என் மலர்
நீங்கள் தேடியது "flood"
- வெள்ளத்தில் சிக்கி 11 ஆயிரம் பேர் வரை பலியாகிவிட்டனர்.
- அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்ததாக கூறி 8 பேரும் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு சட்ட மந்திரி தெரிவித்துள்ளார்.
டொர்னா:
லிபியா நாட்டில் சமீபத்தில் புயல் , மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டெர்னாவில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த 2 அணைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி 11 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர்.
இந்த நிலையில் இந்த 2 அணைகள் உடைந்தது தொடர்பாக நீர் வளத்துறையை சேர்ந்த 8 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 7 பேர் முன்னாள் அதிகாரிகள். ஒருவர் தற்போது பணியாற்றி வருகிறார். இவர்களின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்ததாக கூறி 8 பேரும் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு சட்ட மந்திரி தெரிவித்துள்ளார்.
- ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டித்தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம்.
- மேம்பாலம் கட்ட ஒரு கோடி ஒதுக்கீடு செய்தும் பாலம் கட்டும் பணி கிடப்பில் போட்டுள்ளனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் மீஞ்சி புட் மண்டலம், தும்மிடி புட் மலை கிராமத்தில் 550 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சாலை வசதி இல்லை.
இந்த கிராமத்தை சேர்ந்த சிறுமி பானு (வயது 10). இவர் கடந்த 11-ந் தேதி உடல்நல குறைவால் இறந்தார்.
மலை கிராமத்தின் குறுக்கே செல்லும் ஆற்றைக் கடந்து சிறுமியின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வேண்டும். ஆனால் கடந்த 4 நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சிறுமியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் கிராம மக்கள் அவதி அடைந்தனர்.
3 நாட்களாக வீட்டிலேயே உடலை வைத்திருந்தனர். நேற்று ஓரளவு ஆற்றில் வெள்ளம் குறைந்தது. சிறுமின் உடலை சுமந்து சென்று ஆற்று வெள்ளத்தை கடந்தனர். 3 நாட்களுக்கு பிறகு சிறுமி உடலை அடக்கம் செய்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் :-
தும்முடி புட்-லட்சுமிபுரம் இடையே செல்லும் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டித்தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம்.
கடந்த தேர்தலின்போது தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளவர் ஆட்சிக்கு வந்தவுடன் மேம்பாலம் கட்டி தருவதாக உறுதி அளித்தார் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேம்பாலம் கட்ட ஒரு கோடி ஒதுக்கீடு செய்தும் பாலம் கட்டும் பணி கிடப்பில் போட்டுள்ளனர்.
முறையான சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் நோயாளிகள், கர்ப்பிணி பெண்களை குறித்த நேரத்திற்கு மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல முடியாததால் உயிர் இழப்புக்கள் ஏற்படுகிறது என்றனர்.
- பலத்த மழை காரணமாக டெல்லியில் முக்கிய சாலைகளில் வெள்ளம் இடுப்பளவுக்கு இருந்தது.
- டெல்லியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல இடங்களில் நிவரண முகாம் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
புதுடெல்லி:
வடமாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியில் நேற்று இரவு முதல் தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய பெய்தது.
தொடர் மழை காரணமாக டெல்லியில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவிலும் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது.
பலத்த மழை காரணமாக டெல்லியில் முக்கிய சாலைகளில் வெள்ளம் இடுப்பளவுக்கு இருந்தது. இதனால் வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்தபடி சென்றன. பெரும்பாலான இடங்களில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
டெல்லியில் தொடர்ந்து மழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் யமுனை நதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
டெல்லியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல இடங்களில் நிவரண முகாம் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
- கூடலுார் தொரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் மூங்கில் மரம் விழுந்து வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- அவசர காலத்தில், 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், ஊட்டி, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அவ்வப்போது சாலைகளில் மரங்கள்; மூங்கில்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி-பர்சன்ஸ்வேலி சாலை, தீட்டுக்கல் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை மரம் விழுந்தது. கூடலுார் தொரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் மூங்கில் மரம் விழுந்து வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழக-கேரளா-கர்நாடக இடையே இயக்கப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் டிரைவர்கள், சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தீயணைப்பு துறையினர் வந்து, மரங்களை அறுத்து அகற்றிய பின், ஒரு மணி நேரத்துக்கு பின்பு போக்குவரத்து சீரானது. பந்தலுார் சுற்றுவட்டார பகுதியில் தொடரும் மழையால் கடும் மேக மூட்டம் நிலவுவதால், வாகனங்கள் 'மிஸ்ட் லைட்' பயன்படுத்தி இயக்கப்படுகின்றன.
