search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father son arrest"

    வேளாங்கண்ணியில் குடிபோதை தகராறில் வாலிரை தாக்கிய தந்தை-மகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அருகே தெற்கு பொய்கை நல்லூர், வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மோகன் (வயது 40). இவரும் வேளாங்கண்ணி பண்டகசாலை தெருவைச் சேர்ந்த ஆனந்த மாரிமுத்து (36) என்பவரும், வேளாங்கண்ணி பஸ் நிலையம் அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது மோகன் கூடுதலாக தனக்கு மது பாட்டில் வாங்கிக்கொடு க்குமாறு கூறி ஆனந்த மாரிமுத்துவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அந்த நேரத்தில் அங்கு வந்த ஆனந்தமாரிமுத்துவின் தந்தை மதியழகன் இது குறித்து மோகனை தட்டி கேட்டார். இதில் மோகன் ஆத்திரம் அடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் குத்த முயன்றார்.  அப்போது ஆனந்தமாரி முத்து அவரது தந்தை மதியழகன்இணைந்து சவுக்கு கட்டையால் மோகனை தாக்கினர்.

    இதில் பலத்த காயமடைந்த அவர் நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது பற்றிய புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் குமரேசன் வழக்குப்பதிவு செய்து ஆனந்த மாரிமுத்து, மதியழகன் ஆகியோரை கைது செய்தார். 

    சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை, ஜன.5-

    சென்னை துறைமுகத் தில் வேலை வாங்கித்தரு வதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை பேரையூர் முடக்கு சாலையைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மகன்அருள் என்ஜினீயரிங் முடித்துள்ளார்.

    இந்த நிலையில் திண்டுக் கல்லைச் சேர்ந்த 2 பேர் முத்து ராமலிங்கத்தை தொடர்பு கொண்டு உங்கள் மகனுக்கு சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித்தருகிறோம். அதற்கு பணம் செலவாகும் என்று ஆசை வார்த்தை கூறினர்.

    இதனை நம்பிய முத்து ராமலிங்கம், அவர்களிடம் பல்வேறு தவணைகளில் ரூ.16 லட்சத்து 38 ஆயிரம் கொடுத்தார். இருப்பினும் அவர்கள் கொடுத்த வாக்கு றுதியின்படி சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித்தரவில்லை.

    முத்துராமலிங்கத்திடம் வாங்கிய பணத்தையும் திருப்பித்தர மறுத்து விட்ட னர். இது தொடர்பாக முத்துராமலிங்கம் பேரையூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் பண மோசடி செய்தவர்களில் ஒருவர் திண்டுக்கல் மாவட் டம், எரியோட்டைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் (56) என்பதும், தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார ஆய்வாளராக இருப்பதும் தெரியவந்து உள்ளது.

    சவுந்தர்ராஜனுக்கு உடந்தையாக அவரது மகன் தனராஜ் (34) இருந்துள்ளார். இதையடுத்து தந்தை-மகன் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்திரமேரூர் அருகே குடிபோதை தகராறில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூரை அடுத்த பெருநகர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (50). விவசாயி.

    நேற்று இரவு அவர் அதே பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த நடராஜ் என்பவர் குடிபோதையில் வந்தார்.

    அவரிடம், முருகானந்தம் மது குடித்து வந்தது தொடர்பாக அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டார்கள்.

    பின்னர் வீட்டுக்கு வந்த நடராஜ் தனது மகன் கண்ணனிடம் நடந்தது பற்றி கூறினார். இதைத் தொடர்ந்து இருவரும் முருகானந்தம் வீட்டிற்கு சென்று ரகளையில் ஈடுபட்டனர். அவரை வெளியே அழைத்து சரமாரியாக தாக்கினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த முருகானந்தத்தை உத்திரமேரூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து உத்திரமேரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமல்ராஜ், வழக்குப் பதிவு செய்து நடராஜ், அவரது மகன் கண்ணன் ஆகியோரை கைது செய்தார். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
    ×