என் மலர்
நீங்கள் தேடியது "மழை"
- கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.
- தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைவாக பதிவானது.
கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வெயிலுக்கு இதமாக தமிழ்நாட்டின் அனேக இடங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பொழிந்தது.
இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைவாக பதிவானது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட குறைவாகவே இருக்கும் என தெரிவித்துள்ள வானிலை மையம், நாளை மறுநாள் முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.66 அடியாக உள்ளது.
- கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில் நேற்று பிற்பகலில் இருந்து மழை குறைந்தது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணி முத்தாறு அணைகளில் நீர்மட்டம் அதிகரித்தது. நேற்று மழை குறைந்த நிலையிலும் தொடர் நீர்வரத்தால் இன்றும் அணைகள் நீர்இருப்பு அதிகரித்துள்ளது.
143 அடி கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 91.70 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 1 1/2 அடி உயர்ந்து 105 அடியை எட்டியுள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 861 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.66 அடியாக உள்ளது. அந்த அணை பகுதியில் 2.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் பாபநாசத்தில் 80 அடியும், மணிமுத்தாறில் 102.05 அடியும், சேர்வலாறில் 67.39 அடியும் நீர் இருப்பு இருந்தது. கடந்த ஆண்டை காட்டிலும் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால் இந்த ஆண்டு கோடையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு எஸ்டேட் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. மாநகரில் மழை எதுவும் பெய்யவில்லை. புறநகரில் களக்காடு, அம்பையில் பரவலாக மழை பெய்தது. அங்கு தலா 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. ராதாபுரத்தில் 4 மில்லிமீட்டரும், நம்பியாறு அணை பகதியில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது. கொடுமுடியாறு அணையில் 5 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. வானம் பார்த்த பூமியான சங்கரன்கோவில் சுற்று வட்டாரத்தில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகிரியில் அதிகபட்சமாக 25 மில்லிமீட்டர் மழை பெய்தது.
அணைகளை பொறுத்த வரை கருப்பாநதி அணை பகுதியில் மட்டும் 3.50 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்ததது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கணிசமாக கொட்டியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கழுகுமலை சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி முழுவதும் குளிர்ச்சி நிலவியது. ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கடம்பூர் பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேநேரம் தூத்துக்குடி மாநகர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 2 நாட்களாக பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
* தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* தமிழ்நாட்டின் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 18-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதி இந்தியாவிலேயே அதிக மழை பொழிவு பெறும் இடமாகும்.
- நாலுமுக்கில் 7 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 6.5 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதி இந்தியாவிலேயே அதிக மழை பொழிவு பெறும் இடமாகும். இங்கு நேற்று முன்தினம் இரவு தொடங்கி கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
இன்று காலை நிலவரப்படி ஊத்து எஸ்டேட்டில் 9 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்துள்ளது. நாலுமுக்கில் 7 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 6.5 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாஞ்சோலை சுற்றுவட்டாரத்தில் சுமார் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- நம்பியாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 29 மில்லிமீட்டரும், கொடுமுடியாறு நீர்பிடிப்பு பகுதியில் 21 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
- செங்கோட்டை, தென்காசி, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 912 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணை பகுதியில் இன்று காலை வரை 28 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1 1/4 அடி உயர்ந்து 90.50 அடியாக உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டமும் 1 1/2 அடி உயர்ந்து இன்று 103.51 அடியாக உள்ளது. அங்கு 19 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 88.40 அடி நீர் இருப்பு உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 487 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கு 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
நம்பியாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 29 மில்லிமீட்டரும், கொடுமுடியாறு நீர்பிடிப்பு பகுதியில் 21 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக அகஸ்தியர் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. ஏற்கனவே களக்காடு தலையணையில் நீர்வரத்தால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருக்குறுங்குடி நம்பி கோவில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
செங்கோட்டை, தென்காசி, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் இரவு தொடங்கி இன்று வரை பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை கொட்டித்தீர்த்து வருகிறது. மாவட்டத்தில் குலசேகரன்பட்டினம் பகுதிகளில் அதிகபட்சமாக 6 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
வைப்பார், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், சூரங்குடி, வேடநத்தம், கயத்தாறு, கடம்பூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளிலும் தொடர்மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். மாநகரில் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கிவிட்டதால் உரிமையாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
- திடீரென பெய்த மழையால் குளிர்ச்சி ஏற்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி
- கடும் பனிமூட்டம் நிலவியதால் இரவு போல் காட்சியளித்தது.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் குளிர்ச்சி ஏற்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. கொடைக்கானலில் வெயில் அதிகரித்த நிலையில் நேற்று அதிகாலையில் சாரலாக தொடங்கிய மழை பின்னர் கனமழையாக பெய்தது.
தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகள் சிரமமடைந்தனர். பகல் பொழுதிலேயே கடும் பனிமூட்டம் நிலவியதால் இரவு போல் காட்சியளித்தது.
இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். மேல்மலை பகுதியில் பெய்த மழை சாகுபடி பணிக்கு உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வந்தது. இதனை அணைக்க வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர். தற்போது பெய்துள்ள மழை காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவும் என அவர்கள் தெரிவித்தனர். கோடைகால சீசன் தொடங்க உள்ள நிலையில் மழைப்பொழிவு குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இருந்தபோதும் தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல் 20, காமாட்சிபுரம் 13.2, நிலக்கோட்டை தாலுகா 17, நிலக்கோட்டை 16.20, சத்திரப்பட்டி 7.2, வேடசந்தூர் தாலுகா அலுவலகம் 8.4, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 8.2, பழனி 7, கொடைக்கானல் ரோஸ்கார்டன் 13, பிரையண்ட் பூங்கா 14 என மாவட்டம் முழுவதும் 124.20 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக நேற்று மழை பொழிந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதான வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
- 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.
- மழையால் உப்பு பாத்திகள் கரைந்து சேறும் சகதியுமாக மாறி உள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினவயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வேதாரண்யத்தில் கடந்த 2 நாட்களாக திடீரென்று பெய்த மழையால் உப்பு பாத்திகளில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் உப்பு பாத்திகள் கரைந்து சேறும் சகதியுமாக மாறி உள்ளது.
உப்பளங்களில் சேமித்து வைத்துள்ள உப்பு மழையில் கரைந்து விடாமல் பாதுகாக்க தார்ப்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர். மழையால் உப்பளங்கள் பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான உப்பு தொழிலாளர்களுக்கு வேலை இழந்துள்ளனர்.
இந்த திடீர் மழையால் உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்க ஒரு வார காலமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- சேலம் கந்தம்பட்டி பகுதியில் பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மின் கம்பம் சாலையில் சாய்ந்தது.
- ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று காலை முதலே மேகங்கள் சூழ்ந்து கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் நிலவியது.
சேலம்:
சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை நெருங்கியதால் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்தநிலையில் சேலம் மாநகரில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மேகமூட்டமாக காட்சி அளித்தது. பிற்பகல் 2.30 மணியளவில் திடீரென சேலம் மாநகரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு வரை சாரல் மழையாக நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது.
சேலம் கந்தம்பட்டி பகுதியில் பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மின் கம்பம் சாலையில் சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து மின் கம்பத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
இதேபோல சேலம் புறநகர் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், தம்மம்பட்டி , கரியகோவில், வீரகனூர், நத்தக்கரை ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வயல்வெளிகளில் தண்ணீர் காடாக காட்சி அளித்தது.
கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், எடப்பாடி, சங்ககிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை கொட்டியது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
தலைவாசல் பகுதியில் நேற்று மதியம் மழை பெய்த நிலையில் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதால் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று காலை முதலே மேகங்கள் சூழ்ந்து கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் நிலவியது. மதியத்திற்கு மேல் மழை பெய்ததால் அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்குள்ள முக்கிய பகுதிகளை சுற்றி பார்த்தமுடன் குதூகலம் அடைந்தனர்.
