search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "continuous rain"

    • மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் தொடர் மழையால் வீடுகள், விவசாய கிணறுகள் இடிந்தன.
    • சில கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த தொடர்மழையால் வீடுகள், விவசாயக் கிணறு இடிந்து விழுந்தன.

    மேற்கண்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கிராம பகுதிகளில் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் தினமும் அந்த சாலைகளில் செல்வோர் விபத்துகளில் சிக்கி காயம் அடைகிறார்கள்.

    மேலும் பாசனக்கண்மாய்கள் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்னதாகவே மழைத் தண்ணீர் வரத்தால் வேகமாக நிரம்பியது. சில கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதையடுத்து இப்பகுதியில் விளைநிலங்களில் நடவு பணிகள் தீவிரமடைந்துள் ளன.

    தொடர்மழையால் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் மொத்தம் நான்கு வீடுகள் முழுமையாகவும், சில வீடுகள் பகுதியாகவும் இடிந்தன. மேலும் நேற்று திருப்பாச் சேத்தி அருகே மாரநாடு விலக்கு பகுதியில் முத்து என்பவரது 72 அடி உயர பெரிய அளவிலான விவசாயக்கிணறு இடிந்து உள்ளே விழுந்தது.

    கிணற்றுக்குள் இருந்த இரு தண்ணீர் இரைக்கும் மோட்டார்களும் மண்ணுக் குள் புதைந்தன. இந்தக் கிணற்றுக்கு அருகே உள்ள கட்டடத்தின் தரைத்தளமும் இடிந்து கிணற்றுக்குள் விழுந்ததால் அந்தக் கட்டி டமும் கீழே விழுந்து மண் ணுக்குள் புதையும் நிலையில் உள்ளது.

    மழையால் இடிந்து போன வீடுகள் உள்ளிட்ட சேதம் குறித்து வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். மழையால் நடவுப் பணி தொடங்கியுள்ளதால் மானாமதுரை, திருப் புவனம், இளையான்குடி பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் விவசாயிகள் உரம் வாங்க குவிந்து வருகின்றனர்.

    • பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது.
    • மழை எச்சரிக்கை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று மதியம் முதல் பல்வேறு இடங்களில் அவ்வப்போது கன மழை பெய்து வந்தது.

    நேற்று இரவு முதல் தற்போது வரை விடிய விடிய மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக திருவாரூர், நன்னிலம், பேரளம், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், குடவாசல், கொல்லுமாங்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

    நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை ஆறு மணி வரையிலான மழை அளவு பட்டியலில் திருவாரூரில் 74 மில்லி மீட்டரும், நன்னிலத்தில் 66 மில்லி மீட்டரும், குடவாசலில் 61 மில்லி மீட்டர், வலங்கைமானில் 38 மில்லி மீட்டர், மன்னார்குடியில் 50 மில்லி மீட்டரும், நீடாமங்கலத்தில் 58 மில்லி மீட்டரும், திருத்துறைப்பூண்டியில் 62 மில்லி மீட்டரும், முத்துப்பேட்டையில் 15 மில்லி மீட்டரும் என மாவட்டம் முழுவதும் 476 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் கன மழை எச்சரிக்கை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்த மழையின் காரணமாக சம்பா நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிக மழை காரணமாக தக்காளி பழங்கள் அழுகி வருகின்றன.
    • கார்த்திகைப் பட்டத்தில் விவசாயிகள் தக்காளி நடவு செய்ய ஆயத்தம் ஆகி வருகின்றனர்.

    திருப்பூர்:

    டிப்பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி தற்பொழுது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. புரட்டாசி மாதத்தில் மழை இன்மையால் விளைச்சல் அதிகரித்தது. இதனால் ஒரு பெட்டி (14கிலோ) தக்காளி 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனையானது. பறிப்பு கூலிக்கு கூட கட்டுப்படியாகாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிக மழை காரணமாக தக்காளி பழங்கள் அழுகி வருகின்றன. செடிகளின் இலைகள் தீயில் கருகியது போல் காட்சியளிக்கின்றன. செடியில் பூ, பிஞ்சு, இலைகள் என்று எதுவும் இல்லை.

