என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வேலைவாய்ப்பு"
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் விழாவிற்கான ஏற்பாடு செய்து வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளரும், நகர மன்ற தலைவருமான வைத்தியநாதன், ஒன்றிய கழக மேற்கு செயலாளரும், உளுந்தூர்பேட்டை யூனியன் சேர்மன் ராஜவேல், முன்னாள் எம்.எல்.ஏ.வும், நகர மன்ற தலைவருமான திருநாவுக்கரசு, திருநாவலூர் யூனியன் சேர்மன் சாந்தி இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் பங்கேற்றவர்களை பல்வேறு நிறுவனங்களில் இருந்து வந்தவர்கள் நேர்காணல் நடத்தி தேர்வு செய்தனர். இதில் 5716 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 1143 பேர் வேலை வாய்ப்பு பெற்றனர். இவர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் ஷ்ர்வன்குமார், எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், மணிகண்ணன் ஆகியோர் சேர்ந்து வழங்கி பேசினார்கள்.
இதில் வேலை வாய்ப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் லதா, கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரி முரளிதரன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் டேனியல் ராஜ், பள்ளி பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் சிவராஜ், துணைத்தலைவர் அம்பிகாபதி, அறங்காவலர் குழு தலைவர் செல்லையா, நகர மன்ற முன்னாள் ஒன்றிய செயலாளர் தொல்காப்பியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சிவக்குமார், உறுப்பினர்கள் கலா, மதியழகன், குமரவேல், செல்வகுமார், ரமேஷ்பாபு, சந்திரகுமாரி, நிர்வாகிகள் ஐஸ்வர்யா, பாலாஜி, மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமார், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- காரைக்குடி கிட் அண்டு கிம் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
- பல்வேறு பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள மானகிரி கிட் அண்ட் கிம் பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரி வளாகத்தில் ஸ்டீல் ஸ்ட்ரைப்ஸ் வீல்ஸ் லிமி டெட் நிறுவனம் சார்பில் நேர்முக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த வளாக நேர்முக தேர்வில் கல்லூரியின் சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட் ரானிக்ஸ் கம்யூனி கேஷன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என பல் வேறு பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 35 மாணவர்கள் தேர்வு பெற்றனர். கல்லூரி முதல்வர் முனைவர் பார்த்த சாரதி நேர்முக தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்க ளுக்கு வேலைவாய்ப்புக் கான பணி நியமன ஆணை களை வழங்கினார். மாண–வர்களை கல்லூரி தலை வர் அய்யப்பன் வாழ்த்தி னார்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண் டனர்.
- முகாமில் 110 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன.
- வேலை நியமன ஆணையை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி வழங்கினார்கள்.
தாராபுரம்:
தாராபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.
முகாமுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார். தனியார் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமை தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இந்த முகாமில் 110 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் 1,023 பேர் பங்கேற்றனர். அவர்களில் 470 பேர் வேலைக்கு தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களுக்கான வேலை நியமன ஆணையை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சி குறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ேபசியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட நாள் முதல் அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் 2.50 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டு உள்ளது. அனைவருக்கும் அரசு வேலை என்பது சாத்தியம் இல்லை. இளைஞர்கள் வேலை கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் முயற்சி செய்ய வேண்டும். மேலும் சுய தொழில் தொடங்க அரசு வழங்கும் சலுகைகளை பயன் படுத்தி கொண்டு நீங்கள் நான்கு பேருக்கு வேலை வழங்கும் அளவிற்கு முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் வரலட்சுமி, வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் ஜோதி மணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவரும், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு எழுத வேண்டும் என மத்திய அரசு உத்தரவு
- மறுபரிசீலனை செய்யக்கோரி மீண்டும் ஒருமுறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவேன்
மத்திய அரசு வேலைகளுக்கான போட்டித் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்படுகிறது. இதனால் இந்தி அல்லாத மொழியை, தாய்மொழியாகக் கொண்டு படிக்கும் மாநிலங்களின் மாணவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்தியில் தேர்வு நடத்தப்படுவதால், வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்வு செய்யப்படுவதாக தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள், மத்திய அரசை கண்டித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறும்போது, குழந்தைகளுக்கு (மாணவ- மாணவிகள்), அவர்களுக்கு தெரிந்த மொழிகளில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
இதுகுறித்து மறுபரிசீலனை செய்யக்கோரி மீண்டும் ஒருமுறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவேன். வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளை இந்தியில் அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்ற மத்திய அரசு முடிவை நாங்கள் எதிர்க்கிறோம்'' என்றார்.
- விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமன ஆணை களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழுப்புரம்:
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் செஞ்சியில் உள்ள அல் ஹிலால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவல்லி, விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மண்டல வேலை வாய்ப்பு இணை இயக்குனர் லதா திட்ட விளக்க உரையாற்றினார். மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மை யினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப் பட்ட வர்களுக்கு பணி நியமன ஆணை களை வழங்கி சிறப்புரையாற்றி னார்.
