search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ilayaraja"

    • 1970, 1980 மற்றும் 1990 ம் ஆண்டுகளில் இளையராஜாவின் பாடல்களுக்கு இருந்த ஈர்ப்பு தற்போது இல்லை
    • ஸ்பாட்டிபை மூலம் இளையராஜா பெற்ற வருமானத்தைத் தனி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்

    1970, 1980 மற்றும் 1990 ம் ஆண்டுகளில் இளையராஜாவின் பாடல்களுக்கு இருந்த ஈர்ப்பு தற்போது இல்லை - இசை நிறுவனங்கள் தரப்பு வழக்கறிஞர்

    இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4 ஆயிரத்து 500 பாடல்களைப் பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, இளையராஜா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று, இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது எனவும், இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாகவும் கடந்த 2019ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்திருந்தார், இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

    இதனிடையே, படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதால், அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களைப் பயன்படுத்த தங்களுக்கு அதிகாரம் உள்ளதென எக்கோ நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இசை நிறுவனங்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய்நாரயண், இந்தியத் திரைப்படத்துறையில் உள்ள இசையமைப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட திரைப்படத்திற்காக ஒரு திரைப்பட தயாரிப்பாளரிடம் இருந்து ஊதியம் பெற்றவுடன், ராயல்டி பெறும் உரிமையைத் தவிர, அனைத்து உரிமைகளையும் இழந்து விட்டதாகத் தெரிவித்தார்.

    எனவே, காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா என்பதை இறுதி விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இளையராஜா ஒரு இசைஞானி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் 1970, 1980 மற்றும் 1990 ம் ஆண்டுகளில் அவரது பாடல்களுக்கு இருந்த ஈர்ப்பு தற்போது இல்லை என இசை நிறுவனங்கள் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

    மேலும் ஸ்பாட்டிபை மூலம் இளையராஜா பெற்ற வருமானத்தைத் தனி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் இந்த வருமானத்திற்கான கணக்குகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், இசையமைப்பாளருக்கு அவ்வாறு உத்தரவிட முடியாது என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட இசை நிறுவனங்கள் தரப்பு வழக்கறிஞர், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் என்று தன்னை நினைப்பதாகக் குறிப்பிட்டார்.

    இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன் தான் எனவும் வீம்புக்காக இதனைச் சொல்வதாக நினைக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார்
    • முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர் ஆர்.எம்.வீரப்பன்

    எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 98.

    முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர் ஆர்.எம்.வீரப்பன். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், "ஆர்.எம்.வீரப்பன் எப்போதும் பணத்துக்கு பின்னால் போனதே இல்லை. அவரை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது" என்று தெரிவித்தார். 

    • இளையராஜா தனது பாடல்கள் அனைத்தையும் சி.டி.யாக வெளியிடும் உரிமையை எக்கோ ரிக்கார்டிங் நிறுவனத்துக்கு கொடுத்திருந்தார்
    • கடந்த 20 வருடமாக பங்கு தொகை எதுவும் தராமல், தனது பாடல் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து அந்நிறுவனம் மோசடி செய்துவிட்டது

    எக்கோ ரிக்கார்டிங் நிறுவனத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார்.

    அந்த புகாரில், தனது பாடல்கள் அனைத்தையும் சி.டி.யாக வெளியிடும் உரிமையை எக்கோ ரிக்கார்டிங் நிறுவனத்துக்கு கொடுத்து, இது சம்பந்தமாக ஒப்பந்தம் போட்டிருந்தேன்.

    இதற்காக குறிப்பிட்ட தொகையை பங்கு தொகையாக தர அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் ஒப்பந்தப்படி கடந்த 20 வருடமாக பங்கு தொகை எதுவும் தரப்படவில்லை என்றும் பாடல் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து மோசடி செய்துவிட்டது என்று இளையராஜா தெரிவித்திருந்தார்.

    இந்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து எக்கோ நிறுவனத்திடமிருந்து 20 ஆயிரம் சிடிக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    இதனை தொடர்ந்து, இளையராஜா அளித்த புகாரில் பதிவான வழக்குகளை ரத்து செய்யக்கோரி எக்கோ நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை 2019 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

    இந்த உத்தரவு எதிர்த்து, எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியம் இன்று விலகியுள்ளார்.

    வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெற பதிவாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்குகிறார்.
    • இணைய தொடர் யூடியூப் தளத்தில் வெளியானது.

    தமிழ் திரையுலகில் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. இவரின் வாழ்க்கை கதை திரைப்படமாக உருவாகிறது. இந்த படத்தில் தனுஷ் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்குகிறார்.

    இந்த படம் தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், லைகா மியூசிக் நிறுவனம் "நடுவுல கொஞ்சம் இசைய காணோம்" என்ற தலைப்பில் இசை சார்ந்த இணைய தொடரை யூடியூப் தளத்தில் வெளியிட்டு இருக்கிறது.

    இந்த தொடரில், சிறு வயதில் இருந்து, இளையராஜா அருகில் தான் ரசித்த பல அனுபவங்கள், கோடிகணக்கான ரசிகர்கள் ரசிக்கும் பாடலுக்கு பின் நடந்த சுவையான சம்பவங்கள், ரசிகர்கள் கேட்டிராத இளையராஜா பாடல் பதிவின் போது, நடந்த பல்வேறு ஆச்சர்ய நிகழ்வுகளை பற்றி ஜான் மகேந்திரன் பகிர்கிறார்.

    இதுவரை இளையராஜாவின் பாடல்கள் பற்றியும், பின்னணி இசை பற்றியும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இருந்தும், லைகா மியூசிக்கில் வரும் இந்த தொடரில், பலர் கவனிக்க தவறிய இளையராஜாவின் இசை பக்கத்தை பற்றியும், அது ஒரு திரைப்படத்தில் செய்த மாற்றத்தை பற்றியும் ஜான் மகேந்திரன், இளையராஜா ரசிகராக பகிர்கிறார்.

    இத்தொடர், இளையராஜா ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், இன்றைய இளம் இசையமைப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் , இளையராஜாவை பற்றி, அவர் இசையை பற்றிய ஒரு பரிமாணத்தை காட்டும் அளவுக்கு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • இந்தபடத்தில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கிறார்.
    • நான் இரண்டு பேருடைய வாழ்க்கை வரலாறை படமாக எடுத்து நடிக்க ஆசைப்பட்டேன்.

    இசைத் துறையில் 47 வருடங்களாக யாரும் தொட முடியாத உச்சத்தில் இருப்பவர் இசைஞானி இளையராஜா. இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார்.

    இளையராஜாவை இசைஞானி என்றும், மேஸ்ட்ரோ என்றும் அழைப்பர். பல விருதுகளை வென்று இருக்கிறார் இளையராஜா. பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ளார்.வசீகரிக்கும் மெல்லிசைகளை உருவாக்குவதில் புகழ்பெற்ற இசை மேதை இளையராஜா, இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் இசை ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமானவர்.





    இப்போது, அவரது பணியை நினைவுக்கூரும் வகையில்,அவரது வாழ்க்கை பற்றிய 'பயோபிக்' உருவாகிறது.இந்தபடத்தில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தில் இளையராஜா இசையமைப்பாளர் ஆவதற்கு முன் அவர் பயணித்த வாழ்க்கை குறித்த சம்பவங்கள் இடம்பெறுகிறது.

    இந்தப்படத்தை சாணிக்காயிதம், ராக்கி, கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார். இந்தப்படம் தொடர்பான தொடக்க விழா சென்னையில் இன்று நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன், வெற்றிமாறன், இளையராஜா, தனுஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் இதில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. விழாவில் பேசிய தனுஷ், "நான் இரண்டு பேருடைய வாழ்க்கை வரலாறை படமாக எடுத்து நடிக்க ஆசைப்பட்டேன். ஒன்று இசைஞானி இளையராஜா மற்றொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று தெரிவித்தார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படம் வெளியாகி 4 நாட்களில் 40 கோடி வசூலித்து கேரளா சினிமாவில் சாதனைப் படைத்துள்ளது.
    • மீண்டும் இப்பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

    சமீபத்தில் வெளியாகி கேரளாவில் பெரும் ஆதரவு பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் படம் தமிழ்நாட்டிலும் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டு மக்களிடமும் பெரும் ஆதரவு மற்றும் வரவேற்பை பெற்ற இந்த படத்தை பரவா பில்ம்ஸ் நிறுவனம் தயாரித்தது.

