search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "counseling"

    • செயற்கை நுண்ணறிவு துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் .
    • 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 450-க்கும் மேற்பட்ட வர்களும், 70-க்கும் மேற் பட்ட பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஆலம்பட் டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில் கணினி துறை சார் பில் 'அலெக்சா 2கே23' என்ற கம்ப்யூட்டர் கருத்தரங்கம் கல்லூரி சேர்மன் எம்.எஸ். ஷா மற்றும் பொருளா ளர் சகிலா ஷா ஆகியோர் வழிகாட்டுதல்படி நடை–பெற்றது.

    கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை தலைவர் கார்த்திகா வர வேற்றார். கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற் றிய கல்லூரி முதல்வர் டாக்டர். அப்துல் காதிர், கம்ப்யூட்டரை தவிர்த்து மனிதன் வாழ இயலாத சூழல் உருவாகியுள்ளது. கம்ப்யூட்டர் துறையில் அடுத்த கட்ட முன்னேற்றமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்துள் ளது.

    இதன் மூலம் பல்வேறு வேலைகளை மிகவும் துல்லி யமாகவும், துரிதமாக வும் செயலாற்ற இயலும் என்ப தால் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத் துறையில் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வேண் டும் என்றார். பின்னர் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த அனைத்துக் கல்லூரி மாண வர்கள் தங்களது ஆராய்ச்சி கட்டுரைகளை வாசித்தும், தாங்கள் தயாரித்துக் கொண்டு வந்த போஸ்டர் மற்றும் கம்ப்யூட்டர் மாடல்க ளையும் காட்சிப்படுத்தினர். கருத்த ரங்கில் நடத்தப்பட்ட பேஸ் பெயிண்டிங், டெக்னோ குவிஸ், பேஷன் பேரேடு, ஆஸ் யூ லைக் இட் போன்ற போட்டிகளில் மாணவ, மாண வியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பின்னர் நடந்த அமர்வில் விஜய் டி.வி. புகழ் அருண் மற்றும் அரவிந்த் கலந்து கொண்டு மாணவர்களுக் கான விழிப்புணர்வு உரை யாற்றினர். இக்கருத்தரங்கில் மதுரையைச் சேர்ந்த பல் வேறு கல்லூரிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள் ளிட்ட 450-க்கும் மேற்பட்ட வர்களும், 70-க்கும் மேற் பட்ட பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பா டுகளை கணினி அறிவியல் துறை தலைவர் கார்த்திகா தலை மையில் பேராசிரியர்கள் ராமநாதன், சசிகலா, நந்தினி, கவிதா, மேகலா, ஆர்த்தி, சகாய ஆக்ஸிலின் பிரவீனா ஆகியோர் தலை மையில் மாணவர்கள் செய் தனர். கூட்ட அரங்கம் மற் றும் உணவு ஏற்பாடுகளை கல்லூரியின் மனித வள மானேஜர் முகமது பாசில் செய்தார். முடிவில் பேராசி ரியர் ராமநாதன் நன்றி கூறினார்.

    • கிராம பகுதி மாணவ-மாணவிகள் விருப்பமான பாடங்களை தேர்வு செய்து உயர்கல்வி வரை பயில வேண்டும்.
    • அரசு பணிக் கான போட்டிதேர்வுகளுக்கு அரசே பயிற்சி வழங்கி வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள கொம்பூதி கிராமத்தில் அரசின் சார்பில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன், நேரடியாக ஆய்வு செய்து பொதுமக்களுடன் உரை யாடினார். அரசின் திட்டங்கள் கிடைக்கப் பெறுவது மற்றும் அடிப் படை வசதிகள் மேம்படுத்து வது குறித்து அவர் பொது மக்களிடம் கேட்டறிந்தார். அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

    அப்போது கலெக்டர் கூறியதாவது:-

    பல்வேறு துறைகளின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பித்து அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும். பொதுவாக கிராமப் பகுதிகளில் பிள்ளைகள் 12-ம் வகுப்போடு நின்று விடுகிறார்கள். பெற் றோ ர்கள் பிள்ளை களை பட்ட மேற்படிப்பு வரை படிக்க வைக்க வேண்டும்.

