search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flooding"

    • தாமிரபரணி ஆற்றில் சுமார் 1½ லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த மாதம் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் சுமார் 1½ லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. மேலும் தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருருப்பதாவது:-

    கனமழை எச்சரிக்கை உள்ளதாலும், நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் மழையாலும், தாமிரபரணி ஆற்றில் அதிகபடியான மழைநீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், உப்பாற்று ஓடை கரையோர பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குளம் உடைந்து வெள்ளநீர் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்ததால் 500 ஏக்கர் நிலங்கள் மூழ்கியது.
    • வலசை கிராமத்தில் 15 வருடங்களுக்கு பின்னர் குளம் நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தத நிலையில் நெல்லையை அடுத்துள்ள மூவிருந்தாளி கிராமத்தில் உள்ள குளம் நிறைந்து கரை உடைந்ததால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதையடுத்து வீடுகளில் உள்ள பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே குளம் உடைந்து வெள்ளநீர் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்ததால் 500 ஏக்கர் நிலங்கள் மூழ்கியது.

    தொடர்ந்து அங்குள்ள பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் குளத்தின் கரையில் மணல் மூடைகள் வைத்து அடைக்கப்பட்டது.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. அப்பகுதியில் மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது.

    மழையால் சங்கரன்கோவில் டவுன் பகுதியில் ஒரு வீடும், தாலுகா பகுதியில் 2 வீடுகள் என மொத்தம் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. ஓட்டு வீடுகள் என்பதால் தொடர்ந்து பெய்த மழையால் சுவர் நனைந்து இடிந்துள்ளது. ஏற்கனவே வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றதால் இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    அதேபோல் அங்குள்ள அய்யாபுரம் சாய மலை வலசை கிராமத்தில் 15 வருடங்களுக்கு பின்னர் குளம் நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் தாலுகா பகுதிகளில் மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர்.

    தற்போது பெய்து வரும் மழையால் அங்கு விவசாய பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • கண்மாய்கள் நிரம்புகின்றன.

    வாடிப்பட்டி

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. இதனால் வாடிப்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகரித்ததால் நிரம்பத் தொடங்கின. வாடிப்பட்டி அருகே குட்லா டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தாடக நாச்சி புரத்தில் மீனாம்மாள் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு குட்லாடம்பட்டி தாடக நாச்சி அருவியில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஓடை வழியாக வந்து நிரம்பும்.

    அங்கு தேக்கி வைக்கப் பட்ட தண்ணீர் பின்னர் மதகுகள் வழியாக விளை நிலங்களுக்கு நீர் பாசனத் திற்கு பயன்படுத்தப்படும். கண்மாய் நிரம்பிய பின் மாறுகால் ஏற்பட்டால் ஓடை வழியாக அப்புசெட்டி கண்மாய்க்கு சென்று அங்கு நீர் நிரப்பப்பட்டு அதன் பின் நாகர் குளம் கண்மாய், செம்மினிபட்டி புதுக்குளம், கொட்டமடக்கி கண்மாய்கள் நிரம்பும். அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் தாதம்பட்டி கண்மாய் சென்று அங்கிருந்து பெரியார் பாசன கால்வா யில் கிழக்கு பகுதியில் உள்ள துருத்தி ஓடை வழியாக சோழவந்தான் வடகரை கண்மாய்க்கு சென்று சேரும்.

    இந்த நிலையில் குட்லாடம் பட்டி மீனாம்மாள் கண்மாய் கரையில் மதகின் அருகில் அரிப்பு ஏற்பட தொடங் கியது. அது கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து கரையை அரித்து சரிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.

    இதனால் அந்த பகுதியில் உள்ள தென்னந் தோப்பு களில் தண்ணீர் சூழ்ந்தது. மேலும் அங்குள்ள ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தடுப்ப ணைகள் நிரம்பி அப்பு செட்டி கண்மாய்க்கு தண்ணீர் சென்றது. பின்னர் நாகர்குளம் கண்மாய் நிரம்பி செம்மினிபட்டி புதுக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் சென்றது.

