என் மலர்

    நீங்கள் தேடியது "Mettur Dam"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
    • கர்நாடக அணைகளில் இருந்தும் தண்ணீர் 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை கை கொடுக்காததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. மேலும் பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது.

    இந்த நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதே நேரம் கர்நாடக அணைகளில் இருந்தும் தண்ணீர் 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    தற்போது தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37.05 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 524 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 10.8 டி.எம்.சி.தண்ணீர் மட்டுமே உள்ளது. மீன் வளம் மற்றும் குடிநீர் தேவைக்கு 6 டி.எம்.சி. தண்ணீர் அணையில் தேக்கி வைக்கப்படும். மீதி உள்ள 4.8 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே பாசனத்துக்கு திறக்கப்படும். தற்போது திறக்கப்படும் தண்ணீரே தொடர்ந்து வெளியேற்றப்பட்டதால் காவிரி டெல்டா பாசனத்துக்கு இன்னும் 5 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் சூழல்நிலை உருவாகி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேட்டூர் அணையில் இருந்து கடந்த 3 மாதத்திற்கும் மேலாக டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 7ஆயிரத்து 231 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த 3 மாதத்திற்கும் மேலாக டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம் அடையாததாலும், அணையில் இருந்து பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருவதாலும், கடந்த 23-ந் தேதி முதல் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 7ஆயிரத்து 231 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 37.91 அடியாக இருந்த நிலையில் இன்று 38.02 அடியாக உயர்ந்து உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கர்நாடக அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.
    • இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37.91 அடியாக இருந்தது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதோடு கர்நாடக அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37.91 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6ஆயிரத்து 943 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 6ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணையில் தற்போது 11.03 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் உள்ளது. இதில் மீன்வளம் மற்றும் குடிநீர் தேவைக்கு 6 டி.எம்.சி. தண்ணீர் நிறுத்தி வைக்கப்படும். எனவே மீதி உள்ள 5.03 டி.எம்.சி. தண்ணீரே பாசனத்திற்கு திறக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 639 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதியில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 37.92 அடியாக இருந்த நிலையில் இன்று 37.57 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 639 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணை பகுதியில் நேற்று 32.40 மி.மீட்டர் மழை பெய்தது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நாளை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வந்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த ஒரு வாரமாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிற
    • மேட்டூர் அணை பகுதியில் நேற்று 47.80 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த 3 மாதத்திற்கும் மேலாக காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது.

    இதையடுத்து குறுவை பயிர்களை காப்பாற்ற கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக்கோரி தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தது.

    இதையடுத்து முதல் கட்டமாக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து 2-வது கட்டமாகவும் 15 நாட்களுக்கு 5ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.

    ஆனால் கர்நாடக அரசு அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

    இதற்கிடையே கடந்த ஒரு வாரமாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 18-ந் தேதி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 556 கனஅடி நீர் வந்தது. 19-ந் தேதி 2ஆயிரத்து 844 கனஅடி தண்ணீர் வந்தது. 20-ந் தேதி நீர்வரத்து 2ஆயிரத்து 938 கனஅடியாக அதிகரித்தது. நேற்று 3ஆயிரத்து 367 கனஅடியாக அதிகரித்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4ஆயிரத்து 421 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டம் 38.19 அடியாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 6ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் 11.17 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது. மேட்டூர் அணை பகுதியில் நேற்று 47.80 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 4,674 கன அடி திறப்பு
    • கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    சேலம்:

    தமிழகம்-கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக காவிரி நீர் பிரச்சினை நீடித்து வருகிறது. குறிப்பாக போதிய மழை பெய்யாத காலக்கட்டத்தில் இந்த பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து குறைந்துவிட்டது.

    இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் 15 நாட்களுக்கு திறந்து விடவேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு தண்ணீரை முழுமையாக வழங்க தொடர்ந்து மறுத்து வருகிறது.

    ஏற்கனவே இதுபோல் தண்ணீர் திறந்து விட அறிவுறுத்தியும் கர்நாடக அரசு கண்டு கொள்ளவில்லை. கர்நாடக அரசு பெயரளவுக்கு கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு வருகிறது.

    அதன்படி தமிழகத்திற்கு நேற்று முன்தினம் முதல் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 3,834 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. 2-வது நாளாக நேற்று 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு 4 ஆயிரத்து 674 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

    இன்றும் அதே அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதாவது மண்டியா மாவட்டம் கண்ணம்பாடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 2,674 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,336 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 97.02 அடியாக உள்ளது.

