என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி கோவில்"

    • ஆதிவராக மூர்த்தி சன்னிதிக்கு அருகில் சுவாமி புஷ்கரணி தீர்த்தம் உள்ளது.
    • தினந்தோறும் அதிகாலையில் ஆகாச கங்கை தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

    ஏழுமலையான் என்று அழைக்கப்படும் திருப்பதி வெங்கடாஜலபதி வீற்றிருக்கும், திருமலையில் ஏராளமான புனிதத் தீர்த்தங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில தீர்த்தங்களைப் பற்றியும், அதில் நீராடுவதன் பலனையும் பார்க்கலாம்.

    சுவாமி புஷ்கரணி

    ஆதிவராக மூர்த்தி சன்னிதிக்கு அருகில் இந்த தீர்த்தம் உள்ளது. இதனை 'தீர்த்தங்களின் அரசி' என்று அழைக்கிறார்கள். இங்கு சரஸ்வதிதேவி தவம் இயற்றியதாக தல புராணம் சொல்கிறது. மிகவும் புனிதத்துவம் பெற்ற தீர்த்தம் இது. மார்கழி மாதம் வளர்பிறையில் துவாதசி நாளில் சூரிய உதயத்திற்கு 6 நாழிகை முன்பிருந்து, சூரிய உதயத்திற்கு பின்பான 6 நாழிகை வரை திருப்பதி மலையில் உள்ள அனைத்து தீர்த்தங்களும், இந்த தீர்த்தத்தில் கூடுகின்றன. எனவே அன்றைய தினம் இதில் நீராடி வழிபட்டால் இறைவனின் திருவடியை அடையலாம்.

    குமார தீர்த்தம்

    மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று (மாசி பவுர்ணமி), சகல தீர்த்தங்களும் வந்து இந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடுகின்றன. மனதிற்கு உற்சாகமும், உடலுக்கு இளமையும் தரும் இத்தீர்த்தத்தில் நீராடுபவர்கள், ராஜசூய யாகம் செய்த பலனைப் பெறுவர்.

    தும்புரு தீர்த்தம்

    இறைவனை தன்னுடைய நாம சங்கீர்த்தனத்தால் பாடும் தும்புரு முனிவர், திருப்பதி வெங்கடாஜலபதியை நினைத்து தவம் இருந்த இடத்தில் இருப்பதால் இதற்கு 'தும்புரு தீர்த்தம்' என்று பெயர். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று (பங்குனி பவுர்ணமி), இதில் நீராடுவோருக்கு இறைவன் அடியைச் சேரும் பாக்கியம் உண்டு.

    ஆகாச கங்கை

    தினந்தோறும் அதிகாலையில் இந்த தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சகல பாவங்களையும் போக்கும் இத்தீர்த்தத்தின் அருகில் எண்ணற்ற ரிஷிகள் தவமிருந்தனர். அந்தக் காலத்திலேயே திருமலை நம்பிகள் தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து ஒரு பெரிய குடத்தில் வேங்கடவனுக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்துக்கொண்டு நடந்தே வருவாராம். கோவிலில் இருந்து சுமார் 2 மைல் தூரம் நடந்து வரும் இவரின் பக்தியை மெச்சி, அவருக்கு பெருமாள் காட்சி கொடுத்தார். சகல சித்திகளையும் அளிக்கும் இத்தீர்த்தத்தில் சித்திரை மாதம் பவுர்ணமியன்று நீராடுவது மிகச் சிறப்பு.

    பாண்டு தீர்த்தம்

    வைகாசி மாதம் வளர்பிறை துவாதசியுடன் கூடிய செவ்வாய்க்கிழமையில் பல தீர்த்தங்கள் இதில் கூடுவதால், அந்த நாளில் இந்த தீர்த்தத்தில் நீராடுவது விசேஷம். இதனால் சகல பாவங்களில் இருந்தும் விடுபடலாம்.

    பாபவிநாசன தீர்த்தம்

    இத்தீர்த்தம் இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. மிக்க சுவையுடன் விளங்கும் தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. ஐப்பசி மாதம் வளர்பிறை சப்தமி திதியும், உத்திராட நட்சத்திரமும் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் இதில் சில தீர்த்தங்கள் கூடுகின்றன. அன்றைய தினத்தில் இதில் நீராடுவோர் ஞானம் பெறுவதுடன், பாவங்களில் இருந்து விடுபடுகின்றனர்.

