என் மலர்

    நீங்கள் தேடியது "Supreme Court"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, மத்திய மந்திரி எல்.முருகன் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
    • 3 மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

    புதுடெல்லி:

    மத்திய இணை மந்திரி எல்.முருகன், தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகித்தபோது வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பஞ்சமி நிலம் குறித்து பேசியிருந்தார்.

    இதையடுத்து எல்.முருகன் மீது எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் நியமிக்கப்பட்டதை அடுத்து இந்த வழக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, மத்திய மந்திரி எல்.முருகன் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுத்து, எல்.முருகனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், 3 மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து மத்திய மந்திரி எல்.முருகன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கில் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அளித்து 6 வாரத்துக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒத்தி வைத்தது. அவதூறு வழக்கில் 6 வாரத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்க சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உங்களுக்கு எங்கு வேண்டுமோ அங்கு போய் மனுதாக்கல் செய்து கொள்ளுங்கள் என்று கூறி நீதிபதிகள் வழக்கை விசாரிக்க திட்டவட்டமாக மறுத்தனர்.
    • மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசியது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளதா?

    புதுடெல்லி:

    சென்னையை சேர்ந்த வக்கீல் பி.ஜெகநாத் என்பவர் சார்பில் வக்கீல் ஜி.பாலாஜி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் கடந்த 2-ந்தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்து மதம், சனாதன தர்மத்தை குறி வைத்து, தகாத முறையில் பேசி அவமானப்படுத்தும் வகையில் நடத்தப்பட்டு உள்ளது. சனாதனத்தை டெங்கு, மலேரியாவை போல ஒழிக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

    சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே. சேகர்பாபு பங்கேற்றது அரசமைப்பு சாசனத்தின் 25, 26 பிரிவுகள் மீறப்பட்டது, முரணானது என அறிவிக்க வேண்டும்.

    சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற பயங்கரவாத அமைப்பு நிதி வழங்கியதா என்பதை சி.பி.ஐ. விசாரிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், சி.பி.ஐ.க்கும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கு விசாரணைக்கு வந்ததும் நீதிபதிகள், "இந்த வழக்கை நாங்கள் ஏன் விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு ஏன் தலையிட வேண்டும்" என்று கேட்டனர்.

    அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், "நீங்கள்தான் முதன்மையான கோர்ட்டாக இருக்கிறீர்கள். நீங்கள்தான் விசாரிக்க வேண்டும்" என்றார்.

    அதற்கு நீதிபதிகள், 'இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஐகோர்ட்டுகள் உள்ளன. நீங்கள் எந்த ஐகோர்ட்டில் வேண்டுமானாலும் இந்த விவகாரத்துக்காக அணுகலாம்.

    இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. உங்களுக்கு எங்கு வேண்டுமோ அங்கு போய் மனுதாக்கல் செய்து கொள்ளுங்கள் என்று கூறி நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க திட்டவட்டமாக மறுத்தனர்.

    அதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல், உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள், குறிப்பாக சனாதனத்தை வேரறுப்போம், சனாதனத்தை ஒழித்து விடுவோம் என்று கொசுவோடு சனாதனத்தை ஒப்பிட்டு பேசியது, கிருமிகளுடன் சனாதனத்தை ஒப்பிட்டு பேசியது ஆகிய விஷயங்களை சொல்லிக்கொண்டே இருந்தார்.

    அதன்பிறகு வழக்கு மனுவை மீண்டும் ஒருமுறை பார்த்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நாங்கள் நோட்டீசு அனுப்புகிறோம். அவர்கள் பதில் அளிக்கட்டும் என்று கூறினார்கள். அதன்பிறகு சனாதனம் பற்றிய பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்குமாறு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் அமைச்சர் சேகர் பாபு, சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்திய திராவிடர் கழகம் ஆகியோருக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

    இந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசியது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளதா? என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது? என்றும், சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு பங்கேற்றது தொடர்பாகவும் தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு நோட்டீசு அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காவிரி நீர் மேலாண்மை வாரியம் 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட உத்தரவு
    • கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு

    காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டு ஆகஸ்டு மாதத்துக்கான நதிநீர் பங்கை கர்நாடகம் வழங்க மறுப்பதாக கூறி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ஆகஸ்டு 14-ந்தேதி மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கை கடந்த ஆகஸ்டு 25-ந்தேதி தேதி விசாரித்த சுப்ரீம்கோர்ட் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 1-ந்தேதி ஒத்தி வைத்திருந்தது. அதன்பிறகு வழக்கு செப்டம்பர் 1-ந்தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதால் தமிழக அரசின் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் முறையிடப்பட்டது. அப்போது, நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரம் செப்டம்பர் 6-ந்தேதி விசாரிக்கப்படும் என கூறி இருந்தனர்.

    இந்த நிலையில் செப்.6-ந்தேதி சுப்ரீம்கோர்ட்டில் விசாரிக்கப்படும் வழக்குகள் பட்டியலில் இந்த விவகாரம் இடம் பெற்றிருந்தது. ஆனால், அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி பி.எஸ். நரசிம்மா விடுமுறையில் இருந்ததால், அந்த வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து, சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு முன் இந்த விவகாரத்தை தமிழகத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் குறிப்பிட்டு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அப்போது, நீதிபதி பி.ஆர்.கவாய் செப்.21-ந்தேதி இந்த விவகாரம் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று கூறி இருந்தார்.

    அதன்படி இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

    தமிழக அரசு சார்பில் வக்கீல்கள் முகுல் ரோத்தகி, வில்சன், உமாபதி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது அவர்கள், ஆகஸ்டு மாதம் முதல் தண்ணீர் திறப்பதில் கர்நாடகா பிரச்சினை செய்து வருகிறது. காவிரி ஆணையத்தின் உத்தரவை கர்நாடகம் செயல்படுத்துவதில்லை.

    தற்போதைய சூழலில் கர்நாடகா அணைகளில் இருக்கும் நீரின் அளவைப் பொறுத்து பார்த்தாலும், தமிழகத்துக்கு 6400 கன அடி தண்ணீரை திறந்து விட வாய்ப்பு உள்ளது என காவிரி மேலாண்மை ஆணையம் முதலில் கூறினார்கள். இருப்பினும் 5 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்து விட்டால் போதும் என கர்நாடகாவுக்கு உத்தரவிட்டனர்.

    ஆனால் கர்நாடகம் அந்த உத்தரவையும் கூட பின் பற்றுவதில்லை. ஒவ்வொரு முறையும் ஒரு உத்தரவை ஆணையம் பிறப்பிக்கும் ம்போதும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி தமிழ கத்துக்கான நீரை கொடுக்க கர்நாடகம் மறுத்து வருகிறது. மேலும், காவிரி ஒழுங்காற்று குழுதான் தண்ணீரின் அளவு உள்ளிட்ட புள்ளி விவரங்களை கவனத்தில் கொண்டு தண்ணீர் திறப்பதற்கான அளவை நிர்ணயம் செய்கிறது.

    அவர்கள் தமிழ்நாட்டுக்கு தேவையான தண்ணீரை திறந்துவிட போதுமான பரிந்துரைகளை பல்வேறு கட்டங்களாக கொடுத்த போதும் காவிரி மேலாண்மை ஆணையம் அந்த அளவில் இருந்து எப்போதும் குறைத்து தண்ணீரை திறக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் 15 ஆயிரம் கன அடி, 10 ஆயிரம் கன அடி, 7200 கன அடி, 5 ஆயிரம் கன அடி, என தொடர்ச்சியாக தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு கொண்டே வந்துள்ளது.

    எங்களுக்கு தர வேண்டிய தண்ணீர் அளவு அதிக அளவில் நிலுவையில் உள்ளது. ஆனால் அதை எல்லாம் நாங்கள் கேட்கவில்லை. தற்போதைக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை மட்டுமாவது திறந்து விட வேண்டும் என்றுதான் கேட்கிறோம். மழை பற்றாக்குறைவு இருக்கிறது என்பதை நாங்களும் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் அதற்காக அவர்களிடம் இருக்கும் நீரை கூட பகிர்ந்து கொடுக்கமாட்டேன் என்றால் எப்படி?

