search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி
    X

    அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

    அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி நடத்த பட உள்ளது

    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்ட அறிக்கையில், கரூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக, பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், 621 காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா, ஆயுதப்படை, சிறப்பு காவல் படை) பணிகளுக்கு நேரடி தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்ள ஜூன் 1 முதல், 30ந்தேதி வரை விண்ணப் பிக்கலாம்.

    இத்தேர்வுக்கான இலவசபயிற்சி வகுப்பு நாளை தொடங்கப்பட உள்ளது. இதில், சேரவிரும்பவர்கள், 2 புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும். நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். மேலும், தங்களின் விவரத்தினை இமெயில் வாயிலாகவும் அனுப்பலாம. கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் அனைத்து போட்டித்தேர்வுக்கான காணொலி வழிகற்றல், மாதிரிதேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. ஆங்கிலம் மற்றும் தமிழில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×