என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ravi Mohan"

    • இந்த படத்தில் நாயகியாக தவ்தி ஜிவால் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ரவி மோகனின் 34-வது படம் 'கராத்தே பாபு'. 'டாடா' பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கியுள்ள இப்படத்தை ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

    இந்தப் படத்தில் ரவி மோகன் அரசியல்வாதி மற்றும் கராத்தே மாஸ்டராக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நாயகியாக தவ்தி ஜிவால் நடித்துள்ளார். இதன் மூலம் அவர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், விடிவி கணேஷ், சக்தி வாசுதேவன், சுப்ரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, ராஜ ராணி பாண்டியன், சந்தீப் ராஜ், சிந்துப்ரியா, அஜித் கோஷ், அரவிந்த், கல்கி ராஜா, ஸ்ரீ தன்யா, ஆனந்தி, சாம் ஆண்டர்சன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

    இந்த நிலையில், 'கராத்தே பாபு' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரில் அனல்பறக்க அரசியல் வசனங்கள் இடம்பெற்று இருக்கின்றன. 'நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன், நான் அரசியலையே தொழிலா பண்றவன்' என்கிற வசனம் இடம்பெற்று இருக்கின்றன. 



    • எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பொங்கல் விழாவை கொண்டாடினார்.
    • இந்த விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார்.

    மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதில் பிரதமர் மோடி மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இதுபோல இந்த ஆண்டும் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் பொங்கல் விழா இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் பொங்கலிடப்பட்டது.

    இந்த விழாவில் நீதிபதிகள், பல உயரதிகாரிகள், பல்வேறு துறை வல்லுனர்கள், திரை பிரபலங்கள், பத்திரிகைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

    பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் பங்கேற்று இருந்தனர். தோழி கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டார். நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இந்த பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் பங்கேற்றது குறித்து காமகிரஷ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு... ஆனா ஜன நாயகன் blocked" என்று தெரிவித்துள்ளார்.

    • மத்திய இணை மந்திரி எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகிறார்.
    • விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார்.

    மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதில் பிரதமர் மோடி மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இதுபோல இந்த ஆண்டும் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் பொங்கல் விழா இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் பொங்கலிடப்பட்டது.

    இந்த விழாவில் நீதிபதிகள், பல உயரதிகாரிகள், பல்வேறு துறை வல்லுனர்கள், திரை பிரபலங்கள், பத்திரிகைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

    பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் பங்கேற்று இருந்தனர். தோழி கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டார். நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் கடந்த ஜனவரி 9 அன்று வெளியானது.

    இப்படத்தில் ரவி மோகனின் வில்லன் கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதர்வா, ஶ்ரீலீலா உள்ளிட்டோரும் இதில் சிறப்பாக நடித்துள்ளனர்.

    இப்படம் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

    பராசக்தி படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.27 கோடிக்கும் மேலும் 2 நாட்களில் ரூ.51 கோடிக்கு மேலும் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இந்நிலையில் பராசக்தி திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அளித்த அன்புக்கு நடிகர் ரவி மோகன் நன்றி கூறியுள்ளார்.

    அவர் வெளியிட்ட பதிவில், "பல நல்ல உணர்வுகளை இப்போது அனுபவித்து வருகிறேன். பராசக்தி திரைப்படத்தில் 'திரு' கதாபாத்திரத்திற்கு நீங்கள் காட்டிய அன்பும் ஆதரவும் காரணமாகவே இது சாத்தியமானது.

    உங்களையெல்லாம் மீண்டும், புதிய புதிய முயற்சிகளுடன் விரைவில் சந்திக்க வருகிறேன்.

    2026 ஆம் ஆண்டு உங்களுக்கெல்லாம் மிகச் சிறப்பானதாக அமைய என் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார். மேலும் தான் தியேட்டர் சென்று படம் பார்த்த வீடியோவையும் ரவி பகிர்ந்துள்ளார். 