    நாங்கள் கடைமடை மாநிலமாக இருக்கிறோம். அவர்களுக்கு அவ்வளவு பிரச்சினை என்றால் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்? வறட்சியின் பாதிப்பு என்பது அவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான். கடந்த 12-ந்தேதி கூட்டத்தின் போது, 56 சதவீதம் நீர் பற்றாக்குறை என கூறினார்கள்.

    ஆனால் 6400 கன அடி திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு குறிப்பிட்டுள்ளது. ஆனால் 5000 கன அடி என இறுதி உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. புள்ளி விவரத்தை கணக்கிட்டு அதனடிப்படையில் நீர் வழங்க உத்தரவிடப்பட்டும் அதனை கர்நாடகம் செயல்படுத்த மறுக்கிறது என்று வாதிட்டனர்.

    அப்போது கர்நாடகா அரசு வக்கீல் கர்நாடகாவில் மழை இல்லை, காவிரியில் நீரும் குறைவாக இருக்கிறது. தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் விவசாயத்துக்கு மட்டும்தான். ஆனால் கர்நாடகாவை பொறுத்த வரை குடிநீர், விவசாயம் என அனைத்துக்கு நீர் தேவை. அதுதான் எங்களது பிரச்சினை. எங்களால் வினாடிக்கு 2500 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்று வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு ஒரு முறை கூடி சூழலை ஆராய்ந்து வருகிறது. மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகள் மற்றும் பரிந்துரைகளை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதேவேளையில் காவிரியில் 24 ஆயிரம் கன அடி நீரை திறக்க கோரும் தமிழ் நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது. வறட்சி கால அட்டவணைப்படி தமிழ்நாட்டுக்கான உரிய நீரை கர்நாடகா திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு எடுத்து வரும் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
    • காவிரி தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் கர்நாடக அரசு அவசர மனுவை தாக்கல் செய்து உள்ளது.

    புதுடெல்லி:

    தமிழ்நாட்டுக்கு காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருக தொடங்கி உள்ளன. காவிரியில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை உடனே திறந்து விட தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

    இது தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணையம், சுப்ரீம் கோர்ட்டு ஆகியவற்றில் முறையிட்டுள்ளன. இதில் தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கோரி கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

    ஆனால் தங்களது தேவைக்கே போதுமான தண்ணீர் இல்லாததால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும் சூழல் இல்லை என்று கர்நாடகா கூறி வருகிறது.

    இதற்கிடையே நேற்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய காவிரி நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தப்பட்டது.

    காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு எடுத்து வரும் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் டெல்லியில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, அம்மாநில அனைத்துக்கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த இக்கூட்டத்தில் காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர். இதில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு எடுக்கப்பட்டது.

    அதன்படி தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி திறந்து விட காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க கோரி கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், தமிழகம் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் கேட்டபோது எங்களிடம் சொற்ப அளவு தண்ணீர் இருந்தாலும் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டோம். அதன்படி 5 ஆயிரம், 3 ஆயிரம் கன அடி என எங்களால் இயன்ற அளவுக்கு திறக்கப்பட்டது.

    தற்போது தண்ணீர் திறந்து விடுவதற்கான சாத்தியமே இல்லை. எங்களுக்கே 120 டி.எம்.சி.க்கு மேல் தேவைப்படுகிறது. இந்த சூழலில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட முடியாது. இதை கருத்தில் கொள்ளாமல், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    காவிரி தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் கர்நாடக அரசு அவசர மனுவை தாக்கல் செய்து உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முறைகேடு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தும்படி, 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
    • கபில்சிபில் இப்போது லஞ்ச ஒழிப்புதுறைக்கு ஆஜராவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

    டெல்லி:

    கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதலமைச்சர், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இதையடுத்து வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆரம்ப கட்ட விசாரணையில் முறைகேடு நடை பெற்றதற்கான முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்புதுறை அறிக்கை அளித்தும், இந்த முறைகேடு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தும்படி, 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

    இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

    இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த விவகாரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது.

