44வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது- உபரி நீர் திறப்பு

ஜூன் மாதத்தில் அணை முழு கொள்ளளவை எட்டியது இது இரண்டாவது முறையாகும்.அணையின் பாதுகாப்புக் கருதி 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது.
44வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது- உபரி நீர் திறப்பு
Published on

சேலம் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

அணையின் பாதுகாப்புக் கருதி 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது.

அணை கட்டிய 91 ஆண்டு கால வரலாற்றில் 44வது முறையாக நிரம்பியுள்ளது.

ஜூன் மாதத்தில் அணை முழு கொள்ளளவை எட்டியது இது இரண்டாவது முறையாகும்.

மேட்டூர் அணை கட்டப்பட்ட 91 ஆண்டுகளில் 44வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.

இதற்கு முன்பாக 1957ம் ஆண்டு ஜூன் மாதத்தில் முழு கொள்ளளவை எட்டி இருந்தது. அதுன்படி, 68 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com