    பிள்ளைகளும் தொடர்ந்து ஆர்வமுடன் தங்கள் விருப்பமுள்ள பாடங்களை தேர்வு செய்து உயர்கல்வி வரை படிக்க வேண்டும். அதற்கேற்ப தற்பொழுது அரசு தொழிற் பயிற்சியுடன் வேலை வாய்ப்புகளும் தனியார் துறைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு பணிக் கான போட்டிதேர்வுகளுக்கு அரசே பயிற்சி வழங்கி வருகிறது. இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இடஒதுக்கீடு பெற்ற விண்ணப்பதாரர்கள் 4-ந்தேதி நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • 5000 ரூபாய் 4ந் தேதி அன்றே நேரடியாகவோ அல்லது 7ந் தேதிக்குள் இணையதளம் வாயிலாகவோ செலுத்த வேண்டும்.

    திருப்பூர்,அக். 2-

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இணையதள கலந்தாய்வில் கலந்து கொண்டு, இடஒதுக்கீடு பெற்ற விண்ணப்பதாரர்கள் 4-ந்தேதி நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன், விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வு கட்டணமாக 200 ரூபாய், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 100 ரூபாய் செலுத்த வேண்டும். இதில், பங்கேற்க அனைத்து கல்வித்தகுதி சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் சேர்க்கை கட்டணமாக 5000 ரூபாய் 4ந் தேதி அன்றே நேரடியாகவோ அல்லது 7ந் தேதிக்குள் இணையதளம் வாயிலாகவோ செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட அவகாசத்திற்குள் கட்டணம் செலுத்தவோ, சான்றிதழ் சமர்ப்பிக்கவோ தவறினால் சேர்க்கை ரத்தாகி விடும்.

    மேலும் விபரங்களுக்கு 94886 35077/94864 25076 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொதுச் செயலாளர் வினோத் தலைமையில் இளைஞர்களுக்கு தொழில் திறன் வழிகாட்டி பயிலரங்கு நடைபெற்றது.
    • முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் பொதுச் செயலாளர் வினோத் தலைமையில் இளைஞர்களுக்கு தொழில் திறன் வழிகாட்டி பயிலரங்கு நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் மாணவர்கள் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஆலோசனைகளை சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் கந்தசாமி கலந்துகொண்டு கல்வி வேலை வாய்ப்பு தொழில் வழிகாட்டி குறித்து ஆலோசனை வழங்கினார்.

    முகாமில் தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மையம் முதுநிலை மேலாளர் ஆனந்த நாராயண பிரசாத் சென்னை மாவட்ட தொழில் முனைவோர் பயிற்சியாளர் சசிகுமார் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் இளஞ்செழியன் வழக்கறிஞர் தேவராஜ், ஒன்றிய செயலாளர் யாபேஸ், ஒன்றிய கவுன்சிலர் மெய்யழகன், வெற்றிச்செல்வன் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

    • பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளநிலை பட்டப்படிபுக ளுக்கான கலந்தாய்வுகள் ஆகஸ்ட் 9ந் தேதி முதல் 11ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • பங்கேற்ற தகுதியுள்ள மாணவர்களுக்கான அழைப்பு, எஸ்.எம்.எஸ்., இ-மெயில் மூலமாக விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    சின்னாளபட்டி:

    காந்தி கிராம பல்கலை க்கழகத்தில் 2023-24ம் கல்வி ஆண்டில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்க உள்ளது.

    பல்வேறு கால கட்டங்க ளில் நடத்த இதற்கான கலந்தாய்வு பட்டியலிட ப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், இளநிலை பட்டப்படிபுக ளுக்கான கலந்தாய்வுகள் ஆகஸ்ட் 9ந் தேதி முதல் 11ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதுநிலை படிப்பு களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16, 17ந் தேதிகளில் நடக்க உள்ளது.

    பங்கேற்ற தகுதியுள்ள மாணவர்களுக்கான அழைப்பு, எஸ்.எம்.எஸ்., இ-மெயில் மூலமாக விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அழைப்பு கிடைக்கப்பெற்ற மாணவர்கள் மட்டும் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொது கவுன்சிலிங் முறைக்கு அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்து, தர வரிசை பட்டியலுக்கு தயார் செய்துள்ளோம்.
    • இம்மாத இறுதிக்குள் கவுன்சிலிங் நிறைவு செய்து வகுப்புகள் துவங்கப்படும்.