    மழையால் தக்காளி விளைச்சல் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் ஒரு பெட்டி தக்காளி தற்பொழுது 500 ரூபாய்க்கு விலை போகிறது.வரும் நாட்களில் தக்காளி வரத்து வெகுவாக குறையும் அபாயம் உள்ளது. கார்த்திகைப் பட்டத்தில் விவசாயிகள் தக்காளி நடவு செய்ய ஆயத்தம் ஆகி வருகின்றனர். அவை தை மாதத்தில் தான் அறுவடைக்கு வரும். எனவே வெளியூர் வரத்து இல்லாவிட்டால் தக்காளி விலை உச்சத்தை தொடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • ஆண்டு சராசரி மழையளவு வெறும், 600 மி.மீ.., மட்டுமே என்ற நிலையில் பருவமழை தான் பிரதான நீராதாரமாக இருந்து வருகிறது.
    • வனச்சரகங்களையொட்டி, மலையடிவாரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அவிநாசி:

    வட கிழக்குப்பருவ மழை கை கொடுப்பதால், அவிநாசி வட்டாரத்தில் உள்ள குளம், குட்டைகள் நிரம்ப துவங்கியுள்ளன.குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிறைந்த அவிநாசி, மழைமறைவு பகுதியாகவே உள்ளது.

    ஆண்டு சராசரி மழையளவு வெறும், 600 மி.மீ.., மட்டுமே என்ற நிலையில் பருவமழை தான் பிரதான நீராதாரமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போன நிலையில் வட கிழக்குப்பருவ மழை கை கொடுக்க துவங்கியிருக்கிறது.

    அவிநாசி வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் கிராமப்புறங்களில் உள்ள குளம், குட்டைகள் நிரம்ப துவங்கியுள்ளன. குறிப்பாக 2 நாள் முன் 120 மி.மீ., மழை பெய்தது விசவாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    மழையால் அசநல்லிபாளையம் குளம், தாமரைக்குளம், கருவலூர் குளம் மற்றும் வெள்ளியம்பாளையத்தில் உள்ள நல்லாறு செக்டேம் ஆகியவை வேகமாக நிரம்புகின்றன. அதேபோல் பிற ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டைகளும் மழைக்கு நிரம்ப துவங்கியுள்ளன. இன்னும் ஓரிரு நாட்கள் இதே போன்று மழை பெய்யும் பட்சத்தில் குளம், குட்டைகள் நிரம்பி நீர் வளம் பெருகும் என விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்துள்ளனர்.

    சில மாதங்களுக்கு முன் குளம் குட்டைகளில் இருந்து, விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதன் அடிப்படையில் பல குளம், குட்டைகளில் இருந்து மண் எடுக்கப்பட்டது. வெட்டுக்குழிகள் ஏற்படாத வகையில் மேல் மண் மட்டுமே அள்ள வேண்டும்.

    அப்போது தான் குளம், குட்டைகள் அதன் தன்மையை இழக்காமல் இருக்கும் என்ற நிலையில் ஆழமாக அடிமண் வரை தோண்டி எடுக்கப்பட்டதால் பல இடங்களில் உள்ள குளம், குட்டைகளில் வெட்டுக்குழிகள் ஏற்பட்டு அதில் தண்ணீர் நிரம்பியுள்ளது. தப்பித்தவறி அதில் இறங்கினால் சேற்றில் சிக்கும் வாய்ப்புக்கூட உள்ளது.

    நீர் தேங்கியிருக்கும் குளம், குட்டைகள் அருகே, குழந்தைகள் சென்று விளையாடாத வகையிலான விழிப்புணர்வை, பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் தீயணைப்புத்துறையினர்.

