என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dhanush"

    • தனுஷ் - ஆனந்த் எல் ராய் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்"
    • இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது.

    பாலிவுட்டில் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

    பாலிவுட்டில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2013 இல் வெளியாகி வரவேற்பை பெட்ரா படம் 'ராஞ்சனா'. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ஒரு கிளாசிக்.

    இந்நிலையில் தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein).

    இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். கடந்த வாரம் வெளியான இப்படம் பாலிவுட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில், தேரே இஸ்க் மேன் இந்தி திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களில் ரூ. 50.95 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்தி மொழியில் மட்டும் தான் இந்த வசூல் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சீதா ராமம் படத்தின் மூலம் மிருணாள் தாகூர் புகழ்பெற்றார்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் காயமடைந்தார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுசும், பாலிவுட் நடிகை மிருணாள் தாகூரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

    அஜய் தேவ்கானுடன், மிருணாள் தாகூர் நடித்துள்ள 'சன் ஆப் சர்தார்-2' பட விழாவில் தனுஷ் கலந்துகொண்டதும், மிருணாள் தாகூருடன் கைகோர்த்துக்கொண்டு சுற்றியதும் இதற்கு தூபம் போடுவதுபோல அமைந்தது.

    இதுகுறித்து பேசிய மிருணாள் தாகூர், "நடிகர் தனுஷ் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே. எங்கள் இருவரை பற்றியும் வதந்திகள் பரவி வருவதை அறிகிறோம். இதுபோன்ற வதந்திகளை பார்க்கும்போது, எனக்கு சிரிப்புதான் வந்தது" என்று விளக்கம் கொடுத்து இந்த சர்ச்சைக்கு முடிவுரை எழுதினார்.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் அய்யரும் நடிகை மிருணாள் தாகூரும் ரகசியமாக காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் கசித்துள்ளது.

    ஷ்ரேயாஸ் மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோர் தங்களின் கேரியரின் உச்சத்தில் இருப்பதால் இந்த காதலை பொதுவெளியில் அறிவிக்க தயக்கம் காட்டுவதாகவும் தங்ஙளின் நண்பர்களின் பார்ட்டி மற்றும் விழாக்களில் மட்டும் சந்தித்து காதலை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் காயமடைந்த ஷ்ரேயாஸ் தற்போது குணமடைந்து ஓய்வில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • D55 படத்தில் இருந்து கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் விலகியுள்ளது.
    • இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி D55 படத்தை ஒரு பெரிய அளவில் ஆக்‌ஷன் அதிரடி படமாக எடுக்க முடிவு செய்துள்ளார்.

    கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இணையும் படம் D55. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக கூறப்பட்டது. மேலும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இணையும் D55 படத்தில் இருந்து கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் விலகியுள்ளது. இப்போது இப்படம் தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாக உள்ளது.




    இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி D55 படத்தை ஒரு பெரிய அளவில் ஆக்ஷன் அதிரடி படமாக எடுக்க முடிவு செய்துள்ளார். மலையாள நடிகர் மம்முட்டி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் இதற்காக அவருக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது.
    • பனாரஸின் குறுகிய பாதைகளில் குந்தன் என்ற பெயர் இன்னும் எதிரொலிக்கிறது.

    பாலிவுட்டில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2013 இல் வெளியாகி வரவேற்பை பெட்ரா படம் 'ராஞ்சனா'.

    தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. குந்தன் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் வாழ்ந்திருந்தார். படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ஒரு கிளாசிக்.

    இந்நிலையில் தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein). இதில் ஷங்கர் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். 

    இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது. அந்த கதையோடு தொடர்புடையது என்றும் கூறப்படுகிறது. 

    இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். இப்படம் நாளை, 28ம் தேதி வெளியாக உள்ளது.

    இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான 'உசே கெனா' மனதை உருக்கும் வகையில் இருந்தது.

