என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சலிங்க அருவி"

    • கடந்த 24-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
    • கடந்த 10 நாட்களாக அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமணலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து 750 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.

    அருவிக்கு வனப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகள், ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் கடந்த 24-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து வனப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்பு அவ்வப்போது மழை பெய்து வந்ததால் அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது.

    கடந்த 10 நாட்களாக அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தண்ணீரின் சீற்றம் குறைந்து அருவி இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்தோடு அருவியில் குளித்து மகிழ்கின்றனர். 

    • தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • அமாவாசை தினத்தையொட்டி நேற்று கோவிலுக்கு திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது .இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும் புதிய ஆயகட்டுப்பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு 1590 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒரே நாளில் நீர்மட்டம் 6 அடி உயர்ந்து தற்போது 51.25 அடியாக உள்ளது. 18 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    உடுமலை திருமூர்த்தி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்புகளை தாண்டி விழுந்த வெள்ளமானது அடிவாரப்பகுதியில் உள்ள கன்னிமார் கோவில், மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தபடி செல்கிறது.

    அமாவாசை தினத்தையொட்டி நேற்று கோவிலுக்கு திரளான பக்தர்கள் வந்திருந்தனர். ஆனால் அவர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இன்று காலை தண்ணீர் சற்று குறைந்ததால் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • நேற்று முன்தினம் அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் திடீரென மழை பெய்தது.
    • பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகளுடன் பெற்றோர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கிருந்து சுமார் 750 மீட்டர் உயரத்தில் உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.

    அருவிக்கு வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சிற்றோடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது. இதில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக அருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டது. நேற்று காலை அருவி இயல்பு நிலைக்கு திரும்பியது.

    அதைத்தொடர்ந்து சுற்றுலாப்பயணிகள் அதில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தற்போது அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகளுடன் பெற்றோர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    • கோடையிலும் பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலையில் குவிந்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க சுவாமி கோவில், பஞ்சலிங்க அருவி மற்றும் மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    தற்போது கோடை வெயிலின் தாக்கம் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பஞ்சலிங்க அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோடையிலும் பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலையில் குவிந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், நீண்ட வரிசையில் காத்திருந்து, அருவியில் குளித்து வருகின்றனர்.

    • வடமேற்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி கடந்த வாரம் பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் பலத்த மழை பெய்தது.
    • வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இந்த அருவிக்கு மேல்குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகள் நீராதாரமாக உள்ளது.

    நீர்வழித்தடங்களில் உள்ள மூலிகைகள் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது அதில் தானாகவே கரைந்து விடுகிறது. இதனால் தண்ணீர் உடலின் மேல் விழும்போது உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதுடன் மன அழுத்தம் குறைந்து விடுகிறது. இதனால் அதில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

    இந்தநிலையில் வடமேற்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி கடந்த வாரம் பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. பாதுகாப்பற்ற சூழல் நிலவியதால் அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது.

    தற்போது சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சபரிமலை சீசன் என்பதால் ஐய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது.

    • அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்ததுடன் குடும்பத்தோடு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
    • குழந்தைகள் பெரியோர்கள் வெயிலின் தாக்கத்தால் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

    உடுமலை :

    ஆங்கில புத்தாண்டையொட்டி உடுமலை அமண லிங்கேஸ்வரர் கோவிலில் மும்மூர்த்திகள், விநாயகர், சுப்பிரமணியர், நவகிரகங்கள், சப்தகன்னியருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.அதில் கலந்து கொள்வதற்காக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கார், வேன்,பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்திமலைக்கு வருகை தந்தனர்.

    சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.பின்னர் அனைவரும் அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்ததுடன் குடும்பத்தோடு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.இதையடுத்து அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு மும்மூர்த்திகள் உள்ளிட்ட அனைத்து கடவுள்களையும் சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து அணைப் பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு அமர்ந்து ரசித்ததுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். இதனால் அணைப்பகுதி,பஞ்சலிங்க அருவி மற்றும் கோவில் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டமும் வாகன நெரிசலும் ஏற்பட்டது.அதை சீரமைப்பதற்கு போலீசார் முன்வராததால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளானார்கள்.