    • 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது.
    • ரவி மோகனின் வில்லன் கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளது

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. இப்படத்தில் ரவி மோகனின் வில்லன் கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பராசக்தி படத்தின் ப்ரோமோஷனுக்காக ரவி மோகன் கொடுத்த நேர்காணல் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    cute ஆக நீங்க செய்யும் மூட நம்பிக்கை எது என்ற கேள்விக்கு பதில் அளித்த ரவி மோகன், " என் நண்பன் ஞாயிற்றுக்கிழமைகளில் சிவப்பு நிற உடை அணிய வேண்டும் என்று என்னிடம் கூறினான். அதை இன்று வரை செய்து வருகிறேன் என்று கூறினார். அதற்கு படப்பிடிப்பில் எப்படி இது சாத்தியமாகும் என்று கேள்விக்கு அப்போது சிவப்பு நிற உள்ளாடை அணிவேன் என்று ரவி மோகன் கூறியது இணையத்தி ட்ரெண்டானது.

    மேலும், சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வரும் cute ஆன வசனங்களை ரவி மோகன் recreate செய்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது

    • பராசக்தி படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது
    • பராசக்தி படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், பராசக்தி படத்தை பாராட்டி நடிகரும் மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "அன்புள்ள இளவல் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, பராசக்தி படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்தப் படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம்

    பின்குறிப்பு:

    பின்னால் வந்தாலும் முந்திச் சொல்ல வேண்டியது உணர்ச்சி முந்திக்கொண்டதால் பின்தங்கிய குறிப்பு இது. முதல் பாராட்டு இந்த பயோஃபிக்ஷன் கதையையும், இதன் இயக்குனர் திருமதி சுதா கொங்கராவையும், இக்கதையைத் தேர்ந்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப்போகும் தம்பி சிவகார்த்திகேயனையும் சேரும்.

    இந்தச் சினிமாச் சரித்திரத்தில் இணைந்துவிட்ட ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும். ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், எடிட்டர் சதீஷ் சூரியா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மற்றும் இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்" என்று தெரிவித்துள்ளார். 

    • பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது
    • சென்னை காசி தியேட்டரில் ரவி மோகன், கெனிஷா பராசக்தி படம் பார்த்தனர்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'பராசக்தி'. இந்த படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தாமதம் ஆனதால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் 'பராசக்தி' வெளியாகி உள்ளது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே நடிகர் ரவி மோகன், கெனிஷா ஆகியோர் சென்னை காசி தியேட்டரில் பராசக்தி பார்த்தனர். படம் பார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேனிஷா, "ரவிக்காக மட்டும் தான் பராசக்தி ஓடும். என் கண்ணுக்கு வேற யாரும் தெரியல. அவருக்காகவே இந்த படம் பண்ண மாதிரி இருக்கு. ஹீரோவா பண்ணா என்ன வில்லனா பண்ணா என்ன.. அவர் தான் நம்பர் 1 இந்த படத்துல.. Second Half-ல அவர தாண்டி படமே இல்ல. அவர் எப்பவுமே Evergreen.. Ever Best" என்று தெரிவித்தார்.

    மேலும், பேசிய கெனிஷா, "ஜனநாயகன் ரிலீஸ் அன்று தான் உண்மையான பொங்கல்" என்று தெரிவித்தார்.

    • பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.
    • திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னதாக 'பராசக்தி' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தாமதம் ஆனதால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் 'பராசக்தி' வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், நடிகர் ரவி மோகன், கெனீஷா ஆகியோர் சென்னை காசி தியேட்டரில் பராசக்தி படம் பார்க்க ஒன்றாக வந்தனர். 

    • அதை நீக்கிய பின்னரே சான்றிதழ் அளிப்போம் எனவும் சென்சார் வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
    • அந்தத் தேதி எதுவாக இருந்தாலும் சரி.. அன்றைக்குத்தான் எங்களுக்குப் பொங்கல் ஆரம்பம்.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ஜன நாயகன். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கேவிஎன் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.

    தவெக மூலம் அரசியல் பிரவேசம் செய்துள்ள விஜய் இது தனது கடைசி படம் என்று தெரிவித்துள்ளார்.

    இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதல் வழங்கப்படவில்லை.

