search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக"

    • சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா கே. சென்னம்பட்டி கிராம பகுதியில் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத்தொழிற்சாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் இறைச்சி கழிவுகளை சுத்திகரித்து உரமாக மாற்றும் பணி நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடுவதாக அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கடந்த வாரம் தேர்தலை புறக்கணித்த நிலையில் மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் மதுரை மாவட்ட ஆட்சியர் இது சம்பந்தமாக அறிக்கை கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் சம்மந்தப்பட்ட தொழிற்சாலை சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுவதாக தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் இந்த தொழிற்சாலை நிரந்தரமாக மூடக்கோரி சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இந்த பகுதி சேர்ந்த அ.தி.மு.க.வினர், பொதுமக்களுடன் சேர்ந்து கள்ளிக்குடி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது தமிழக அரசு இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். ஆலையை மூடும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம் என்ற கண்டன கோஷமிட்டனர்.

    இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது-

    சென்னம்பட்டி ஆவல் சூரன்பட்டி பேய்குளம் உள்ளிட்ட 30 கிராம மக்களை அச்சுறுத்தும் இந்த தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக ஏற்கவே நான் கடந்த ஆண்டு இந்த தொழிற்சாலையை நிறுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு கொடுத்தேன்.

    தற்போது மக்கள் ஜனநாயக உரிமையை நிலை நாட்டும் வகையில் அரசின் கவனத்தை ஈர்க்க தேர்தலை புறக்கணித்தார்கள். நானும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பினேன். தற்போது தற்காலிகமாக மூடிவிட்டு, பிறகு ஆய்வறிக்கை வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    ஆனால் ஓட்டுபதிவின் போது இந்த ஆலை இயங்குவதாக மக்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். இதை நிரந்தரமாக அகற்ற மக்கள் போராடி வருகிறார்கள். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    தற்போது இந்த தொழில் சாலையால் மக்களுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை, வேலைவாய்ப்பு இல்லை, பொருளாதாரம் இல்லை. மக்களுக்கு கேடு விளைவிக்கும் இந்த தொழிற்சாலையை எங்கே வேண்டுமானாலும் மாற்றி கொள்ளட்டும். ஆனால் மக்களின் விருப்பத்துக்கு மாறாக இயங்கக் கூடாது நிரந்தரமாக மூட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • திருவள்ளூர் தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து இன்று மாலை எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
    • மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் மற்றும் முகப்பேர்-கலெக்டர் நகர் சந்திப்பில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    சென்னை:

    சென்னையில் இன்று மாலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி திருச்சியில் கடந்த மாதம் 24-ந்தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி பல்வேறு தொகுதிகளுக்கும் சென்று கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் சென்னையில் இன்று மாலையில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். திருவள்ளூர் தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

    இதன் பின்னர் வடசென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து பெரவள்ளூரில் இரவு 7 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் மற்றும் முகப்பேர்-கலெக்டர் நகர் சந்திப்பில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    மாலை 6 மணிக்கு வடசென்னை தொகுதிக்குட்பட்ட ஓட்டேரி, ராயபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.

    • 13-ந்தேதி மாலை 4 மணிக்கு சிதம்பரம் தொகுதி-காமராஜர் திடல், அரியலூர்.
    • 15-ந்தேதி (திங்கட்கிழமை) காஞ்சிபுரம் தொகுதியில் காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேன் பிரசாரம்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில், அ.தி.மு.க. சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், 13, 14, 15 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப் பயணத் திட்டம் கீழ்வருமாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    13-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு சிதம்பரம் தொகுதி-காமராஜர் திடல், அரியலூர். மாலை 6 மணிக்கு பெரம்பலூர் தொகுதி-துறையூர் சாலை, கனரா வங்கி அருகில், பெரம்பலூர் (வேன் பிரசாரம்), இரவு 7.15 மணிக்கு துறையூர் பைபாஸ்.