    இந்நிலையில் ரே இஷ்க் மெய்ன் புரமோஷனுக்காக வாரணாசி சென்றுள்ள தனுஷ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "நினைவுப் பாதையில் ஒரு நடை. இதெல்லாம் எங்கிருந்து தொடங்கியது. குந்தன், ஒரு தசாப்தத்திற்கும் மேலாகியும் என்னை விட்டு விலக மறுக்கும் ஒரு கதாபாத்திரம்.

    பனாரஸின் குறுகிய பாதைகளில் குந்தன் என்ற பெயர் இன்னும் எதிரொலிக்கிறது. மக்கள் என்னை அழைக்கும்போது நான் இன்னும் திரும்பிச் சிரிக்கிறேன்.

    எனக்கு குந்தனைக் கொடுத்த மனிதருடன் இப்போது அதே பாதைகளில் நடந்து, அதே வீட்டின் முன் அமர்ந்து, அதே தேநீர் கடையில் இருந்து தேநீர் அருந்தி, புனித கங்கைக் கரையில் நடந்து, ஒரு முழு வட்டம் பூர்த்தியானது போல் உணர்கிறேன். இப்போது ஷங்கருக்கான நேரம். தேரே இஷ்க் மெய்ன்… நாளை வெளியாகிறது. ஹர் ஹர் மகாதேவ்" என்று பதிவிட்டுள்ளார்.   

    • தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்"
    • ஏஆர் ரகுமான் இசையில் வெளியான 'உசே கெனா' மனதை உருக்கும் வகையில் இருந்தது.

    பாலிவுட்டில் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

    பாலிவுட்டில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2013 இல் வெளியாகி வரவேற்பை பெட்ரா படம் 'ராஞ்சனா'. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ஒரு கிளாசிக்.

    இந்நிலையில் தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein).

    இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். இப்படம் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான 'உசே கெனா' மனதை உருக்கும் வகையில் இருந்தது.

    இந்நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் அண்மையில் நடிகை கிரித்தி சனோன் பேட்டி ஒன்றை அளித்தார்.

    அதில், "தேரே இஷ்க் மெய்ன் படம் என்னை ரொம்ப பாதித்தது. படப்பிடிப்பிலும் அது முடிந்த பின்பும் அக்கதாபாத்திரத்தின் தாக்கம் அப்படியே இருந்தது. என் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக இது இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார். 

    • நான் அந்தப் பாடலை விட்டு ஓட முயற்சி செய்கிறேன்.
    • தனுஷ் நடிக்கும் 'தேரே இஷ்க் மெய்ன்' திரைப்படம் வருகிற 28-ந்தேதி வெளியாகவுள்ளது.

    துபாய் வாட்ச் வீக்கில் கலந்து கொண்ட நடிகரும் இயக்குநருமான தனுஷ், ' ஒய் திஸ் கொலவெறி ' எப்படி தற்செயலாக உருவாக்கப்பட்டது என்பது பற்றியும், அதற்கு கிடைத்த வரவேற்பு முற்றிலும் எதிர்பாராதது என்றும் பேசினார்.

    இந்தப் பாடல் முதலில் தயாரிக்கப்பட்டது, ஆனால் அது கைவிடப்பட்டது. ஒரு நாள், கணினியில் இதைக் கண்டுபிடித்து மீண்டும் கேட்டோம். அப்போது அது வேடிக்கையாக இருந்தது. வேடிக்கையாக இருந்தாலும், குறிப்பாக ஒரு பாடலாக கேட்க முடிகிறது. எனவே அதை ஒரு முயற்சியாகப் பார்க்க முடிவு செய்தோம். எங்களுக்குத் தேவையானது ஒரு வெற்றி மட்டுமே, ஆனால் அது வைரலாகி மார்க்கெட்டில் பெரும் வெற்றியை பெற்றது என்றார்.

