என் மலர்

    நீங்கள் தேடியது "Northeast monsoon"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • காலையில் வெயில் அடிப்பதும், மாலையில் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலையில் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. மாநகர பகுதியில் வண்ணார்பேட்டை, சந்திப்பு, டவுன், பேட்டை, திருச்செந்தூர் சாலை, பாளை, புதிய பஸ் நிலையம், என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் தண்ணீர் தேங்கி கிடந்தது.

    இந்த மழையால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. இரவு நேரத்தில் வண்ணார்பேட்டையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    மாவட்டத்தில் களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அங்கு 8.6 மில்லிமீட்டர் மழை கொட்டியது. நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. அங்கு 16 மில்லி மீட்டர் மழை பெய்தது. பாளையில் 3.6 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை பெய்யவில்லை. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 64.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையில் நீர் இருப்பு 80.35 அடியாக உள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 520.75 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலையில் லேசான சாரல் மழை பெய்தது.

    மாஞ்சோலை வனப்பகுதியில் காக்காச்சி எஸ்டேட்டில் 10 மில்லி மீட்டர் மழை பெய்தது. நாலுமுக்கு பகுதியில் 8 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்தது. இதனால் அங்கு இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் அணை பகுதியில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது. அடவிநயினார் அணை பகுதியில் மட்டும் 1 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அந்த அணையில் தற்போது நிலவரப்படி 94.75 அடி நீர் இருப்பு உள்ளது. குண்டாறு அணையில் 34.87 அடியும், கடனா அணையில் 47.60 அடியும், ராமநதியில் 55 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் சாரல் மழையால் குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று குறைவாகவே உள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 4 மில்லிமீட்டர் மழை கொட்டியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மணியாச்சி, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று மாலை கடம்பூர் பகுதியில் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

    அங்கு 39.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஸ்ரீவைகுண்டம் மற்றும் கயத்தாறு பகுதிகளில் தலா 2 மில்லிமீட்டர் மழை பெய்தது. காடல்குடியில் 5 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் அடித்து வந்தது. பொதுமக்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் சிரமப்பட்டதோடு வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாத நிலையில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ரோடுகளில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. திடீரென பெய்த மழையினால் இப்பகுதிமக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் வெள்ளத் தடுப்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
    • பருவமழையால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராகி வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பரவலாக பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் வெள்ளத் தடுப்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

    இந்தப் பணிகள் அனைத்தையும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டுமென தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார்.

    பருவமழையால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராகி வருகிறது.

    இதற்காக செய்யப்பட்டு உள்ள முன்னேற்பாட்டு பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று ஆலோசனை நடத்தினார்.

    காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டத்தில், வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமசந்திரன், உள்ளிட்ட அமைச்சர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொதுப்பணி-நெடுஞ்சாலை, வேளாண்மை, மக்கள் நல்வாழ்வு, மின்சாரம், வருவாய், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் உள்ளிட்ட அரசுத் துறைகளின் செயலர்கள், துறைத் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.
    • அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். அதன்படி, அடுத்த மாதம் அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இது டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் விவசாயிகள் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர்.

    இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும், மழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கவுள்ளார்.

    மழைநீர் வடிகால் கட்டுமான பணி, வடிகால்களில் அடைப்புகளை அகற்றும் பணி, நீர்நிலைகள், கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள், கரைகளைக் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அசோக் நகர் 4வது அவென்யூ பகுதியில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
    • பணிகள் அனைத்தையும் இன்னும் 2 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் இன்னும் 2 மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அக்டோபர் மாதம் பருவமழை தொடங்கும் என்பதால் அதற்கு முன்னேற்பாடாக மழைநீர் தேங்காமல் இருக்க பல பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை ரூ.2,325 கோடி மதிப்பீட்டில் 738.22 கி.மீ. மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது.

    வடசென்னை பகுதியின் கொசஸ்தலையாறு வடி நிலப்பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியின் கீழ் 769 கி.மீ. நீளத்திற்கு ரூ.3,220 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் இதுவரை 483.83 கி.மீ. நீளத்திற்கு பணிகள் நிறைவடைந்துள்ளன.

