search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "job fraud"

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தார்.
    • 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கொழும்பு செட்டியார் தெருவை சேர்நதவர் லட்சுமணன்(வயது 35). தி.மு.க. பிரமுகரான இவர் கிருஷ்ணாபுரத்தில் ஜெராக்ஸ் மற்றும் கணினி மூலம் ஜாப் ஒர்க் செய்து கொடுக்கும் கடை நடத்தி வருகிறார்.

    இவர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் பாண்டியராஜன் மற்றும் பாலமுருகன் ஆகியோரிடம் அரசு பணியில் வேலை பெற்று தருவதாக கூறி தலா ரூ.8 லட்சமும், சண்முகநாதன் மகள் சித்ரா என்பவரிடம் ரூ. 4 லட்சமும் வாங்கி கொண்டு அவர்கள் 3 பேருக்கும் தமிழக அரசு வேலையில் சேருவதற்கான பணி நியமன ஆணையை லட்சுமணன் கொடுத்துள்ளார். ஆனால் அவ்வாறு கொடுக்கப்பட்ட ஆணைகள் போலியானது என்பது அவர்கள் வேலைக்கு சேர சென்ற இடங்களில் தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தார். அவரிடம் வேறு யாருக்கெல்லாம் இதில் தொடர்பு இருக்கிறது? அவர் வேறு யாரையெல்லாம் ஏமாற்றி பணம் பறித்துள்ளார்? என்பது குறித்து போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

    அதில் கிருஷ்ணாபுரம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த அய்யனார்(57) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. லட்சுமணனுக்கு தி.மு.க.வில் பெரிய அளவில் பொறுப்புகள் ஏதும் இல்லை. ஆனாலும் அவ்வப்போது அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் அருகே நின்று புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு அதனை தற்போது பாதிக்கப்பட்டவர்களிடம் காட்டி தன்னை இளைஞரணி நிர்வாகி என்று கூறி கொண்டுள்ளார்.

    பின்னர் தனக்கு பழக்கமான அய்யனார் மூலமாக அவரது உறவினர் பெண்ணான சித்ராவிடம் நைசாக பேசி நம்ப வைத்து முதலில் ரூ.25 ஆயிரம் வாங்கி உள்ளார். பின்னர் அவரிடம் ஒரிஜினல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொண்டு ரூ.1 லட்சம் வேண்டும் என்று கூறி பல்வேறு தவனைகளாக மொத்தம் ரூ.4 லட்சம் பெற்றுள்ளார். இதேபோல் மற்ற 2 பேர்களிடமும் இதேபோல் தலா 8 லட்சம் பெற்றுள்ளார் என்பதும், இவர்களை அய்யனார் தான் லட்சுமணனிடம் அறிமுகப்படுத்தியுள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை, ஜன.5-

    சென்னை துறைமுகத் தில் வேலை வாங்கித்தரு வதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை பேரையூர் முடக்கு சாலையைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மகன்அருள் என்ஜினீயரிங் முடித்துள்ளார்.

    இந்த நிலையில் திண்டுக் கல்லைச் சேர்ந்த 2 பேர் முத்து ராமலிங்கத்தை தொடர்பு கொண்டு உங்கள் மகனுக்கு சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித்தருகிறோம். அதற்கு பணம் செலவாகும் என்று ஆசை வார்த்தை கூறினர்.

    இதனை நம்பிய முத்து ராமலிங்கம், அவர்களிடம் பல்வேறு தவணைகளில் ரூ.16 லட்சத்து 38 ஆயிரம் கொடுத்தார். இருப்பினும் அவர்கள் கொடுத்த வாக்கு றுதியின்படி சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித்தரவில்லை.