    மேலும் வாகன நெருக்கடி காரணமாக அரசு பஸ்களில் கோவிலுக்கு வருகை தந்த பொதுமக்கள் சுமார் இரண்டு கிலோமீட்டர் முன்பாக இறக்கி விடப்பட்டனர்.இதனால் குழந்தைகள் பெரியோர்கள் வெயிலின் தாக்கத்தால் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

    • திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தற்போது மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது.
    • அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் வருவார்கள்.

    உடுமலை:

    கடும் வெயில் காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந் து வருகின்றனர்.

    உடுலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவி, வண்ண மீன் காட்சியகம், நீச்சல்குளம், திருமூர்த்திமலை ஆகியவை உள்ளன. தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் வருவார்கள்.

    தற்போது கோடை துவங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. மேலும் 11,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வும் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து சுற்றுலா தலங்களை நோக்கி மக்கள் படையெடுக்க துவங்கி விட்டனர். குறிப்பாக அருவி, ஆறு, குளம் உள்ள பகுதிகளுக்கு அதிகளவில் செல்கின்றனர்.

    திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தற்போது மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. வெயிலுக்கு இதமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து அருவியில் குளிக்கின்றனர்.

    இதேபோல் அமராவதி ஆறு பகுதிக்கும் ஏராள மானோர் செல்கின்றனர். ஆற்றில் தற்போது தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு விட்டாலும் ஆங்காங்கே பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குமரலிங்கம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் தேங்கிய தண்ணீரில் உள்ளூர் மக்கள் நீராடி செல்கின்றனர்.  

    • அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக சுற்றுலா பயணிகள் நாள்தோறும் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.
    • நேற்று மதியம் அருவியின் நீராதாரங்களில் திடீரென சாரல் மழை பெய்தது.அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

    உடுமலை:

    உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது.உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை,கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு,பாரப்பட்டியாறு,குருமலைஆறு,கிழவிப்பட்டிஆறு, உப்புமண்ணபட்டிஆறு,பாலாறு,உழுவியாறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது. வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகளில் நீர்வரத்தை பெறுகிறது.

    வனப்பகுதியில் பல்வேறு பகுதியில் ஓடிவருகின்ற ஆறுகள் பஞ்சலிங்கங்களுக்கு அருகில் ஒன்று சேர்ந்து அருவியாக கொட்டுகிறது. அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.

    இந்த நிலையில் வடகிழக்கு பருவமழைக்கு பின்பு அருவியின் நீராதாரங்களில் மழை பெய்யவில்லை.ஆனாலும் ஓரளவுக்கு நீர்வரத்து இருந்து வந்தது.இதையடுத்து சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவிக்கு உற்சாகத்தோடு வந்து குளித்து மகிழ்ந்தனர். இந்த சூழலில் வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக அருவியின் நீராதாரங்களில் நீர்வரத்து குறைந்ததால் பஞ்சலிங்க அருவியிலும் நீர்வரத்து குறைந்தது.

    இந்த நிலையில் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த வாரம் திடீரென மழை பெய்தது.இதன் காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.அதைத் தொடர்ந்து கோடை விடுமுறையை கழிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்தோடு குடும்பம் குடும்பமாக அருவியில் குளித்து வந்தனர். இதனால் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கணிசமான அளவில் இருந்து வந்தது.இந்த சூழலில் நேற்று மதியம் அருவியின் நீராதாரங்களில் திடீரென சாரல் மழை பெய்தது.அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

    நேற்று பெய்த மழையால் அருவிக்கு சற்று நீர்வரத்து அதிகரித்து உள்ளது. குறைவான தண்ணீரில் குளித்து ஏமாற்றம் அடைந்த நிலையில் அருவியில் விழுகின்ற ஆக்ரோஷமான தண்ணீரில் குளித்து மகிழலாம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.எதிர்பார்த்த அளவு தண்ணீர் வராததால் தடை விலக்கி கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது
    • இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது.இம்மலை மேல் வனப்பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவி பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இந்து அறநிலையத் துறையின் கீழ் அமணலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது.ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பஞ்சலிங்க அருவியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை.கழிப்பிடம், பெண்க ளுக்கான உடை மாற்றும் அறை மற்றும் அடிவாரத்தில் வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.கடந்த 2008ல் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 13 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.அப்போதைய தி.மு.க., அரசு சார்பில் அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள உறுதியளிக்கப்பட்டது.பஞ்சலிங்க அருவி மற்றும் அடிவாரத்திலுள்ள கோவிலைச்சுற்றிலும் 50 ஏக்கர் நிலத்தை இந்து அறநிலையத் துறைக்கு ஒப்படைக்கவும் கோரிக்கை எழுந்தது. ஆனால் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

    கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், திருமூர்த்திமலை மற்றும் பஞ்சலிங்க அருவி பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த போதிய இடமில்லை. பல முறை கருத்துரு அனுப்பியும், வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பல்வேறு திட்ட பணிகள் முடங்கியுள்ளது என்றனர்.தமிழக அரசு வனத்துறை இடத்தை இந்து அறநிலையத் துறைக்கு ஒதுக்கீடு செய்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. 