    திருப்பூர்,ஜூலை.17-

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கவுன்சிலிங், இன்று மற்றும் நாளை 18-ந்தேதி நடக்கிறது. இம்மாத இறுதிக்குள் நிறைவடைந்து வகுப்புகள் துவக்கப்படும் என துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

    இது குறித்து அவர் கூறுகையில், தமிழ்நாடு வேளாண் மை பல்கலையில் மாணவர்கள் சேர்க்கை துவங்கியுள்ளது. 4,000ம் இடங்களுக்கு, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். பெரும்பாலான இடங்கள் பொது கவுன்சிலிங் முறையில் சேர்க்கப்படுகின்றன. சிறப்பு ஒதுக்கீட்டின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இப்பிரிவில் 127 பேர் விண்ணப்பித்துள்ளனர். விளையாட்டு துறைக்கான முன்னுரிமை இடங்கள் 20 உள்ளன.

    இவற்றுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, சேர்க்கைக்கான அனுமதி கடிதம் வழங்க தயார் நிலையில் உள்ளோம். முன்னாள் ராணுவத்தினருக்கான முன்னுரிமை அடிப்படையில் 20 இடங்கள் நிரப்ப தயாராக உள்ளோம்.

    பொது கவுன்சிலிங் முறைக்கு அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்து, தர வரிசை பட்டியலுக்கு தயார் செய்துள்ளோம். 200க்கு 200 மதிப்பெண் பெற்ற 3 பேர், வேளாண் படிப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். 199.5 மதிப்பெண் பெற்ற 17 பேர் வேளாண் படிப்புக்கு தேர்வாகியுள்ளனர்.

    199 மதிப்பெண் பெற்றவர்கள், 60 - -70 பேர் உள்ளனர். தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த 7.5 சதவீதம் ஒதுக்கீட்டு முறையிலும் சேர்க்கை நடக்கும்.தொழில்கல்வி படித்த மாணவர்களுக்கு 240 இடங்கள் உள்ளன. இதற்கான தரவரிசை பட்டியலும் தயாராகியுள்ளது.

    பொது கவுன்சிலிங் இன்று மற்றும் நாளை ஆன்லைன் முறையில் நடக்கிறது. விருப்பத்தின் அடிப்படையில் முதலாவது சுற்று இட ஒதுக்கீடு செய்யப்படும். மாற்றம் செய்யவும், இந்த இருநாட்களில் வாய்ப்பளிக்கப்படும். 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.இது முடிந்தவுடன், உடனடியாக பணம் செலுத்தி வகுப்புகளில் சேரலாம்.

    விருப்பத்தின் பேரில் காத்திருப்பின்படி தகுதியுள்ள கல்லூரிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவர். இது இரண்டாம் கட்ட கவுன்சிலிங் முறையில் தேர்வு செய்யப்படுவர். இம்மாத இறுதிக்குள் கவுன்சிலிங் நிறைவு செய்து வகுப்புகள் துவங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • தொழில்முறைக் கல்வி பாடப்பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
    • கலந்தாய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

    கோவை,

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டு இளம் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான இணையதள வழி கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.

    7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின்படி, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.

    தொழில்முறைக் கல்வி பாடப்பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு நேற்று தொடங்கியது. நாளை (16-ம் தேதி) வரை நடக்கிறது. இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 18-ம் தேதி நடக்கிறது. பொதுப்பிரிவினருக்கான இணையவழி முதல்கட்ட கலந்தாய்வு வரும் 17-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடக்கிறது.

    கலந்தாய்வில் பங்கேற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 20-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடக்கிறது. பொதுப்பிரினருக்கான நகர்வு முறை மற்றும் இணையதள வழி 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 26-ம் தேதி மற்றும் 27-ம் தேதிகளில் நடக்கிறது.

