search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivakarthikeyan"

    • இயக்குனர் ஆர்.ரவிக்குமாருக்கு நறுமுகை என்ற மகள் உள்ளார்.
    • குழந்தையை சிவகார்த்திகேயன் மடியில் வைத்திருக்கும் படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான சிவகார்த்திகேயன் தொடர்ச்சியாக பல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது படங்கள் ரசிகர்கள், குழந்தைகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    இவரது நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்கி இருந்தார்.

     

    இயக்குனர் ஆர்.ரவிக்குமாருக்கு நறுமுகை என்ற மகள் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2வது குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு அகரன் என்று பெயர் வைத்துள்ளனர்.

    இதை அறிந்த சிவகார்த்திகேயன் இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இல்லத்திற்கு சென்று குழந்தையை பார்த்து வாழ்த்தி உள்ளார்.

    இந்நிலையில் குழந்தையை சிவகார்த்திகேயன் மடியில் வைத்திருக்கும் படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

    ஆர்.ரவிக்குமாரின் மகனை சிவகார்த்திகேயன் கொஞ்சி விளையாடுவது போன்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான கருடன் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
    • சர்வதேச திரைப்பட விழாக்களில் கொட்டுக்காளி விருதுகளை குவித்து வருகிறது.

    கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மட்டும் வெளியாகியுள்ளது. இந்த படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரங்களை குவித்து வருகிறது.

    இந்நிலையில், சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வருகிறது என படக்குழு அறிவித்துள்ளது.

    சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான கருடன் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக சூரி நடிப்பில் விடுதலை 2 மற்றும் ஏழு கடல் ஏழு மழை திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூழாங்கல் படத்தை இயக்கிய பிஎஸ் வினோத்ராஜ் தனது கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியிடவுள்ளனர்.

    கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    சிவகார்த்திகேயன் தாயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மட்டும் வெளியாகியுள்ளது. இந்த படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரங்களை குவித்து வருகிறது.

    அந்த வகையில் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை கொட்டுக்காளி திரைப்படம் வென்று அசத்தியுள்ளது.

    சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடையப்பட்டது. இது தவிர்த்து தற்போது நடந்து வரும் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகியுள்ளது.

    20ஆவது FEST Festival விழாவில் சிறந்த படத்திற்கான 'GOLDEN LYNX' விருதை 'கொட்டுக்காளி' திரைப்படம் வென்றுள்ளது. பல சரவதேச விருதுகளையும் அங்கீகாரமும் இப்படத்திற்கு கிடைத்ததால். இப்படத்தின் மீது மக்களுக்கு மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பல சர்வதேச ஊர்களுக்கு சென்றூ பாராட்டைப் பெற்ற கொட்டுக்காளி கடைசியாக தன் சொந்த மண்ணிற்கு வரவுள்ளது.

    திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியிடவுள்ளனர். படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான கருடன் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக சூரி நடிப்பில் விடுதலை 2 மற்றும் ஏழு கடல் ஏழு மழை திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புதுமுக தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தை தயாரிக்க உள்ளார்.
    • படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் பல பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளையும் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி 'புறநானூறு' படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கும் என கூறப்பட்டது.

    கால்ஷீட் தொடர்பாக ஏற்பட்ட நெருக்கடியில் சுதா கொங்கரா உடன் 'புறநானூறு' படத்தில் நடிகர் சூர்யா இணைவது கேள்விக்குறியானது. இந்த நிலையில் சூர்யாவுக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை புறநானூறு படத்தில் நடிக்க வைக்க சுதா கொங்கரா முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் தகவல் உலா வருகிறது.

    அதில், புறநானூறு படத்தில் நடிகர் சூர்யாவுக்கு பதிலாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவர் நடித்து வரும் அமரன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தையும் முடித்துவிட்டு, சுதா கொங்கராவின் 'புறநானூறு' படத்தில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

    மேலும் 2டி எஎண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருந்த நிலையில், தற்போது புதுமுக தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தை தயாரிக்க உள்ளார் என்று தெரிகிறது. அவர் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்தவர் என்று கூறப்படுகிறது. இதனால் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தங்கலான் படத்தின் 'மினிக்கி மினிக்கி’ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
    • அமரன் படத்தின் ரிலீஸ் தேதியும் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

    பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் 'மினிக்கி மினிக்கி' பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    அதே போல் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தின் ரிலீஸ் தேதியும் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார்.

    ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள 2 படங்களின் முக்கிய அப்டேட்டும் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகியுள்ளது. அதனையொட்டி ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் "இன்று தங்கலான் நாள், அமரன் நாள்" என்று உற்சாகத்தோடு பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதிக்கு ஏற்கனவே ஆராதனா என்ற மகளும் குகன் என்ற மகனும் உள்ளனர்.
    • தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    ஜூன் 2 அன்று நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதிக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

    இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஆராதனா என்ற மகளும் குகன் என்ற மகனும் உள்ள நிலையில் மூன்றாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கு பவன் என்று சிவகார்த்திகேயன் பெயர் சூட்டியுள்ளார்.

    தனது 3வது குழந்தைக்கு பவன் என பெயர் சூட்டிய, அந்நிகழ்வின் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2019 ஆம் ஆண்டு ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் வெளியான காளிதாஸ் நல்ல வரவேற்பை பெற்றது.
    • காளிதாசர் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.

    ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படம் மூலம் பரத் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார் . இதை தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளிவந்த செல்லமே திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.

    பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை வென்றார் பரத். அதற்கடுத்து பட்டியல், எம் மகன், வெயில், வானம், காளிதாஸ், 555 போன்ற பலப் படங்களில் நடித்தார்.

    கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் வெளியான காளிதாஸ் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு 2ம் பாகம் உருவாகிறது. 

    இரண்டாவது பாகத்தையும் செந்தில் வேல் தான் இயக்குகிறார். பரத், அஜய் கார்க்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

    இந்நிலையில், காளிதாசர் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின
    • இது சிவகார்த்திகேயனின் 24 வது படமாகும்.

    தமிழ் சினிமாவில் பிசியாக இயங்கி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்த அமரன் திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

    இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த நிலையில்தான் கடந்த 2022 ஆம் ஆண்டு டான் படம் மூலம் ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயன்- இயக்குனர் சிபி சக்கரவர்த்தி காம்போ மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இது சிவகார்த்திகேயனின் 24 வது படமாகும்.

     

    இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும், எஸ்.ஜே சூர்யா முக்கிய காதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. டான் படத்திலும் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்திருந்தது கவனிக்கத்தக்கது. இதற்கிடையில் இந்த படத்திற்கு 'பாஸ்' [BOSS] என பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிவகார்த்திகேயன் தற்பொழுது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார்.

    சிவகார்த்திகேயன் தற்பொழுது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. அதைத்தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'SK 23' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    எச் வினோத் துணிவு படத்திற்கு பிறகு நடிகர் விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியது. அதற்கடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது. பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார். டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியுடன் ஒரு படமும் அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

    எச் வினோத் விஜய் மற்றும் தனுஷை வைத்து படத்தை இயக்கியப்பின் சிவகார்த்திகேயனின் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுள் முக்கியமானவர் சிவகார்த்திகேயன்.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.

    இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. படம் தற்பொழுது 85 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நாட்களில் 100 கோடியை வசூலில் எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுள் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். அவர் தற்பொழுது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். நல்ல கதையுடைய திரைப்படத்தை தயாரித்தும் வருகிறார். அதுமட்டுமில்லாமல் நல்ல திரைப்படத்தை பார்த்தால் அப்படக்குழுவினரை நேரில் அழைத்தோ, தொலைப்பேசியில் அழைத்தோ பாராட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    சமீபத்தில் மகாராஜா திரைப்படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் அப்படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் மற்றும் தயாரிப்பாளரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அப்பொழுது எடுத்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2022 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார்.
    • லெஜெண்ட் சரவணன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.

    பிரபல சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரான லெஜண்ட் சரவணன் தொழிலதிபராக மட்டுமல்லாமல் 2022 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார்.

    இவர் ஆரம்பத்தில் தனது தொழில் ரீதியான விளம்பர தொடர்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் பதிந்தார்.

    அதன் பின்னர் இவர் 2022-ல் வெளியான தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். ஜே டி ஜெர்ரி இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை . மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இந்நிலையில் லெஜெண்ட் சரவணன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சமீபத்தில் சூரி, சசிகுமார் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த கருடன் திரைப்படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார்.

    இதற்குமுன் துரை செந்தில்குமார் கொடி, காக்கி சட்டை போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

    படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படத்தின் இயக்குனரான துரை செந்தில்குமார் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

     

    அதில் லெஜண்ட் சரவணன் முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். தாடி, மீசை மற்றும் கையில் Gun உடன் காணப்படுகிறார். சிவகார்த்திகேயனுக்கு காக்கி சட்டை எப்படி ஒரு மாறுப்பட்ட ஆக்ஷன் ஹீரோ திரைப்படமாக அமைந்ததோ, சூரிக்கு கருடன் திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்ததோ. லெஜண்ட் சரவணனுக்கு இத்திரைப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிவகார்த்திகேயன் எஸ்.கே.23 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • மான்டிசோரி பள்ளி ஆசிரியையாக நினைத்திருந்தேன்.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் எஸ்.கே.23 என்ற படத்தில் நடித்து வருகிறார். போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட திரை உலகின் பிரபல நடிகை ருக்மணி வசந்த் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிக்கும் 51-வது படத்திலும் ருக்மணி வசந்த் கதாநாயகியாக இணைந்துள்ளார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார். தற்போது தென்னிந்திய படங்களுக்கு வெளிச்சம் கிடைத்துள்ளதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சி அடைகிறேன்.

    எந்த மொழி படங்களில் நடித்தாலும் அதில் சிறப்பாக பேச வேண்டும் என முயற்சி செய்கிறேன். எனக்கு சினிமா வாய்ப்புகள் சரியாக அமையாவிட்டால் மான்டிசோரி பள்ளி ஆசிரியையாக நினைத்திருந்தேன். ஆனால் இபபோதுள்ள சூழ்நிலையில் அது தேவைப்படாது என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிவகார்த்திகேயனின் எஸ்.கே.23 படத்தில் முதலில் மிருணாள் தாக்கூர் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அவர் நடிக்க முடியாததால் ருக்மணி வசந்த் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×