    தென் சென்னையில் கோவளம் வடிநிலத்தில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் ரூ.1,714 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகிறது. இதில் 160.83 கி.மீ. தூர பணிகளில் 21.82 கி.மீ. நீளத்திற்கு பணிகள் முடிவடைந்துள்ளது. மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

    இது தவிர மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி மற்றும் பழுது பார்க்கும் பணிகள் ரூ.27.55 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகள் அனைத்தும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக முடிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

    கடந்த ஆண்டு பருவமழையின் போது சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் இந்த முறை தண்ணீர் தேங்காத அளவுக்கு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    முதலில் பழவந்தாங்கல் வழியாக நங்கநல்லூர் எம்.ஜி.ஆர்.சாலைக்கு சென்று அங்கு ரூ.71 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டார்.

    அங்கு நடைபெற்று வரும் 2.29 கிலோ மீட்டர் பணிகளில் 1.78 கி.மீ.பணிகள் முடிவடைந்து இருந்தது. மீதமுள்ள பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த பணி முடியும் போது இந்துகாலனி, பி.வி.நகர் மற்றும் நேரு நெடுஞ்சாலை பகுதிகள் பயனடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் கோவளம் பேசின் மழைநீர் வடிகால் பணிகளின் விவரங்களையும் முதலமைச்சர் கேட்டறிந்தார். அவருக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதா கிருஷ்ணன் பணிகளின் விவரங்களை விளக்கி கூறினார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் பழவந்தாங்கல் போலீஸ் நிலையத்துக்கு திடீரென சென்றார்.


    போலீஸ் நிலையத்துக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிருந்த இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வரவேற்றனர். போலீஸ் நிலையத்தின் உள்ளே சென்று ஒவ்வொரு அறையாக சென்ற அவர் வருகைப் பதிவேட்டையும் பார்வையிட்டார்.

    பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

    அதன் பிறகு அங்கிருந்து போரூர் சென்றார். போரூர் ஏரி உபரி நீர் வெளியேற ரூ.100 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் மதகு பணிகளை பார்வையிட்டார்.

    நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள போரூர் ஏரியின் நீர் பரப்பு 252 ஏக்கராகும். இந்த ஏரியின் முழு கொள்ளளவு 67 மில்லியன் கன அடியாகும். இதன் வலது கரையோரம் 25 மீட்டர் நீளத்திற்கு உபரி நீர் வழிந்தோடி அமைந்துள்ளது. ஏரியின் மொத்த கரையின் நீளம் 3,092 மீட்டராகும்.

    இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் போகும் பாதையில் குடியிருப்புகள் அதிகமாகி விட்டதால் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்து விடுகிறது. இதன் காரணமாக அங்கு புதிய மதகு அமைக்கும் பணி ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. போரூர் ஏரி முதல் ராமாபுரம் ஓடை வரை புதிதாக மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணிகள் அங்கு நடைபெற்று வந்தது. அதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    அவருக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணிகள் பற்றி விளக்கி கூறினார்கள்.

    அமைச்சர் தா.மோ.அன்பரசனும் போரூர் ஏரி மதகு அமைக்கும் பணிகள் குறித்து சில விவரங்களை தெரிவித்தார்.

    இந்த பணிகள் அனைத்தையும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக முடித்துவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    அதன் பிறகு அசோக் நகர் சென்றார். அங்கு 4வது அவென்யூ பகுதியில் ரூ.7.60 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழையின் போது 2 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. இதனால் மேற்கு மாம்பலம் பகுதியும் பாதிக்கப்பட்டது. இதற்கு நிரந்தர தீர்வு காண ரூ.7 கோடி 60 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    அவருக்கு மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வடிகால் பணி எப்போது முடியும் என்பதை விளக்கி கூறினார். இந்த பணிகள் அனைத்தையும் இன்னும் 2 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

    அப்போது அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ.அன்பரசன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கும் போதே சென்னையில் அதிக அளவில் மழை பெய்துள்ளது.
    • 1991-ம் ஆண்டு சென்னையில் ஜூன் மாதம் அதிக அளவில் மழை பெய்தது.

    தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும். அப்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், இந்தியா முழுவதும் உள்ள மற்ற மாவட்டங்களிலும் மழை பொழிவு அதிகமாக இருக்கும்.