    • மலைப்பாதையில் உள்ள விநாயகர் கோவில் அருகே சிறுத்தை ஒன்று நடமாடுவதை கண்டனர்.
    • மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இளைஞர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வுக்காகவும், சனாதன தர்மத்தின் மீதான பக்தியை வளர்க்கும் நோக்குடன் கோவிந்தகோடி நாமம் என்ற திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சம் தடவை கோவிந்தா என்ற நாமத்தை எழுதி வரும் பக்தர்களுக்கு வி.ஐ.பி பிரேக் தரிசனம் வழங்கப்படும் என அறிவித்து இருந்தனர்.

    இந்த திட்டத்தில் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் கோவிந்த நாமம் எழுதி வரலாம். கோவிந்த நாமம் எழுதுவதற்கான புத்தகங்கள் திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் புத்தகக் கடைகள் மற்றும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. 200 பக்கம் கொண்ட புத்தகத்தில் 39 ஆயிரத்து 600 வாசகங்களை நிரப்ப முடியும். அதன்படி வாசகம் எழுதுபவர்கள் 26 புத்தகங்களை வாங்க வேண்டும். 10 லட்சம் வாசகங்களை எழுத 3 ஆண்டுகள் ஆகும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோவிந்த நாமம் எழுதி வந்து தேவஸ்தானத்தில் ஒப்படைப்பவர்களுக்கு மறுநாள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் வழங்கப்படும்.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் சேர்ந்த கீர்த்தனா என்ற கல்லூரி மாணவி 10,01,116 தடவை கோவிந்த நாமம் எழுதி வந்து வி.ஐ.பி பிரேக் தரிசனம் பெற்றார். அதேபோல் மேலும் 2 பேர் பிரேக் தரிசனம் பெற்றனர்.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடை பாதைகளில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு பெற்றோர்களுடன் அலிபிரி நடப்பாதையில் சென்ற சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்து கொன்றது. இதனால் நடைபாதைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு விலங்குகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். நேற்று மதியம் அலிபிரியில் இருந்து சில பக்தர்கள் மலைக்கு பைக்கில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது மலைப்பாதையில் உள்ள விநாயகர் கோவில் அருகே சிறுத்தை ஒன்று நடமாடுவதை கண்டனர். இதுகுறித்து, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் அலிபிரி பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தேவசம் போர்டு அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளுடன் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    நடைபாதை பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர்.

    • இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
    • இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

    பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆந்திர மாநில டி.ஜி.பி ஹரிஷ் குமார் குப்தா உத்தரவின் பேரில் திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு ஹரிஷ் வர்தன் ராஜு தலைமையில் திருப்பதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    மேலும் ஆக்டோபஸ் படை, போலீசார், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 120 பேர் கொண்ட குழுவினர் சந்தேகத்திற்கு இடமான நபர்கள், முக்கிய இடங்கள், நெரிசலான பகுதிகளில் 4 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர்.


    பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகை, 4 மாட விதிகள், கொல்ல மண்டபம், வராக சாமி கோவில், வெங்கடேஸ்வரா ஓய்வு இல்லம், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை, அலிபிரி உள்ளிட்ட இடங்களில் 16 மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் சோதனை செய்தனர். அலிபிரியில் பக்தர்களின் உடைமைகள் மற்றும் வாகனங்களை முழுமையாக சோதனை நடத்திய பிறகு திருப்பதி மலைக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. திருப்பதி மலை முழுவதும் துப்பாக்கி ஏந்திய ஆக்டோபஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 68,213 பேர் தரிசனம் செய்தனர். 29, 635 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.45 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • பக்தர்களின் சிரமத்தை போக்குவதற்காக நன்கொடையாளர்கள் மூலம் 20 மின்சார பஸ்கள் வாங்கப்படுகிறது.
    • நேற்று வார இறுதி விடுமுறை நாள் என்பதால் அதிக அளவில் கூட்டம் இருந்தது.

    திருப்பதிக்கு சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகளில் மலைக்கு நடந்து வருகின்றனர்.

    திருப்பதி பஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் இருந்து நடைபாதைக்கு ஆட்டோ, கார், வேன் மூலம் வரும் பக்தர்களிடம் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கின்றனர்.