    மேலும் ஆட்சி மாற்றம் காரணமாக மீண்டும் புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என்றும், அதேப்போன்று சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி செய்யப்ப டுகிறது எனவும் கடந்த ஜூலை 18-ந் தேதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு வானது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள், அனிருத்தா போஸ் மற்றும் பி.எம்.திரிவேதி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் இப்போது லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஆஜராவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

    இந்த வழக்கு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்பாக தி.மு.க. சார்பில் கபில்சிபில் ஆஜராகி இருந்தார் என்றும் இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை சார்பாக எப்படி ஆஜராக முடியும்? என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு பதில் அளித்த கபில்சிபில், நான் ஆஜராவது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பிடிக்கவில்லை என்றால் வழக்கில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்றார்.

    கடைசியாக கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இப்போது யார் ஆட்சியில் இருக்கிறார்கள்? இந்த வழக்கு என்ன? என்பது குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது. நாங்கள் வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கிறோம். அப்போது மீண்டும் வாருங்கள் என்று வழக்கை தள்ளி வைத்தனர்.

    எனவே இந்த வழக்கு அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தெரிகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணையில் தனக்கு பதில் ஆஜராக ஜூனியர் ஒருவரை வக்கீல் அனுப்பினார்.
    • இதனால் அந்த வக்கீலுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 2,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

    அப்போது, அந்த வழக்கில் ஆஜராக வேண்டிய வக்கீல் அங்கு வராமல், அவருக்கு பதிலாக ஜூனியரை அனுப்பி வைத்திருந்தார்.

    வழக்கில் ஆஜரான அந்த ஜூனியர், முதன்மை வக்கீல் இல்லாததால் விசாரணையை ஒத்திவைக்கும்படி கோரினார். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், வழக்கு வாதத்தை துவக்கும்படி அந்த ஜூனியருக்கு உத்தரவிட்டனர்.

    ஆனால் வழக்கு குறித்த ஆவணங்கள் எதுவும் இல்லை என அவர் கூறியதைக் கேட்டு ஆத்திரமடைந்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட வக்கீலை உடனே ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.

    இதனால் சம்பந்தப்பட்ட வக்கீல் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜரானார். நேரில் வராததற்கு மன்னிப்பும் கோரினார்.

    அப்போது அவரிடம் நீதிபதிகள், தகுந்த முன்னேற்பாடு மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி ஜூனியர் வக்கீலை அனுப்பி வைத்தது ஏன் என கேள்வி எழுப்பினர்.

    மேலும், உரிய முறையில் நடந்துகொள்ள தவறியதால், சுப்ரீம் கோர்ட் வக்கீல் சங்கத்தில் 2,000 ரூபாயை செலுத்தி அதற்கான ரசீதை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த வக்கீலுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 21-ம் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
    • வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும்

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நேற்றுடன் நிறுத்திவிட்டது. காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காக்க வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    காவிரியில் தண்ணீர் திறந்து விட ஆணையிடக்கோரி, சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 21-ம் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதுவரை காத்திருந்தால் குறுவை பருவ நெற்பயிர்கள் முற்றிலுமாக கருகிவிடும். எனவே, சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதியை அவசரமாக அணுகி, இந்த வழக்கில் 21-ந்தேதி விசாரணை தொடங்கும் வரை, இடைக்கால ஏற்பாடாக வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரவணை பாயசத்தின் மாதிரிகளை சோதனை செய்ய திருவிதாங்கோடு தேவசம்போர்டு சுப்ரீம் கோர்ட்டை அணுகியது.
    • 200 டிகிரி வெப்ப நிலையில் அரவணை தயார் செய்யப்படுவதால், அதில் அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்து இருக்க வாய்ப்பில்லை என்று தேவசம்போர்டு வாதிட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அரவணை பாயசம், அப்பம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    அரிசி, வெல்லம் கலந்து தயாரிக்கப்படும் அரவணை பாயாசத்தை சபரிமலை வரக்கூடிய அய்யப்ப பக்தர்கள் விரும்பி வாங்கிச்செல்வார்கள். இந்நிலையில் அரவணை பாயாசத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த ஏலக்காயின் தடயங்கள் இருப்பது இந்த ஆண்டு தொடக்கத்தில் கண்டறியப்பட்டது.