    ஆனால் சென்னையில் அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழையின் போதே மழை பொழிவு அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கும் போதே சென்னையில் அதிக அளவில் மழை பெய்துள்ளது.

    இதற்கு முன்பு 1991-ம் ஆண்டு சென்னையில் ஜூன் மாதம் அதிக அளவில் மழை பெய்தது. அதன் பிறகு 1996-ம் ஆண்டு சென்னையில் ஜூன் மாதத்தில் அதிகமாக மழை பெய்தது. இந்த நிலையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஜூன் மாதத்தில் அதிக மழை பெய்துள்ளது.

    தமிழகத்தை பொறுத்தவரை ஜூன் மாதத்தில் நேற்று வரை இயல்பாக 1.6 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் நேற்று ஒரே நாளில் இயல்பை விட 22 சதவீதம் குறைவாக மழை பெய்திருந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் 3 மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அணையின் 90ஆண்டு கால வரலாற்றில் முதன்முதலாக 1934ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
    • குறித்த நாளான ஜூன் 12-ல் இதுவரை 18ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம் எனப்படும் மேட்டூர் அணை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்குகிறது.

    இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும். டெல்டா பகுதி விவசாயிகள் இந்த நீரை நம்பியே குறுவை சாகுபடி செய்வர்.

    கடந்த ஆண்டு மழையால் மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் ஜூன் 12-ந்தேதிக்கு முன்பாகவே அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மே மாதம் 24-ந்தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணையில் இருந்து பாசனத்திற்காக நீரை திறந்துவிட்டார்.

    மேட்டூர் அணை வரலாற்றிலேயே, கோடை காலத்தில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிகழ்வு முதல் முறையாக நிகழ்ந்தது.

    இது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து உரிய நாளான ஜூன் 12-ந்தேதி டெல்டாவின் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது.

    குறித்த நேரத்தில் தண்ணீர் திறப்பதன் மூலம் நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 4 லட்சத்து 91ஆயிரத்து 200 ஏக்கர் நிலமும், கடலூர் மாவட்டத்தில் 30ஆயிரத்து 800 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். ஜூன் 12-ம் தேதி முதல் 28-ம் தேதிவரை குறுவை, சம்பா, காளடி பயிர்களுக்கு 220 நாட்களுக்கு 372டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் இந்த நீரின் தேவை சற்று குறையும்.

    மேட்டூர் அணையின் உச்ச நீர் மட்டம் 120 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 103.65 அடியாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 69.654 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 1075 கன அடியாக உள்ளது.

    குடிநீருக்காக விநாடிக்கு 1508 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடங்கியுள்ளதால் ஜூன் 12-ம் தேதியே குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.

    அணையின் 90ஆண்டு கால வரலாற்றில் முதன்முதலாக 1934ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. குறித்த நாளான ஜூன்12-ல் இதுவரை 18ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜூன்12-க்கு முன்பாக 11ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் 19-வது முறையாக குறித்த நாளான ஜூன் 12-ம் தேதி, நடப்பாண்டும் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    டெல்டா பாசனப் பகுதியில் கடந்த ஆண்டு 58 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது இது 65,500 ஏக்கர் நிலப்பரப்பாக அதிகரித்துள்ளது. அதேபோல் 4.36 லட்சம் டன் உரம் கையிருப்பில் உள்ளது என்று வேளாண் அதிகாரிகள் கூறினர்.

    மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு இந்த தேதியில் இருந்த தண்ணீரை விட, தற்போது 6 டிஎம்சி வரை குறைவாகவே உள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்தாலும், அதன் தாக்கம் தென் மாநிலங்களில் தொடர்ந்தது.
    • கேரளப் பகுதிகளில் இருந்து இன்று (12ம் தேதி) விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு சற்று தாமதமாக அக்டோபர் 29-ந் தேதி தொடங்கி டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது.

    இந்த காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 44.3 செ.மீ. ஆனால் தற்போது ஒரு சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்தாலும், அதன் தாக்கம் தென் மாநிலங்களில் தொடர்ந்தது.