    பக்தர்களின் சிரமத்தை போக்குவதற்காக நன்கொடையாளர்கள் மூலம் 20 மின்சார பஸ்கள் வாங்கப்படுகிறது. பஸ் மற்றும் ரெயில் நிலையத்தில் இருந்து அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதைக்கு இலவசமாக பஸ்கள் இயக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த செய்தி நடைபாதை பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதியில் நேற்று 83,380 பேர் தரிசனம் செய்தனர். 27,936 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.35 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேற்று வார இறுதி விடுமுறை நாள் என்பதால் அதிக அளவில் கூட்டம் இருந்தது. இன்று காலை பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்தது. பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் இன்று காலை முதல் பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    • திருப்பதியில் பல இடங்களில் கியூஆர் குறியீடு ஸ்கேன் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
    • கருத்தை தெரிவிக்கும் வகையில் 600 எழுத்துக்கள் வடிவில் கருத்தை பதிவு செய்யலாம்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    இதனால் நேற்று பக்தர்கள் காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பி வழிந்தது. மேலும் நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 7 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதியில் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.

    பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து இருந்தனர்.

    திருப்பதியில் நேற்று 74,344 பேர் தரிசனம் செய்தனர். 32,169 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 2.50 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு ஏராளமான சேவைகள் வழங்கப்படுகின்றன.

    இந்தச் சேவை குறித்தும், அவற்றின் தரத்தை உயர்த்தவும், பக்தர்களிடம் கருத்து கேட்க வாட்ஸ்அப் முறையை தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது.

    இதற்காக, திருப்பதியில் பல இடங்களில் கியூஆர் குறியீடு ஸ்கேன் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கேனை ஓபன் செய்தால் வாட்ஸ்அப்பில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பார்வை சேகரிப்பு பக்கம் திறக்கப்படும்.

    அதில் பக்தர்களின் பெயர், பிரிவு, அன்ன பிரசாதம், லட்டு பிரசாதம், அறைகள், முடி காணிக்கை வழங்கும் இடம், கியூ லைன், தரிசன அனுபவம் போன்றவை தேர்வு செய்ய வேண்டும்.

    கருத்தை தெரிவிக்கும் வகையில் 600 எழுத்துக்கள் வடிவில் கருத்தை பதிவு செய்யலாம். அல்லது வீடியோ பதிவு செய்யலாம். பக்தர்களின் கருத்துக்களை தேவஸ்தானம் பரிசீலனை செய்து குறைகளை நிவர்த்தி செய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருப்பதியில் நேற்று 57,863 பேர் தரிசனம் செய்தனர்.
    • ரூ.3.04 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை தொடங்கியதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    இன்று காலையில் காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பியது. சுமார் 2 கிலோ மீட்ட தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    திருப்பதியில் நேற்று 57,863 பேர் தரிசனம் செய்தனர். 31,030 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.04 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    திருப்பதி கோவில் பாபவிநாசம் அருகே உள்ள தும்புரா தீர்த்தம் வனப்பகுதியில் பிடித்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறையினர், தீயணைப்பு துறையினருடன் இணைந்து சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    தீ விபத்தில் வனப்பகுதியில் இருந்த மரங்கள், மூலிகை செடி கொடிகள் எரிந்து நாசமானது. அதற்குள் தீ திருப்பதி கோவில் வரை பரவியது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    அப்போது திடீரென லேசான மழை பெய்தது. இதனால் தீ ஓரளவுக்கு கட்டுப்பட்டது. மழை நின்ற பிறகு மீண்டும் தீ பரவியது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    • கூட்ட நெரிசலை குறைப்பதற்காக திருப்பதி தேவஸ்தானம் புதிய நடைமுறையை தற்போது செயல்படுத்தியுள்ளது.
    • பொதுமக்கள் வழக்கமாக செல்லும் தரிசனத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

    கோடை விடுமுறை காலம் என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தரிசன நடைமுறையில் இன்று முதல் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

    வி.ஐ.பி. தரிசனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வி.ஐ.பி. பரிந்துரை கடிதங்கள் 2½ மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. வியாழன், வெள்ளிக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும் வி.ஐ.பி. தரிசனத்தில் மாற்றம் செய்து பரீட்சார்ந்த முறையில் நடைமுறைக்கு வந்துள்ளது.

