என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர்"

    • பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17-ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரை தொடங்கினார்.
    • ராகுல் காந்தியின் 16 நாட்கள் யாத்திரை நாளையுடன் முடிவடைகிறது.

    பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17-ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரை தொடங்கினார்.

    ராகுல் காந்தியுடன் ராஷ்டீரிய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் உடன் சென்றார்.

    வாகனங்கள், மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். யாத்திரையின்போது வாக்கு திருட்டு தொடர்பாக மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

    ராகுல் காந்தியின் பேரணியில் பிரியங்கா, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக் குமார், உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் இணைந்து இருந்தனர்.

    இதற்கிடையே ராகுல் காந்தியின் 16 நாட்கள் யாத்திரை நாளையுடன் முடிவடைகிறது.

    பீகாரில் உள்ள 20 மாவட்டங்களில் 1,300 கிலோ மீட் டர் தூரம் பயணம் மேற்கொண்ட அவரது யாத்திரை பாட்னாவில் நிறைவடைகிறது. இறுதி நாள் யாத்திரையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    நாளைய பேரணி நிறைவில் மேற்கு வங்காள முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    அவரும் அபிஷேக் பானர்ஜியும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் வீரரும், எம்.பி.யுமான யூசுப் பதான், உத்தரபிரதேச தலைவர் லலிதேஷ் திரிபாதி ஆகியோர் பாட்னா நிறைவு பேரணியில் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
    • வெளிமாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கக் கூடாது. வாக்களர்களாக மாற்றக் கூடாது.

    தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    வெளிமாநிலத்தவர்களை தமிழ்நாட்டு வாக்களர் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளதை கண்டித்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக எச்சரித்துக் கொண்டே இருந்தோம்! எந்த அரசும் அதற்கு செவிசாய்க்கவில்லை. இப்போது வெளிமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக மாற்ற போகிறார்கள் என்ற செய்தி அறிந்ததும் பலர் அலறுகிறார்கள். இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே!!

    சிறப்பு தீவிர வாக்களர் பட்டியல் திருத்த செயல் திட்டத்தில் பீகாரை சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளனர். பெரும் அதிர்ச்சி இது! 70 இலட்சம் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் வாக்காளர்கள் அதாவது 10% வெளிமாநிலத்திவர் என்றால் நாளை தமிழ்நாட்டு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    இந்த தொலைநோக்குத் திட்டத்தை நீண்டகாலமாக செய்துவருகிறது பா.ஜ.க. எப்படியாவது தமிழ்நாட்டை பீகாராக, மத்திய பிரதேசமாக மாற்றவேண்டும் என்ற திட்டத்தில் இந்திக்காரர்களை மிகை எண்ணிக்கையில் தமிழ்நாட்டிற்கு குடியேற பா.ஜ.க. அரசு அனுமதித்தது. தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் யார் வந்தாலும் இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. வந்தாரை வாழ வைப்போம் என்ற பெரிய மனதோடு தமிழ்நாட்டு வேலைகளுக்கு வெளிமாநிலத்தவரை அனுமதித்தார்கள். இப்போது தமிழ்நாட்டில் அவர்களும் வாக்களர்களாக மாறப் போகிறார்கள்.

    வெளிமாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கக் கூடாது. வாக்களர்களாக மாற்றக் கூடாது. 90% வேலை தமிழ்நாட்டு தமிழர்களுக்கே என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தினோம். இப்போது எல்லாம் தலை கீழாக மாறிவிடுமோ என்ற அச்சம் நமக்கு இருக்கிறது.

    கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் 34 லட்சத்து 87 ஆயிரத்து 974 வெளிமாநிலத்தவர்கள் வேலைக்கு வந்து தங்கி உள்ளனர். இந்த எண்ணிக்கை இப்போது பல மடங்காக மாறிவிட்டது. இந்த வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் முடிந்து விட்டால், தமிழ்நாட்டில் தற்போது உள்ள வெளிமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 70 லட்சம் பேர் தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து வாக்களிக்கும் உரிமை பெறுவர்கள். அவ்வாறு நடந்தால் தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் பா.ஜ.க.விடம் கையளிக்கப்படும். ஏனென்றால் பீகார், உத்திரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலத்தவர் அனைவரும். பா.ஜ.க.விற்குதான் அரசியல் வழியாக பங்குகளிப்பு செய்வார்கள். அப்படி செய்தால் தமிழ்நாட்டின் அரசியல் நிலை என்னவாகும். தமிழ்நாட்டில் எது நடக்கக் கூடாது என்று நினைத்தோமே அது உடனடியாக நடந்தேறும்.