    14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கள்ளக்குறிச்சி தொகுதி-மாலை 4.30 மணிக்கு எம்.ஜி.ஆர். திடல், ஆத்தூர், மாலை 5.30 மணிக்கு தியாக துருகம் ரோடு, யமாகா ஷோரூம் எதிரில் கள்ளக்குறிச்சி. இரவு 7 மணிக்கு விழுப்புரம் தொகுதியில் விழுப்புரம் நகரம்.

    15-ந்தேதி (திங்கட்கிழமை) காஞ்சிபுரம் தொகுதியில் காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேன் பிரசாரம், மாலை 4 மணிக்கு மத்திய சென்னை தொகுதியில் டானா தெரு, புரசைவாக்கம், இரவு 7 மணிக்கு சென்னை தெற்கு தொகுதி வேளச்சேரி ரோடு, சின்ன மலை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிதம்பரத்தில் வேலூரை சேர்ந்த பெண் ஒருவரை பா.ஜ.க. வேட்பாளராக நிற்க வைத்து உள்ளனர்.
    • மரியாதை இல்லாததால் பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ளேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. பட்டியல் அணி மாநில தலைவராக பதவி வகித்து வந்தவர் தடா பெரியசாமி. இவர் திடீரென்று பா.ஜ.க.வில் இருந்து விலகினார். இந்த நிலையில் அவர் இன்று காலை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்றார். அங்கு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், தடா பெரியசாமி அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் பா.ஜ.க.வில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன். நான் தமிழக பா.ஜ.க.வில் மாநில பட்டியல் அணி தலைவராக பதவி வகித்தேன். நான் சிதம்பரம் தனி தொகுதியை சேர்ந்தவர். எனது சொந்த தொகுதியான சிதம்பரத்தில் வேலூரை சேர்ந்த பெண் ஒருவரை பா.ஜ.க. வேட்பாளராக நிற்க வைத்து உள்ளனர். நான் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்தும், அது எனது சொந்த தொகுதியாக இருந்தும் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை, பட்டியல் அணி தலைவருக்கே கட்சியில் மரியாதை இல்லை என்றால், இந்த சமுதாய மக்களுக்கு எப்படி மரியாதை இருக்கும். தமிழக பா.ஜ.க.வில் அண்ணாமலை, எல்.முருகன், கேசவ விநாயகம் ஆகிய 3 பேர் தான் முடிவு எடுக்கிறார்கள். கட்சியில் அவர்கள் 3 பேர் தான் இருக்கிறார்களா? வேறு யாரும் இல்லையா?

    எனவே எனக்கு மரியாதை இல்லாததால் பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ளேன். இனி அ.தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன். இந்த தேர்தலில் மட்டுமல்ல, 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவின்படி செயல்படுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தடா பெரியசாமி கடந்த சட்டசபை தேர்தலில் திட்டக்குடி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது அவர் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

    • தேனி பாராளுமன்ற தொகுதியில் மட்டுமே ஒ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
    • அனைத்து தொகுதிகளிலும் முக்கிய பிரச்சனைகளை கையில் எடுத்து அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன.

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வலுவாக உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் மற்ற கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு தேர்தல் களம் காண அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    தி.மு.க. கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதால் சிறுபான்மை கட்சிகள் மற்றும் தி.மு.க.வுக்கு எதிராக உள்ள கட்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மெகா கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி இடம் பெற்றிருந்தது. பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணியில் இடம் பெற்றிருந்தன.

    இப்படி தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பல கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த போதிலும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை கிடைக்கவில்லை.

    தேனி பாராளுமன்ற தொகுதியில் மட்டுமே ஒ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். மற்ற அனைத்து தொகுதிகளிலும் அ.தி. மு.க. கூட்டணி தோல்வியை தழுவி இருந்தது.

    இந்த நிலையில் தேசிய அளவில் பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து வெளியேறி இருக்கும் அ.தி.மு.க. பா.ஜனதாவுக்கு எதிரான மன நிலையில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து தமிழகத்தில் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கி உள்ளது.

    தற்போதைய சூழலில் அ.தி.மு.க. அணியில் பெரிய கட்சிகள் எதுவும் இல்லாத நிலையில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்துவது என்பது அந்த கட்சிக்கு பெரிய சவாலாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

    சென்னையை பொறுத்தவரையில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என மூன்று பாராளுமன்ற தொகுதிகளிலும் கடந்த தேர்தலில் தி.மு.க.வே வெற்றி பெற்றது.

