என் மலர்
நீங்கள் தேடியது "Dhanush"
- அம்பாள் மற்றும் சுவாமி சன்னதிகளில் சாமி தரிசனம் செய்த நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனருக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
- கோவிலில் இருந்த பக்தர்கள் நடிகர் தனுஷ் உடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
நடிகர் தனுஷ் நடிப்பில் போர்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் டி-54 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
பெரும் பொருட்செலவில் பரபரப்பான கதை களத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நெல்லை, தென்காசி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வந்தது.
திரைப்படத்தின் பெரும் பகுதி முடிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் விக்னேஷ் ராஜா மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் நெல்லை நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று அதிகாலை கோவிலுக்கு வருகை தந்தனர்.
அம்பாள் மற்றும் சுவாமி சன்னதிகளில் சாமி தரிசனம் செய்த நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனருக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அப்போது கோவிலில் இருந்த பக்தர்கள் நடிகர் தனுஷ் உடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் அதிகாலையில் நடைபெற்ற திருவனந்தல் வழிபாட்டு பூஜையில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் விக்னேஷ் ராஜா கலந்து கொண்டனர்.
- தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது.
- படம் 7 நாட்களில் உலகளவில் ரூ.118.76 கோடி வசூல் செய்திருந்தது.
பாலிவுட்டில் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
பாலிவுட்டில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2013 இல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'ராஞ்சனா'. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ஒரு கிளாசிக்.
இந்நிலையில் தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein).
இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். கடந்த வாரம் வெளியான இப்படம் பாலிவுட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தனுஷின் நடிப்பிற்கு ரசிகர்களிடம் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.
படம் 7 நாட்களில் உலகளவில் ரூ.118.76 கோடி வசூல் செய்திருந்தது. இந்நிலையில், 'தேரே இஷக் மெய்ன்' படம் 10 நாட்களில் ரூ.141.86 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
- பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி நடித்துள்ளனர்.
- 27ம் தேதி மலேசியாவில் உள்ள புகித் ஜலீல் அரங்கத்தில் நடைபெறவுள்ள அறிவிக்கப்பட்டது.
விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.
அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான "தளபதி கச்சேரி" வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் உள்ள புகித் ஜலீல் அரங்கத்தில் நடைபெறவுள்ள அறிவிக்கப்பட்டது.
பிரமாண்டமாக நடைபெற உள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் இதன்முன் விஜயை வைத்து படம் இயக்கிய இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ ஆகியோரும் கலந்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனவே விழாவில் விஜய் ஒருபுறம் குட்டி கதை சொல்ல தனுஷ் மறுபுறம் ரஜினி ஸ்டைலில் பேச வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் எதிரார்ப்பிக்கின்றனர்.
மறுபுறம் சுதா கோங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
- கடந்த 2013 இல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'ராஞ்சனா'. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது.
- இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது.
பாலிவுட்டில் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
பாலிவுட்டில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2013 இல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'ராஞ்சனா'. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ஒரு கிளாசிக்.
இந்நிலையில் தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein).
இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். கடந்த வாரம் வெளியான இப்படம் பாலிவுட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், 'தேரே இஷக் மெய்ன்' படம் 7 நாட்களில் உலகளவில் ரூ.118.76 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
- தனுஷ் - ஆனந்த் எல் ராய் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்"
- இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது.
பாலிவுட்டில் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
பாலிவுட்டில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2013 இல் வெளியாகி வரவேற்பை பெட்ரா படம் 'ராஞ்சனா'. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ஒரு கிளாசிக்.
இந்நிலையில் தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein).
இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். கடந்த வாரம் வெளியான இப்படம் பாலிவுட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், தேரே இஸ்க் மேன் இந்தி திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களில் ரூ. 50.95 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்தி மொழியில் மட்டும் தான் இந்த வசூல் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சீதா ராமம் படத்தின் மூலம் மிருணாள் தாகூர் புகழ்பெற்றார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் காயமடைந்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுசும், பாலிவுட் நடிகை மிருணாள் தாகூரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
அஜய் தேவ்கானுடன், மிருணாள் தாகூர் நடித்துள்ள 'சன் ஆப் சர்தார்-2' பட விழாவில் தனுஷ் கலந்துகொண்டதும், மிருணாள் தாகூருடன் கைகோர்த்துக்கொண்டு சுற்றியதும் இதற்கு தூபம் போடுவதுபோல அமைந்தது.
இதுகுறித்து பேசிய மிருணாள் தாகூர், "நடிகர் தனுஷ் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே. எங்கள் இருவரை பற்றியும் வதந்திகள் பரவி வருவதை அறிகிறோம். இதுபோன்ற வதந்திகளை பார்க்கும்போது, எனக்கு சிரிப்புதான் வந்தது" என்று விளக்கம் கொடுத்து இந்த சர்ச்சைக்கு முடிவுரை எழுதினார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் அய்யரும் நடிகை மிருணாள் தாகூரும் ரகசியமாக காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் கசித்துள்ளது.
ஷ்ரேயாஸ் மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோர் தங்களின் கேரியரின் உச்சத்தில் இருப்பதால் இந்த காதலை பொதுவெளியில் அறிவிக்க தயக்கம் காட்டுவதாகவும் தங்ஙளின் நண்பர்களின் பார்ட்டி மற்றும் விழாக்களில் மட்டும் சந்தித்து காதலை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் காயமடைந்த ஷ்ரேயாஸ் தற்போது குணமடைந்து ஓய்வில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- D55 படத்தில் இருந்து கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் விலகியுள்ளது.
- இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி D55 படத்தை ஒரு பெரிய அளவில் ஆக்ஷன் அதிரடி படமாக எடுக்க முடிவு செய்துள்ளார்.
கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இணையும் படம் D55. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக கூறப்பட்டது. மேலும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இணையும் D55 படத்தில் இருந்து கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் விலகியுள்ளது. இப்போது இப்படம் தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாக உள்ளது.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி D55 படத்தை ஒரு பெரிய அளவில் ஆக்ஷன் அதிரடி படமாக எடுக்க முடிவு செய்துள்ளார். மலையாள நடிகர் மம்முட்டி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் இதற்காக அவருக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது.
- பனாரஸின் குறுகிய பாதைகளில் குந்தன் என்ற பெயர் இன்னும் எதிரொலிக்கிறது.
பாலிவுட்டில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2013 இல் வெளியாகி வரவேற்பை பெட்ரா படம் 'ராஞ்சனா'.
தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. குந்தன் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் வாழ்ந்திருந்தார். படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ஒரு கிளாசிக்.
இந்நிலையில் தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein). இதில் ஷங்கர் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது. அந்த கதையோடு தொடர்புடையது என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். இப்படம் நாளை, 28ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான 'உசே கெனா' மனதை உருக்கும் வகையில் இருந்தது.
இந்நிலையில் ரே இஷ்க் மெய்ன் புரமோஷனுக்காக வாரணாசி சென்றுள்ள தனுஷ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "நினைவுப் பாதையில் ஒரு நடை. இதெல்லாம் எங்கிருந்து தொடங்கியது. குந்தன், ஒரு தசாப்தத்திற்கும் மேலாகியும் என்னை விட்டு விலக மறுக்கும் ஒரு கதாபாத்திரம்.
பனாரஸின் குறுகிய பாதைகளில் குந்தன் என்ற பெயர் இன்னும் எதிரொலிக்கிறது. மக்கள் என்னை அழைக்கும்போது நான் இன்னும் திரும்பிச் சிரிக்கிறேன்.
எனக்கு குந்தனைக் கொடுத்த மனிதருடன் இப்போது அதே பாதைகளில் நடந்து, அதே வீட்டின் முன் அமர்ந்து, அதே தேநீர் கடையில் இருந்து தேநீர் அருந்தி, புனித கங்கைக் கரையில் நடந்து, ஒரு முழு வட்டம் பூர்த்தியானது போல் உணர்கிறேன். இப்போது ஷங்கருக்கான நேரம். தேரே இஷ்க் மெய்ன்… நாளை வெளியாகிறது. ஹர் ஹர் மகாதேவ்" என்று பதிவிட்டுள்ளார்.
- தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்"
- ஏஆர் ரகுமான் இசையில் வெளியான 'உசே கெனா' மனதை உருக்கும் வகையில் இருந்தது.
பாலிவுட்டில் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
பாலிவுட்டில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2013 இல் வெளியாகி வரவேற்பை பெட்ரா படம் 'ராஞ்சனா'. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ஒரு கிளாசிக்.
இந்நிலையில் தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein).
இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். இப்படம் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான 'உசே கெனா' மனதை உருக்கும் வகையில் இருந்தது.
இந்நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் அண்மையில் நடிகை கிரித்தி சனோன் பேட்டி ஒன்றை அளித்தார்.
அதில், "தேரே இஷ்க் மெய்ன் படம் என்னை ரொம்ப பாதித்தது. படப்பிடிப்பிலும் அது முடிந்த பின்பும் அக்கதாபாத்திரத்தின் தாக்கம் அப்படியே இருந்தது. என் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக இது இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
- நான் அந்தப் பாடலை விட்டு ஓட முயற்சி செய்கிறேன்.
- தனுஷ் நடிக்கும் 'தேரே இஷ்க் மெய்ன்' திரைப்படம் வருகிற 28-ந்தேதி வெளியாகவுள்ளது.
துபாய் வாட்ச் வீக்கில் கலந்து கொண்ட நடிகரும் இயக்குநருமான தனுஷ், ' ஒய் திஸ் கொலவெறி ' எப்படி தற்செயலாக உருவாக்கப்பட்டது என்பது பற்றியும், அதற்கு கிடைத்த வரவேற்பு முற்றிலும் எதிர்பாராதது என்றும் பேசினார்.
இந்தப் பாடல் முதலில் தயாரிக்கப்பட்டது, ஆனால் அது கைவிடப்பட்டது. ஒரு நாள், கணினியில் இதைக் கண்டுபிடித்து மீண்டும் கேட்டோம். அப்போது அது வேடிக்கையாக இருந்தது. வேடிக்கையாக இருந்தாலும், குறிப்பாக ஒரு பாடலாக கேட்க முடிகிறது. எனவே அதை ஒரு முயற்சியாகப் பார்க்க முடிவு செய்தோம். எங்களுக்குத் தேவையானது ஒரு வெற்றி மட்டுமே, ஆனால் அது வைரலாகி மார்க்கெட்டில் பெரும் வெற்றியை பெற்றது என்றார்.
மேலும் இந்தப் பாடலை "வரம் மற்றும் சாபம்" என்று கூறிய தனுஷ், "நான் அந்தப் பாடலை விட்டு ஓட முயற்சி செய்கிறேன், ஆனால் அது என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது" என்றார்.
தனுஷ் நடிக்கும் 'தேரே இஷ்க் மெய்ன்' திரைப்படம் வருகிற 28-ந்தேதி வெளியாகவுள்ளது. கிருதி சனோன் கதாநாயகியாக நடிக்கும் இந்த காதல் படம், 'ராஞ்சனா' மற்றும் 'அத்ரங்கி ரே' படங்களுக்குப் பிறகு ஆனந்த் எல் ராயுடன் தனுஷ் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படமாகும்.
- மான்யா ஆனந்த் தனது சீரியல் மற்றும் திரைத்துறை அனுபங்களை குறித்து நேர்காணல் கொடுத்துள்ளார்.
- தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் அனுப்பினார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தை போல சீரியல் மூலமாக நடிகை மான்யா ஆனந்த் பிரபலமானார். இதனை தொடர்ந்து அவர் நடித்த கயல், அன்னம், மருமகள் சீரியல்களும் மக்களிடையே நல்ல கவனம் பெற்றது.