    இதுகுறித்த தகவலறிந்த கச்சைகட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆலயமணி, குட்லாம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரவன், கச்சைகட்டி கிராம நிர்வாக அதிகாரி ஜெகதீசன், கிராம உதவியாளர்கள் ஜெயக்குமார், பாலு அந்தப் பகுதியை பார்வையிட்டனர். பின்னர் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் கண்மாய், குளங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
    • ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    விருதுநகர்

    வானம் பார்த்த பூமியான விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மழைபொழிவு குறைந்ததால் வறட்சி நிலவியது.

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீவில்லி புத்தூர், ராஜ பாளையம், வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழையை நம்பி விவசாயிகள் மா, பலா, வாழை மற்றும் ஊடு பயிர் களை நூற்றுக் கணக்கான ஏக்கரில் பயிரிட்ட னர்.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி யவுடன் விருதுநகரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைப் பொழிவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மழை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது.இந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தென் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் மாலை நேரங்களில் மழை பெய்தது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அங்குள்ள அய்யனார் ஆறு, ராக்காச்சி அம்மன் கோவில் ஆறு, செண்பகத்தோப்பு மீன் வெட்டிப்பாறை நீர்வீழ்ச்சி, பேயனாறு, கான்சாபுரம் அத்திக்கோவில் ஆறுகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.

    நேற்றும், இன்று அதி காலையும் மலைப்பகுதி களில் அதிக மழை பொழிவு இருந்தது. இதன் காரணமாக மேற்கண்ட ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடியது. இதனால் அங்குள்ள கண்மாய், குளங் களில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.இதேபோல் வத்திரா யிருப்பு, சதுரகிரி மலை பகுதி யிலும் கனமழை பெய்தது. இதனால் முக்கிய நீராதாரமாக விளங்கும் பிளவக்கல் அணையில் தண்ணீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. ஒரே நாளில் 3 அடி நீர்மட்டம் உயர்ந்த நிலையில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. 47.56 அடி உயரம் கொண்ட அணையின் தற்போதைய நீர்மட்டம் 28 அடியாகும்.

    திடீரென பெய்து வரும் மழையால் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக விவசாய பணிகள் தொய்வுடன் நடந்த வந்த நிலையில் மழை காரணமாக விறுவிறுப்படைந்துள்ளது.

    • விருதுநகர் அருகே திருச்சுழி ஓடையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருச்சுழி

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக தென் மாவட் டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று மாலை முதல் விருதுநகர் மாவட்டத்தில் மழை கொட்டி தீர்த்தது.

    சில இடங்களில் விடிய, விடிய மழை பெய்தது. திருச்சுழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை பெய்தது. இதன் காரணமாக மறவர் பெருங்குடி ஓடை யில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் கடக்க முடியாமல் கடும் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். விருதுநகர் நகர், காரியாபட்டி, சிவகாசி, சாத்தூர், வத்திராயிருப்பு போன்ற பகுதிகளில் மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாய பணிகள் மும்முரமடைந்துள்து.

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருச்சுழி-81, காரியா பட்டி-13.2, ஸ்ரீவில்லி புத்தூர்-3.3, விருதுநகர்-91, சாத்தூர்-15.2, சிவகாசி-28.4, பிளவக்கல் அணை-22.6, வத்திராயிருப்பு-31.2, கோவிலாங்குளம்-58.3, வெம்பக்கோட்டை-14.2, அருப்புக்கோட்டை-40.

    மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 398.4 மில்லி மீட்டர் ஆகும்.

    • கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளன.
    • ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரியபாளையம் அருகே அஞ்சாத்தம்மன் கோவில்-புதுப்பாளையம் தரை பாலம் நீரில் மூழ்கியது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து முழுகொள்ளவை நெருங்கியது.

    இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூண்டி ஏரியில் இருந்து முதலில் 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.

    இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு நீர்வரத்து 3080 கனஅடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 35 அடியில் 34.25 அடிக்கு தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 3210 கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    அதிக அளவிலான உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளன.

    இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மெய்யூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. எனவே,மெய்யூரில் இருந்து திருவள்ளூர் நோக்கி செல்லும் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு சீத்தஞ்சேரி வழியாக செல்கின்றன.

