search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water level rise"

    • கரியக்கோவில் ஆற்றின் குறுக்கே 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோவில் அணை அமைந்துள்ளது.
    • 3,600 ஏக்கர் விளைநிலங்கள் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கல்வராயன்மலை அடிவாரம் பாப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் கரியக்கோவில் ஆற்றின் குறுக்கே 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோவில் அணை அமைந்துள்ளது.

    இந்த அணையால் பாப்பநாயக்கன்பட்டி, ஏழுப்புளி, பீமன்பாளையம், தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில் 3,600 ஏக்கர் விளைநிலங்கள் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன. ஏ.குமாரபாளையம், கல்யா ணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக் கன்பாளையம் பகுதியில் 2,000 ஏக்கர் பழைய ஆயக்கட்டு நேரடி பாசனம் பெறுகின்றன.

    சுற்றுப்புற கிராமங்க ளுக்கு முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வரும் இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 2022-ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பெய்த பருவ மழையால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 2022-ம் ஆண்டு அக்டோபர் 25-ந் தேதி 50.52 அடியை எட்டி நிரம்பியது. 175.63 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியதும் உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டது.

    இதனையடுத்து நடப்பாண்டு மார்ச் மாதத்தில் இருந்து சுழற்சி முறையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் ஜூன் மாத இறுதியில் நீர்மட்டம் 31 அடியாக குறைந்து 68 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே மீதமிருந்தது. சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தால் அக்டோபர் 1-ல் நீர்மட்டம் 18.37 அடியாக குறைந்தது. 27.10 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருந்தது.

    நீர்மட்டம் 33.20 அடியாக உயர்வு

    இந்த நிலையில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் தற்போது 33.20 அடியாக உயர்ந்துள்ளது. 76.17 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 25-ந்தேதி அணை நிரம்பி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு நவம்பர் மாதம் 18-ந்தேதி வரை அணை நிரம்பவில்லை.

    இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் நவம்பர் இறுதிக்குள் பருவ மழை கை கொடுக்கும் என்பதால் அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் கரியக்கோ வில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்புமென விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் கண்மாய், குளங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
    • ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    விருதுநகர்

    வானம் பார்த்த பூமியான விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மழைபொழிவு குறைந்ததால் வறட்சி நிலவியது.

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீவில்லி புத்தூர், ராஜ பாளையம், வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழையை நம்பி விவசாயிகள் மா, பலா, வாழை மற்றும் ஊடு பயிர் களை நூற்றுக் கணக்கான ஏக்கரில் பயிரிட்ட னர்.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி யவுடன் விருதுநகரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைப் பொழிவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மழை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது.இந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தென் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் மாலை நேரங்களில் மழை பெய்தது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அங்குள்ள அய்யனார் ஆறு, ராக்காச்சி அம்மன் கோவில் ஆறு, செண்பகத்தோப்பு மீன் வெட்டிப்பாறை நீர்வீழ்ச்சி, பேயனாறு, கான்சாபுரம் அத்திக்கோவில் ஆறுகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.

    நேற்றும், இன்று அதி காலையும் மலைப்பகுதி களில் அதிக மழை பொழிவு இருந்தது. இதன் காரணமாக மேற்கண்ட ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடியது. இதனால் அங்குள்ள கண்மாய், குளங் களில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.இதேபோல் வத்திரா யிருப்பு, சதுரகிரி மலை பகுதி யிலும் கனமழை பெய்தது. இதனால் முக்கிய நீராதாரமாக விளங்கும் பிளவக்கல் அணையில் தண்ணீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. ஒரே நாளில் 3 அடி நீர்மட்டம் உயர்ந்த நிலையில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. 47.56 அடி உயரம் கொண்ட அணையின் தற்போதைய நீர்மட்டம் 28 அடியாகும்.

    திடீரென பெய்து வரும் மழையால் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக விவசாய பணிகள் தொய்வுடன் நடந்த வந்த நிலையில் மழை காரணமாக விறுவிறுப்படைந்துள்ளது.

    • நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிப்பார்கள்.
    • கீழ்தொட்டபெட்டா ஆகிய அணைகளின் நீா் இருப்பு மிக முக்கியமானது.

    ஊட்டி,

    சுற்றுலா நகரமான ஊட்டியில் மே மாதத்தில் நடைபெறும் கோடை சீசனுக்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இவர்கள் இங்குள்ள தங்கும் விடுதிகளில் தங்கி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிப்பார்கள்.

    தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவதால் கோடை சீசன் களைகட்டி காணப்படும். அப்படி வருபவர்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யவும், உள்ளூா் மக்களின் குடிநீா் தேவையை சமாளிக்கவும் பாா்சன்ஸ்வேலி, மாா்லி மந்து, டைகா் ஹில், கோரிசோலா, மேல் தொட்டபெட்டா, கீழ் தொட்டபெட்டா ஆகிய அணைகளின் நீா் இருப்பு மிக முக்கியமானது.

    இங்குள்ள முக்கிய குடிநீா் ஆதாரங்களான 50 அடி கொள்ளளவு கொண்ட பாா்சன்ஸ் வேலி அணை, 23 அடி கொள்ளளவு கொண்ட மாா்லி மந்து அணை, 39 அடி கொள்ளளவு கொண்ட டைகா்ஹில் அணை, 35 அடி கொள்ளளவு கொண்ட கோரிசோலா அணை, 25 அடி கொள்ளளவு கொண்ட மேல் தொட்டபெட்டா, 14 அடி கொள்ளளவு கொண்ட கீழ் தொட்டபெட்டா அணை ஆகியவற்றில் சராசரியாக 90 சதவீத அளவுக்கு நீா் இருப்பு உள்ளது.

    இதனால், வரும் மே மாதம் நடைபெறும் கோடை சீசனில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும், தற்போது 3 நாள்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் தண்ணீா் தொடா்ந்து வழங்கப்படும் என்றும் ஊட்டி நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • அடுத்தடுத்த மாதங்களில் விவசாய பணிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
    • அடுத்தடுத்த மாதங்களில் விவசாய பணிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதிகளில் மழைப்பொழிவானது கடந்த 15 ஆண்டுகளாகவே படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் விவசாய கிணறுகள், போர்வெல்களின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. 30 அடி கிணற்றில் விவசாயம் செய்ய போதுமான தண்ணீர் ஊற்றெடுத்த நிலை மாறி 100 அடி கிணறு வெட்டினாலும் போதிய தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகி இருந்தது.

    200 அல்லது 300 அடி போர்வெல்லில் கிடைத்து வந்த தண்ணீர் இன்று ஆயிரத்து 500 அடியில் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக மழைப்பொழிவு குறைவு என கருதப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் காங்கயம் பகுதியில் கீழ்பவானி பாசனம் பெறும் பகுதிகள் மற்றும் பி.ஏ.பி. பாசன பகுதிகளிலும் ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் விவசாயிகளின் கிணறுகளில் நீர்மட்டம் படிப்படியாக உயரத்தொடங்கியுள்ளது. மேலும் தற்போது காங்கயம் பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளில் தற்போது கிணறுகளின் மேல் திட்டு வரை தண்ணீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் அடுத்தடுத்த மாதங்களில் விவசாய பணிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • 3-ந் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 877.30 மீட்ட ராக உள்ளது.
    • கடந்த சில நாட்களில் 10 கோடியே 6 லட்சம் லிட்டர் வரை குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது

    கோவை,

    கோவை மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி அணை. அங்கு இருந்து மாநகரில் உள்ள 26 வார்டுகள், நகரையொட்டியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. 878.50 மீட்டர் கொள்ளளவு கொண்ட அணையில் கடந்த வாரம் 876.70 மீட்டர் அளவுக்கு தண்ணீர் இருந்தது.

    இந்த நிலையில், சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் அணைக்குச் செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டு, அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

    3-ந் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 877.30 மீட்ட ராக உள்ளது. இன்னும் 1.20 மீட்டர் உயரம் நீர்மட்டம் உயர்ந்தால் சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்டும்.

    இது குறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    அணையில் இருந்து கடந்த சில நாட்களில் 10 கோடியே 6 லட்சம் லிட்டர் வரை குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது, அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் 11 கோடி லிட்டர் தண்ணீர் குடிநீருக்காக எடுக்க ப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • நீர்மட்டம் 43 அடி உயர்வினால் கோமுகி அணையில் விரைவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் நிலை உள்ளது.
    • விவசாயத்திற்கு செல்லக்கூடிய தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த கோமுகி அணை மொத்த கொள்ளளவு 46 அடியாகும். ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை தண்ணீர் சேமித்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய பாசனமும் பெற்று வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டு பிறகு விவசாயத்திற்கு செல்லக்கூடிய தண்ணீர் நிறுத்தப்பட்டது இதனால் அணையில் வெறும் 15 அடி மட்டும் தண்ணீரை நிலத்தடி நீர்மட்டம் ஊறுவதற்காக நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெப்ப சலனம் காரணமாக கல்வராயன் மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்தை மழை பெய்தது. இதனால் கல்வராயன் மலையில் உள்ள கல்படை, மல்லிகைப்பாடி, பொட்டியம் ஆகிய ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு வினாடிக்கு ஆயிரம் கண்ணாடி வரை நீர் வரத்து வந்ததால் நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்தது. தற்போது நீர்மட்டம் 43 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் வெகு விரைவில் அணையில் இருந்து த ண்ணீர் திறக்கப்படும் நிலை உள்ளதால் விவசா யிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • தியாகதுருகம் அருகே பெரிய ஏரியில் தண்ணீரை வெளியேற்றி மீன் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • குத்தகைக்கு எடுத்தவர் மீன்களை வளர்த்து பராமரித்து வந்தார். தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகிறார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பிரதிவிமங்கலம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம் சுமார் 250 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவிலான நிலத்திற்கு தண்ணீர் பாசனம் செய்யப்படுகிறது. இந்த ஏரியில் மீன் வளர்க்க கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் மூலம் குத்தகைக்கு விடப்பட்டது. அதன்படி குத்தகைக்கு எடுத்தவர் மீன்களை வளர்த்து பராமரித்து வந்தார். தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் தியாகதுருகம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் பல்லகச்சேரி ஏரியிலிருந்து பிரதிவிமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வந்தது. இதனால் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்த–தால் மீன் பிடிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.

    எனவே ஏரி கரையில் தற்போது உள்ள ஒரு மதுவில் தண்ணீரை திறந்து விட்டும், மற்றொரு இடத்தில் புதியதாக மது கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம் வழியாக இரவு நேரங்களில் ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றியும் மீன்களை பிடித்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவ்வாறு மீன்பிடிப்பதற்க்காக தண்ணீர் திறந்து விடுவதால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்படும் எனவும். மேலும் இவ்வாறு வெளி–யேறும் தண்ணீர் தற்போது கரும்பு பயிர்களில் தேங்கி கிடப்பதால் கரும்பு பயிர் வீணாகும் நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி மீன் பிடிக்க தடை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×