    நீதிபதிகள், மந்திரிகள் உள்ளிட்ட உயர் பதவி வகிக்கும் வி.ஐ.பி.களுக்கு அதிகாலை 5.45 மணியும், எம்.பி. எம்.எல்.ஏக்களுக்கு காலை 6.30 மணியும், ஜெனரல் பிரேக் தரிசனத்துக்கு 6.45 மணியும், ஸ்ரீவாணி தரிசனத்திற்கு (ரூ.10 ஆயிரம் கட்டணம்) 10.15 மணியும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    அதேபோல நன்கொடையாளர்கள் காலை 10.30 மணியும், திருமலை திருப்பதி தேவஸ்தான ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு காலை 11 மணியும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

    வி.ஐ.பி. சிறப்பு தரிசனத்திற்காக பெறப்படும் பரிந்துரை கடிதங்கள் இன்று முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் வழக்கமாக செல்லும் தரிசனத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. கூட்ட நெரிசலை குறைப்பதற்காக திருப்பதி தேவஸ்தானம் புதிய நடைமுறையை தற்போது செயல்படுத்தியுள்ளது.

    • ஏ.டி.சி அருகே உள்ள லக்கேஜ் மையத்தில் சோதனை அடிப்படையில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
    • சோதனை அடிப்படையிலான முறைக்கு 98 சதவீதம் பக்தர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களது செருப்புகளை பாதுகாப்பதில் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

    பக்தர்களின் சிரமத்தைப் போக்க திருப்பதி தேவஸ்தானம் ரேடியோ அதிர்வெண் ஸ்கேனிங் முறையை அறிமுகம் செய்துள்ளது.

    ஏ.டி.சி அருகே உள்ள லக்கேஜ் மையத்தில் சோதனை அடிப்படையில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி பக்தர்கள் தங்களது செருப்புகளை லக்கேஜ் மையத்தில் உள்ளவர்களிடம் கொடுத்தால் பக்தர்களின் போட்டோ மற்றும் செல்போன் எண்ணுடன் ஸ்கேனிங் வசதியுடன் கூடிய ரசீது வழங்குகின்றனர். பிறகு செருப்புகளை பையில் சேகரித்து வைத்துக் கொள்கின்றனர்.

    தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள் மையத்தில் உள்ள நபரிடம் ரசீதை கொடுத்தால் அதை ஸ்கேன் செய்யும் போது அவருடைய செருப்பு எந்த வரிசையில் எந்த ரேக்கில் உள்ளது என தெளிவாக அடையாளம் காண முடியும்.

    இதனால் பக்தர்கள் செரூப்பை எந்தவித சிரமமும் இன்றி விரைவில் பெற முடியும்.

    இந்த சோதனை அடிப்படையிலான முறைக்கு 98 சதவீதம் பக்தர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து மீதமுள்ள கவுண்டர்களிலும் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று 65,904 பேர் தரிசனம் செய்தனர். 24,487 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.55 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • கருடா வட்டம் வரை பக்தர்களின் வாகனங்கள் பல மணி நேரம் வரிசையில் காத்து நின்றன.
    • நடைபாதையில் செல்லும் பக்தர்கள் மிகுந்த விழிப்புடன் கும்பலாக செல்ல தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாள் என்பதால் நேற்று திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் நேர ஒதுக்கீட்டு சர்வ தரிசன டிக்கெட் பெறுவதற்காக ஸ்ரீவாரி மெட்டு மற்றும் அலிபிரி நடைபாதைகளில் குவிந்தனர்.

    அதிக அளவு பக்தர்கள் குவிந்ததால் தரிசன டிக்கெட் வாங்க பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர்.

    தற்போது திருப்பதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கைக்குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் மற்றும் முதியவர்கள் வெப்பத்தை தாங்க முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர். திருப்பதியில் பக்தர்கள் காத்திருக்கும் 31 அறைகளும் பக்தர்கள் நிரம்பி காணப்பட்டது.

    காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தற்போது திருப்பதி மலைக்கு வரும் வாகனங்கள் அலிபிரி சோதனை சாவடியில் ஆக்டோபஸ் படையினர் மற்றும் போலீசார் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு சோதனை கருவிகளை கொண்டு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் கருடா வட்டம் வரை பக்தர்களின் வாகனங்கள் பல மணி நேரம் வரிசையில் காத்து நின்றன.



    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் அலிபிரி நடைபாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுத்தை ஒன்று அப்பகுதியில் நடமாடுவதை கண்டனர். இதையடுத்து சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டினர். நடைபாதையில் செல்லும் பக்தர்கள் மிகுந்த விழிப்புடன் கும்பலாக செல்ல தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 82,811 பேர் தரிசனம் செய்தனர். 34,913 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.24 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். 