    மேலும் தரைப்பாலம் அருகே புதியதாக கட்டி வரும் மேம்பாலம் தற்காலிக போக்குவரத்துக்கு பயன்படுத்திக்கொள்ள நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அனுமதித்தனர். இதனால் இந்த மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று வருகிறது.

    இதேபோல் ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரியபாளையம் அருகே அஞ்சாத்தம்மன் கோவில்-புதுப்பாளையம் தரை பாலம் நீரில் மூழ்கியது.சுமார் ஒரு அடிக்கும் மேல் இந்த தரைப்பாலத்தின் மீது தண்ணீர் பாய்ந்து செல்கிறது.ஆபத்தை உணராமல் அதில் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

    இதேபோல் ஆரணி-மங்கலம் இடையே ஆரணி ஆற்றில் அமைக்கப்பட்ட தற்காலிக நடைபாதை நீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த பகுதிகளில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தொடர்மழை காரணமாக பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • காலை நிலவரப்படி நீர்வரத்து 11 ஆயிரத்து 290 கன அடியாக உயர்ந்து உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    தொடர்மழை காரணமாக பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரி முழு கொள்ளவை எட்டி உள்ளது. மொத்த உயரமான 35 அடியில் தற்போது 34.43 அடி வரை தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    இந்த நிலையில் பலத்த மழையால் ஆந்திர மாநிலம் அம்மப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், கிருஷ்ணா கால்வாய் மூலம் வரும் 450 கனஅடி நீர் மற்றும் மழை நீர் ஆகியவை சேர்ந்து பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 11 ஆயிரத்து 290 கன அடியாக உயர்ந்து உள்ளது.

    இதற்கிடையே பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளதால் இன்று காலை உபரி நீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    இதையடுத்து கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் பூண்டியை சுற்றி உள்ள நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்றாம் பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, ஏறையூர், பீமன் தோப்பு, கொரக்கதண்டலம், சோமதேவம்பட்டு, மெய்யூர், தாமரைப்பாக்கம் திருக்கண்டலம் ஆத்தூர், பாண்டிக்காவனூர், ஜெக நாதபுரம், புதுக்குப்பம், கன்னிபாளையம், வன்னி பக்கம், மடியூர், சீமாவரம், வெள்ளி வாயில்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், காரனோடை, மீஞ்சூர், எண்ணூர் உள்ளிட்ட 50 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லு மாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி ஆகும். இதில் தற்போது 2,960 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளதால் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தபடி உள்ளனர்.

    இதற்கிடையே வெள்ளப்பெருக்கு காரணமாக பூண்டி ஏரி நீர்தேக்கத்தின் அருகே கொசஸ்தலை ஆற்றில் குறுக்கே செல்லும் தரைப்பாலம் மூழ்கியது.இதனால் திருவள்ளூரில் இருந்து கிருஷ்ணாபுரம், ரங்காபுரம், நம்பாக்கம், வல்லாத்துக்கோட்டை, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை, ஆரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், ஏரி, ஆறுகளில் யாரும் குளிக்க வேண்டாம் என்றும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் திருச்சி காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
    • இதில் 69 ஆயிரம் கனஅடி நீர் காவிரியிலும் 500 கன அடி நீர் பாசன வாய்க்கால்களிலும் மீதமுள்ள ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 500 கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றிலும் திறந்து விடப்படுகிறது

    திருச்சி:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று காலை வினாடிக்கு சுமார் 2 லட்சம் கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு வந்தது.