    எனவே தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தை அணுகியது. படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் காட்சிகள் உள்ளதாவும், அதை நீக்கிய பின்னரே சான்றிதழ் அளிப்போம் எனவும் சென்சார் வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    இதனால் இதுவரை சான்றிதழ் கிடைக்காததால் நாளை படத்தை ரிலீஸ் செய்வது முடியாத காரியம்ம் என்பதால் படத்தின் ரிலீசை ஒத்தி வைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதனால் விஜய் ரசிகர்கள் ஒரு புறம் சோகத்தின் இருக்க மறுபுறம் விஜய்யின் படத்தை சென்சார் வாரியம் மூலம் மத்திய அரசு குறிவைத்து அரசியல் அழுத்தம் தருவதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    அமலாக்கத்துறை, சிபிஐ போல சென்சார் வாரியாதையும் மிரட்டல் கருவியாக மோடி அரசு மாற்றி உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் நடிகர் ரவிமோகம், ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து வருத்தம் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "இதயம் கனக்கிறது விஜய் அண்ணா.. உங்களது கோடிக்கணக்கான தம்பிகளில் ஒருவனாக, ஒரு சகோதரனாக நான் உங்கள் பக்கம் நிற்கிறேன்.

    உங்களுக்கு என்று ஒரு வெளியீட்டுத் தேதி தேவையில்லை.. நீங்கள் திரையில் தோன்றுவதுதான் உண்மையான 'ஓப்பனிங்'. அந்தத் தேதி எதுவாக இருந்தாலும் சரி.. அன்றைக்குத்தான் எங்களுக்குப் பொங்கல் ஆரம்பம்!" என்று தெரிவித்துள்ளார்.

    நடிகர் ரவி மோகன் ஜனவரி 10 அன்று வெளியாக உள்ள சிவகார்திகேயனின் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அதுவும் முதல் முறையாக நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.   

    • பராசக்தி படம் ஜன.10ஆம் தேதி வெளியாக உள்ளது.
    • நேற்று பராசக்தி படத்தின் டிரெய்லர் வெளியானது

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி. அதர்வா, ஜெயம்ரவி, ஸ்ரீலீலா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ஜனநாயகனுக்கு போட்டியாக ஜன.10ஆம் தேதி வெளியாக உள்ளது.

    இப்படத்தின் பாடல்கள், டீசர் எல்லாம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நேற்று படத்தின் டிரெய்லர் வெளியானது. அதே சமயம் நேற்று பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

    அந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், "எதே ஜெயம் ரவியா, வில்லன் கேரக்டரா? ஒத்துக்கிட்டாரா? என்று ரஜினி போலவே பேசியது இணையத்தில் வைரலானது.

    கூலி இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, "எதே நாகர்ஜுனாவா, வில்லன் கேரக்டரா? ஒத்துக்கிட்டாரா? என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பராசக்தி படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    • டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

    இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். மொழிப் போராட்ட பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது.

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய சிவகார்த்திகேயன், "ஜனவரி 10-ம் தேதி 'பராசக்தி' படம் வருது, அதையும் செலிப்ரேட் பண்ணுங்க. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது அண்ணன் - தம்பி பொங்கல் தான்" என்று தெரிவித்தார்.

    இதையடுத்து பேசிய ரவி மோகன், "பராசக்தி சுயமரியாதையை காப்பாற்றும் படம். நானும் என்னுடைய சுயமரியாதையை காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறேன். முதுகில் அடிப்பவர்களை பற்றி எனக்கு கவலை கிடையாது. கண்ணுக்கு தெரிபவர்களை பற்றிதான் கவலை. அனைவருக்கும் ஒரு அண்ணனாக சொல்கிறேன், சுயமரியாதையை மட்டும் யாரும் இழக்காதீர்கள்" என்று தெரிவித்தார்.

    • ரவி மோகன் - கெனிஷா ஜோடி நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக ஊர் சுற்றி வருகிறார்கள்.
    • புத்தாண்டை ஒட்டி ரவி மோகன் இன்ஸ்டா ஸ்டோரி வைத்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கில் இருவரும் கருத்துகளையோ, அறிக்கைகளையோ வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இரு தரப்பினரும் பரஸ்பரம் எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். ஒருவரையொருவர் விமர்சித்து பேசிய பதிவுகளையும் சமூக வலைதளங்களில் நீக்கினார்கள்.

    இந்த சர்ச்சைக்கு நடுவுல ரவி மோகன் - கெனிஷா ஜோடி நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக ஊர் சுற்றி வருகிறார்கள்.

    இந்நிலையில், புத்தாண்டை ஒட்டி ரவி மோகன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கெனிஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

    ×