    ஆகவே தமிழ்நாடு அரசு உடனடியாக இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு, வெளிமாநிலத்தவரை வெளியேற்றும் செயலில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இன்று தமிழ்நாட்டில் நகரம் தொடங்கி கிராமம் வரை இந்திக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. பா.ஜ.க. சனாதன கும்பல் அவர்கள் வழியாகத்தான் தமிழ்நாட்டில் தொடர்ந்து இந்தியை தமிழர்களிடையே திணிக்கிறது.

    மண்ணின் மக்களின் அனைத்து வேலை வாய்ப்புகளும் இந்திக்காரர்கள் வசம் சென்றடைந்து விட்டது. இப்போது கிராமப்புற வங்கிகளில் மேலாளர்கள், எழுத்தர்களாக வட இந்தியர்களைப் பணியமர்த்துகிறார்கள். அவர்கள் தமிழும் பேசுவதில்லை. ஆங்கிலமும் பேசுவதில்லை. பா.ஜ.க. அரசு தமிழர் இன ஒதுக்கல் கொள்கையை தொடர்ந்து கடைபிடித்து இந்திக்காரர்களை திட்டமிட்டே பணியமர்த்துகிறது. ஆகவே நாம் விழித்துக் கொள்ளவேண்டும்.

    கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளதுபோல், தமிழ்நாட்டிலும் மத்திய, மாநில அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கே வேலை என்ற சட்டத்தை உருவாக்க வேண்டும். வெளிமாநிலத்தவர்களை வேலைக்கு அழைத்து வந்தாலும், வேலை கொடுக்கும் ஒப்பந்தபடி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் இன்னர் லைன் பர்மீட் என்ற சட்டம் உள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டிலும் உள் அனுமதிச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். இதை உடனடியாக நடைமுறைப் படுத்தினால் வெளியாரின் மிகை எண்ணிக்கையிலிருந்தும், எதிர்கால அரசியலிலிருந்தும் நாம் தப்பிக்க முடியும் இல்லையேல் தமிழ்நாடு பீகார். உத்திரபிரதேசமாக மாறும். நாம் இரண்டாம் தர குடிமக்களாக மாறுவோம்!

    ஆகவே வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் சேர்க்கப்படவுள்ள 70 இலட்சம் வெளிமாநிலத்தவரை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது உடனடியாக தமிழக அரசு தடுத்த நிறுத்தவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்!" என்று தெரிவித்துள்ளார். 

    • தே.மு.தி.க. சார்பில் செல்வக்குமார் ,மணிகண்டன் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் இசக்கி முத்து உட்பட அரசியல் கட்சியினர் கலந்து கொண்ட னர்.
    • கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 91 ஆயிரத்து 362 வாக்காளர்கள் உள்ளனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கலெக்டர் அரவிந்த் அரசியல் கட்சியினர் முன்னிலையில் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    இதில் அ.தி.மு.க. சார்பில் ஜெயகோபால், காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் நவீன் குமார், பாரதிய ஜனதா சார்பில் ஜெகநாதன், நாகராஜன், தே.மு.தி.க. சார்பில் செல்வக்குமார் ,மணிகண்டன் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் இசக்கி முத்து உட்பட அரசியல் கட்சியினர் கலந்து கொண்ட னர்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 5 ந்தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.அப்போது 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 15 லட்சத்து 92 ஆயிரத்து 555 வாக்காளர்கள் இருந்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான ஆய்வுப் பணி வீடு வீடாக சென்று மேற்கொள்ளப்பட்டது.