    அதேபோல மைசூரு எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டு உள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் 75.70 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர் 2,799 கன அடி வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டுகிறது. இந்த மழை மேட்டூர் அணைக்கு கைகொடுத்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 844 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று சற்று அதிகரித்து 2 ஆயிரத்து 938 கன அடி நீர் வந்தது. இன்று காலையில் நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 3,367 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரியில் 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று முன்தினம் 39.75 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 39.13 அடியாக சரிந்தது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் மேலும் சரிந்து 38.57 அடியானது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அணையில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரியில் 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி நடப்பாண்டு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய உரிய தண்ணீரை திறந்து விடாமல் தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழை மேட்டூர் அணைக்கு கைகொடுத்து வருகிறது. பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பொழிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு ஓரளவு நீர்வரத்து அதிகரித்தப்படி உள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 2 ஆயிரத்து 844 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 2 ஆயிரத்து 938 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரியில் 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று முன்தினம் 40.38 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 39.75 அடியாக சரிந்தது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் மேலும் சரிந்து 39.13 அடியானது.

    நீர் திறப்பு தொடர்ந்து 6,500 கன அடி அளவில் நீடித்தால் இன்னும் 3 நாட்களுக்கு மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும் சூழல் உருவாகி உள்ளது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
    • வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம்.

    அதன்படி நடப்பாண்டு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் டெல்டாவில் உள்ள 12 மாவட்டங்களில் விவசாயிகள் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொண்டனர்.

    இந்நிலையில் கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய உரிய தண்ணீரை திறந்து விடாமல் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்தது.

    இந்நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழை மேட்டூர் அணைக்கு கைகொடுத்து வருகிறது. பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பொழிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு ஓரளவு நீர்வரத்து அதிகரித்தப்படி உள்ளது.

    நேற்று காலையில் 2,244 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையில் வினாடிக்கு 2,556 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் நீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று காலையில் 41.05 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 40.38 அடியாக சரிந்தது. அணையில் 12.28 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. இதில் 6 டி.எம்.சி.தண்ணீர் குடிநீர் மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும்.

    நீர் திறப்பு தொடர்ந்து 6,500 கன அடி அளவில் நீடித்தால் இன்னும் 5 நாட்களுக்கு மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும் சூழல் உருவாகி உள்ளது.

    தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தால் மட்டுமே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • டெல்டாவில் உள்ள 12 மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டது.

    சேலம்:

    மேட்டூர் அணை தமிழகத்தின் பல மாவட்டங்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

    மேட்டூர் அணையின் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 12 டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்களில் சம்பா, குறுவை, தாளடி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த நிலையில் ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். நடப்பாண்டு மேட்டூர் அணையில் நீர்மட்டம் 103 அடி தண்ணீர் இருந்ததால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் டெல்டாவில் உள்ள 12 மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டது.

    தற்போது குறுவை பயிர் அறுவடை செய்யும் தருவாயில் உள்ளதால் கடந்த சில நாட்களாக அணையில் இருந்து வினாடிக்கு 6,500 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய உரிய தண்ணீரை வழங்கவில்லை. சமீப காலமாக தமிழக எல்லையில் பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு ஓரளவு நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.

    நேற்று காலையில் 2,047 கன அடியாக இருந்த நீர்வரத்து சற்று அதிகரித்து இன்று காலையில் 2,244 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று காலையில் 41.76 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 41.05 அடியாக சரிந்தது. அணையில் 12.6 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. இதில் 6 டி.எம்.சி.தண்ணீர் குடிநீர் மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும்.

    நீர் திறப்பு தொடர்ந்து 6,500 கன அடி அளவில் நீடித்தால் இன்னும் 6 நாட்களுக்கு மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும் சூழல் உருவாகி உள்ளது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் விரைவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படும் என தெரிகிறது. இதனால் மேட்டூர் அணையை நம்பி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அணையில் இருந்து வினாடிக்கு 6500 கனஅடி வீதம் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • அணையில் குடிநீர் மற்றும் மீன்வளத்துக்காக 6 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு வைக்கப்படும்.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த 3 மாதத்துக்கும் மேலாக டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

    இதையடுத்து காவிரி டெல்டா மாவட்டத்தில் பயிரிட்டுள்ள குறுவை பயிர்களை காப்பாற்ற உடனடியாக காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதையடுத்து முதல் கட்டமாக தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது. அதன் படி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் 2-வது கட்டமாகவும் மேலும் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது.

    ஆனால் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க முடியாது என்று அறிவித்தது. மேலும் எங்களுக்கே தண்ணீர் இல்லை என்று கூறிவிட்டனர். ஆனாலும் மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து டெல்டாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் நீர் மட்டம் தினமும் ஒரு அடி வீதம் குறைந்து வருகிறது. இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக இன்று 2-வது நாளாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41.76 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 47 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6500 கனஅடி வீதம் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 13 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.

    அணையில் குடிநீர் மற்றும் மீன்வளத்துக்காக 6 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு வைக்கப்படும். அதன்படி பார்த்தால் அணையில் இருந்து இன்னும் 7 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வெளியேற்ற முடியும். எனவே இன்னும் 7 நாட்கள் மட்டுமே டெல்டாவுக்கு தண்ணீர் திறக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print