    • அலிபிரி சோதனை சாவடி வழியாக வியாபாரிகள் மதுபானம் மற்றும் கஞ்சா கடத்திச் சென்று பிடிபட்டனர்.
    • கோடைகால விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    திருப்பதி:

    திருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்கு முன்தினம் மேற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    கடந்த ஜனவரி 20-ந் தேதி பாதுகாப்பு விதிமுறைகளை மீறி முட்டை பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகள் திருப்பதி மலைக்கு கொண்டு செல்லப்பட்டன

    மார்ச் மாதத்தில் அலிபிரி சோதனை சாவடி வழியாக வியாபாரிகள் மதுபானம் மற்றும் கஞ்சா கடத்திச் சென்று பிடிபட்டனர். ஏப்ரல் 10-ந் தேதி தடையை மீறி கோவிலுக்கு அருகில் டிரோன் ஒன்று பறந்தது.

    இது பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியது உள்ளிட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து திருப்பதி எம்.பி. புகார் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் பஹல் காமில் பயங்கரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்றனர். இதன் காரணமாகவும் திருப்பதி கோவிலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கைத் விடுத்துள்ளது.

    கோவிலுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் அலிபிரியில் தீவிர சோதனைக்கு பிறகு மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

    கோடைகால விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அலிபிரி சோதனை சாவடியில் காலை 8 மணி முதல் 12 மணி வரை வாகனங்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் ஆர்ச் வரை காத்துக் நின்றன. போதிய அளவு வாகன சோதனை செய்யும் பாதுகாப்பு படையினர் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருப்பதியில் கடும் வெயில் கொளுத்தி வருவதால் பக்தர்களிள் வாகனங்கள் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    • எஞ்சின் கூல் அண்ட் ஆயில், பிரேக், ஏசி ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும்.
    • நியூட்ரலில் வாகனங்களை இயக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க சொந்த வாகனங்களில் வருபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஷர்ஷவார்த்தன் ராஜு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    கோடை வெப்பம் காரணமாக சமீபத்தில் திருப்பதி மலை பாதையில் வந்த 2 கார்கள் தீப்பிடித்து எரிந்தன.

    இதுகுறித்து நிபுணர்கள் அளித்த அறிக்கை படி, பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 500 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வரும் வாகனங்கள் அதிகம் வெப்பம் அடைகிறது. மலைப்பாதையில் பயணம் செய்வதற்கு முன் 30 நிமிடங்கள் காரை நிறுத்தி அணைத்து வைக்க வேண்டும்.

    எஞ்சின் கூல் அண்ட் ஆயில், பிரேக், ஏசி ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும். மலைப்பாதையில் வாகனங்களில் செல்லும் போது ஏசியை பயன்படுத்தக் கூடாது. அடிக்கடி பிரேக் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். நியூட்ரலில் வாகனங்களை இயக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

    • இன்று காலை 6 மணி நிலவரப்படி 7 அறைகளில் மட்டுமே பக்தர்கள் காத்திருந்தனர்.
    • பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்து வந்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை என்பதால் கடந்த 4 நாட்களாக கட்டுக்கடங்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காத்திருப்பு அறைகள் அனைத்தும் பக்தர்கள் கூட்டத்தால் நிறைந்தது. சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

    திருப்பதி மலை முழுவதும் பக்தர்கள் காணப்பட்டனர். இதனால் இலவச நேரடி தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இன்று காலை பக்தர்கள் கூட்டம் படிப்படியாக குறைந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி 7 அறைகளில் மட்டுமே பக்தர்கள் காத்திருந்தனர். இதனால் விரைவாக தரிசனம் செய்து வருவதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கொரோனா காலத்திற்கு முன்பு அலிபிரி நடைபாதையில் 14 ஆயிரம் டோக்கன்களும், ஸ்ரீவாரி மெட்டு நடை பாதையில் 6 ஆயிரம் நேர ஒதுக்கீட்டு டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. இதனால் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்து வந்தனர்.

    கொரோனா காலத்தில் நடைபாதையில் டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டது. மீண்டும் நேர ஒதுக்கீடு டோக்கன்களை வழங்க வேண்டும் என பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 82,746 பேர் தரிசனம் செய்தனர். 25.078 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.85 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    ×