    இதைத் தொடர்ந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட ப்பட்டு உள்ளது. அதன் அடிப்படை யில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்ட மன்ற தொகுதி களிலும் 7 லட்சத்து 73 ஆயிரத்து 533 ஆண் வாக்காளர்கள், 7,77,037 பெண் வாக்காளர்கள், 186 இதர வாக்காளர்கள் என மொத்தம் 15 லட்சத்து 50,776 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை காட்டி லும் பெண் வாக்கா ளர்கள் அதிகம் உள்ளனர்.

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 91 ஆயிரத்து 362 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 116 பேர். பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 47,132 பேர். இதர வாக்காளர்கள் 114 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    குறைந்தபட்சமாக பத்மநாபபுரம் தொகுதியில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 99 வாக்காளர்கள் உள்ளனர்.இங்கு ஒரு லட்சத்து 19,302 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 771 பெண் வாக்காளர்களும் 26 இதர வாக்காளர்களும் உள்ளனர்.

    நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 817 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 440 பெண் வாக்காளர்கள், 11 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 268 வாக்காளர்கள் உள்ளனர்.

    குளச்சல் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 914 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 236 பெண் வாக்காளர்களும் 14 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 164 பேர் உள்ளனர்.

    விளவங்கோடு சட்ட மன்றத் தொகுதியில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 516 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 25,164 பெண் வாக்காளர்களும் மூன்று இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 683 பேர் உள்ள னர்.

    கிள்ளியூர் தொகுதியில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 888 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 22,294 பெண் வாக்காளர்களும் 18 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,47,200 வாக்காளர்கள் உள்ளனர்.

    2022-ம் ஆண்டு மறு சீரமைப்பின் படி விளவங்கோடு தொகுதி யில் கூடுதலாக ஒரு வாக்கு ச்சாவடி உருவாக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்ப டையில் தற்போது குமரி மாவட்டத்தில் 1695 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதியில் 310 வாக்குச்சாவடிகளும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 275 வாக்குச் சாவடிகளும், குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 300 வாக்குச்சாவடிகளும், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 270 வாக்குச்சாவடிகளும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி யில் 272 வாக்குச்சா வடிகளும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளும் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், தேர்தல் தாசில்தார் சுசீலா ஆகியோர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் போது உடன் இருந்தனர்.

    • வாக்குச் சாவடிகளில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்ய, ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க சிறப்பு முகாம்
    • புதிய வாக்களர் சேர்ப்பதில் எவருடைய பெயரும் விட்டு விடாத வகையில் அ.தி.மு.க.வினர் தனி கவனம் செலுத்த வேண்டும்

    நாகர்கோவில் :

    அ.தி.மு.க. அமைப்பு செய லாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்தரவுபடி 1-1-2023 தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவ டைந்தவர்கள், 18 வயது நிறைவடைந்து இது வரை வாக்காளர் பட்டி யலில் பெயர் சேர்க்காத வர்கள் 17 வயது பூர்த்தி யடைந்த இளம் வாக்கா ளர்கள் வாக்காளர் பட்டி யலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளும் வகையில் இன்று 9-ந்தேதி முதல் டிசம்பர் 8-ந்தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் நடக்க உள்ளது.

    அதன்படி இம்மாதம் (நவம்பர்) 12-ந்தேதி சனிக்கிழமை, 13-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை 26-ந்தேதி சனிக்கிழமை, 27-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் வாக்க ளிக்க கூடிய வாக்குச் சாவடிகளில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்ய, ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க சிறப்பு முகாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு முகாமில் தகுதியான நபர்கள் அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஐ வழங்கியும், ஏற்கனவே வாக்காளர்களாக பதிவு செய்துள்ளவர்கள் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், வேறு தொகுதிக்கு மாற விரும்பினால் படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், ஆதார் எண்ணெய் வாக்காளர் பட்டியல் என இணைத்திட படிவம் 6பி-ஐ பூர்த்தி செய்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்க லாம்.