    இந்த தொகுதிகளில் தென்சென்னை பாராளுமன்ற தொகுதி மட்டுமே தி.மு.க.வுக்கு அ.தி.மு.க. கடும் போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறலாம்.

    தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி 43 சதவீத வாக்குகளை பெற்ற நிலையில் அ.தி.மு.க. வுக்கு 35 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளன. அதே நேரத்தில் வட சென்னை, மத்திய சென்னை தொகுதிகளை ஒப்பிட்டு பார்த்தால் வாக்கு வித்தியாசம் பெரிய அளவில் இருந்துள்ளது.

    மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. கூட்டணிக்கு 56 சதவீத வாக்குகள் கிடைத்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணிக்கு 27 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன.

    இதே போன்று வடசென்னை தொகுதியில் 53 சதவீத வாக்குகளை தி.மு.க. கூட்டணி பெற்றிருந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணிக்கோ 25 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தது.

    இப்படி கூட்டணி கட்சிகள் இருந்த நிலையிலும் அ.தி.மு.க. கூட்டணிக்கு குறைந்த அளவிலேயே கடந்த தேர்தலில் வாக்குகள் கிடைத்துள்ளன. இதற்கு பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்ததே முக்கிய காரணம் என்றும் தற்போது பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இல்லாததால் நிச்சயம் தி.மு.க. கூட்டணிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் விதத்தில் பாராளுமன்ற தேர்தலில் செயல்படுவோம் என்றும் அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறும் போது, "சென்னையில் 3 பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்கிற வகையில் வியூகம் அமைத்து எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். இதற்காக சென்னையில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    மூன்று பாராளுமன்ற தொகுதிகளிலும் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பதை கையில் எடுத்து அதனை தி.மு.க. அரசுக்கு எதிரான பிரசாரமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இதுபோன்ற நடவடிக்கைகள் மூலமாக மக்கள் மத்தியில் மீண்டும் மதிப்பை பெற்று பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை ஈட்ட முடியும் என்றும் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு கட்டளையிட்டுள்ளார்.

    அதே நேரத்தில் சிறுபான்மையினரின் ஓட்டுகளை கவரும் வகையில் அ.தி.மு.க.வின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். மூன்று தொகுதிகளிலும் சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பதை கண்டறிந்து அதனை தீர்க்கும் முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்றும் அப்போதுதான் அவர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்து வெற்றி பெற முடியும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார்.


    இப்படி சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளையும் குறிவைத்து அ.தி.மு.க. காய் நகர்த்தி வருகிறது. இது எந்த அளவுக்கு தேர்தல் நேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கை கொடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.

    ஏனென்றால் தற்போதைய சூழலில் அ.தி.மு.க. கூட்டணியில் எந்த கட்சிகளுமே இல்லாத நிலையே உள்ளது. ஆனால் தேர்தல் நேரத்தில் நிச்சயம் நிலைமை மாறும் என்றும் பெரிய கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் என்றும் அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள எடப்பாடி பழனிசாமி இது போன்று தமிழகம் முழுவதுமே யூகம் வைத்து வருகிறார். அனைத்து தொகுதிகளிலும் இதுபோன்று முக்கிய பிரச்சனைகளை கையில் எடுத்து அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

    இது அ.தி.மு.க.வின் வெற்றிக்கு எந்த அளவுக்கு கை கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    அ.தி.மு.க. சார்பில் 2 வேட்பாளர்களை தேர்வு செய்ய கடந்த ஒரு மாதமாக தீவிர ஆலோசனை நடந்தது. மேல்சபை எம்.பி. பதவி கேட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் 302 பேர் கடிதம் கொடுத்து உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற மேல்சபைக்கு தமிழகத்தில்இருந்து 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய ஜூன் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. 31-ந் தேதி வரை மனுதாக்கல் செய்ய அவகாசம் உள்ளது.