    இதைத்தொடர்ந்து அணையில் இருந்து அதே அளவு தண்ணீர் உபரி நீராக காவிரியில் வெளியேற்றப்படுகிறது. அங்கு திறக்கப்படும் தண்ணீருடன் பவானிசாகர் மற்றும் அமராவதி ஆறுகளில் வரும் தண்ணீரும் ஈரோடு மற்றும் கரூரில் காவிரியில் ஐக்கியமாகி மாயனூர் கதவனை வாயிலாக முக்கொம்பு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் முக்கொம்பு மேலணைக்கு அதிக வசமாக ஒரு லட்சத்து 37 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. பின்னர் நள்ளிரவு படிப்படியாக உயர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 92 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதில் 69 ஆயிரம் கனஅடி நீர் காவிரியிலும் 500 கன அடி நீர் பாசன வாய்க்கால்களிலும் மீதமுள்ள ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 500 கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றிலும் திறந்து விடப்படுகிறது. சுமார் இரண்டு லட்சம் கனஅடி நீர் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் செல்வதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    மேலும் திருச்சியில் இருந்து கல்லணைக்கு செல்லும் உத்தமர்சீலி தரைப்பாலம் இன்று காலை மூழ்கியது.

    இருந்தபோதிலும் ஆபத்தை உணராமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தண்ணீரிலேயே வாகனங்களை இயக்கி செல்கின்றனர்.

    இதற்கிடையே காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்கு யாரும் செல்லாதபடி தடுக்க போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் நாளை (18-ந்தேதி) ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு புனித நீராடவும், தர்ப்பணம் கொடுக்கவும் யாரும் அம்மா மண்டபத்திற்கு வரவேண்டாம் என்று மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.

    கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

    இரவில் முக்கொம்பு அணைக்கு சென்று பார்வையிட்ட திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கினார்.




    • லாடபுரம் ஆனைகட்டி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
    • பச்சை மலைத்தொடரில் பலத்த மழை பெய்தது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் நகரில் நேற்று மாலை 6 மணி அளவில் மழை பெய்து தொடங்கியது சிறிது நேரம் பரவலான மழை பெய்தது. பெரம்பலூர் சுற்று வட்டார பகுதி கிராமங்களிலும் நேற்று மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கு எல்லையாக திகழும் பச்சை மலை தொடரில் நேற்று மதியம் கனமழை பெய்தது. இதனால் லாடபுரம் அருகே பச்சை மலை உச்சியில் செக்காத்தி பாறையில் அமைந்துள்ள ஆனைகட்டி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆனைகட்டி அருவி நீர் வெளியேறும் வாய்க்காலை ஒட்டி கரையோர பகுதிகளில்அமைந்துள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நேற்று பெய்த கன மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை விவசாயிகள், கால்நடைகளை மேய்க்கும் தொழிலாளர்கள் மற்றும் லாடபுரம் கிராம மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஆனைகட்டி அருவியில் ஒரே நாளில் இதுபோன்று வெள்ளம் கரை புரண்டு ஓடியதாக கூறி வியப்படைந்தனர்.

    மேலும் பச்சை மலையில் லாடபுரம் அருகே உள்ள மயிலுற்று அருவியிலும் தண்ணீர் வருவது அதிகரித்துள்ளது. பச்சைமலை தொடரில் இதுபோன்று வெள்ளப்பெருக்கு மேலும் சில நாட்களுக்கு தொடர்ந்தால் லாடபுரம் அம்மாபாளையம், ஈச்சம்பட்டி, குரும்பலூர் மற்றும் பாளையம் செஞ்சேரி, அரணாரை, நீலி அம்மன் ஏரி, பெரம்பலூரில் உள்ள 2, துறைமங்கலம் பெரிய ஏரி மற்றும் கவுள்பாளையம் ஏரி உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் நிரம்பி விடும் என்பதால் பெரம்பலூர் பகுதி விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பச்சை மலைத் தொடரில் மழை தொடர வேண்டும் என்று ஆர்வத்துடன் தெரிவித்தனர். 

    • காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு உபரி நீர் அதிக அளவில் வந்து கொண்டுள்ளது.
    • காவிரி வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடாமல் இருக்க, தாழ்வான பகுதிகளில் பொக்லின் மூலம் மண் கொட்டி மேடான பகுதியாக மாற்றும் பணியை நகராட்சி ஊழியர்கள் துவங்கியுள்ளனர்.

    குமாரபாளையம்:

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு உபரி நீர் அதிக அளவில் வந்து கொண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களை மேடான பகுதிக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவர்களை பாதுகாக்க, பாதுகாப்பு மையங்களும் தாயார் நிலையில் உள்ளன.