    இதில் ஷோபின் ஷஹிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் போன்ற முன்னணி கதாப்பாத்திரங்கள் நடித்த படத்தை மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு "ஜான்-இ-மான்"படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளியாகி 4 நாட்களில் 40 கோடி வசூலித்து கேரளா சினிமாவில் சாதனைப் படைத்துள்ளது. தமிழ்நாட்டிலும் இப்படம் பெரும் வசூலினை பெற்று வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

    தமிழ் சினிமா முன்னணி பிரபலங்களான நடிகர் விக்ரம், நடிகர் தனுஷ், இயக்குனர் கார்த்தி சுப்பராஜ், நடிகர் சித்தார்த், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை பார்த்து படகுழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளனர். இப்படத்தில் கமல் நடித்த குணா படத்தில் உள்ள கண்மணி அன்போடு காதலன் என்னும் பாடல் இப்படத்தின் இறுதி கட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

    இதனால் மீண்டும் இப்பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. இதையொட்டி மார்ச் 1 -ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன், மஞ்சும்மாள் பாய்ஸ் படக்குழுவினர் அனைவரையும் அவரின் அலுவகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி, குணா படத்தின் போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

    • பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
    • பவதாரிணியின் திருஉருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

    இசைஞானி இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார்.

    பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்யப்பட்டது.

    பவதாரிணி மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

    அந்த வகையில், விசிக தலைவர் திருமாவளவன் இசைஞானி இளையராஜா வீட்டிற்கு நேரில் சென்று பவதாரிணியின் திருஉருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

    பிறகு, இளையராஜாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    • பாடகி பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார்.
    • பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    இசைஞானி இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார்.

    பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்யப்பட்டது.

    பவதாரிணி மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டதால் அவரால் உடனடியாக சென்னைக்கு வரமுடியவில்லை.

    இந்தநிலையில் சென்னை வந்த கனிமொழி எம்.பி. தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்கு இன்று நேரில் சென்றார். அங்கு இளையராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.

    • பவதாரிணியின் உடல் சென்னை தியாகராய நகர் முருகேசன் தெருவில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
    • பவதாரிணியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய் காரணமாக இலங்கையில் உள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் கடந்த 5 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் அவர் உயிரிழந்தார்.

    இசை விழா ஒன்றுக்காக இலங்கை சென்றிருந்த இளையராஜாவுக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆஸ்பத்திரிக்கு சென்று பவதாரிணியின் உடலை பார்த்து கண் கலங்கினார்.

    47 வயதே ஆன பாடகி பவதாரிணியின் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.

    பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து நேற்று பிற்பகல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பவதாரிணியின் உடலை அவரது சகோதரர் கார்த்திக் ராஜா மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

    மாலை பவதாரிணியின் உடல் சென்னை தியாகராய நகர் முருகேசன் தெருவில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    அங்கு பவதாரிணியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    இதைப்போல நடிகர்கள் சிவகுமார், ராமராஜன், விஷால், கார்த்தி, சிம்பு, விஜய் ஆண்டனி, விஷ்ணு விஷால், சதீஷ், ஆனந்த்ராஜ், உதயா, விஜய்யின் தாயாரும், பாடகியுமான ஷோபா சந்திரசேகர், காயத்ரி ரகுராம் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

    மேலும் டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், மணிரத்னம், மிஷ்கின், லிங்குசாமி, ஆர்.கே.செல்வமணி, எழில், வெங்கட் பிரபு, வெற்றிமாறன், சீனு ராமசாமி, சுதா கொங்கரா, சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், கவிஞர் முத்துலிங்கம் உள்ளிட்ட பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    ஏராளமான பொதுமக்களும் பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    பவதாரிணியின் மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தெலுங்கு முன்னணி நடிகரும் ஜனசேனா கட்சித்தலைவருமான பவன் கல்யாண் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    பொதுமக்கள் அஞ்சலியை தொடர்ந்து, பவதாரிணியின் உடல் இரவு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இன்று (சனிக்கிழமை) அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.