    தமிழக சட்டசபையில்உள்ள எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையில் 4 எம்.பி.க்களை தி.மு.க. கூட்டணி சார்பிலும், 2 எம்.பி.க்களை அ.தி.மு.க. சார்பிலும் தேர்ந்தெடுக்க முடியும். தி.மு.க. சார்பில் கல்யாண சுந்தரம், ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகிய 3 பேர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர். ஒரு இடத்தை தோழமை கட்சியான காங்கிரசுக்கு தி.மு.க. விட்டுக்கொடுத்துள்ளது.

    அ.தி.மு.க. சார்பில் 2 வேட்பாளர்களை தேர்வு செய்ய கடந்த ஒரு மாதமாக தீவிர ஆலோசனை நடந்தது. மேல்சபை எம்.பி. பதவி கேட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் 302 பேர் கடிதம் கொடுத்து உள்ளனர்.

    அ.தி.மு.க. மூத்த தலைவர்களும், மேல்சபை எம்.பி.க்கு குறி வைத்து ஆதரவு திரட்டினார்கள். இதனால் 2 வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அ.தி.மு.க.வில் கடும் இழுபறி ஏற்பட்டது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஒருவரும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஒருவரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால் அதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

    எடப்பாடி பழனிசாமி பரிந்துரைத்த பெயர்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஏற்கவில்லை. தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு எம்.பி. பதவி கொடுக்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் பிடிவாதமாகவும், உறுதியாகவும் இருந்தார். இதனால் எடப்பாடி பழனிசாமியும் தனது தேர்வில் மாற்றம் செய்ய நேரிட்டது.

    முதலில் அவர் முன்னாள் அமைச்சர் செம்மலையை தேர்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. பின்னர் சி.வி.சண்முகத்தை தேர்வு செய்ய எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது. சி.வி. சண்முகத்தை ஏற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தென் மாவட்டத்தில் இருந்து யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் தான் கடந்த சில தினங்களாக ஆய்வில் ஈடுபட்டனர்.

    தென் மாவட்டத்தில் இருந்து தேர்வாக பல மூத்த தலைவர்களிடம் கடும் போட்டி நிலவியது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராஜ் சத்யனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் அவரை ஏற்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேனி மாவட்ட செயலாளர் சையதுகான் பெயர் முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக ஏற்க மறுத்து விட்டார்.

    இதையடுத்து தென் மாவட்டத்தில் இருந்து யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் கடும் இழுபறி ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆலோசிக்க நேற்று ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும், வைத்திலிங்கமும் சென்றனர். அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் பல்வேறு கோணங்களில் ஆலோசனை நடத்தினார்கள்.

    சுமார் 3 மணி நேரம் இந்த ஆலோசனை நீடித்தது. நீண்ட இந்த ஆலோசனைக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மரை எம்.பி.யாக தேர்வு செய்ய ஒருமித்த கருத்து ஏற்பட்டது. அதன்பிறகுதான் அ.தி.மு.க. வேட்பாளர்களாக சி.வி.சண்முகமும், தர்மரும் தேர்வு செய்யப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் நேற்று இரவு வெளியானது.

    பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான 3 தி.மு.க. வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    பாராளுமன்ற மேல்சபையில் 57 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைவதால் ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அதில் தி.மு.க. 4 இடங்களையும், அ.தி.மு.க. 2 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது. 

    இதற்கிடையே, வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்காமல் இருந்தது.

    இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் ஆர்.தர்மர் ஆகியோர் போட்டியிடுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
    தமிழகத்தில் கொலை குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. சரியான நிர்வாகம் இல்லாததே அதற்கு காரணமாக அமைந்திருக்கிறது என சசிகலா கூறியுள்ளார்.
    சென்னை:

    சென்னை தி.நகரில் இன்று திருமண விழா ஒன்றில் பங்கேற்ற சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி:- அ.தி.மு.க. விரைவில் ஒன்றிணையும், ஆட்சிக்கு வரும் என்று கூறி இருந்தீர்கள்? ஆனால் இதுவரை அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் உங்களை சந்திக்கவில்லை. எந்த அடிப்படையில் அது போன்று தெரிவித்தீர்கள்?

    பதில்:- அது தொண்டர்கள் கையில்தான் உள்ளது. தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் வெற்றி பெறும். அந்த அடிப்படையில் தான் நான் கூறினேன்.

    கேள்வி:- அ.தி.மு.க. பொதுக்குழுவை விரைவில் கூட்ட போவதாக கூறி இருக்கிறார்களே?

    பதில்:- எதை செய்தாலும் அவர்களால் ஒரு கருத்துக்கு வர முடியாது. ஏனென்றால் தொண்டர்கள் அவர்களுடன் இல்லை.

    கேள்வி:- அ.தி.மு.க. இரண்டாம் கட்ட தலைவர்கள் அனைவருமே உங்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார்களே?

    பதில்:- எல்லோரும் பேசவில்லை. ஒரு சிலர் பேசுகிறார்கள். அவர்கள் ஏதாவது பதவி கிடைக்கும் என்பதற்காக கூட பேசலாம் இல்லையா?

    கேள்வி:- உங்களை அ.தி.மு.க.வில் இணைக்கவே முடியாது என்றும் அவர்கள் கூறுகிறார்களே?

    பதில்:- இதனை சொல்வதற்கு அவர்கள் யார்? அ.தி.மு.க.வில் யார் தலைமை பதவியில் இருக்க வேண்டும் என்பதை தலைவர் சொல்லி இருக்கிறார். அதன்படி பார்த்தால் தொண்டர்கள்தான் தலைமையை தேர்வு செய்ய வேண்டும்.

    கேள்வி:- அ.தி.மு.க. சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளதே?

    பதில்:- அ.தி.மு.க. எந்த விஷயத்திலும் எதிர்க்கட்சியாக செயல்படவில்லை.

    அதனால் தலைமைக்கு நீங்கள் வர வேண்டும் என்று கூறுகிறார்கள். இதுவே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

    கேள்வி:- தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை எப்படி பார்க்கிறீர்கள்? நேற்று கூட பா.ஜனதா பிரமுகர் ஒருவர் போலீஸ் பாதுகாப்பு இருந்த போதே கொலை செய்யப்பட்டுள்ளாரே?

    பதில்:- தமிழகத்தில் கொலை குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. சரியான நிர்வாகம் இல்லாததே அதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. போலீஸ் துறையை வைத்திருக்கும் முதல்-அமைச்சர் கட்டுப்பாட்டில் அந்த துறை உள்ளதா? என்பதே சந்தேகமாக உள்ளது.

    கேள்வி:- அ.தி.மு.க.வை சட்ட ரீதியாக மீட்க நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறதா?

    பதில்:- பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக எப்படி கூறுகிறீர்கள். இது சுப்ரீம் கோர்ட்டு முடிவா என்ன?

    கேள்வி:- அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்ய போகிறீர்கள்?

    பதில்:- அடுத்த கட்ட நடவடிக்கைகளை நான் விரைவில் மேற்கொள்ள உள்ளேன்.

    கேள்வி:- அ.தி.மு.க. தலைவர்கள் தற்போதும் தொடர்பில் உள்ளனரா?

    பதில்:- இப்போதும் தொடர்பில் இருக்கிறார்கள். யார்-யார் என்பதை வெளியில் செல்ல முடியாது.

    இவ்வாறு சசிகலா கூறி உள்ளார்.

    பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
    சென்னை:

    பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 2 பேரை தேர்வு செய்ய முடியும். இந்த 2 பதவிகளுக்கும் அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது.

    சி.வி.சண்முகம், ஜெயக்குமார், செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா உள்பட பலர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    2 எம்.பி. வேட்பாளர்களை தேர்வு செய்ய இதுவரை அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. தென்மாவட்டத்தை சேர்ந்தவருக்கு பதவியை கொடுக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருந்தார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே மேல்சபை எம்.பி. தேர்தல் வேட்பாளர் போட்டி சுமூக முடிவு எட்டப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே நாளை அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்து கடவுள்களை இழிவுபடுத்திப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
    சென்னை:

    அ. தி. மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை கொச்சைப்படுத்தியதற்கு அ.தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற அண்ணாவின் கொள்கையைப் பின்பற்றும் இயக்கமான அ.தி.மு.க. பிற மதங்களை, பிறருடைய மத நம்பிக்கைகளை இழிவுபடுத்திப் பேசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. எந்த மதத்தை இழிவுபடுத்தி பேசினாலும் அதை அ.தி.மு.க. எதிர்க்கும்.