    • திருமூர்த்திமலையில் மலைமேல் 960 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்கம் அருவி உள்ளது.
    • மூலிகை குணங்களுடன் விழும் பஞ்சலிங்க அருவியில், நீர்வரத்து திருப்தியாக உள்ளது

    உடுமலை :

    உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில் மலைமேல் 960 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்கம் அருவி உள்ளது. மேலும் மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஓரிடத்தில் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை, வண்ண மீன் பூங்கா, நீச்சல் குளம் என ஆன்மிகம் மற்றும் சுற்றுலாத்தலமாக அப்பகுதி உள்ளது.

    பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், திருமூர்த்திமலையில் சீசன் துவங்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில், அவ்வப்போது மழை பெய்து வருவதால் மலைப்பகுதிகளிலிருந்து மூலிகை குணங்களுடன் விழும் பஞ்சலிங்க அருவியில், நீர்வரத்து திருப்தியாக உள்ளது. சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியாக விழும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.நடப்பு ஆண்டு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் திருமூர்த்திமலையில் சீசன் களை கட்டி உள்ளது.

    • தினமும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
    • சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியாக விழும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில் மலைமேல் 960 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. மேலும் மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஓரிடத்தில் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை, வண்ண மீன் பூங்கா, நீச்சல் குளம் உள்ளது. ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத்தலமாக உள்ள இப்பகுதிக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் பஞ்சலிங்க அருவியில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், அவ்வப்போது மழை பெய்து வருவதால் மலைப்பகுதிகளில் இருந்து மூலிகை குணங்களுடன் விழும் அருவியில் நீர்வரத்து திருப்தியாக உள்ளது. சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியாக விழும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். நடப்பு ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் திருமூர்த்திமலையில் சீசன் களைகட்டி உள்ளது. 

    • வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து கடும் வறட்சி நிலவி வருகிறது.
    • வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் அச்சத்துடனே சென்று வரவேண்டி உள்ளது.

    உடுமலை:

    உடுமலையின் சுற்றுப்புற கிராமங்களில் கோவில் விழாக்களும், கும்பாபிஷேகமும் பரவலாக நடைபெற்று வருகிறது. இதற்காக கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முதல் நிகழ்ச்சியாக திருமூர்த்திமலைக்கு தீர்த்தம் எடுக்க சொல்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கோடை காலம் முடிவடைந்தும் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை.

    மாறாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து கடும் வறட்சி நிலவி வருகிறது.இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து குறைந்து விட்டது.இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள், பொதுமக்கள் உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதி உள்ள சின்னாற்றுக்கு தீர்த்தம் எடுக்க செல்கின்றனர்.

    அதன் பின்பு குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்து கட்டளை மாரியம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்து பின்பு ஊர்வலமாக கிராமங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர்.ஆனால் கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு செல்வதற்கு ஞாயிறு,செவ்வாய், வியாழக்கிழமைகளில் மட்டுமே அனுமதி வழங்கப் படுகிறது.இதனால் அனுமதிக்கப்பட்ட நாட்களில் மட்டுமே பக்தர்களால் தீர்த்தம் எடுக்க முடிகிறது. பயண நேரம், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் அச்சத்துடனே சென்று வரவேண்டி உள்ளது.

    ஆனால் பஞ்சலிங்க அருவிக்கு செல்வதற்கு இதுபோன்று கட்டுப்பாடுகள் கிடையாது.எப்போது வேண்டுமானாலும் சென்று தீர்த்தம் எடுத்துக் கொண்டு வரலாம்.இதனால் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து அருவியில் நீர்வரத்து ஏற்பட்டால் விழாக்கள் மேலும் சிறப்பு அடையும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

    ×