    மேலும் இந்தப் பாடலை "வரம் மற்றும் சாபம்" என்று கூறிய தனுஷ், "நான் அந்தப் பாடலை விட்டு ஓட முயற்சி செய்கிறேன், ஆனால் அது என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது" என்றார்.

    தனுஷ் நடிக்கும் 'தேரே இஷ்க் மெய்ன்' திரைப்படம் வருகிற 28-ந்தேதி வெளியாகவுள்ளது. கிருதி சனோன் கதாநாயகியாக நடிக்கும் இந்த காதல் படம், 'ராஞ்சனா' மற்றும் 'அத்ரங்கி ரே' படங்களுக்குப் பிறகு ஆனந்த் எல் ராயுடன் தனுஷ் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படமாகும்.

    • மான்யா ஆனந்த் தனது சீரியல் மற்றும் திரைத்துறை அனுபங்களை குறித்து நேர்காணல் கொடுத்துள்ளார்.
    • தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் அனுப்பினார்.

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தை போல சீரியல் மூலமாக நடிகை மான்யா ஆனந்த் பிரபலமானார். இதனை தொடர்ந்து அவர் நடித்த கயல், அன்னம், மருமகள் சீரியல்களும் மக்களிடையே நல்ல கவனம் பெற்றது.

    மான்யா ஆனந்த் தனது சீரியல் மற்றும் திரைத்துறை அனுபங்களை குறித்து நேர்காணல் கொடுத்துள்ளார். அந்த நேர்காணலில் பேசிய மான்யா ஆனந்த், "தனுஷின் மேனேஜர் ஷ்ரேயஸ் என்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. தனுஷ் படத்தில் நீங்க நடிக்க முடியுமா... அப்படியெனில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறினார்.

    நான் அது எல்லாம் பண்ண மாட்டேன் என்று கூறினேன். அதற்கு தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் அனுப்பினார். தனுஷாக இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று கூறிவிட்டேன்.

    அதே மாதிரி அண்மையில், ஷ்ரேயஸ் எனக்கு தனுஷ் படத்தின் ஸ்க்ரிப்ட் அனுப்பி நடிக்க வேண்டுமா என்று கேட்டார். ஆனால் நான் அந்த கதையை கூட படிக்கவில்லை. நாங்கள் நடிகர்கள் வேறு தொழில் செய்பவர்கள் இல்லை" என்று தெரிவித்திருந்தார்.

    இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நடிகையின் குற்றச்சாட்டை ஷ்ரேயாஸ் மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "என் பெயரில் அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரில் வந்த "Casting call" முற்றிலும் பொய்யானது" என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகை மான்யா ஆனந்த் விளக்கம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "நான் தனுஷ் மீது குற்றச்சாட்டு சுமத்தியதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அது தொடர்பாக விளக்கம் அளிக்கிறேன். நான் அண்மையில் ஒரு நேர்காணல் கொடுத்திருந்தேன். அதில் ஷ்ரேயாஸ் என்பவற்றின் பெயரை பயன்படுத்தி ஒருவர் எனக்கு போன் செய்திருந்தார் என்று கூறினேன். அதாவது தனுஷ் சார் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று தான் கூறியுள்ளேன். விழிப்புணர்வுக்காக நான் கூறியதை தவறாக பயன்படுத்தியுள்ளார்கள். இணையத்தில் பரவும் தகவல் பொய்யானது என்று நேற்று நான் பதிவிட்டிருந்தேன். என்னுடைய பெயரை பயன்படுத்தி தனுஷ் சார் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறார்கள். இது மிகவும் தவறு. ஆகவே பொய்யான தகவலை பரப்பாதீர்கள்" என்று தெரிவித்தார். 

    என் பெயரில் அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரில் வந்த "Casting call" முற்றிலும் பொய்யானது.

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தை போல சீரியல் மூலமாக நடிகை மான்யா ஆனந்த் பிரபலமானார். இதனை தொடர்ந்து அவர் நடித்த கயல், அன்னம், மருமகள் சீரியல்களும் மக்களிடையே நல்ல கவனம் பெற்றது.

