என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்த்தி"

    • '96' படத்தை இயக்கிய பிரேம்குமார் நீண்ட இளைவெளிக்கு பிறகு 'மெய்யழகன்' படத்தை இயக்கியனார்.
    • இயக்குநர் பிரேம் குமார்-க்கு ஒரு அழகிய காரை சர்பிரைஸ் பரிசாக வழங்கியுள்ளார்.

    '96' படத்தை இயக்கிய பிரேம்குமார் நீண்ட இளைவெளிக்கு பிறகு 'மெய்யழகன்' படத்தை இயக்கியனார். இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டது.

    அடுத்ததாக பிரேம்குமார் 96 பாகம் இரண்டு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நடிகர் சூர்யா இயக்குநர் பிரேம் குமார்-க்கு ஒரு அழகிய காரை சர்பிரைஸ் பரிசாக வழங்கியுள்ளார். இதுக்குறித்து பிரேம் அவரது இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    அதில் " இந்த கார் எனது நீண்ட நாள் கனவு வண்டியாகும். எனக்கு குறிப்பாக தார் ராக்ஸ் 2AX 5L 4*4 மாடல் ஒயிட் கலர் தான் வாங்க வேண்டும் என நினைத்து இருந்தேன். ஆனால் எனக்கு அந்த மாடல் கிடைக்கவே இல்லை 1 வருடம் கழிந்தது. நான் இக்காரை பற்றி ராஜா சாரிடம் கூறியுள்ளேன். அதன் பிறகு அந்த காருக்காக சேர்த்து வைத்த பணத்தை செலவு செய்யும் சூழல் ஏற்ப்பட்டது. அதனால் என் கனவு வண்டி இன்னும் தள்ளி போனது. நான் இதைப்பற்றி ராஜா சாரிடம் கூறினேன் ஆனால் அப்போது அவர் அமைதியாக இருந்தார். ஆனால் எனக்கு அப்போது தெரியவில்லை இதற்கு பின்னாடி ஒரு பிளான் இருக்கிறது என.

    நேற்று முந்தினம் சூர்யா அண்ணா இந்த காரின் புகைப்படத்தை அனுப்பினார்.இதை பார்த்தவுடன் நான் அதிர்ச்சியில் ராஜா சாருக்கு கால் செய்து என்னிடம் இதை வாங்க பணம் இல்லை என கூறினேன். அவர் சிரித்துக் கொண்டே இது சூர்யா சார் உனக்கு பரிசளித்துள்ளார். என கூறினார்." என அதில் மிகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.

    நடிகர் கார்த்தி காரின் சாவியை பிரேம்க்கு தர அந்த காரில், பேரன்புடன் மெய் என கையெழுத்து பரிசை வழங்கினார்.

    • நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.
    • சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.

    நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இன்று காலை அவருக்கான இறுதி சடங்குகள் நடைப்பெற்று அவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    திரைத்துறையில் இருந்து ஏராளமானோர் வந்து கவுண்டமணியின் மனைவியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தவெக தலைவர் விஜய், கார்த்தி , பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நேரில் வந்து இறுதி அஞ்சலியை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் உதயா தற்பொழுது `அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • கடைசியாக சிலம்பரசன் டி.ஆர் நடித்த மாநாடு திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

    நடிகர் உதயா தற்பொழுது `அக்யூஸ்ட்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் 2000 ஆம் ஆண்டு வெளியான திருநெல்வேலி திரைப்படத்தின் மூலம் திரையுலகத்தில் நடிகராக அறிமுகமானார்.

    கடைசியாக சிலம்பரசன் டி.ஆர் நடித்த மாநாடு திரைப்படத்தில் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து தற்பொழுது அக்யூஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை கன்னட இயக்குநரான பிரபு இயக்கியுள்ளார். உதயாவுடன் இப்படத்தில் அஜ்மல், யோகி பாபு, பிரபு சாலமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை மருதநாயகம், இசை நரேன் பாலகுமார் , படத்தொகுப்பை கே.எல் ப்ரவீன் மேற்கொள்கின்றனர்.

    இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. டீசர் விறுவிறுப்பாக அமைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • நடிகர் உதயா தற்பொழுது `அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • கடைசியாக சிலம்பரசன் டி.ஆர் நடித்த மாநாடு திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

    நடிகர் உதயா தற்பொழுது `அக்யூஸ்ட்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் 2000 ஆம் ஆண்டு வெளியான திருநெல்வேலி திரைப்படத்தின் மூலம் திரையுலகத்தில் நடிகராக அறிமுகமானார்.

    கடைசியாக சிலம்பரசன் டி.ஆர் நடித்த மாநாடு திரைப்படத்தில் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து தற்பொழுது அக்யூஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை கன்னட இயக்குநரான பிரபு இயக்கியுள்ளார். உதயாவுடன் இப்படத்தில் அஜ்மல், யோகி பாபு, பிரபு சாலமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை மருதநாயகம், இசை நரேன் பாலகுமார் , படத்தொகுப்பை கே.எல் ப்ரவீன் மேற்கொள்கின்றனர்.

    இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு இன்று காலை 10.01 மணிக்கு வெளியிடுகின்றனர். இதை நடிகர் கார்த்தி அவரது எக்ஸ் தளத்தில் வெளியிடுகிறார்.

    • வடிவேலு நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள கேங்கர்ஸ் படம் வருகிற 24ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
    • மூக்குத்தி அம்மன்-2 படத்தை தற்போது இயக்கி வருகிறார்.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இப்படம் வருகிற 24ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    இந்த படத்திற்குப் பிறகு சுந்தர் சி மூக்குத்தி அம்மன்-2 படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் சுந்தர் சி நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்க இருக்கிறார். மூக்குத்தி அம்மன்-2 படம் நிறைவடைந்ததும், கார்த்தியை வைத்து இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    கார்த்தி தற்போது 'சர்தார்-2', 'வா வாத்தியாரே' படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் 'கைதி-2' படத்தில் நடிக்க போவதாகவும் பேசப்படுகிறது. மேலும், சிறுத்தை சிவா உடன் மீண்டும் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • சுகுமார் இயக்கத்தில் புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப் பெரியளவில் வெற்றி பெற்றது.
    • அல்லு அர்ஜுன் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

    சுகுமார் இயக்கத்தில் புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப் பெரியளவில் வெற்றி பெற்றது. இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

    இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜுன் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு இன்று அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டது.

    இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இயக்குநர் சுகுமார் தமிழில் எந்த நடிகரை வைத்து படத்தை இயக்குவீர்கள் என கேட்ட கேள்விக்கு. இயக்குநர் சுகுமார் " நான் தமிழில் திரைப்படம் இயக்கினால் நடிகர் விஜய் , அஜித் மற்றும் கார்த்தியை வைத்து திரைப்படம் இயக்குவேன்" என பதிலளித்துள்ளார்.



    • ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.
    • இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத் தொடர்ந்து 'ஹிட் 3 படத்தில் நானி நடித்துள்ளார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.

    பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தின் டீசரரை படக்குழு அண்மையில் வெளியிட்டது.

    போலீஸ் கதாபாத்திரத்தில் நானி இப்படத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ப்ரேம வெல்லுவா பாடலை படக்குழு வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தில் நடிகர் கார்த்தி கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஹிட் 4 படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். இதனால் படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுக்குறித்த அதிகார்ப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

    • கங்குவா படத்தில் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
    • கார்த்தி தற்போது ‘சர்தார்-2', ‘வா வாத்தியாரே' படங்களில் நடித்து வருகிறார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் சிவா, 2011-ம் ஆண்டில் 'சிறுத்தை' படத்தை இயக்கி அறிமுகமானார். கார்த்தி, தமன்னா நடித்த இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தின் மூலம் சிறுத்தை சிவா என்றே அவர் அழைக்கப்படுகிறார்.