    இந்நிலையில் மணிமேகலை தெரு, கலைமகள் தெரு உள்ளிட்ட கரையோர பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மழைக் காலங்களில் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, இந்த குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்வது வாடிக்கையாக உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். எனவே இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அப்பகுதிகள் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனிடையே, தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், காவிரி வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடாமல் இருக்க, தாழ்வான பகுதிகளில் பொக்லின் மூலம் மண் கொட்டி மேடான பகுதியாக மாற்றும் பணியை நகராட்சி ஊழியர்கள் துவங்கியுள்ளனர். முதற்கட்டமாக மணிமேகலை தெருவில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    • சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 17,000 கன அடி தண்ணீர் ஆனது வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • கீழையூர் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து சென்று விட்டது.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 17,000 கன அடி தண்ணீர் ஆனது வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது இரு கரையையும் ஆக்கிரமித்து ஓடும் இந்த வெள்ள நீரானது திருக்கோவிலூர் அரகண்டநல்லூரை இணைக்கும் தரைப்பாலத்தின் மீது சுமார் 2 அடிக்கும் மேலாக பாய்ந்து செல்கிறது. தண்ணீரின் வேகம் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் திருக்கோ–விலூர் கீழையூர் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து சென்று விட்டது இதனால் இனி தரைப்பாலத்தை பொது–மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியே என்ற நிலைக்கு தரைப்பாலம் உள்ளாகியுள்ளது.

    மேலும் தரைப் பாலத்தின் மீது ஓடும் தண்ணீரின் அளவு அதிகரித்த வண்ணம் உள்ளதால் தரைப் பாலத்தின் 2 பக்கத்திலும் போலீசார் தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தண்ணீர் கடலூர் ஆல்பேட்டைவழியாக கடலில் கலக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஆற்றோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது

    • மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் வெள்ள தடுப்பு மீட்பு ஒத்திகை நடைபெற்றது.
    • மருத்துவ உதவி வழங்குதல், உயா் சிகிச்சைக்காக மருத்துவ கல்லுாாிக்கு கொண்டு செல்லுதல் போன்ற ஒத்திகைகள் நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டம் எடையூர் ஊராட்சியில் வெள்ளத் தடுப்பு மீட்பு ஒத்திகை நடந்தது. தமிழ்நாடு போிடா் மேலாண்மை ஆணையம், திருவாருா் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் வெள்ளத் தடுப்பு மீட்பு ஒத்திகை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு எடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா கணேஷ்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் தேவகி துரையரசன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் எடையூர் மணிமாறன், பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர் பொறியாளர் செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியை திருத்துறைப்பூண்டி தாசில்தாா் மலா்க்கொடி தொடங்கி வைத்தாா். எடையூா் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், திருத்துறைப்பூண்டி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலா், திருத்துறைப்பூண்டி வட்டவழங்கல் அலுவலா் அலெக்சாண்டா், வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் கவுரி, முத்துப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா் ஆகியோா் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

    வெள்ளத் தடுப்பு மீட்பு பயிற்சி பெற்ற பாரதமாதா சேவை நிறுவன சமூகப் பணியாளர்கள் துர்கா தேவி, கார்த்தி, பிரபுதாசன், செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    எடையூாில் கடந்த ஆண்டுகளில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் காவல்துறை, தீயணைப்பு துறை, ரெட்கிராஸ் சொசைட்டி, பாரதமாதா சேவை நிறுவனம், வருவாய் துறை, சுகாதாரத்துறை, நீா்பாசன துறை, மீன்வளத்துறை, ஊரக வளா்ச்சி துறை, மின்சார வாாியம், தேசிய போிடா் மீட்பு குழு இணைந்து முன்னெச்செரிக்கை செய்தல், மக்களை மீட்டு முகாமகளில் தங்கவைத்து உணவு, மருத்துவ உதவி வழங்குதல், உயா் சிகிச்சைக்காக மருத்துவ கல்லுாாிக்கு கொண்டு செல்லுதல், போன்ற ஒத்திகைகள் நடைபெற்றது.

    ×