    இதையடுத்து அரவணை பாயாசம் விற்பனை செய்வதை நிறுத்த திருவிதாங்கோடு தேவசம்போர்டுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அரவணை பாயசத்தின் மாதிரிகளை சோதனை செய்ய திருவிதாங்கோடு தேவசம்போர்டு சுப்ரீம் கோர்ட்டை அணுகியது.

    200 டிகிரி வெப்ப நிலையில் அரவணை தயார் செய்யப்படுவதால், அதில் அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்து இருக்க வாய்ப்பில்லை என்று தேவசம்போர்டு வாதிட்டது. பாயாசத்தின் மாதிரிகளை எடுத்து சரிபார்க்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்பேரில் சபரிமலையில் பூச்சிக்கொல்லி கலந்த ஏலக்காயை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்ட மீதமிருந்த அரவணை பாயாசத்தின் மாதிரிகளை எடுத்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆய்வு செய்தது. 8 வெவ்வேறு இடங்களில் இருந்து 16 மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்பட்டன.

    அதில் அரவணை பாயாசத்தின் மாதிரிகள் உண்ணக்கூடியதாக இருப்பதாவும், திருப்திகரமாக இருப்பதும் கண்டறியப்பட்டது. அது தொடர்பான அறிக்கையை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய இணை இயக்குனர் பால சுப்பிரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்படும் போது மீண்டும் கோர்ட்டுக்கு சென்று சீராய்வு மனு தாக்கல் செய்வார்கள்.
    • பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா மசோதாவின் (பி.என்.எஸ்.எஸ்) படி ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல் முறையீடுகளை தடுக்கிறது.

    புதுடெல்லி:

    மரண தண்டனை விதிக்கப்படும் கைதிகள் அதில் இருந்து தப்பிக்க தண்டனையை குறைத்து கொள்வதற்காக நீதிமன்றங்களை நாடுவார்கள். கோர்ட்டு அதை நிராகரிக்கும் போது ஜனாதிபதிக்கு கருணை மனுவை தாக்கல் செய்வார்கள். தண்டனையை நிறுத்துவதற்கும் அல்லது மாற்றுவதற்கும், மன்னிப்பு, தளர்வு, அவகாசம் வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு.

    ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்படும் போது மீண்டும் கோர்ட்டுக்கு சென்று சீராய்வு மனு தாக்கல் செய்வார்கள்.

    இந்நிலையில் மரண தண்டனை கைதிகளின் கருணை மனு மீது ஜனாதிபதி எடுக்கும் முடிவே இறுதியானது. அதற்கு மேல் முறையீடு கிடையாது என்று புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதாவின் (பி.என்.எஸ்.எஸ்) படி ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல் முறையீடுகளை தடுக்கிறது.

    அரசியலமைப்பு சட்டத்தின் 72-வது பிரிவின் கீழ் ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிராக எந்த நீதி மன்றத்திலும் மேல் முறையீடு செய்யக்கூடாது இது இறுதியானது. மேலும் ஜனாதிபதியின் முடிவை பற்றி எந்தவொரு கேள்வியும், எந்த கோர்ட்டுகளிலும் விசாரிக்கப்படாது என்று புதிய சட்ட மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    ஜனாதிபதி அல்லது கவர்னரின் முடிவு கால தாமதம் என காரணம் காட்டி மனுக்கள் தாக்கல் செய்யப்படும்போது இந்த மனுக்களை விசாரிக்க உரிமை உண்டு என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து இருந்தது.

    மும்பை குண்டு வெடிப்பு தொடர்பான யாகூப் மேமன் மரண தண்டனை வழக்கிலும், நிர்பயா கொலை வழக்கிலும் சுப்ரீம் கோர்ட்டில் நள்ளிரவு கடந்தும் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த புதிய சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo