என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirparappu Falls"

    • கரையோரம் இருப்போர் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது
    • கன்னியாகுமரி வந்த சுற்றுலாப் பயணிகளும் சூரிய உதயம் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    நாகர்கோவில்:

    தென் கடலோர மாவட்டங்களை வடகிழக்கு பருவமழை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் உருவாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழையின் தாக்கம் தீவிரமடையும் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த சூழலில் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை இடைவிடாது பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு வரும் நீரின் வரத்து அதிகமாக உள்ளது. முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவி பகுதி வெள்ளப்பெருக்காக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நேற்றும் மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வீடுகளில் இருந்து கடை மற்றும் பல்வேறு பணிகளுக்கு வெளியில் வந்தவர்கள் சிரமத்திற்குள்ளானார்கள். பகலில் பெய்த மழை இரவிலும் நீடித்தது. விடிய விடிய சாரல் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மாவட்டத்தின் மலையோர பகுதிகள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. பேச்சிப்பாறையில் 37.6 மில்லி மீட்டரும், சிற்றாறு-1 அணை பகுதியில் 32.6 மில்லி மீட்டரும் பாலமோரில் 31.6 மில்லி மீட்டரும் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக குழித்துறை தாமிரபரணி ஆறு, கோதையாறு, பரளியாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குழித்துறை சப்பாத்து பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருக்கிறது. நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பயன்படுத்தும் இந்த சப்பாத்து பாலத்தின் இரண்டு புறங்களிலும் தடுப்பு வேலி அமைத்து பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அது போன்று ஆற்றின் கரையோரம் இருப்போர் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது

    திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடிப்பதால் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதேபோல் கன்னியாகுமரி வந்த சுற்றுலாப் பயணிகளும் சூரிய உதயம் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். பெரும்பாலானவர்கள் வெளியில் எங்கும் செல்லாமல் விடுதி அறைகளிலேயே முடங்கினர்.

    இந்த சூழலில் இன்று காலையும் மாவட்டத்தில் மழையின் தாக்கம் இருந்தது. காலை 8 மணியில் இருந்து பல பகுதிகளில் சாரல் மழையும் சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்குச் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் ஓட்டமும் நடையுமாக வீதிகளில் சென்றனர். மழை காரணமாக பல்வேறு மாவட்டங்க ளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் குமரி மாவட்டத்தில் விடுமுறை எதுவும் விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மாவட்டம் முழுவதும் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கொட்டாரம் 17, மயிலாடி 14.2, நாகர்கோவில் 10.2, கன்னிமார் 10.6, ஆரல்வாய்மொழி 16.2, பூதப்பாண்டி 18.2, முக்கடல் அணை 13.2, பாலமோர் 31.6, தக்கலை 7.8, குளச்சல் 3.6, இரணியல் 6, அடையாமடை 15.4, குருந்தங்கோடு 11.6, கோழிப்போர்விளை 16.2, மாம்பழத்துறையாறு 18.2, ஆணைக்கிடங்கு 17.8, சிற்றாறு 1-32.6, சிற்றாறு 2- 26.2, களியல் 25.2, குழித்துறை 10.2, பேச்சிப்பாறை 37.6, பெருஞ்சாணி 16.8, புத்தன்அணை 15.6, சுருளகோடு 15.4, திற்பரப்பு 18, முள்ளங்கினாவிளை 12.8.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.51 அடி யாக இருந்தது. அணைக்கு 1404 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் இருந்து 240 கன அடி நீர் மதகுகள் வழியாகவும், 1008 கன அடி நீர் உபரியாகவும் திறக்கப்பட்டுள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 68.15 அடியாக இருந்தது. அணைக்கு 623 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    சிற்றார்1அணை நீர்மட்டம் 11.02 அடியாகவும், சிற்றார் 2 அணையின் நீர்மட்டம் 11.12 அடியாகவும், நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 22.2 அடியாகவும் உள்ளது.

    • திற்பரப்பு அருவி பகுதியில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது.
    • குழித்துறை ஆற்றில் தரை பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் சுட்டெரிக்கு வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோசன நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இரணியல், குருந்தன் கோடு, கோழிப்போர்விளை, மாம்பழத்துறையாறு, கன்னிமார், ஆரல்வாய் மொழி, பூதப்பாண்டி, குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

    திற்பரப்பு அருவி பகுதியில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்ததால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    திற்பரப்பில் அதிகபட்சமாக 68.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. இன்று காலையில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராள மான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    மேற்கு மாவட்ட பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக குழித்துறை ஆற்றிலும் தரை பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

    தற்பொழுது மழை குறைந்ததையடுத்து சப்பத்து பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. நாகர்கோவிலில் நேற்று இரவு சாரல் மழை பெய்தநிலையில் இன்று காலை வழக்கம்போல் வெயில் அடித்தது. மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழையினால் 2 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 30.18 அடியாக இருந்தது. அணைக்கு 233 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 26.05 அடியாக உள்ளது. அணைக்கு 72 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 22 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 48.2, பெருஞ்சாணி 41.4, சிற்றாறு 1-29.8, சிற்றாறு 2-18.6, நாகர்கோவில் 4.2, கன்னிமார் 20.6, பூதப்பாண்டி 12.4, முக்கடல் 20, பாலமோர் 6.2, தக்கலை 20, குளச்சல் 8, இரணியல் 6.2, அடையாமடை 27, குருந்தன்கோடு 4.4, கோழிப்போர்விளை 4.8, மாம்பழத்துறையாறு 20.2, ஆணைக்கிடங்கு 18.6, களியல் 15.4, குழித்துறை 5.2, புத்தன் அணை 41, சுருளோடு 62.6, திற்பரப்பு 68.4, முள்ளங்கினாவிளை 5.4.

    • நாகர்கோவிலில் நேற்று மாலையில் மழை வெளுத்து வாங்கியது.
    • கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாத காலமாக பரவலாக தினமும் மழை பெய்து வருவதால் ரம்யமான சூழல் நிலவி வருகிறது. காலையில் வெயில் அடித்தாலும் தினமும் இரவு நேரத்தில் மழை நீடித்து வருவதால் இதமான குளிர் காற்றும் வீசி வருகிறது.

    மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்த நிலையில் நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

    நாகர்கோவிலில் நேற்று மாலையில் மழை வெளுத்து வாங்கியது. அதன் பிறகு இரவு விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.

    சிற்றாறு-2 அணைப்பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 122.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, களியல், கன்னிமார், தக்கலை, ஆரல்வாய்மொழி, கோழிப்போர்விளை, குருந்தன்கோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பெருஞ்சாணி அணையில் இருந்து 650 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். சிற்றார் 1- நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணையில் இருந்து 234 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர் மழையின் காரணமாக கோதையாறு, வள்ளியாறு, பரளிஆறு, பழையாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மழைக்கு மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

    புத்தனார் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மணவாளக்குறிச்சி பகுதியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது அங்கு நெல் அறுவடை செய்து கொண்டிருந்த சேலத்தை சேர்ந்த டிரைவர் சபரி ராஜா மின்னல் தாக்கி பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். திருவட்டார், கிள்ளியூர் தாலுகாக்களில் தலா 2 வீடுகள் மழைக்கு இடிந்து விழுந்தது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.33 அடியாக உள்ளது. அணைக்கு 839 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.30 அடியாக உள்ளது. அணைக்கு 630 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 650 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 15.97 அடியாக உள்ளது. அணைக்கு 261 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    அணையில் இருந்து 234 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 88.6, பெருஞ்சாணி 7.2, சிற்றார் 1-93.4, சிற்றார் 2- 122.6, களியல் 54.4, கன்னிமார் 57.8, கொட்டாரம் 10.2, குழித்துறை 20, மயிலாடி 5.2, நாகர்கோவில் 32.4, புத்தன் அணை 5.6, சுருளோடு 35.2, தக்கலை 88, குளச்சல் 14, இரணியல் 42, பாலமோர் 24.4, மாம்பழத்து றையாறு 95.4, திற்பரப்பு 24.8, கோழிப்போர்விளை 78.2, அடையாமடை 20, குருந்தன்கோடு 48, முள்ளங்கினாவிளை 25.6, ஆணைக்கிடங்கு 94.2, முக்கடல் 32.

    • பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் 250 கனஅடியில் இருந்து 150 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
    • 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 64.12 அடி நீர்மட்டம் உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குமரி கடல் பகுதியில் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழும்பி குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

    வானிலை மாற்றம் காரணமாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த நிலையில், மலையோர கிராமங்களில் கனமழை நீடித்தது. இதன் காரணமாக குமரி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனை தொடர்ந்து அணையில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட் டது.

    இந்த நிலையில் மாவட்டத்தில் மழை நீடிக்கும் என்று கூறப்பட்டதால், அணையின் நீர்மட்டத்தை கருத்தில் கொண்டு அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 250 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது.

    திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்டத்தில் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. மாம்பழத்துறையாறு பகுதியில் 10 மி.மீட்டர், ஆணைக்கிடங்கு பகுதியில் 9.6, முள்ளங்கினாவிளை 7.2, அடையாமடை 6.8 என மிதமான அளவிலேயே மழை பெய்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் வரத்து குறைந்துள்ளது.

    இதனை தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் 250 கனஅடியில் இருந்து 150 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மதகுகள் வழியாக 556 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது நீர்மட்டம் 42.74 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 278 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 64.12 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 91 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மதகுகள் வழியாக 160 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 50.11 அடியாக உள்ளது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு1 மற்றும் 2 அணைகளில் 14.46 மற்றும் 14.56 அடி நீர்மட்டம் உள்ளது. 25 அடி கொண்ட முக்கடல் அணையில் 16.4 அடியாக நீர்மட்டம் உள் ளது.

    பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டாலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிக அளவே கொட்டுகிறது. இதனால் இன்றும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை தினமான இன்று திற்பரப்பு வந்த பலரும் ஏமாற்றமடைந்தனர்.

    பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதையடுத்து திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். நேற்றிரவும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பெருஞ்சாணி அணை பகுதியில் 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

    புத்தன் அணை, சுருளோடு, பாலமோர் பகுதிகளிலும் மழை பெய்தது. சுருளோட்டில் அதிகபட்சமாக 45.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதையடுத்து திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் இரண்டு நாட்களாக மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கோடை விடுமுறை முடிய இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் திற்பரப்பு அருவி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.03 அடியாக உள்ளது. அணைக்கு 398 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையிலிருந்து 386 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு 296 அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 25.92 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 17.80 அடியாகவும், சிற்றார்-1 அணை நீர்மட்டம் 12.40 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 12.49 அடியாகவும் உள்ளது.



    ×