மேலும், கூடலுாரில் உற்பத்தியாகும் பாண்டியார்-புன்னம்புழா ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றோர பகுதிகளுக்கு குளிக்கவும், துணி துவைக்கவும் மக்கள் செல்ல கூடாது; சிறுவர்களை ஆற்றோரத்துக்கு பெற்றோர் அனுப்ப கூடாது என வருவாய் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஊட்டி பூங்கா, படகு இல்லம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. கடும் குளிர் நிலவுவதால், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளூர் மக்கள் அவதிப்படுகின்றனர். மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி, தேவாலாவில் 55 மி.மீ. கூடலுாரில் 44 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா கூறுகையில், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாண்டியார்-புன்னம்புழா ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஆற்றில் குளிக்கவும், கடக்கவும் யாரும் செல்ல கூடாது. அவசர காலத்தில், 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.
- இந்திய விமானப் படையின் முயற்சிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- மணாலியில் மொபைல் நெட்வொர்க் இணைப்பு மீட்டமைக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளக்காடானது.
இதற்கிடையே, கடந்த 3 நாட்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என இமாச்சல பிரதேசம் மிக மோசமாக பாதிப்பு அடைந்துள்ளது. 1,300 சாலைகள் சேதமடைந்துள்ளன. 40 பாலங்கள் சிதைந்துள்ளன. 79 வீடுகள் முற்றிலுமாக தரைமட்டமாகின. 333 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. வெள்ள, நிச்சரிவில் சிக்கி இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக, சுற்றுலாத் தளங்களில் பயணிகள் சிக்கி வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், பயணிகளை மீட்பதற்கான உரிய நடவடிக்கையை இமாச்சல் அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கித் தவித்த 60,000 சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று காலை 9 மணி வரை, மொத்தம் 60,000 சுற்றுலாப் பயணிகள் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நான் தற்போது குலுவில் கடந்த மூன்று நாட்களாகத் தங்கி, நடந்து வரும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறேன்.
சாலை சேதம் காரணமாக கசோல் மற்றும் தீர்த்தன் பள்ளத்தாக்கில் சுமார் 10,000 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
சாலை சேதமடைந்த இடத்திலிருந்து டிரான்ஸ்- ஷிப்மென்ட், ஜீப்கள் மற்றும் பேருந்துகள் மூலம் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை எளிதாக்கி உள்ளோம்.
தற்போதைய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் இந்திய விமானப் படையின் முயற்சிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீவிர மற்றும் சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், அவர்கள் ஏழு நபர்களை காப்பாற்றுவதன் மூலம் விதிவிலக்கான திறமையை வெளிப்படுத்தினர்.
மணாலியில் மொபைல் நெட்வொர்க் இணைப்பு மீட்டமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- யமுனை ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து, அருகிலுள்ள கிராமங்களில் வெள்ள அபாயம் உள்ளதால் மக்கள் மீட்பு.
- கிராம பகுதிக்கு சென்று மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற உத்தரவிட்டனர்.
டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், யமுனை ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. யமுனை ஆற்றின் நீர் வெளியேறி சாலைகளுக்கு வரும் புகைப்படங்களும் வெளியேறி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல், அரியானா மாநிலம் பரீதாபாத்திலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அபாயத்தைத் தொடர்ந்து யமுனை ஆற்றங்கரைக்கு அருகில் வசிக்கும் குறைந்தது 90 பேரை காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெளியேற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அமிபூர் கிராமத்தில் வசிப்பவர்கள் மற்றும் அங்குள்ள பண்ணைகளில் வேலை செய்த தொழிலாளர்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
யமுனை ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து, அருகிலுள்ள கிராமங்களில் வெள்ள அபாயம் உள்ளதால், இந்த மக்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வருவதற்காக, பரிதாபாத் காவல்துறையுடன் இணைந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மீட்புப் பணியில் ஈடுபட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் சுபே சிங் கூறினார்.
மேலும், பரிதாபாத் துணை கமிஷனர் விக்ரம் சிங் மற்றும் துணை போலீஸ் கமிஷனர் (மத்திய) பூஜா வசிஷ்ட், மாவட்ட அதிகாரிகளுடன் சேர்ந்து, கிராம பகுதிக்கு சென்று மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற உத்தரவிட்டனர்.
- பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை குறையவில்லை.
- கவியருவியில் வெள்ளத்தின் வேகமும் தண்ணீரின் அளவும் அதிகரித்து வருகிறது.
