என் மலர்
நீங்கள் தேடியது "Ravi Mohan"
- ரவி மோகனின் 34-வது படமான கராத்தே பாபு படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கி வருகிறார்
- ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரவி மோகன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'காதலிக்க நேரமில்லை.' இப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
இதற்கிடையே ரவி மோகனின் 34-வது படமான கராத்தே பாபு படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குவதாக போஸ்டரை பகிர்ந்து பட நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்து இருந்தது. ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் ரவி மோகன் அரசியல்வாதி மற்றும் கராத்தே மாஸ்டராகவும் நடித்துள்ளார் என்று தெரிகிறது. இந்த படத்தில் நாயகியாக தவ்தி ஜிவால் நடிக்கவுள்ளார். இதன் மூலம் அவர் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இவர் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நீதிமன்ற உத்தரவின் பேரில் நடிகர் ரவி மோகன்- ஆர்த்தி ஆகியோர் 3 முறை சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
- விவாகரத்து வழக்கை வருகிற 15-ந்தேதிக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் ஒத்திவைத்தது.
'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் ரவி மோகன் தனது 34-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தில் ரவி மோகன் அரசியல்வாதியாக நடிக்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டு இருந்தது.
சட்டசபையில் ரவி மோகன் பேசும் காட்சிகளுடன் வெளியான இந்த டீசரின் இறுதியில் இப்படத்தின் பெயர் 'கராத்தே பாபு' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் டவ்டே ஜிவால் நாயகியாக நடிக்கிறார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், நாசர், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
படப்பிடிப்பில் பிசியாக நடித்து வரும் ரவி மோகன், ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வரும் குழந்தைகளுடன் விளையாடி, நடனமாடி நேரத்தை செலவிட்டுள்ளார். மேலும் அங்குள்ளவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#RaviMohan spent time with kids yesterday who were in special home & helped them financially too❤️✨
— AmuthaBharathi (@CinemaWithAB) January 30, 2025
Started the year with lot of Positivity & Love?pic.twitter.com/VA4ViRQrOA
முன்னதாக, மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்ற உத்தரவின் பேரில் நடிகர் ரவி மோகன்- ஆர்த்தி ஆகியோர் 3 முறை சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இனி விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு விவாகரத்து வழக்கை வருகிற 15-ந்தேதிக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- பராசக்தி படத்தில் சிகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
- பராசக்தி படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்துள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
இதனையடுத்து, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடிக்கிறார் என்று படக்குழு கடந்த மாதம் அதிகாரப்பூரவமாக அறிவித்தது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷ்க்கு 100வது படமாகவும் இப்படம் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு பராசக்தி என்று பெயரிட்டுள்ளனர். நடிகர் திலகம் சிவாஜியின் முதல் படத்தின் பெயர் பராசக்தி என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
No more waiting⚡No more countdowns⏳The revolution starts NOW?Here's the #Parasakthi Tamil Title Teaser✊?Tamil Teaser Link ? https://t.co/DM8za1QWDI@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14… pic.twitter.com/OnnYTewACn
— DawnPictures (@DawnPicturesOff) January 29, 2025
- இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
- இந்தப் படத்தை ஸ்கிரீன் ஸீன் நிறுவனம் தயாரிக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரவி மோகன். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'காதலிக்க நேரமில்லை.' இப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இதுதவிர நடிகர் ரவி மோகன் சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையே ரவி மோகனின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குவதாக போஸ்டரை பகிர்ந்து பட நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்து இருந்தது. ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
ரவி மோகனின் 34 படத்திற்கு கராத்தே பாபு என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு அதிகாரப்பூர்வ வீடியோ வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் ரவி மோகன் அரசியல்வாதி மற்றும் கராத்தே மாஸ்டராகவும் நடித்துள்ளார் என்று தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடிக்கிறார்
- இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடிக்கிறார் என்று படக்குழு கடந்த மாதம் அதிகாரப்பூரவமாக அறிவித்தது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்த படத்தில் ரவி மோகன் மற்றும் அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷ்க்கு 100வது படமாகவும் இப்படம் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது. படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவை படக்குழு இன்று வெளியிட இருந்தது ஆனால் சில சூழ்நிலை காரணமாக வெளியிடவில்லை. படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதில் சிவகார்த்திகேயன் கையில் தீ எறி குண்டுடன் இருக்கிறார். தீ பரவட்டும், வைவால ரெவால்யூஷன் என வரிகள் போஸ்டரில் இடம் பெற்றுது.
திரைப்படத்திற்கு பராசக்தி என தலைப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன் .
- ரவி மோகனின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கி வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன் .
இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியானது 'காதலிக்க நேரமில்லை' திரைப்படம். இப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே ரவி மோகனின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குவதாக போஸ்டரை பகிர்ந்து பட நிறுவனம் கடந்த அக்டோபரில் அறிவித்தது. ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில் ரவி மோகனின் 34 படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவை நாளை காலை 11 மணிக்கு படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் ரவி மோகன் ஒரு அரசியல்வாதியாகவும் கராத்தே மாஸ்டராகவும் நடித்துள்ளார் என தகவல் வெளியாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடிக்கிறார்
- இந்த படத்தில் ரவி மோகன் மற்றும் அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடிக்கிறார் என்று படக்குழு கடந்த மாதம் அதிகாரப்பூரவமாக அறிவித்தது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்த படத்தில் ரவி மோகன் மற்றும் அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷ்க்கு 100வது படமாகவும் இப்படம் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது. படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவை நாளை மாலை 5 மணிக்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் தலைப்பு பராசக்தி என வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
+2
- ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை.