    பொதுப்பிரிவில் இணையதள வழி இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 28-ம் தேதி மற்றும் 29-ம் தேதி நடக்கிறது. இணையதள வழி கலந்தாய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சி.சி.டி.வி. கேமரா பொருத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆலோசனை வழங்கினார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 91-வது வார்டுக்கு உட்பட்ட ஓம்சக்தி நகர், வ.உ.சி. தெரு, சேஷாத்திரி தெரு ஆகிய பகுதிகளில் இடம்புரி செல்வ விநாயகர் கோவில் சங்கத்தின் சார்பாக 16 சி.சி.டி.வி. காமிரா பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவனி–யாபுரம் போலீஸ் இன்ஸ் பெக்டர் பார்த்திபன் கலந்து– கொண்டு நிகழ்ச்சி யை துவக்கி வைத்தது பொது –மக்களுக்கு ஆலோச னை வழங்கினார்.

    அப்போது அவர் பேசு–கையில், பொதுமக்கள் குற்ற செயல்கள் எதுவும் நடை–பெறாமல் இருக்க இனி வரும் காலங்களில் வீடு தோறும் சி.சி.டி.வி. பொருத் தும் சூழ்நிலை ஏற்படும் என்றும், இது போன்று தெருக்களில் பொதுநல அமைப்புகள் சி.சி.டி.வி. காமிரா பொ ருத்துவதினால் குற்றவாளி களை போலீசார் விரைந்து பிடிப்பதற்கும் குற்ற செயல்கள் நடைபெறா–மல் இருக்கவும் மிக அவ–சியமாக இருக்கிறது.

    மேலும் மாணவ, மாண–விகள், பொதுமக்கள் இந்த பகுதிகளில் போதை பொருட்கள் யாரேனும் விற்றால் அல்லது சந்தேகப்ப–டும் படி புதிய நபர்கள் யாரேனும் தெருக்களில் வந்து சென்றால் உடனடி–யாக காவல்துறையிடம் தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ தெரி–விக்க வேண்டும்.

    அவ்வாறு தெரியப்ப–டுத்தும் அவர்களின் ரகசி–யங்கள் காக்கப்படும். இதன் மூலம் குற்றச்செயல் புரியும் நபர்களை போலீசார் உடனே கைது செய்து நடவ–டிக்கை எடுக்க உதவியாக இருக்கும் என்று தெரிவித் தார். முன்னதாக நற்பணி மையத்தின் தலைவர் கர்ணா வரவேற்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர்கள் சக்தி மணிகண்டன், பாண்டி மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் சந்திரன், குணசேகரன், மோகன், பாஸ்கரன், பரதன், கண் ணன், சரவணன், பிரக–தீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சரிபார்ப்பு பணிகள் நடந்து வருவதாக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.
    • கலந்தாய்வு கடந்த 19-ந் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது

    திருப்பூர் : 

    கோவை வேளாண் பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்து வருவதாக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

    வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்பு கல்லூரிகளில் 2,555 இடங்களும் 28 இணைப்பு கல்லூரிகளில் 2,806 இடங்கள் உட்பட மொத்தம் 5,361 இடங்கள் கலந்தாய்வு வாயிலாக நிரப்பப்படவுள்ளன. சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு கடந்த 19-ந் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது. ராணுவ வீரர்களுக்கான சிறப்பு பிரிவில் 20 பேர், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம், விளையாட்டு பிரிவில் 20 இடங்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் 403 பேர் இக்கலந்தாய்வு வாயிலாக சேர்க்கப்படுவார்கள்.

    இதுகுறித்து துணைவேந்தர் கீதாலட்சுமி கூறுகையில், சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த 19ந் தேதி முதல் நடந்து வருகிறது. பொது கலந்தாய்வு வரும் வாரம் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் கலந்தாய்வு குறைந்த மாணவர்கள் என்பதால் ஆப்லைன் முறையில் நடத்தவுள்ளோம் என்றார்.

    • இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை 14, நாளை மறுநாள் 15 -ந் தேதிகளில் நடைபெறவுள்ளது.
    • தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும்.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பிரிவுகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை 14, நாளை மறுநாள் 15 -ந் தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2023-24 ம் ஆண்டுக்கான இளநிலைப்பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஏற்கனவே முடிவடைந்துள்ளது.இந்நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 14, 15 -ந் தேதிகளில் நடைபெறுகிறது.