நிகழ்ச்சியில் அயல்நாட்டு வேலை வாய்ப்பு துறை நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன், உதவி இயக்குனர்கள் பாலமுருகன், நடராசன், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், ஒன்றிய குழு தலைவர்கள் செஞ்சி விஜயகுமார் வல்லம் அமுதா ரவிக்குமார் ,மேல்மலையனூர் கண்மணி நெடுஞ்செழியன், மயிலம் யோகேஸ்வரி மணிமாறன் ,ஒலக்கூர் சொக்கலிங்கம் திண்டிவனம் நகராட்சி தலைவர் நிர்மலா ரவிச்சந்தி ரன் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, அகிலால் மெட்ரிக் பள்ளி தாளாளர் சையத் ரிஸ்வான், பேரூ ராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
- உதவித்தொகை பெறு பவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
சிங்கம்புணரி
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்கா மல் உயிர்ப்பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்க ளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
முறையாக பள்ளியில் பயின்று 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்ற வர்களுக்கு மாதம் ரூ.200ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400ம், பட்டதாரிகளுக்கு (பி.இ. போன்ற தொழில்சார் பட்டப்படிப்பு தவிர) மாதம் ரூ.60டி வீதம் 3 ஆண்டுக ளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இத்தொகை நேரடியாக மனுதார்களது வங்கி கணக்கில் காலாண்டுக்கொரு முறை வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களின் கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.
தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனை யோர் 40 வயதுக்கு மிகா மலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் மிகாமல் இருத்தல் வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படமாட்டாது.
தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெறலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித்தொகை பெற நாளது தேதி வரை வங்கி களில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெற்றுகொள்ளுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது. சுயஉறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனா ளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.
இந்த உதவித் தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ளவர்கள் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களி லும் வருடம் முழுவதும் வழங்கப்படும். மேலும் உதவித்தொகை பெறு பவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்து ரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது.
மேற்கண்ட தகவலை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
- சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.
ராஜபாளையம்
தமிழக அரசின் சார்பாக கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமானது, விருதுநகர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து ராஜபாளையம் ராஜீக்கள் கல்லூரியில் வருகிற (28-ந் தேதி) நடைபெற உள்ளது.
இம்முகாமில், 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ/டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரி விக்கப்படுகிறது.
இது முற்றிலும் ஒரு இலவச சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் https://tinyurl.com/yu5728lz என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக் கப்படுகிறது.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது.
எனவே விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.
- 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
- உலக விளையாட்டு மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்கள், பங்கேற்றவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் :
தமிழக அரசால் ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி சர்வதேச போட்டிகளில் கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன் ஷிப் போட்டிகள், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட காமன்வெல்த் சாம்பியன் ஷிப் போட்டிகள், ஆசிய சாம்பியன் ஷிப் போட்டிகள், சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம், காது கேளாதோருக்கான சர்வசே விளையாட்டு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உலக விளையாட்டு மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்கள், பங்கேற்றவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.
இதில் தேசிய அளவிலான போட்டிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான சாம்பியன் ஷிப் போட்டிகளான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சீனியர் அளவிலான மாநில சாம்பியன் ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட போட்டிகளில் 1-1-2018 அன்றோ அல்லது அதற்கு பிறகு பெற்ற சாதனைகள் தகுதியானதாக கருதப்படும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே பயன்பெற முடியும். தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.sdat.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்குள் இணையதள முகவரி அல்லது சென்னை நேரு விளையாட்டரங்கில் இயங்கி வரும் தலைமை அலுவலகத்தில் நேரிலும் விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜகோபால் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவதற்கு கீழ்காணும் விளையாட்டுப் போட்டிகளில் 01.01.2018 அன்றோ அல்லது அதன் பிறகு பெற்ற சாதனைகள் தகுதியனவையாக கருதப்படும்.
தேசிய விளையாட்டுப் போட்டிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் தகுதியானவர்களாக கருதப்படுவர். மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சீனியர் அளவிலான மாநில சாம்பின்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே தகுதியானவர்களாக கருதப்படுவர்.
குறிப்பாக, 40 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலும். விண்ணப்பதாரர் வேலை வாய்ப்பு பெற்றிடுவதற்கான இதர முழு தகுதிகளும் பெற்றிருத்தல் வேண்டும்.
வீரர், வீராங்கனையர்கள் மேற்காணும் வழிகாட்டு தலின்படி 3 சதவித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவ தற்கான விண்ணப்பங்கள் www.sdat.tn.gov.in எனும் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தகுதியான விளையாட்டு வீரர், வீராங்கனையர்கள் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய இணைப்புகளுடன் வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்குள் மேற்காணும் இணையதள முகவரி அல்லது நேரு விளையாட்டரங்கில் இயங்கி வரும் தலைமை அலுவலகத்தில் நேரிலும் விண்ணப்பித்திடுமாறு தெரிவித்து கொள்ளப்ப டுகிறது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
- மதுரைபுறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.
- 5ஆண்டுகளுக்கு 50 லட்சம் வேலைவாய்ப்பு என்று சொன்னார்களே அதுவும் இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் பேசினார்.
மதுரை