    4 நாட்கள் நடக்கும் இச்சிறப்பு முகாம்களில் குமரி மாவட்டத்தை சார்ந்த ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பகுதிகளில் உள்ள 18 வயது நிரம்பிய வர்களையும், வாக்கா ளர் பட்டி யலில் இதுவரை பெயர் சேர்க்காத வரையும் அடையாளம் கண்டு வாக்காளர் பட்டியலை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இதில் புதிய வாக்களர் சேர்ப்பதில் எவருடைய பெயரும் விட்டு விடாத வகையில் அ.தி.மு.க.வினர் தனி கவனம் செலுத்த வேண்டும்

    இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறியுள்ளார்.

    • தமிழகம் முழுவதும் கடந்த 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சவாடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடந்தது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    சிறப்பு முகாம்

    சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி கூடங்கள், கிராம அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சவாடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடந்தது.

    இந்த முகாம்களில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள், பொது மக்களும் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்தனர்.

    எம்.எல்.ஏ., மேயர் ஆய்வு

    சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கில் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. , மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கவுன்சிலர் சங்கீதா நீதிவர்மன், முன்னாள் வார்டு செயலாளர் நீதிவர்மன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    இதேபோல கிச்சிப்பாளை யம் நாராயணநகர் பாவடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமை யும் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேவையான விண்ணப் பங்கள் இருப்பு உள்ளதா, முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    மத்திய மாவட்ட அவைத்தலைவர் சுபாசு, மாநகர துணை செயலாளர் கணேசன், 42-வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா கணேசன் உள்பட பலர் உடன் இருந்தனர். 

    • விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடந்தது.
    • கிளை வாரியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

    சிவகாசி,

    விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனைக்கூட்டம் திருத்தங்கல் பாலாஜி நகரில் நடந்தது. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கினார்.

    அவர் பேசுகையில், கடந்த 2 நாட்களாக வாக்காளர் சேர்ப்பது குறித்து சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாம் வருகிற 26, 27-ந் தேதிகளில் நடைபெறுகிறது. தங்கள் பகுதியில் உள்ள 17 வயது பூர்த்தியடைந்தவர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்க வேண்டும்.

    விடுபட்டுள்ள வாக்கா ளர்கள் பெயர்களை சேருங்கள். வெளியூர் மாறுத லானவர்கள், இறந்தவர்கள் உள்ளிட்டவர்கள் பெயர்களை நீக்கம் செய்யுங்கள். தற்போது உள்ள வாக்காளர்கள் பெயர்கள் உள்ளதா? எனவும் சரி பாருங்கள்,

    வாக்காளர்கள் சேர்க்கும்போது ஆதார் அட்டை ஜெராக்ஸ் இணைக்கவும். கூட்டத்திற்கு வந்துள்ள நகர ஒன்றிய, பேரூர், கிளை வாரியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

    ஊராட்சி மன்ற தலை வர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பிற அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தகவல் தெரிவித்து வாக்காளர்கள் சேர்க்கும் முகாமில் அதிகப்படியான வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், வெங்கடேஷ், கருப்பசாமி, சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், சாமி என்ற ராஜ அபினேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாக்காளர் சேர்க்கை, நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்.
    • புதிய வாக்காளர்களை கண்டறிந்து, பட்டியலில் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்று வாக்காளர் சேர்க்கை, நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

    மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்ற இப்ப பணிகளில் புதிய வாக்காளர்களை பெயர் பட்டியலில் சேர்க்கும் வகையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

    கட்சி நிர்வாகிகளை முடுக்கிவிட்டு, விடுதல் இல்லாமல் அனைத்து புதிய வாக்காளர்களையும் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்.

    தி.மு.க.வின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி.கலைவாணன் எம்.எல்.ஏ திருவாரூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி சிறப்பு முகாம் பணிகளை நேரில் பார்வையிட்டு உற்சாகப்ப டுத்தினார்.

    வாக்குச்சாவடி சேர்க்கை முகாம்களில், வாக்காளர் சேர்க்கை பணிகள் தொய்வின்றி நடைபெறுகிறதா என்பதை யும் கேட்டறிந்தார்.

    மேலும் அப்பகுதியில் உள்ள புதிய வாக்காளர்களை கண்டறிந்து, பட்டியலில் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கட்சியி னரை கேட்டுக் கொண்டார்.

