்போக்கு நிலமாக இருந்தாலும் கட்டுமானம் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது," தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களை பராமரிக்க தேவஸ்தானம் அமைப்பது குறித்து யோசிக்கும் தருணம் இது என்று அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும், கோவில் அருகே கோவில் நிலமாக இருந்தாலும் அரசு புறம்போக்கு நிலமாக இருந்தாலும் கட்டுமானம் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது.
ராஜகோபுரம் முன் பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்துவது குறித்த மாற்று திட்டம் சம்பந்தமாக அறிக்கை தர அறநிலையத்துறைக்கு 2 வாரங்கள் அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணை செப்டம்பர் 7ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
- ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு Fastag கட்டாயம்.
- ICICI வங்கியுடன் இணைந்து அலிபிரி மலைப்பாதையில் Fastag வழங்கும் மையம் .
ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு Fastag கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ICICI வங்கியுடன் இணைந்து அலிபிரி மலைப்பாதையில் Fastag வழங்கும் மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
திருப்பதி அலிபிரி மாலைப்பாதையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த 2022ஆம் ஆண்டு Fasttag முறையை அறிமுகம் செய்தது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), பாதுகாப்பை மேம்படுத்தவும், கூட்ட நெரிசலைக் குறைக்கவும், வெளிப்படையான கட்டண வசூலை உறுதி செய்யவும் Fastag-ஐ கட்டாயமாக்கியுள்ளது.
- அனிமேஷன் வீடியோ தொகுப்பு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- வீடியோ கேம் முழுவதையும் ஆன்லைனில் இருந்து நீக்க வேண்டும் என தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை உள்ளிட்டவை 3டி அனிமேஷன் மூலம் வீடியோ கேமாக தயாரித்து ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அனிமேஷன் வீடியோ தொகுப்பு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோ கேமில் தேவஸ்தான தொலைக்காட்சிகளில் வரும் சில அனிமேஷன் வீடியோக்கள், திருப்பதியில் ஒளிபரப்பப்படும் பக்தி பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் புனிதமாக கருதும் ஆன்மிகத்தை விளையாட்டாக செய்து அதனை இழிவுபடுத்தும் விதமாக வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு உள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தேவஸ்தான நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பக்தர்களின் மனம் புண்படும் விதமாக செயல்பட்டுள்ள வீடியோ கேம் நிறுவனங்களின் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
ஏழுமலையான் கோவில் வடிவமைப்பில் தயாராகி உள்ள வீடியோ கேம் முழுவதையும் ஆன்லைனில் இருந்து நீக்க வேண்டும் என தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருப்பதியில் நேற்று 69,609 பேர் தரிசனம் செய்தனர்.
- ரூ 4.11 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதிமலைக்கு பஸ், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் வருகின்றனர்.
தற்போது மலைப்பாதை விரிவாக்கம் செய்து தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதனால் திருப்பதி மலைக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் விபத்தை தவிர்ப்பதற்காக பயண திட்டத்தை மாற்றி அமைத்து 1 மணி நேரம் முன்னதாக வரவேண்டும்.
மலைப்பாதையில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்க நேரிடும்.
எனவே வாகனங்களை மலைப்பாதையில் மெதுவாக இயக்க வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 69,609 பேர் தரிசனம் செய்தனர். 33,144 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.11 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 16 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- குறிப்பிட்ட விஐபி மற்றும் விஐபி அல்லாத விருந்தினர் மாளிகையை புனரமைக்க ஒப்புதல்.
- அலிபிரியில் அறிவியல் நகரம் மற்றும் மியூசியம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட முடிவு ரத்து.
2025-26 நிதியாண்டில் 5,259 கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அதன் சேர்மேன் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.
கோவில் சமையலறை (Temple Kitchen) ஊழியர்கள் சம்பளம் உயர்வு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராயவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதுபோக கோடங்கல், கரீம்நகர், உபமகா, அனகபலே, குர்னூல், தர்மவரம், தலகோனா, திருப்பதி (கங்கம்மா கோவில்) ஆகிய இடங்களில் உள்ள கோவில்களை புனரமைக்க நிதியுதவி வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட விஐபி மற்றும் விஐபி அல்லாத விருந்தினர் மாளிகையை புனரமைக்கவும், அலிபிரியில் அறிவியல் நகரம் மற்றும் மியூசியம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட முடிவு ரத்து செய்யுள்ளது.
- தஞ்சை அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட கோவில்களில் போதிய வருவாய் இல்லாத காரணத்தினால் ஏற்பட்டுள்ளது.
- தமிழக அரசு மானியமாக ரூ.3 கோடியை தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்கு கடந்த 4-ந் தேதி வழங்கியது.
தஞ்சாவூர்:
தஞ்சை அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட 88 கோவில்களில் பெரும்பாலான கோவில்களில் போதிய வருவாய் இல்லாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் தமிழக அரசு மானியமாக ரூ.3 கோடியை தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்கு கடந்த 4-ந் தேதி வழங்கியது.
இதனை தமிழக முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லேவிடம் வழங்கினார்.
இதில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள், இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் நிதி வழங்கிய தமிழக அரசுக்கும், முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விமான நிலையத்துக்குப் பதிலாக திருமலை கோகுலம் தங்கும் விடுதியில் டிக்கெட் வழங்கப்படுகிறது.
- வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வரை பரமபதவாசல் திறக்கப்படுகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலை யானை தரிசிக்க வரும் வெளிநாட்டு பக்தர்களின் வசதிக்காக திருப்பதி விமான நிலையத்தில் தினமும் 100 நேரடி (ஆப்லைன்) தரிசன ஸ்ரீவாணி டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வழங்கி வருகிறது.
ஆனால், ஸ்ரீவாணி டிக்கெட்டுகளுக்கு விமான நிலையத்தில் அனுமதி வழங்கப்படாததால், இன்று முதல் விமான நிலையத்துக்குப் பதிலாக திருமலை கோகுலம் தங்கும் விடுதியில் டிக்கெட் வழங்கப்படுகிறது.
ஸ்ரீவாணி தரிசனம் நேரடி(ஆப்லைன்)தரிசன டிக்கெட்டுகளுக்கு வழக்கம் போல் அனுமதி சீட்டு சமர்ப்பித்த பக்தர்களுக்கு தினமும் 100 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வரை பரமபதவாசல் திறக்கப்படுகிறது.
இதையொட்டி வருகிற 19-ந் தேதி கோவில் சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது. எனவே அன்று தேவஸ்தானம் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்துள்ளது.
வருகிற 18-ந் தேதி முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.