5 அடி தூரத்தில் இருப்பவர்கள் கூட தெரியாததால் ஏற்காடு மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே ஊர்ந்து சென்றனர். மழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக நத்தக்கரையில் 67 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 9.8, ஏற்காடு 14.4, வாழப்பாடி 20, ஆனைமடுவு 22, ஆத்தூர் 36, கெங்கவல்லி 26, தம்மம்பட்டி 33, ஏத்தாப்பூர் 8, கரியகோவில் 47, வீரகனூர் 43, சங்ககிரி 13, எடப்பாடி 2, மேட்டூர் 5.4, ஓமலூர் 5.5, டேனீஸ்பேட்டை 10.5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 362.7 மி.மீ. மழை கொட்டியது.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகரம், வெண்ணந்தூர், நாமகிரி பேட்டை, குமாரபாளையம், மங்களபுரம், புதுச்சத்திரம், சேந்தமங்கலம் திருச்செங்கோடு, கொல்லி மலை, பரமத்திவேலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக கொல்லிமலையில் 30 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. குமாரபாளையம் மற்றும் மங்களபுரத்தில் 22.6, மோகனூர் 2, நாமக்கல் 15, பரமத்திவேலூர் 4, புதுச்சத்திரம் 22, ராசிபுரம் 21.8, சேந்தமங்கலம் 18, கலெக்டர் அலுவலகம் 12.5, என மாவட்டம் முழுவதும் 191.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- அதிகபட்சமாக தஞ்சையில் 95 டிகிரி வெப்பம் பதிவானது.
- சென்னையில் நேற்று மிதமான மழை பெய்தது.
கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வெயிலுக்கு இதமாக தமிழ்நாட்டில் நேற்று அனேக இடங்களில் பரவலாக மழை பெய்தது. தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பொழிந்தது.
அதிலும் குறிப்பாக டெல்டா, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பதிவானது. இதுதவிர சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்தது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சில இடங்களில் 100 டிகிரியை தாண்டியும், பல இடங்களில் 100 டிகிரியை நெருங்கியும் வெப்பம் பதிவானது. நேற்று பெய்த மழையால் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது. அதிகபட்சமாக தஞ்சையில் 95 டிகிரி வெப்பம் பதிவானது.
சென்னையில் நேற்று மிதமான மழை பெய்தது. காலையில் சூரியன் தென்பட்டாலும், சற்று நேரத்தில் மேகங்கள் கூடி மழை பெய்யத் தொடங்கியது. ஓரிரு இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் மழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவாலங்காட்டில் 2.4, சோழவரத்தில் 1.4, பூண்டியில் 1.5 செ,மீ. மழை பதிவாகி உள்ளது.
- சென்னையில் காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
- நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பலத்த மழை.
சென்னையில் அதிகாலை முதலே கருமேகம் சூழ்ந்து இருந்தது. இதனால் மழை பெய்வதற்கான அறிகுறி இருந்து வந்தது.
மேலும், சென்னையில் இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் வடபழனி, அடையாறு, மெரினா, மயிலாப்பூர், மணலி, திருவொற்றியூர், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.
நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் அறிவித்த நிலையில் சென்னையில் மழை பெய்து வருகிறது.
- மாம்பழத்துறையில் 19.6 மி.மீ. பதிவு
- பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வருகை
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த இரண்டு நாட் களாக மழை சற்று குறைந்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் பேச்சிபாறை அணை பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் நேற்று பேச்சிப்பாறை, சிற்றார், கன்னிமார், மாம்பழத்து றையாறு, ஆணைக்கிடங்கு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது.
மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மாம்பழத்து றையாறில் அதிகபட்சமாக 19.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பேச்சிபாறை பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் வெள்ள அபாய எச்சரிக்கை அளவைவிட கூடுதலாக உள்ளதையடுத்து பரளி ஆறு குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சிற்றார் -1, சிற்றார் -2 அணைகளின் நீர்மட்டமும் 12 அடியை கடந்துள்ளதையடுத்து வெள்ள அபாய எச்ச ரிக்கை தொடர்ந்து விடப் பட்டு வருகிறது.ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகி றார்கள். அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் கள்.
பேச்சிப்பாறை அணை யில் இருந்து நேற்று முதல் மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.இன்று காலையிலும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பரளியாறு, குழித்துறை ஆறு,கோதையாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் கொட்டுவதால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்தும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 43.14 அடியாக உள்ளது. அணைக்கு 924 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து மதகுகள் வழியாக 327 கன அடி தண்ணீரும் உபரிநீராக 1073 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வரு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.19 அடியாக உள்ளது. அணைக்கு 639 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 12.23 அடியாக வும், சிற்றார்- 2 அணை நீர்மட்டம் 12.33 அடியாக வும், பொய்கை அணை நீர்மட்டம் 16.10 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.30 அடியாகவும் உள்ளது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்ப டும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.40 அடியாக உள்ளது.