    இந்த நிகழ்வின் போது திருவாரூர் ஒன்றியச் செயலாளர் தேவா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்றது.
    • 290 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் சட்டமன்ற தொகுதி 9.11.22ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி 1லட்சத்து90 ஆயிரத்து379 ஆண்களும், 1லட்சத்து94ஆயிரத்து38 பெண்களும், 69 திருநங்கைகளும் ஆக மொத்தம் 3லட்சத்து 84 ஆயிரத்து486 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த 2 நாள் முகாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்றது. அதில் நேரடியாகவும் மற்றும் இணையதளம் மூலமாகவும் 1841 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.

    அதே போல் 290 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருத்தம் மற்றும் குடிமாற்றத்திற்காக 816 பேர் விண்ணப்பித்துள்ளனர். முகாமில் நேரடியாக 2218 விண்ணப்பங்களும், இணையதளம் மூலமாக 729 விண்ணப்பங்களும் ஆக மொத்தம் 2947 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று பல்லடம் தாசில்தார் நந்தகோபால் தெரிவித்தார்.

    மேலும் வரைவு வாக்காளர் பட்டியிலில் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம், பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கு வருகிற 8.12.22 வரை அனைத்து வாக்குப்பதிவு மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். வருகிற 26-ந் தேதி மற்றும் 27-ந் தேதி ஆகிய 2 நாட்களும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 5.1.23 அன்று வெளியிடப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதற்கிடையே பல்லடம் நகராட்சி பகுதியில் 253 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கவும், ஒருவர் நீக்கத்திற்கும்,திருத்தம் மற்றும் குடிமாற்றத்திற்காக 65 பேரும் ஆக மொத்தம் 319 பேர் விண்ணப்பித்துள்ளனர்.மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த முகாமில் தங்களது ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்தார்.

    • வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களில் உள்ள சந்தேகங்கள், சிரமங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
    • அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை விண்ணப்பிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பாக வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளருமான ஆபிரகாம் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் ஆபிரகாம் பேசியதாவது:-

    வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களில் உள்ள சந்தேகங்கள், சிரமங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. 18 வயது நிறைவடைந்து இது நாள் வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களும், வருகிற ஜனவரி மாதம் 31-ந்தேதி அன்று 18 வயது நிறைவடைய உள்ளவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

    மேலும் 17 வயது முடிவுற்றவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பி க்கலாம். அவர்களுக்கு 18 வயது பூர்த்தியடைந்தவுடன் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

    இறந்த அல்லது இடம் பெயர்ந்த வாக்காளரது பெயரினை நீக்கம் செய்வதற்கு படிவம்-7-ம், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் செய்வதற்கு படிவம் 8-ம், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இதற்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மைய அலுவலர் மற்றும் வாக்கு ச்சாவடி நிலை அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.

    கடந்த 9-ந்தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் தஞ்சைமாவ ட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெ ற்றது.

    அதே போல் வருகிற 26, 27-ந்தேதிகளிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், தேர்தல் தாசில்தார் ராமலிங்கம் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம்-6 -யை பூர்த்தி செய்து முன்னதாகவே அளிக்கலாம்.

    திருப்பூர் : 

     திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 1.1.2023-நாளினை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2023 மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட காலஅட்டவணைப்படி 26.11.2022 (சனிக்கிழமை), 27.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில்திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது

    மேலும், எதிர்வரும் சிறப்பு முகாம் நாட்களில் ஜனவரி 1ந் தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் மற்றும் அடுத்த ஆண்டு அதாவது 2023 ஆண்டின் ஏப்ரல் 1ந் தேதி, ஜூலை 1ந் தேதி, அக்டோபர் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம்-6 -யை பூர்த்தி செய்து முன்னதாகவே அளிக்கலாம். மேற்படி முன்னதாக வரப்பெற்ற படிவங்கள் (அடுத்தாண்டில் தகுதி நாள் அடையும்) சேகரிக்கப்பட்டு அவை அந்தந்த காலாண்டின் துவக்கத்தில் (ஏப்ரல், ஜூலை, அக்டோபர்) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