- திரைப்படம் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். திரைப்படம் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
குறிப்பாக இத்திரைப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மேலும், இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ரவி மோகன், வினய் மற்றும் யோகி பாபு இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஸ்பெர்ம் டொனேஷன் கொடுக்க ஹாஸ்பிட்டல் வந்து அங்கு நடக்கும் நகைச்சுவை காட்சி இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கவுதம் மேனன் மலையாள திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- ரவி மோகன் நாயகனாக நடிக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன். இயக்கம் மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பு மற்றும் நடிப்பு என பலதுறைகளில் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, மம்மூட்டி நடிக்கும் மலையாள திரைப்படம் ஒன்றை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், இவர் இயக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் தமிழில் உருவாக இருக்கிறது. இந்தப் படம் தொடர்பான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதுபற்றிய தகவல்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் கவுதம் மேனன் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், "இயக்குநர் வெற்றி மாறன் கதை ஒன்றை திரைப்படமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை நான் இயக்க இருக்கிறேன். இந்தப் படம் தொடர்பான முதற்கட்ட ஆலோசனை மற்றும் இதர பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் ரவி மோகன் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் அதன் ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜெயம் ரவி தற்பொழுது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஜெயம் ரவி தற்பொழுது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஜெயம் ரவி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் இனிமே ஜெயம் ரவி எனும் அவரது பெயரை ரவி மோகன் என மாற்றியுள்ளதாக கூறியுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது
அன்பான ரசிகர்கள், செய்தியாளர்கள் மற்றும் பொது மக்கள். அசாத்திய நம்பிக்கை அளவற்ற கனவுகளோடு புத்தாண்டில் நாம் கால் பதிக்கும் இந்த தருணத்தில், உங்களிடம் என் வாழ்க்கையின் புதிய பயணத்தை குறிக்கும் மாற்றத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
என் வாழ்க்கையில் சினிமா மீதான என் பற்று கடந்த காலத்திலும், தற்போதும் எவ்வித மாற்றமின்றி அப்படியே இருக்கிறது. இதுவே நான் இன்று இந்த நிலையில் இருக்கவும் அடித்தளமாக அமைந்துள்ளது. சினிமா பயணத்தை திரும்பி பார்க்கும் இந்த நேரத்தில், தாங்களும், சினிமாவும் எனக்கு வழங்கிய வாய்ப்புகள், அன்பு, ஆதரவு அனைத்திற்கும் கடமைப்பட்டுள்ளேன். எனக்கு வாழ்க்கை, அன்பு மற்றும் எல்லாவற்றையும் வழங்கிய துறைக்கு என் ஆதரவை எப்போதும் கொடுப்பேன்.
இந்த நாள் தொடங்கி, நான் ரவி / ரவி மோகன் என்று அழைக்கப்பட விரும்புகிறேன். இந்த பெயர் என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை கனவுகளை முன்னோக்கி எடுத்து செல்லும் என் கனவு மற்றும் மதிப்புகளுடன் புதிய பயணத்தை தொடங்கும் என்னை இந்த பெயரிலேயே அனைவரும் அழைக்குமாரும், ஜெயம் ரவி என்ற பெயரில் இனி வரும் காலங்களில் அழைக்க வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
திரைத்துறை மீது நான் கொண்டுள்ள அளவற்ற அன்பின் பாத்திரமாக ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்நிறுவனம் உலகளவில் ரசிகர்கள் கொண்டாடும் சினிமாவை திரைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கம் கொண்டு துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் திறமையாளர்களுக்கும், நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, அர்த்தமுள்ள கதைகளை திரைக்கு கொண்டு வர உதவும்.
என் அன்பான ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி, சிறப்பான சமுதாயத்தை உருவாக்க ரசிகர்கள் எனக்கு பலமாகவும், ஊக்கமளித்தும் வருகிறார்கள். எனக்கு ஆதரவளித்த சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய என் ரசிகர் மன்றத்தை பிறருக்கு உதவும் வகையில் ரவி மோகன் ரசிகர்கள் அறக்கட்டளையாக மாற்றப்படுகிறது. இது, நான் பெற்ற அன்பையும், ஆதரவையும் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பாக மாற்றும் எனது இதயப்பூர்வமான முயற்சி.
தமிழ் மக்கள் ஆசியுடன் ரசிகர்கள் ஊடகத்தினர் மற்றும் அனைவரையும் மேலே குறிப்பிட்டுள்ளதை போன்றே என்னை அழைக்குமாறும் புதிய துவக்கத்திற்கு தங்களது ஆதரவை வழங்குமாறும் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். உங்களது ஊக்கம் தான் எனக்கு எப்போதும் சிறப்பான உந்துதலாக இருந்து வந்துள்ளது. புதிய பயணத்திலும் உங்களின் தொடர்ச்சியான ஆதரவு எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நேர்மறை மற்றும் முன்னேற்றம் நிரம்பிய ஆண்டாக இதனை மாற்றுவோம். அன்புடன், ரவி மோகன்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.