    அவிநாசியில் கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலின், முதலையுண்ட பாலகனை மீட்டெடுத்த தல வரலாறு உடைய தாமரைக்குளம், மங்கலம் ரோட்டில் உள்ளது. ஏறத்தாழ, 103 ஏக்கர் பரப்பளவு உடைய தாமரைக்குளம், சுற்றுவட்டார கிராமங்களில் நஞ்சை விவசாய பூமிகளுக்கு பாசன நீர் ஆதாரமாக விளங்குகிறது.

    கோவை மாவட்டம், அன்னூரில் துவங்கி கருவலூர், நம்பியாம்பாளையம், செம்பியநல்லூர் வழியாக பாய்ந்து வரும் மழை நீரோட்டமானது தாமரை குளத்திற்கு வந்தடைகிறது. அதன்பின் உபரிநீராக ராஜ வாய்க்கால் வழியாக வெளியேறி ராக்கியாபாளையம், திருமுருகன்பூண்டி வழியாக நல்லாற்றில் கலந்து நொய்யலில் சங்கமிக்கிறது.

    கடந்த 2 நாள் முன் பெய்த மழையால் தண்ணீர் அதிகரித்து வர துவங்கியது. சாலையப்பாளையத்தில் உள்ள குட்டை நிரம்பி மதகு வழியாக உபரி நீர் தாமரைக்குளத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடரும் நிலை உள்ளதால் பொதுப்பணித்துறையினர் தாமரைக்குளத்திற்கு தண்ணீர் வரும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தடையின்றி தண்ணீர் பாய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் அரிய வகை வனவிலங்குகள் அதிகளவு உள்ளன. இந்த வனச்சரகங்களையொட்டி, மலையடிவாரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குறிப்பாக நீண்ட கால பயிரான மா, தென்னை மற்றும் மானாவாரி சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகிறது.வனத்தில் போதிய மழை இல்லாத போது, தண்ணீர் தேவைக்காக, வன எல்லையிலுள்ள விளைநிலங்களுக்கு விலங்குகள் இடம் பெயர்ந்து பயிர்களையும் சேதப்படுத்தும். இதனால் மனித - வனவிலங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவாகும்.

    வனத்திலுள்ள சிறு ஓடைகளில் மழைக்காலத்தில் மட்டும் தண்ணீர் வரத்து இருக்கும். இப்பிரச்னைக்கு தீர்வு காண வனத்துறை சார்பில் இரு வனச்சரகங்களிலும், விலங்குகளின் குடிநீர் தேவைக்காக காட்டாறுகள், ஓடைகளின் குறுக்கே 50க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதே போல் 40 குடிநீர் தொட்டிகளும் உள்ளன.

    இதில் இரு வனச்சரகங்களிலும் தலா 5 தொட்டிகளுக்கு, போர்வெல் மற்றும் சோலார் மின் மோட்டார் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக தண்ணீர் தேவைக்காக தாவர உண்ணிகள், மூணாறு ரோட்டை கடந்து அமராவதி அணைக்கு வந்து செல்லும்.இந்நிலையில் வடகிழக்கு பருவமழையானது மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாக பெய்து வருகிறது. இதனால் வனத்திலுள்ள தடுப்பணைகள், தண்ணீர் தொட்டிகள் நிரம்பி வருகிறது.இதனால் விளைநிலங்களுக்கு வனவிலங்குகள் இடம் பெயர்வது வெகுவாக குறைந்துள்ளது. வனமும் பசுமைக்கு திரும்பி வருவதால் தாவர உண்ணிகள் அதிக தூரம் இடம் பெயராது என விவசாயிகளும் நிம்மதியடைந்துள்ளனர்.

    • கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
    • விரைவில் 130 அடியை எட்டிவிடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. அதன்படி இன்று காலை அணைக்கு நீர்வரத்து 1598 கனஅடியாக இருந்தது. தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 105 கனஅடிநீர் மட்டுமே திறக்கப்படுகிறது.