    சிறப்பு முகாம் நாளன்று, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோர், பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் மற்றும் ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பாக, கீழ்க்கண்ட படிவங்களில் உரிய ஆவணங்களை இணைத்து வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கபடிவம் 6,வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கபடிவம் 6B,வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யபடிவம் 7,ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய /ஒரு சட்டமன்ற தொகுதியிலிருந்து மற்றொரு சட்டமன்ற தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்ய மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ளபடிவம் 8 விபரங்களை திருத்தம் செய்யபொதுமக்கள் Www.nvsp.in என்ற இணையதளம்மூலமாகவும், Voter HelplineApp என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் . இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    • முகாமில் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • வலிமையான பூத் என்ற நிகழ்ச்சிக்கு உமரி சத்தியசீலன் தலைமை தாங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பா.ஜ.க. துணைத் தலைவர் சசிகலா புஷ்பா,மாவட்ட தலைவர் சித்ராங்தன் ஆலோசனைப்படி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.

    இதில் பா.ஜ.க. நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அதன்படி தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டலம் 60 பூத் கமிட்டிகளிலும் கிளை தலைவர்கள் மூலம் பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களுடன் ஒவ்வொரு பூத்திருக்கும் 5 பேர் நியமனம் செய்து வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    தெற்கு மண்டலத்தில் ஏ.வி.எஸ். தொடக்கப்பள்ளி, கே.டி. கோசல்ராம் உயர்நிலைப்பள்ளி, தங்கமாள்புரம் மேல்நிலைப்பள்ளி, புதிய துறைமுகம் மேல்நிலைப்பள்ளி,தெர்மல் நகர் காமராஜர் பள்ளி, குழந்தை இயேசு துவக்க பள்ளி உட்பட 17 வாக்குசாவடிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல்,நீக்குதல்,முகாமில் பாஜக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

    வலிமையான பூத் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன் தலைமையில்,தெற்கு மண்டல தலைவர் மாதவன்,மாவட்ட பொருளாளர் வக்கீல் சண்முகசுந்தரம்,மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவர் தேவகுமார், நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெய்கிருஷ்ணன், ஆகியோர் அடங்கிய நிர்வாகிகள் குழு பார்வையிட்டனர்.

    இதில் கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்ன தங்கம்,மகளிர் அணி தெற்கு மண்டல தலைவி செல்வி,துணை தலைவி சிலம்பொலி,அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தெற்கு மண்டல தலைவி சுமித்ரா, பொதுச் செயலாளர் பிரபு, துணைத்தலைவர் பொய்சொல்லலான், வர்த்தகப் பிரிவு தெற்கு மண்டல தலைவர் மற்றும் நிர்வாகிகள் மாரிராஜ்,செல்லப்பன் சக்திகேந்திர, பொறுப்பாளர்கள் துர்க்கையப்பன் ,முத்துகிருஷ்ணன், பாலகுமார், முனியசாமி, செல்வம் , பலவேசம், முகேஷ் குலசை ரமேஷ், அருண்பாபு, ராஜ்குமார், விக்னேஷ், தீபன், முத்துச்சாமி கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படது. தொடர்ந்து 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டு படிவங்கள் கடந்த 8-ந்தேதி வரை வரை பெறப்பட்டன.
    • அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்து வருகிற ஜனவரி 5-ந்தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடும் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    சேலம்:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படது. தொடர்ந்து 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டு படிவங்கள் கடந்த 8-ந்தேதி வரை வரை பெறப்பட்டன.

    அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்து வருகிற ஜனவரி 5-ந்தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடும் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் பணிக்காக நியமிக்கப்பட்ட மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா, மாவட்ட கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், அனைத்து உதவி பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் ஆகியோ ருடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்துக்காக பெறப்பட்ட படிவங்கள் குறித்தும், களப்பணி குறித்தும், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் மேல்த ணிக்கை செய்யப்பட்ட சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான படிவங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இந்த படிவங்கள் இறுதி செய்யப்பட்டு பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்கள் விஷ்ணு வர்த்தினி, சரண்யா,

    சவும்யா, தணிகாஜலம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சரவணன், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்களார் பதிவு அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×