    அதனைத்தொடர்ந்து அஜித்குமாரை வைத்து 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்', 'விஸ்வாசம்' என தொடர் வெற்றி படங்களை இயக்கி கவனம் ஈர்த்தார். ரஜினிகாந்தை வைத்து 'அண்ணாத்த', சூர்யாவை வைத்து 'கங்குவா' படங்களை இயக்கினார். கங்குவா படத்தில் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

    இந்தநிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு சிவா - கார்த்தி கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படம் அதிரடி படமாக எடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. கார்த்தி தற்போது 'சர்தார்-2', 'வா வாத்தியாரே' படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் 'கைதி-2' படத்தில் நடிக்க போவதாகவும் பேசப்படுகிறது.

    இந்த படங்களை தொடர்ந்து கார்த்தி - சிவா கூட்டணி கைகோர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது.

    • படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சர்தார்.' இந்தப் படத்தின் வெளியீட்டின் போதே இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்தார் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வேக வேகமாக உருவானது.

    சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

    சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    கதைக்களம் ஜப்பானில் நடப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. எஸ்.ஜே சூர்யா பிளாக் டாகர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியாவிற்கு அச்சம்மிக்க ஒரு போர் நடைப்பெற இருக்கிறது அதை தடுக்கும் முயற்சியில் சர்தார் ஈடுப்படுவது போல காட்சிகள் அமைந்துள்ளது. படத்தின் டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் இன்று நடைப்பெற்ற முன்னோட்ட வீடியோ வெளியீட்டு விழாவில் படக்குழு கலந்துக் கொண்டனர். அதில் கார்த்தி " இரும்பு திரை படத்தை பார்க்கும் போது செல்ஃபோனில் மெசெஜ் வருவதே பயமாக இருந்தது. சர்தார் திரைப்படத்திற்கு பிறகு வாட்டர் பாடிலை பார்பதேற்கே பயமாக இருந்தது. சர்தார் 2 திரைப்படத்தில் அப்படி ஒரு பயப்படும் விஷயத்தை தான் வைத்து இருக்கிறார். எஸ்.ஜே சூர்யா சாருக்கு எவ்வளவு நடிப்பு தீனி கொடுத்தாலும் பத்தாது. அவரு நடிக்க வந்தால் யாரும் செட்டில் செல்ப்ஹோன் பயன்படுத்த மாட்டார்கள். அவரது நடிப்பையே ரசித்து பார்த்துக் கொண்டு இருப்பர். டீசர் மற்றூம் திரைப்படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்" என கூறினார்.

    • மித்ரன் இயக்கத்தில் கார்த்தி சர்தார் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்
    • சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சர்தார்.' இந்தப் படத்தின் வெளியீட்டின் போதே இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்தார் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வேக வேகமாக உருவானது.

    சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காலையில் வெளியாகி கவனம் ஈர்த்தன.

    இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

    • மித்ரன் இயக்கத்தில் கார்த்தி சர்தார் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சர்தார்.' இந்தப் படத்தின் வெளியீட்டின் போதே இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்தார் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வேக வேகமாக உருவானது.

    அதன்படி, சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    இதனையடுத்து, படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழு மதியம் 12.45 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மேலும், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு பணிகளையும், கலை இயக்குநராக ராஜீவன், சண்டை பயிற்சி திலீப் சுப்பராயன், படத்தொகுப்பு பணிகளை விஜய் வேலுக்குட்டி மேற்கொண்டுள்ளார்.

    • மித்ரன் இயக்கத்தில் கார்த்தி சர்தார் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • படத்தின் டீசர் நாளை வெளியாகிறது.

    நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சர்தார்.' இந்தப் படத்தின் வெளியீட்டின் போதே இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்தார் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வேக வேகமாக உருவானது.

    அதன்படி, சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழு நாளை வெளியிடவுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. அதில் சர்தார் பாகம் 1 படத்தின் ஒரு ரீகேப் போல அமைந்துள்ளது.

    சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மேலும், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு பணிகளையும், கலை இயக்குநராக ராஜீவன், சண்டை பயிற்சி திலீப் சுப்பராயன், படத்தொகுப்பு பணிகளை விஜய் வேலுக்குட்டி மேற்கொண்டுள்ளார்.

    ×