    பவதாரிணியின் மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று இரவு காலமானார்.
    • அவரது உடல் விமானம் மூலம் இன்று சென்னை கொண்டு வரப்பட்டது.

    சென்னை:

    கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

    இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் இன்று மதியம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து தியாகராய நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டது. பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இளையராஜா தனது எக்ஸ் தளத்தில், அன்பு மகளே என பதிவிட்டு பவதாரிணியின் சிறுவயது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

    • நதிகள் இணைப்புத் திட்டத்தை பாரதியார் அப்போதே பாடியிருக்கிறார்.
    • காசியில் தமிழ் சங்கமத்தை நடத்தும் பிரதமரை கண்டு வியப்படைகிறேன்.

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசும் போது கூறியதாவது: 

    காசியில் பாரதியார் 2 ஆண்டுகள் கல்வி பயின்றிருக்கிறார். காசியில் படித்து கற்றுக் கொண்ட விஷயங்களை பாடுகையில், புலவர் பேச்சுக்களை காசியில் கேட்க கருவி செய்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியா முன்னேற்றம் அடையாத நேரத்தில் பாரதியார் இதை பாடியுள்ளார்.

    கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம், வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம் என்று நதிகள் இணைப்பு திட்டம் குறித்து அப்போதே பாரதியார் பாடியிருக்கிறார்.


    இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சாமி தீட்சிதர் கங்கையில் மூழ்கி எழும் போது சரஸ்வதி தேவி அவருக்கு வீணையை பரிசளித்த நிகழ்வு காசியில் நடைபெற்றுள்ளது. அப்படிப்பட்ட பெருமை மிக்க காசி நகரில் தமிழ் சங்கமத்தை நடத்தும் எண்ணம் பிரதமருக்கு எப்படி வந்தது என்பதை கண்டு வியப்படைகிறேன்.

    தமிழ்மொழி பழமையான, பெருமைமிக்க மொழி, காசியை போலவே தமிழ்நாடும் பழமையான வரலாறு உடையது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெற்றது. தமது குழுவினருடன் ஜனனே ஜனனே, ஓம் சிவோஹம் உள்ளிட்ட பாடல்களை அவர் பாடினார்.  பிரதமர் மோடி அந்த பாடல்களை ரசித்து கேட்டு மகிழ்ந்தார்.

    இசையமைப்பாளர் இளையராஜா 80 வயதை அடைந்திருப்பதால், அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சதாபிஷேகம் செய்து வழிபட்டு இருக்கிறார்.
    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோவிலில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த தலமாதலால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

    மேலும் இத்தலத்தில் அபிராமி அந்தாதி அருளிய அபிராமி பட்டருக்காக அபிராமி அம்மன் அமாவாசையை பவுர்ணமியாக்கிய வரலாறு நிகழ்ந்த தலம். இக்கோவிலில் 60, 70, 75, 80, 90, 100 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் முறையே சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் மற்றும் ஆயுள் ஹோமங்களை செய்து சுவாமி, அம்பாளை தரிசித்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இளையராஜா

    இத்தகைய சிறப்புமிக்க கோவிலுக்கு நேற்று மாலை 80 வயதை அடைந்த இசையமைப்பாளர் இளையராஜா சதாபிஷேகம் செய்து கொள்வதற்காக வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். கோவில் கொடிமரத்தின் அருகே இளையராஜா கோ பூஜை, மற்றும் கஜ பூஜை செய்தார்.

    தொடர்ந்து நூற்றுக்கால் மண்டபத்தில் 84 கலசங்கள் மற்றும் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, இளையராஜாவுக்கு சதாபிஷேக முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிவகுமார் சிவாச்சாரியார், செந்தில்குமார் குருக்கள் ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்து வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் இயக்குனர் பாரதிராஜா, இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    ×