    முத்துராமலிங்கத்திடம் வாங்கிய பணத்தையும் திருப்பித்தர மறுத்து விட்ட னர். இது தொடர்பாக முத்துராமலிங்கம் பேரையூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் பண மோசடி செய்தவர்களில் ஒருவர் திண்டுக்கல் மாவட் டம், எரியோட்டைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் (56) என்பதும், தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார ஆய்வாளராக இருப்பதும் தெரியவந்து உள்ளது.

    சவுந்தர்ராஜனுக்கு உடந்தையாக அவரது மகன் தனராஜ் (34) இருந்துள்ளார். இதையடுத்து தந்தை-மகன் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தி.நகர் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி செய்த அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    தி.நகர் ரங்கன் தெருவைச் சேர்ந்தவர் அஜந்தா. சென்னையில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது உறவினர் ஒருவருக்கு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி அண்ணா நகரைச் சேர்ந்த காமராஜ் என்பவர் ரூ.6 லட்சம் பணம் வாங்கி உள்ளார்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த பணத்தை காமராஜ் பெற்றுக் கொண்டார். ஆனால் உறுதி அளித்த படி அவரால் வேலை வாங்கி கொடுக்க முடியவில்லை.

    இதனால் 4 மாதங்களுக்கு பிறகு காமராஜ் ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். மீதி பணம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.

    அஜந்தா பலமுறை கேட்டும் காமராஜ் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி அஜந்தா மாம்பலம் போலீசில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காமராஜ் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    கைதான காமராஜ் குமரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகியாக உள்ளார்.

    நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் முகமது பைசல்கான் (31). இவரும் இவரது நண்பர் ஜாகிர் உசேன் ஆகிய 2 பேரும் சேர்ந்து வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனம் நடத்தி வந்தனர்.

    இதில் மதுரை பாண்டி கோவில் பகுதியை சேர்ந்த பிருதிவிராஜ், வெளிநாட்டு வேலைக்காக ரூ. 5 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்தார். ஆனால் அவர்கள் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதுபோல அவர்கள் சுமார் 40 பேரிடம் வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக கூறப்பட்டது.

    இதுகுறித்து பிருதிவிராஜ், நெல்லை மாநகர குற்றப்பிரிவு துணை கமி‌ஷனர் பெரோஸ்கான் அப்துல்லாவிடம் புகார் செய்தார். இது தொடர்பாக நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி முகமது பைசல்கான், ஜாகிர் உசேன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் தலைமறைவாக இருந்த முகமது பைசல் கானை நேற்று குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஜாகிர் உசேனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    தருமபுரியில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த நிலஅளவையர் அலுவலக உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #Jobfraud
    தருமபுரி:

    தருமபுரி மாவட்ட நில அளவையர் அலுவலகத்தில் ஸ்ரீராம் (வயது 37) என்பவர் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கோவிந்தராஜ் என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் பெற்றார். ஆனால் ஸ்ரீராம் பணத்தை பெற்று கொண்டு இதுவரை கோவிந்தராஜூக்கு வேலையும் வாங்கியும் தரவில்லை. பணத்தையும் திருப்பி தராமல் இழுத்தடித்து வந்தார்.

    இதுகுறித்து கோவிந்தராஜ் நிலஅளவை உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தார். இந்த மனுமீது துறை சார்பில் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் நிலஅளவை ஆய்வாளர் சிவக்குமார் நேற்று ஸ்ரீராமிடம் விசாரணை நடத்த அலுவலகத்துக்கு வருமாறு கூறினார்.

    அப்போது அங்கு வந்த ஸ்ரீராம் அதிகாரியின் முன்பு தனது மோட்டார் சைக்கிளின் சாவியையும், வி‌ஷம் பாட்டிலும், கடிதம் ஒன்றும் வைத்து விட்டு எந்தபதிலும் கூறாமல் சென்றுவிட்டார்.

    இதனால் பதறிபோன சிவக்குமார், விசாரணைக்கு ஒத்துழைக்காமல் சென்ற ஸ்ரீராம் மீது தருமபுரி டவுன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீராமை தேடிவருகின்றனர்.
    ×