என் மலர்
நீங்கள் தேடியது "Mettur Dam"
- மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- மேட்டூர் அணையில் தற்போது 83.94 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 113.81 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 223 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை வினாடிக்கு 6 ஆயிரத்து 414 கனஅடியாக அதிகரித்து வருகிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 83.94 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- தேவையை பொறுத்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறக்கப்பட்டு வருகிறது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.09 அடியாக உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேவையை பொறுத்து அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு வரும் தண்ணீர் இன்று காலை வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் அணைக்கு நீர்வரத்து நேற்று 5714 கனஅடியாக இருந்த நிலையில் அது இன்று 6 ஆயிரத்து 72 அடியாக அதிகரித்து காணப்படுகிறது. மேலும் அணையின் நீர்மட்டம் 112.09 அடியாக உள்ளது. அணையில் தற்போது 81.43 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 120 அடியாக இருந்தது.
- தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 120 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 35 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை முதல் வினாடிக்கு 25 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்து காணப்பட்டது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்தது.
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக உபரிநீர் அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 7-வது முறையாக கடந்த 20-ந் தேதி நிரம்பியது. இதையடுத்து தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்தது. அது அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இது தவிர கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர்வரத்து அதிகரித்து வருவதால் கடந்த 6 நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- கர்நாடகாவில் இருந்து உபரிநீர் திறப்பு நேற்று காலை முதல் அதிகரிக்கப்பட்டது.
- இன்று காலை முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
கடந்த சில நாட்களாக நீர்வரத்தை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111 அடியாக குறைந்து காணப்பட்டது.
இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் உபரிநீர் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து கடந்த 20-ந் தேதி இந்தாண்டில் 7-வது முறையாக அணை நிரம்பியது.
அதே நேரத்தில் கர்நாடகாவில் இருந்து உபரிநீர் திறப்பு நேற்று காலை முதல் அதிகரிக்கப்பட்டது. அந்த தண்ணீர் நேற்று மதியம் முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டது. இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. 12 மணி அளவில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 65ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.
- கடந்த 2 நாட்களாக அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
- மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர்:
தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை எதிரொலியாக இந்த ஆண்டு மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி 7-வது முறையாக கடந்த 20-ந் தேதி நிரம்பியது.
அதே நேரத்தில் அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்த நிலையில், அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 21-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்தானது மேலும் அதிகரித்துள்ளது.
அதாவது கடந்த 2 நாட்களாக அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நீர் வரத்தானது, நேற்று மாலை 6 மணிக்கு வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை அணைக்கு நீர்வரத்து 55 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்படுகிறது.
இதையடுத்து சேலம், நாமக்கல் உள்பட காவிரி ஆறு பாய்ந்தோடும் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் காவிரி கரையை பகுதியை ஒட்டி அமைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
- தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்தாண்டில் 7-வது முறையாக கடந்த 20-ந்தேதி மதியம் நிரம்பியது. இதையடுத்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையில் கடந்த 4 நாட்களாக நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 300 கனஅடியும், 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 12 ஆயிரத்து 700 கனஅடியும் என மொத்தம் வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- அணைக்கு 14,420 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
- 1500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவரமடைந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகாரித்துள்ளது. இதனால் இன்று முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இதன்மூலம் இந்த ஆண்டில் 7ஆவது முறையாக மேட்டூர் அணை 120 அடியான முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு 14,420 கனஅடி நீர் வரும் நிலையில், 1500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
- அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- தற்போது அணையில் 91.88 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் அதிகளவில் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதன் காரணமாக இந்தாண்டில் மேட்டூர் அணை 6 முறை நிரம்பியது.
இதற்கிடையே மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீரும் குறைந்து காணப்பட்டது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட காவிரி டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் அதிகளவில் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து 111 அடியானது.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கடந்த சில நாட்களாக நீரவரத்து அதிகரித்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119 அடியை எட்டியது. அணைக்கு நேற்று வினாடிக்கு 9 ஆயிரத்து 26 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை முதல் வினாடிக்கு 10 ஆயிரத்து 374 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 91.88 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.73 அடியாக இருந்தது.
- மழை நின்றதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வந்தது.
இந்த நிலையில் மழை நின்றதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.73 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 23 ஆயிரத்து 648 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை முதல் வினாடிக்கு 17 ஆயிரத்து 584 கனஅடியாக குறைந்து வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12ஆயிரம் கனஅடியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 89.89 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- அணையில் தற்போது 89.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு வந்த நீர்வரத்தை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் 111 அடியாக குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.46 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு நேற்று வினாடிக்கு 42 ஆயிரத்து 167 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை வினாடிக்கு 23 ஆயிரத்து 648 கனஅடியாக குறைந்து காணப்பட்டது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 89.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- கர்நாடகாவில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு இன்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- தற்போது மேட்டூர் அணையில் 81.98 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பியது.
இதையடுத்து உபரிநீர் தமிழக காவிரி ஆற்றில் அதிகளவில் திறக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக இந்தாண்டில் மேட்டூர் அணை 6 முறை நிரம்பியது.
இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது.
அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தாலும் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111 அடியாக குறைந்தது.
இதற்கிடையே தற்போது கர்நாடகாவில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு இன்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று வினாடிக்கு 6 ஆயிரத்து 33 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 29 ஆயிரத்து 540 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.48 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு,மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 81.98 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.






