என் மலர்
நீங்கள் தேடியது "coaching"
- யூ.டி.சி. பணிக்கு போட் டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- பணிக்கு விண்ணப் பித்தவ ர்களுக்கு, தொழிலா ளர் துறை வேலை வாய்ப்பகம் சார்பில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசின் பல் வேறு துறைகளில் காலி யாக உள்ள 116 யூ.டி.சி., பணியிடங்கள் நேரடி நிய மன முறையில் நிரப்பபட உள்ளது.
யூ.டி.சி. பணிக்கு போட் டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு விண்ணப் பித்தவ ர்களுக்கு, தொழிலா ளர் துறை வேலை வாய்ப்பகம் சார்பில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கான தகுதி தேர்வு பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்ள் பங்கேற்றனர். மதியம் 12.15 மணி வரை தேர்வு நடந்தது. தேர்விற்கு, தொழி லாளர்துறை இணையதளத் தில் விண்ணப்பித்தவர்கள் கலந்து கொண்டனர்.
இ-மெயிலில் ஹால்டிக் கெட் கிடைக்காத சிலர் நேரடியாக புகைப்படத் துடன் தேர்வு மையத்தினை அணுகி பங்கேற்றனர்.
- பிளஸ் 2ல் ஒரு ஒன்றியத்துக்கு 50 மாணவர்களும், பிளஸ் 1ல் ஒரு ஒன்றியத்துக்கு, 20 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.
- தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தனித்தனியே பயிற்சி அளிக்கப்படும்.
திருப்பூர் :
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நவம்பர் மூன்றாம் வாரத்தில் இருந்து, ஒவ்வொரு சனிக்கிழமையும், மருத்துவ நுழைவு தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒரு ஒன்றியத்துக்கு தலா ஒரு மையம் என, 414 பயிற்சி மையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தனித்தனியே பயிற்சி அளிக்கப்படும். தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பிளஸ் 1ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், பிளஸ் 1 மாணவர்கள், 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும்.
ஒரு பயிற்சி மையத்திற்கு 70 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதில் பிளஸ் 2ல் ஒரு ஒன்றியத்துக்கு 50 மாணவர்களும், பிளஸ் 1ல் ஒரு ஒன்றியத்துக்கு, 20 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.இந்த வகுப்புகள் நேரடி வகுப்புகளாக நடக்கும். திருப்பூரில் குறைந்தது 13 ஒன்றியங்கள் தவிர கூடுதல் மையங்கள் அமைக்கப்படும் என மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவித்தார்.
- பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணியாளர் தேர்வாணையத்தால்(எஸ்எஸ்சி) அறிவிக்கப்பட்டுள்ள எஸ்எஸ்சி.(சிஜிஎல்) தேர்வுக்கான இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வழியாக டிஎன்பிஎஸ்சி., டிஎன்யுஎஸ்ஆர்பி., எஸ்எஸ்சி., டி.ஆர்.பி., ஐபிபிஎஸ்., போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கென இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது Assistant Audit Officer, Assistant Account Officer, Assistant Section officer, Inspector of income tax, Junior Statistical Officer போன்ற பதவிகளில் 20,000 க்கும் மேற்ப்பட்ட பணிக்காலியிடங்களுக்கு 17.9.2022 அன்று பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 8.10.2022.
இத்தேர்விற்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதன் முழுவிவரம் https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 28.9.2022 அன்று மாலை 2.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தங்கள் பெயரை https://forms.gle/BHUGLvaxfkkCMqKt8 என்ற link-இன் மூலம் google form -ல் பதிவு செய்வதன் மூலமோ (அல்லது) 9499055944 என்ற அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டோ முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.
- அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படாததால் மாணவிகள் அவதிக்குள்ளாகினர்.
திருப்பூர் :
திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். துணை தலைவர் ரத்னா முன்னிலை வைத்தார். தலைமை ஆசிரியை ஸ்டெல்லா வரவேற்றார்.
ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படாததால் மாணவிகள் அவதிக்குள்ளாகினர். இதனை போக்குவரத்து அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.நஞ்சப்பா பள்ளி சாலை முன்பு நிறுத்தும் அதிகப்படியான வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தல், பள்ளியில் இருந்து குறைந்தது 10 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவிகளை கண்டறிந்து, இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பிளஸ் 2 முடித்து உயர்கல்வியில் சேராமல் இருக்கும் மாணவர்கள் அடையாளம் கண்டு அதற்கான காரணங்களை ஆராய்ந்து அவர் கல்லூரியில் சேர உரிய ஆலோசனை மற்றும் உதவிகளை செய்தல், நீட், சட்டப்படிப்பு, சி.ஏ., போன்ற உயர் படிப்புகளுக்கு உரிய ஆசிரியர்களை நியமித்து மாணவிகளுக்கு தக்க பயிற்சிக்கான ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்தும் மாணவிகளுக்கு கிடைக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்தும் விளக்கப்பட்டன. மேலாண்மைக்குழு உறுப்பினர் 17 பேர் பங்கேற்றனர்.
- குரூப்-4 தேர்வு இலவச பயிற்சி நிறைவு விழா நடந்தது.
- இதன் நிறைவு விழாவுக்கு அமைப்பின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் மக்கள் சேவை அமைப்பின் சார்பில் குரூப்-4 தேர்வு இலவச பயிற்சி கடந்த 2 மாதங்களாக நடைபெற்றது. இதன் நிறைவு விழாவுக்கு அமைப்பின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் ரவீந்திரன் வரவேற்றார். இணை செயலாளர் ராமராஜ் முன்னிலை வகித்தார்.
விழாவில் தலைமை பயிற்றுனர் குருசாமி மற்றும் பயிற்சி அளித்தவர்களை பென்னிங்டன் நூலக கமிட்டி செயலாளர் சண்முகநாதன் மற்றும் நிர்வாகிகள் கவுர வித்தனர். பயிற்சிக்கு உறு துணையாக இருந்த அனை வருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.பயிற்சியாளர்கள், மக்கள் சேவை மைய உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் திருமூர்த்தி நன்றி கூறினார்.