    முதல்-அமைச்சர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்கும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் பொதுவானவர் என்பதை முதல்-அமைச்சர் நினைவில் கொள்ள வேண்டும். பேரறிஞர் அண்ணாவின் வழியில் செயல்படுகின்ற ஆட்சி என்று அடிக்கடி சொல்லும் முதல்-அமைச்சர் , தி.மு.க. கடவுளுக்கு எதிரான கட்சி அல்ல என்று அடிக்கடி சொல்லும் முதல்-அமைச்சர், தி.மு.க. வில் இருப்பவர்களில் 90 விழுக்காடு பேர் இந்துக்கள் என்று கூறும் முதல்-அமைச்சர், இந்துக் கடவுளை கொச்சைப்படுத்தி பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை அதிர்ச்சியோடும், வேதனையோடும் மக்கள் பார்க்கிறார்கள். பிற மதங்களையோ அல்லது பிற மதக் கடவுள்களையோ யார் பழித்துப் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை.

    இதுபோன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது என்பது சட்டம் ஒழுங்கை சீரழிக்கவும், மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கவும், மத மோதல்களை உருவாக்கவும் வழிவகுக்கும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சருக்கு உண்டு.

    எனவே, இந்துக் கடவுளை இழிவுபடுத்திய, இந்துக்களின் மனதை புண்படுத்திய, தரக்குறைவாகவும் நாகரிகமற்ற முறையிலும் இந்துத் தெய்வத்தை விமர்சித்துள்ள மேற்படி யு2 புருடஸ் என்ற யூ டியூப் சேனலை உடனடியாகத் தடை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், இதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தரவும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யவும் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செம்மலைக்கு மேல்சபை எம்.பி. பதவி கொடுக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். இதை ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிகிறது.
    சென்னை:

    பாராளுமன்ற மேல்சபையில் 57 எம்.பி.க்களின் பதவி காலம் முடிவடைவதால் வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அதில் தி.மு.க. 4 இடங்களையும், அ.தி.மு.க. 2 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.

    தி.மு.க. 4 இடங்களில் ஒரு இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கி உள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு தஞ்சை கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகிய 3 பேர் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

    வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. ஆனால் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஒரு வேட்பாளரும் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

    காங்கிரஸ் கட்சியில் ப.சிதம்பரம் மேல்சபை எம்.பி. பதவியை கேட்டு வருகிறார். அதுபோக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், இளங்கோவன், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரும் எம்.பி. பதவிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளும் பதவி கேட்கிறார்கள்.

    இதுதொடர்பாக இன்று சோனியா, ராகுல் ஆலோசனை நடத்துகிறார்கள். அதன்பிறகு இதில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. ப.சிதம்பரத்துக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை தேர்வு செய்ய கடந்த சில தினங்களாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஆனால் இதுவரை அவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து உருவாகவில்லை. வேட்பாளர் தேர்வில் அவர்கள் இருவருமே பிடிவாதமாக இருப்பதால் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கடும் திணறலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    வேட்பாளரை முடிவு செய்வதற்காக சமீபத்தில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் 27 பேர் சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் கூடி பேசினார்கள். வேட்பாளர் தேர்வு எப்படி இருக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் கருத்துக்களை வெளியிட்டனர். என்றாலும் அந்த கூட்டத்துக்கு பிறகு அ.தி.மு.க. வேட்பாளர்களை ஏக மனதாக தேர்வு செய்ய முடியாத நிலையே நீடிக்கிறது.

    அ.தி.மு.க. வேட்பாளர் 2 பேரில் ஒருவர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராகவும், மற்றொருவர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராகவும் இருப்பார் என்று முதலில் தகவல்கள் வெளியானது. தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு எம்.பி. பதவி வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர் செல்வம் தீவிரமாக உள்ளார். ஆனால் இந்த விசயத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார்.

    அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செம்மலைக்கு மேல்சபை எம்.பி. பதவி கொடுக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். இதை ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிகிறது. ஆனால் மேலும் ஒருவரை தேர்வு செய்வதில்தான் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

    அ.தி.மு.க.வின் மற்றொரு வேட்பாளராக முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று பெரும்பாலான அ.தி.மு.க. நிர்வாகிகள் விரும்புகிறார்கள். ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. சி.வி. சண்முகத்துக்கு வாய்ப்பு அளித்தால் மேல்சபை எம்.பி.க்கள் இருவருமே வட மாவட்டத்தை சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அதை ஏற்க இயலாது என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சொல்கிறார்கள். எனவே தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

    தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் தனக்கு மேல்சபை எம்.பி. பதவி வேண்டும் என்று இன்பதுரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தேனி மாவட்ட செயலாளர் சையதுகானுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை அளிக்கப்பட்டுள்ளது.

    சையது கானை எம்.பி.யாக்க எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. சையதுகான் சசிகலாவின் தீவிர ஆதரவாளர் என்பதால் அவரை எம்.பி. ஆக்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    வேட்பாளர் தேர்வில் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால் வேட்பாளர் தேர்வு தள்ளி போகிறது. நேற்று இதில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சி.வி. சண்முகம் தொடர்ந்து வலியுறுத்துவதால் இன்னமும் முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து சிக்கல் நீடித்தபடி உள்ளது.

    மேல்சபை எம்.பி. பதவிக்கு விண்ணப்பிக்க 31-ந்தேதி வரை அவகாசம் உள்ளது. நாளை முகூர்த்த நாள் என்பதால் அதற்குள் அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்ய அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தீவிரமாகி உள்ளனர்.

    இதுவரை பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் அ.தி.மு.க வேட்பாளர் தேர்வு மீண்டும் மீண்டும் தள்ளி போகிறது. எனவே மனுதாக்கல் முடிவடைவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்புதான் அ.தி.மு.க. வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    டெல்டா மாவட்ட கால்வாய்களில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதால் மேட்டூர் தண்ணீர் வீணாகாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மேட்டூர் அணையில் இன்று திறந்துவிடும் தண்ணீர் இந்த மாதம் 26 அல்லது 27-ந்தேதியன்று கல்லணையை வந்தடையும் வாய்ப்பு உள்ளது என்றும், அங்கிருந்து அன்றே பாசனத்திற்காக நீரை திறந்துவிடும் பட்சத்தில், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானப் பணிகளும் பாதிக்கப்பட்டு தண்ணீர் வீணாகும் அபாயம் உள்ளது.

    ஒப்பந்ததாரர்கள் தூர்வாரும் பணிகளை அவசர கதியில் முடித்து விடக்கூடிய நிலை ஏற்பட்டு அரசுக்கு பண விரயம் ஏற்படும் என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    எனவே, மேட்டூரிலிருந்து திறந்து விடப்படும் நீரை முழுவதுமாக பயன்படுத்தும் வகையில், நீரை தேக்கி வைப்பதற்கான நீர் மேலாண்மை யுக்திகளை அரசு கடைபிடிக்க வேண்டுமென்று டெல்டா விவசாய சங்கங்கள் எதிர்பார்க்கின்றன.

    “மக்களுக்கு உணவுப் பொருள்களை உண்டாக்கித் தருவதும், தானே உணவாக அமைவதும் மழையே” என்ற வள்ளுவரின் வாக்கினை மனதில் நிலை நிறுத்தி, மேட்டூர் அணை முன்கூட்டியே திறப்பதால் காவேரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய்கள் மற்றும் கிளைக் கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் பாதிக்கும் என்பதையும், இதன் காரணமாக நீர் வீணாகக்கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு, அனைத்துத் தரப்பினரிடமும் கலந்தாலோசித்து, மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் நீர் அனைத்தும் பாசனத்திற்கு முழுமையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×