    வடகிழக்கு பருவமழை இன்று விலகுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் அதை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயல் சீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளப் பகுதிகளில் இருந்து இன்று (12ம் தேதி) விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

    இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை இன்று விலக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு சற்று தாமதமாக அக்டோபர் 29-ந் தேதி தொடங்கி டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
    • வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் 31-ந் தேதியுடன் முடிவடைந்தாலும், அதன் தாக்கம் தென் மாநிலங்களில் தொடர்ந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு சற்று தாமதமாக அக்டோபர் 29-ந் தேதி தொடங்கி டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது.

    இந்த காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 44.3 செ.மீ. ஆனால் தற்போது ஒரு சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் 31-ந் தேதியுடன் முடிவடைந்தாலும், அதன் தாக்கம் தென் மாநிலங்களில் தொடர்ந்தது.

    இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை நாளை (வியாழக்கிழமை) விலகுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் அதை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளப் பகுதிகளில் இருந்து நாளை (12-ந்தேதி) விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

    தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்துக்கு வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரம் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வானிலை ஆய்வு மைய நடைமுறைப்படி அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருவமழை காலமாக கணக்கிடப்படுகிறது.
    • தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காலம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலக்கட்டத்தில் பெய்யும் வழக்கமான 440.30 மி.மீட்டர் மழையை காட்டிலும் இம்முறை ஒரு சதவீதம் அதிகமான மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வானிலை மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வானிலை ஆய்வு மைய நடைமுறைப்படி அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருவமழை காலமாக கணக்கிடப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காலம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

    இந்த காலக்கட்டத்தில் வழக்கமாக 440.30 மி.மீட்டர் மழை பதிவாவது வழக்கம். இந்த முறை வழக்கத்தைவிட ஒரு சதவீதம் அதிகம் மழை கிடைத்துள்ளது.

    வடகிழக்கு பருவமழை காலத்தில் 21 மாவட்டங்களில் வழக்கத்தைவிட குறைவாகவும் மழை பெய்துள்ளது. வானிலை முன் அறிவிப்பை பொறுத்தவரை திங்கட்கிழமை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி மற்றும் கருப்பாநதி அணை பகுதிகளில் இன்றும் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது.
    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

    நெல்லை:

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் 2 நாட்களாக மாநகர், புறநகர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மாநகர பகுதியை பொறுத்தவரை நேற்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு விட்டு விட்டு மழை பெய்து வந்தது.

    தொடர்ந்து இன்று அதிகாலை முதல் சாரல்மழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மழையால் மாநகர பகுதியில் உள்ள தொண்டர்சன்னதி, நயினார்குளம் சாலைகள் பள்ளங்களாக காட்சியளித்தது. அதில் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்வதால் காலை முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகியவற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    நேற்று 300 கனஅடி மட்டுமே நீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று காலை பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து 1994 கனஅடியாக உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 100 அடியை கடந்தது. பாபநாசம் அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 90 அடியாக உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு குறையாததால் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 5.8 சென்டிமீட்டரும், பாபநாசத்தில் 4.7 சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளது. புறநகர் பகுதிகளான அம்பை, நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி, களக்காடு, சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலும் பரவலாக மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி மற்றும் கருப்பாநதி அணை பகுதிகளில் இன்றும் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக ராமநதியில் 39 மில்லிமீட்டரும், கடனா அணையில் 30 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 30 மில்லிமீட்டரும், சிவகிரியில் 14 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயினருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நேற்று குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்றும் வெள்ளப்பெருக்கு குறையாமல் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் 2-வது நாளாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று ஐந்தருவி, புலியருவி, சிற்றருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இன்று அந்த அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலையில் லேசான சாரல் மழை பெய்த நிலையில் இரவில் பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இன்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தூத்துக்குடியில் ரெயில்வே மேம்பாலம் சத்யா நகர் பகுதியில் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது.

    தூத்துக்குடி மாநகர பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பெய்தது. திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது. அங்கு 37 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கயத்தாறு, கடம்பூர் மற்றும் கழுகுமலையில் 13 மில்லிமீட்டர் மழை பெய்தது. எட்டயபுரம், விளாத்திகுளத்தில் லேசான சாரல் அடித்தது. ஓட்டப்பிடாரம், சாத்தா ன்குளம், காயல்பட்டினம், கோவில்பட்டியிலும் சாரல் மழை பெய்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print