    மான்யா ஆனந்த் தனது சீரியல் மற்றும் திரைத்துறை அனுபங்களை குறித்து நேர்காணல் கொடுத்துள்ளார். அந்த நேர்காணலில் பேசிய மான்யா ஆனந்த், "தனுஷின் மேனேஜர் ஷ்ரேயஸ் என்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. தனுஷ் படத்தில் நீங்க நடிக்க முடியுமா... அப்படியெனில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறினார்.

    நான் அது எல்லாம் பண்ண மாட்டேன் என்று கூறினேன். அதற்கு தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் அனுப்பினார். தனுஷாக இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று கூறிவிட்டேன்.

    அதே மாதிரி அண்மையில், ஷ்ரேயஸ் எனக்கு தனுஷ் படத்தின் ஸ்க்ரிப்ட் அனுப்பி நடிக்க வேண்டுமா என்று கேட்டார். ஆனால் நான் அந்த கதையை கூட படிக்கவில்லை. நாங்கள் நடிகர்கள் வேறு தொழில் செய்பவர்கள் இல்லை" என்று தெரிவித்திருந்தார்.

    இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நடிகையின் குற்றச்சாட்டை ஷ்ரேயாஸ் மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "என் பெயரில் அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரில் வந்த "Casting call" முற்றிலும் பொய்யானது. +91 75987 56841 இந்த நம்பர் என்னுடைய நம்பர் கிடையாது. என்னுடைய படத்துடன் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ஆந்திரா கிங் தாலுகா’ படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்து உள்ளார்.
    • இப்படம் வருகிற 27-ந்தேதி வெளியாக உள்ளது.

    தென்னிந்திய திரைப்பட உலகில் மிஸ்டர் பச்சன் மற்றும் கிங்டம் படங்கள் மூலம் அறிமுகமான நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து, முழு திரைத்துறையின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதன் மூலம், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக உருவெடுத்துள்ளார்.

    தற்போது துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் 'காந்தா'. இப்படம் ரசிர்களிடையே வரவேற்பை பெற்று வசூல் குவித்து வருகிறது. இதனிடையே, மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி உள்ள 'ஆந்திரா கிங் தாலுகா' படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்து உள்ளார். ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடித்துள்ளார்.

    ஒரு ரசிகரின் வாழ்க்கை வரலாறு என்று கூறப்படும் இந்தப் படத்திலிருந்து ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்துள்ளனர். இப்படம் வருகிற 27-ந்தேதி வெளியாக உள்ளது.

    இந்த நிலையில், தனக்கு நடிகர் தனுஷை ரொம்ப பிடிக்கும் என நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், எனக்கு தனுஷ் சார ரொம்பப் பிடிக்கும். எல்லா நடிகைகளுக்கும் தனுஷுடன் பணியாற்ற வேண்டும் என ஆசை இருக்கும். எனக்கும் அவருடன் இணைந்து பணியாற்ற ஆசை இருக்கு. விரைவில் தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். 

    • வானத்தை போல சீரியல் மூலமாக நடிகை மான்யா ஆனந்த் பிரபலமானார்.
    • மான்யா ஆனந்த் நடித்த கயல், அன்னம் , மருமகள் சீரியல்களும் மக்களிடையே நல்ல கவனம் பெற்றது.

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தை போல சீரியல் மூலமாக நடிகை மான்யா ஆனந்த் பிரபலமானார். இதனை தொடர்ந்து அவர் நடித்த கயல், அன்னம், மருமகள் சீரியல்களும் மக்களிடையே நல்ல கவனம் பெற்றது.

    தற்போது ஜிம்முக்கு சென்று பிட்னெஸ் விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் மான்யா ஆனந்த் தனது சீரியல் மற்றும் திரைத்துறை அனுபங்களை குறித்து நேர்காணல் கொடுத்துள்ளார்.