    இக்கலந்தாய்வின் முதல்நாளான ஜூன் 14 ந் தேதி காலை 9.30 மணிக்கு பி.காம், பி.காம்.சி.ஏ. ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், பி.காம்.ஐபி, பி.பி.ஏ., ஆகிய பாடப் பிரிவுகளுக்கு காலை 11 மணிக்கும், வரலாறு, பொருளியல், ஆடை வடிவமைப்பு நாகரிகம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு பிற்பகல் 12.30 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    இரண்டாம் நாளான ஜூன் 15 ந் தேதி காலை 9.30 மணிக்கு இயற்பியல், வேதியியல், விலங்கியல் பாடப் பிரிவுகளுக்கும், காலை 11 மணிக்கு கணிதம், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், பிற்பகல் 1.30 மணிக்கு தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும். விண்ணப்பித்தோரின் காத்திருப்போா் தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு தொடங்கப்பட்டது
    • வருகிற 12-ம் தேதி வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    அரியலூர்,

    அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) டோமினிக் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரியலூர் அரசு கலை கல்லூரியில் நிகழாண்டில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு இணையதள வாயிலாக விண்ணப்பித்த மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியது. இன்று தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், நாளை (சனிக்கிழமை) அறிவியல் பாடப்பிரிவுக்கும், வருகிற 12-ம் தேதி வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    முதற்கட்ட கலந்தாய்வுகளில் கலந்து கொண்டு இடம் கிடைக்காத மாணவ, மாணவிகளும், கலந்து கொள்ளாதவர்களும் இந்த 2-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவிகள் இணையதள விண்ணப்பத்தின் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் 3 நகல்கள், 3 புகைப்படம், கல்லூரி கட்டணத்துடன் நேரடியாக தங்களது பெற்றோருடன் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கவுன்சிலிங் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடக்கிறது.
    • முகாமில் அவர்களுக்கு ரத்த அழுத்தம், காது, மூக்கு, தொண்டை பிரச்சினை, புற்றுநோய், யூட்ரஸ் பிரச்சினைகளுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து சிக்சிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

    சென்னை:

    வீட்டு கடமையையும் பார்த்துக் கொண்டு போலீஸ் காவல் பணியிலும் இரவு, பகல் பாராது ஈடுபடும் பெண் போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் விதத்தில் 'ஆனந்தம்' என்றொரு திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இத்திட்டத்தின் நோக்கம் குடும்ப பணிகளிலும், காவல் நிலைய பணிகளிலும் ஈடுபடும் பெண் போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்க அவர்களுக்கு வாரத்தில் 3 நாள் கவுன்சிலிங் மூலம் மன அழுத்தத்தை குறைத்து எப்போதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட வைப்பது தான்.

    இந்த கவுன்சிலிங் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் முகாமை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

    இந்த முகாமில் 4,821 பெண் போலீசார் பங்கேற்றனர். அவர்களுக்கு சுயசிந்தனைக்கான பயிற்சி, எப்போதும் மகிழ்ச்சியாக முற்போக்கு சிந்தனையும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு யோகா பயிற்சியும் வழங்கப்பட்டது.

    இந்த முகாம் தொடர்ந்து இரண்டு மாதம் நடக்கிறது. முகாமில் அவர்களுக்கு ரத்த அழுத்தம், காது, மூக்கு, தொண்டை பிரச்சினை, புற்றுநோய், யூட்ரஸ் பிரச்சினைகளுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து சிக்சிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த முகாமை தொடங்கி வைத்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேசுகையில், இங்கு நடைபெறும் இந்த பயிற்சியில் நல்ல ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக்கொண்டு காவல் பணியினையும், குடும்ப பொறுப்பையும் சமநிலையுடன் வைத்து பணியாற்று மன அழுத்தமில்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

    கவுன்சிலிங்கில் பங்கேற்ற பெண் போலீசார் கூறும்போது, இந்த கவுன்சிலிங் பெண் போலீசாருக்கு நல்லதொரு பயனுள்ள நிகழ்ச்சியாகும். குடும்ப பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு போலீஸ் பணியினையும் டென்சனில்லாமல் எவ்வாறு செய்ய வேண்டும் என்று முகாமில் பயிற்சி அளித்தது எங்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது என்றனர்.

    ×