மான்யா ஆனந்த் தனது சீரியல் மற்றும் திரைத்துறை அனுபங்களை குறித்து நேர்காணல் கொடுத்துள்ளார். அந்த நேர்காணலில் பேசிய மான்யா ஆனந்த், "தனுஷின் மேனேஜர் ஷ்ரேயஸ் என்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. தனுஷ் படத்தில் நீங்க நடிக்க முடியுமா... அப்படியெனில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறினார்.
நான் அது எல்லாம் பண்ண மாட்டேன் என்று கூறினேன். அதற்கு தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் அனுப்பினார். தனுஷாக இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று கூறிவிட்டேன்.
அதே மாதிரி அண்மையில், ஷ்ரேயஸ் எனக்கு தனுஷ் படத்தின் ஸ்க்ரிப்ட் அனுப்பி நடிக்க வேண்டுமா என்று கேட்டார். ஆனால் நான் அந்த கதையை கூட படிக்கவில்லை. நாங்கள் நடிகர்கள் வேறு தொழில் செய்பவர்கள் இல்லை" என்று தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நடிகையின் குற்றச்சாட்டை ஷ்ரேயாஸ் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "என் பெயரில் அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரில் வந்த "Casting call" முற்றிலும் பொய்யானது" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகை மான்யா ஆனந்த் விளக்கம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "நான் தனுஷ் மீது குற்றச்சாட்டு சுமத்தியதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அது தொடர்பாக விளக்கம் அளிக்கிறேன். நான் அண்மையில் ஒரு நேர்காணல் கொடுத்திருந்தேன். அதில் ஷ்ரேயாஸ் என்பவற்றின் பெயரை பயன்படுத்தி ஒருவர் எனக்கு போன் செய்திருந்தார் என்று கூறினேன். அதாவது தனுஷ் சார் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று தான் கூறியுள்ளேன். விழிப்புணர்வுக்காக நான் கூறியதை தவறாக பயன்படுத்தியுள்ளார்கள். இணையத்தில் பரவும் தகவல் பொய்யானது என்று நேற்று நான் பதிவிட்டிருந்தேன். என்னுடைய பெயரை பயன்படுத்தி தனுஷ் சார் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறார்கள். இது மிகவும் தவறு. ஆகவே பொய்யான தகவலை பரப்பாதீர்கள்" என்று தெரிவித்தார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தை போல சீரியல் மூலமாக நடிகை மான்யா ஆனந்த் பிரபலமானார். இதனை தொடர்ந்து அவர் நடித்த கயல், அன்னம், மருமகள் சீரியல்களும் மக்களிடையே நல்ல கவனம் பெற்றது.
மான்யா ஆனந்த் தனது சீரியல் மற்றும் திரைத்துறை அனுபங்களை குறித்து நேர்காணல் கொடுத்துள்ளார். அந்த நேர்காணலில் பேசிய மான்யா ஆனந்த், "தனுஷின் மேனேஜர் ஷ்ரேயஸ் என்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. தனுஷ் படத்தில் நீங்க நடிக்க முடியுமா... அப்படியெனில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறினார்.
நான் அது எல்லாம் பண்ண மாட்டேன் என்று கூறினேன். அதற்கு தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் அனுப்பினார். தனுஷாக இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று கூறிவிட்டேன்.
அதே மாதிரி அண்மையில், ஷ்ரேயஸ் எனக்கு தனுஷ் படத்தின் ஸ்க்ரிப்ட் அனுப்பி நடிக்க வேண்டுமா என்று கேட்டார். ஆனால் நான் அந்த கதையை கூட படிக்கவில்லை. நாங்கள் நடிகர்கள் வேறு தொழில் செய்பவர்கள் இல்லை" என்று தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நடிகையின் குற்றச்சாட்டை ஷ்ரேயாஸ் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "என் பெயரில் அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரில் வந்த "Casting call" முற்றிலும் பொய்யானது. +91 75987 56841 இந்த நம்பர் என்னுடைய நம்பர் கிடையாது. என்னுடைய படத்துடன் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.