    அந்த நேர்காணலில் தனுஷின் மேனேஜர் தன்னை தனுஷ் படத்தில் நடிக்க அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறினார் என்று குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நேர்காணலில் பேசிய மான்யா ஆனந்த், "தனுஷின் மேனேஜர் ஷ்ரேயஸ் என்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. தனுஷ் படத்தில் நீங்க நடிக்க முடியுமா... அப்படியெனில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறினார். நான் அது எல்லாம் பண்ண மாட்டேன் என்று கூறினேன். அதற்கு தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் அனுப்பினார். தனுஷாக இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று கூறிவிட்டேன்.

    அதே மாதிரி அண்மையில், ஷ்ரேயஸ் எனக்கு தனுஷ் படத்தின் ஸ்க்ரிப்ட் அனுப்பி நடிக்க வேண்டுமா என்று கேட்டார் . ஆனால் நான் அந்த கதையை கூட படிக்கவில்லை. நாங்கள் நடிகர்கள் வேறு தொழில் செய்பவர்கள் இல்லை" என்று தெரிவித்தார்.

    இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது,

    • அவருக்கு கதை பிடிக்கும் வரை புதிய இயக்குனரை தேடிக் கொண்டு இருப்பேன்' என்று கமல் கூறினார்.
    • சுந்தர் சி சொன்ன ஹாரர் ஜானர் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினியின் 173-வது படத்தை சுந்தர் சி இயக்க இருந்தார். மூவரும் சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டு படத்தின் தொடக்கம் குறித்து ராஜ் கமல் பிலிம்ஸ் அறிவித்தது.

    ஆனால் சில நாட்களிலேயே படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார். எதிர்பாராத காரணங்களால் விலகுவதாக அவர் தெரிவித்திருந்தார். சுந்தர் சி சொன்ன ஹாரர் ஜானர் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே அண்மையில் செய்தியார்களிடம் பேசிய கமல் ஹாசன், 'அவரின் நிலைப்பாட்டை அவர் சொல்லி இருக்கிறார். அது பத்திரிகைகளில் பார்த்தோம். நான் முதலீட்டாளன். எனது நட்சத்திரத்திற்கு பிடித்தார் போல் கதை இருக்க வேண்டும். அவருக்கு கதை பிடிக்கும் வரை புதிய இயக்குனரை தேடிக் கொண்டு இருப்பேன்' என்றார்.

     இந்த சூழலில் தான் ரஜினியின் 173 வது படத்தை தனுஷ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுடன் கடந்த வருடம் விவாகரத்து பெற்று தனுஷ் பிரிந்தார். இருப்பினும் மகன்களுக்காக மனைவியுடன் நல்லிணக்கத்துடன் தனுஷ் பொது இடங்களில் காணப்படுகிறார்.

    மேலும் பவர் பாண்டி மூலம் இயக்குனராக தன்னை நிலை நிறுத்திய தனுஷ், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ராயன், இட்லி கடை உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடைசியாக வெளியான இட்லி கடை வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த சூழலில் ரஜினியின் மாஸ் பிம்பத்துக்கு நியாயம் செய்யும் வகையில் தனுஷ், கதையை உருவாக்குவாரா அல்லது எதார்த்தமான கதையில் அவரை நடிக்க வைக்கப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. அதேநேரம் தனுஷ்க்காக சுந்தர் சி கதையை ரஜினி நிராகரித்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

    போர் விமானி கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

    தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படத்தை தொடர்ந்து, தனது 54-ஆவது படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். தனுஷ்-க்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதனைத் தொடர்ந்து தனது இந்தி திரைப்படத்தின் ப்ரோமோசனுக்காக தனுஷ் மும்பை சென்றுள்ளார்.

    ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'தேரே இஷ்க் மே'. முன்னணி பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 28-ம்தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் போர் விமானி கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

    ×