வால்பாறை:
கோவை ஆழியாறு அடுத்த வில்லோணி வனப்பகுதியில் கவியருவி நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு சோத்துப்பாறை ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் அருவியாக கொட்டுகிறது.
தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சோத்துப்பாறை ஆற்றில் பெரியஅளவில் தண்ணீர் வரத்து இல்லை. எனவே கடந்த 6 மாதங்களாக கவியருவி வறண்டு காணப்பட்டது.
கோவையில் தற்போது பொள்ளாச்சி, வால்பாறை, ஆழியாறு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. எனவே கவியருவியில் மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. எனவே சுற்றுலாப்பயணிகள் திரளாக வந்திருந்து, கவியருவியில் குளித்து மகிழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் கவியருவில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே அங்கு பாதுகாப்பு கம்பியையும் தாண்டி வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
எனவே வனத்துறையினர் கடந்த 4 நாட்களாக கவியருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதித்து உள்ளனர். பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை குறையவில்லை.
இதற்கிடையே கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலாப்பயணிகள் நேற்று குளிப்பதற்காக கவியருவிக்கு சென்றிருந்தனர். ஆனால் அருவியில் தண்ணீர் வரத்து இயல்பு நிலைக்கு வரவில்லை.
எனவே சுற்றுலாப்பயணிகளின் நலனை கருத்தில்கொண்டு வனத்துறையினர் எவரையும் அருவியில் குளிக்க அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு குளிக்க ஆர்வமாக வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
வால்பாறை கவியருவில் குளிப்பதற்காக வனத்துறையின் தடை, 6-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையளவு குறையவில்லை. கவியருவியில் வெள்ளத்தின் வேகமும் தண்ணீரின் அளவும் அதிகரித்து வருகிறது.
எனவே சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கவியருவியில் தண்ணீரின் அளவு குறைந்ததும், அங்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிப்பதற்காக அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்து உள்ளனர்.
- இடுக்கி மாவட்டத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
- தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது.
பல இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. மேலும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் ஊருக்குள் தண்ணீர் புகுந்திருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இடுக்கி மாவட்டத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதேபோல் இடுக்கி, கோழிக்கோடு, பத்தனம் திட்டா, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
சபரிமலை வனப்பகுதியில் கனமழை பெய்வதால் பம்பை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதே போல் மாநிலம் முழுவதும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அங்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் ஆயிரகணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தங்கு தடையின்றி வழங்கப்படுகிறது.
கனமழை காரணமாக கேரளாவில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். ரூ.8 கோடிக்கும் மேல் பயிர்கள் சேதம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
கனமழைக்கு இதுவரை 150-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து உள்ளன. அவற்றை சீரமைக்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவில் இன்றும் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அங்கு மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர் கோடு ஆகிய 5 மாவட்டங்களில் 6 முதல் 11 சென்டிமீட்டர் வரை இன்று மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா, கோட்டையம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
- வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
- பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சண்டிகர் :
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று அரியானாவில் கனமழை வெளுத்து வாங்கியது. காலை முதலே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அந்த வகையில் பஞ்ச்குலா மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த பேய் மழையால் அங்குள்ள காக்கர் ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்ந்தது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் ஆற்றங்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று அடித்து செல்லப்பட்டது.
காரில் கோவிலுக்கு வந்த பெண், கோவிலில் இருந்து திரும்பி வந்து, காரில் அமர்ந்திருந்தபோது,திடீர் வெள்ளம் வந்து காரை இழுத்து சென்றது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
எனினும் மீட்பு குழுவினர் வருவதற்குள் கார் காட்டாற்று வெள்ளத்தின் நடுவே சிக்கிக்கொண்டது. இதையடுத்து, வெள்ளத்தில் சிக்கிய காரில் ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை கயிறு கட்டி மீட்க உள்ளூர் மக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி அங்கிருந்த இளைஞர்கள் சிலர் ஒரு கம்பத்தில் கயிற்றை கட்டி, அதை பிடித்து மெல்ல மெல்ல நகர்ந்து, பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தின் நடுவே சிக்கிய காரை அடைந்தனர். அதன் பின்னர் நீண்ட போராட்டத்துக்கு பின் காரில் இருந்த பெண்ணை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக அந்த பெண் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பெண்ணை கயிறு கட்டி பத்திரமாக மீட்டதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
- பேரிடர் குழுவால் மீட்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேரிடர் குழுவால் மீட்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பன்னு, டேரா, கரக் மற்றும் லக்கி மார்வார்ட் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதில் சுமார் 70 வீடுகள் இடிந்து விழுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.