என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kenisha Francis"

    • கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
    • இன்று நடைப்பெற்ற பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் ரவி மோகன் கலந்துக் கொண்டார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி மோகன் (ஜெயம் ரவி). கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சுமார் 15 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி கடந்த ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியது. தற்போது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைப்பெற்ற பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் ரவி மோகன் கலந்துக் கொண்டார். இவருடன் பாடகி கெனிஷா பிரான்சிஸ் கலந்துக் கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்து மணமக்களை வாழ்த்தினர். இதற்கு ரவி மோகனின் மனைவியான ஆர்த்தி ரவி இதற்கு ஆதங்கம் தெரிவிக்கும் வகையில் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    பல ஆண்டுகளாக, நான் மௌனமாக இருந்ததால் நான் பலவீனமாக இருந்ததால் அல்ல, ஆனால் என் மகன்களைப் பாதுகாக்கவும், ஒவ்வொரு கொடுமையான குற்றச்சாட்டு மற்றும் புண்படுத்தும் பொய்யையும் உடைத்து எறியவே அவ்வாறு செய்தேன்.

    என் பிள்ளைகளுக்கு அவர்களது தந்தையைப் பற்றிய உண்மையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு இருக்கிறது, ஆனால் பெற்றோர்களாகிய நாங்கள் அதைச் செய்யவில்லை.

    இன்றைய என் பேச்சு, ஒரு மனைவியாகவோ காயமடைந்த ஒரு பெண்ணாகவோ அல்ல. என் குழந்தைகளின் நலனையே ஒரே குறிக்கோளாகக் கொண்ட ஒரு தாயாகவே நான் பேசுகிறேன். இன்று நான் எழவில்லை என்றால், அவர்களை நான் என்றும் தொலைத்துவிடுவேன்.

    நீங்கள் இன்று தங்க நிறத்தில் பட்டு உடையில் நடந்து செல்லலாம். உங்கள் பொதுவாழ்க்கையில் பாத்திரங்களை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் உண்மையை நீங்கள் மாற்ற இயலாது. "தந்தை" என்பது வெறும் ஒரு பட்டமல்ல. அது ஒரு பொறுப்பு.

    எங்கள் கதையில் சுதந்திரமாக நடமாடும் மற்றவர்களுக்கு—குழந்தைகளின் கண்ணீர்கள் காணாத இடங்களில் ஒலிக்கின்றன. என் வார்த்தைகளில் நீங்கள் தப்பிக்கலாம், ஆனால் பிரபஞ்சம் அமைதியாக நினைக்கும் உண்மையிலிருந்து தப்பிக்க முடியாது.

    என் இன்ஸ்டாகிராம் பெயரைப்பற்றி அதிக கவலைக்குள்ளாகும் ஆர்வமுள்ள மனங்களுக்கும் தங்களையே நல்வாழ்த்துப்பவர்கள் என நினைப்பவர்களுக்கும்—நான் இன்னும் 'ஆர்த்தி ரவி' என்றே இருக்கிறேன், நான் மற்றும் சட்டம் மாறாக தீர்மானிக்கும் வரை.

    மீடியா நண்பர்களுக்கு—சட்ட நடைமுறை முடியும் வரை என்னை "முன்னாள் மனைவி" என அழைப்பதைத் தவிர்க்கவும்.

    இது பழிவாங்கல் அல்ல. இது ஒரு தாய் தீக்குள் செல்வது—போராட அல்ல, பாதுகாக்க.

    நான் அழவில்லை. நான் கத்தவில்லை. நான் உறுதியாக நின்றுள்ளேன், ஏனெனில் எனக்கு வேண்டியது அது.

    இன்னும் உங்களை "அப்பா" என்று அழைக்கும் அந்த இரண்டு சிறுவர்களுக்காக.

    அவர்களுக்காக, நான் ஒருபோதும் பின்னடைய மாட்டேன்.

    ஆர்த்தி

    • மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
    • ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாக தகவல் வெளியானது.

    நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்து உள்ளார். கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து இருக்கிறார்.

    இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவியின் மனைவி, "இது எனது கவனத்துக்கு வராமலும் எனது ஒப்புதல் இல்லாமலும் ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு'' என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது.

    ஆனால் கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் தற்போது கெனிஷா DT NEXT நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

    அதில் "ஜெயம் ரவிக்கும் தனக்கும் இருக்கும் நட்பு என்பது தொழில்முறை சார்ந்தது மட்டும் தான். ஜெயம் ரவி என்னுடைய நண்பர், எனது வாடிக்கையாளர் அவ்வளவு தான். அவர்கள் விவாகரத்துக்கு நான் காரணம் என சொல்கிறார்கள். அது முற்றிலும் பொய். ஜெயம் ரவி அவரது மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பும் வரை அவரை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது.

    இது உங்க வீட்டு பிரச்சனை இல்லை, வேறொருவரின் குடும்ப பிரச்சனை. அதில் இருந்து விலகி இருங்கள். என்னை இந்த விவகாரத்தில் இழுக்காதீர்கள். எனக்கு வேலை இருக்கிறது, அதற்கு நேரம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்திருந்தார்.
    • இந்நிலையில் ஜெயம் ரவி தற்பொழுது மும்பை சென்றுள்ளார்.

    நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்திருந்தார். கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து இருக்கிறார்.

    இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவியின் மனைவி, "இது எனது கவனத்துக்கு வராமலும் எனது ஒப்புதல் இல்லாமலும் ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு'' என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது.

    ஆனால் கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் ஜெயம் ரவி தற்பொழுது மும்பை சென்றுள்ளார். சென்னையிலிருந்த அவர் புதிய அலுவகம் ஒன்றை மும்பையில் அமைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தி திரையுலக தயாரிப்பு நிறுவனங்களிடம் இந்தி படத்திற்கான சில பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்பட்டு வருகிறது.

    ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×