    அணையின் நீர்மட்டம் 129.70 அடியாக உள்ளது. விரைவில் 130 அடியை எட்டிவிடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

    வைகை அணை நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவை எட்டியுள்ளது. நேற்று அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இருந்தபோதும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அணையின் நீர்மட்டம் 70.51 அடியாக உள்ளது. 1309 கனஅடிநீர் வருகிறது. மதுைர மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 769 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின்நீர்மட்டம் 53.50 அடியாக உள்ளது. 214 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.67 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 239.38 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    பெரியாறு 19, தேக்கடி 8.4, கூடலூர் 3.6, உத்தமபாளையம் 2.4, சண்முகாநதி அணை 7.3, போடி 2.4, வைகை அணை 5, மஞ்சளாறு 3.4, சோத்துப்பாறை 3, பெரியகுளம் 1, வீரபாண்டி 2.6, அரண்மனைப்புதூர் 2.2, ஆண்டிபட்டி 4.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் மழையால் வாழைக்குளம் கண்மாய் மறுகால் பாய்கிறது.
    • கடந்த 6-ந் தேதி இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 மி.மீட்டர் மழை பொழிவு பதிவானது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடா்ச்சி மலை பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் மலையடி வாரத்தில் உள்ள கண் மாய்கள், நீர் நிலைகள் நிரம்ப தொடங்கின. வாழை குளம், ரெங்கப்ப நாயக்கன் குளம், வேப்பங்குளம் ஆகிய கண்மாய்களில் நீர் மட்டம் உயர்ந்தது. இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 மி.மீட்டர் மழை பொழிவு பதிவானது.

    இதனால் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. இதையடுத்து வாழைக்குளம் கண்மாய் முழுவதுமாக நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்து வருகிறது. இந்த கண்மாய் மூலம் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    மேலும்அந்த நீரானது ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய குளம் கண்மாய்க்கு சென்று சேருவதால் மாவட்டத்தின் பெரிய கண்மாய்களில் ஒன்றான பெரியகுளம் கண்மாயில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் பெய்ய துவங்கிய மழை தொடர்ந்து ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது.
    • சாலையில் தாழ்வான பகுதிகளில் அங்காங்கே தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் பெய்ய துவங்கிய மழை தொடர்ந்து ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. மேலும் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பல்லடத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி நின்றது. மேலும் மழைநீருடன் கழிவு நீரும் கலந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். அண்ணா நகர், மகாலட்சுமிபுரம், பச்சாபாளையம் காலனி, பனப்பாளையம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் பச்சாபாளையம், பனப்பாளையம், காலனி பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றுவதிலேயே அவர்களுக்கு விடிந்து விட்டது. மேலும் பல்லடம் - தாராபுரம் சாலையில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக போடப்பட்டிருந்த மண் மழையினால் அரித்துச் செல்லப்பட்டது. அத்துடன் ரோடுகளில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய செய்து ஊர்ந்து சென்றன. இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களில் ஒரு சிலரின் மோட்டார் சைக்கிள்களில் பழுதாகி நின்றது. மேலும் சாலையில் தாழ்வான பகுதிகளில் அங்காங்கே தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

    • பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்துவருகிறது.
    • தடியன்குடிசையில் இருந்து குப்பம்மாள்பட்டி செல்லும் சாலையில் 3-வது வளைவில் பாறைகள் உருண்டு விழுந்தன.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, தாண்டிக்குடி, தடியன்குடிசை, குபப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், மங்களம்கொம்பு, பண்ணைக்காடு, உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்துவருகிறது. அதோடு காற்றும் சுழன்று அடித்தது.

    இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுகிறது. மேலும் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    தடியன்குடிசையில் இருந்து குப்பம்மாள்பட்டி செல்லும் சாலையில் 3-வது வளைவில் பாறைகள் உருண்டு சாலையில் கிடக்கின்றன. இதனால் பஸ், லாரி, கார், ஜீப், போன்ற வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றன.

    எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் கிடக்கும் பாறைகளை அப்புறப்படுத்தி, அந்தரத்தில் தொங்கும் மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 3 வாரங்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது.
    • ஓமலூரில் நேற்றிரவு 10 மணிக்கு தொடங்கிய மழை அரை மணி நேரம் கன மழையாக கொட்டியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது.

    ஓமலூரில் கன மழை

    குறிப்பாக ஓமலூரில் நேற்றிரவு 10 மணிக்கு தொடங்கிய மழை அரை மணி நேரம் கன மழையாக கொட்டியது. பின்னர் விடிய விடிய சாரல் மழையாக பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் 100-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. எடப்பாடி பெரிய ஏரி நிரம்பி உள்ள நிலையில் மற்ற ஏரிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி உள்ளதால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. மேலும் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் மாநகரில் நேற்றிரவு 11 மணியளவில் சாரல் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையை தொடர்ந்து மாநகரில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக ஓமலூரில் 19 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் மாநகரில் 3.6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 22.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.   

    • ஜவ்வாது மலையில் தொடர் மழை
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    அணைக்கட்டு:

    ஜவ்வாது மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் மலைப்பகுதியில் அதிக அளவில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உத்திரகாவேரி ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த மேல்அரசம்பட்டு கிராமத்தில் இருந்து உத்திரக்காவேரி ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு ஒடுகத்தூர், அகரம், அகரம்சேரி வழியாக பள்ளிகொண்டா பாலாற்றில் கலக்கின்றது. ஜவ்வாது மலையில் பெய்து வரும் மழையினால் மேல்அரசம்பட்டு மலைப்பகுதியில் தற்போது வெள்ளம் ஆர்ப்பரித்து வருகின்றன. இதனால் ஒடுகத்தூர் வழியாக செல்லும் உத்திரக்காவிரி ஆற்றிலும் வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.

    இந்த வெள்ளப் பெருக்கினால் உத்திரக்காவேரி ஆறு செல்லக்கூடிய பகுதியான ஒடுகத்தூர், அகரம், மகமதுபுரம், அகரம்சேரி ஆகிய பகுதிகளை சுற்றியிருக்கும் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்படுகின்றது.

    இந்த ஆற்றில் ஏற்ப்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் அப்பகுதியை சுற்றி இருக்கும் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரக்கூடும் எனவும் இதனால் அனைத்து விவசாயமும் செழிப்புடன் வளரும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைகின்றனர்.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    மழை

    இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று மாலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. அயோத்தியாப் பட்டணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் சுமார் 30 நிமிடம் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடியது. இதே போல் ஆணைமடுவு, பெத்த நாயக்கன் பாளையம், சேலம் மாநகரம், ஏற்காடு, கரியகோவில், காடையாம்பட்டி, ஆத்தூர், மேட்டூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.

    மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இரவில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி நின்றது. சேலம் மாவட்டத்திலேயே அதிக பட்சமாக மேட்டூரில் 28.40 மி.மீட்டர் மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதுமே குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

    மாவட்டம் முழுவதும் பெய்த அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஆணை மடுவு-9, பெத்த நாயக்கன்பாளையம்-8, சேலம்-3.90. ஏற்காடு-3.20, கரிய கோவில்-3. காடையாம்பட்டி-3, ஆத்தூர்-1.20 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 59.70 மி.மீ.மழை கொட்டியது.

    • கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் பலத்த மழைபெய்து வருகிறது.
    • குறிப்பாக ஏற்காடு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் பலத்த மழைபெய்து வருகிறது.

    குறிப்பாக ஏற்காடு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு கடுங்குளிர் மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. தலைவாசல், கரியகோவில், வீரகனூர், கெங்கவல்லி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக இரவில் கடுங்குளிர் நிலவியது

    மழை அளவு

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக தலைவாசலில் 19 மி.மீ. மழை பெய்தது. இதே போல் வீரகனூர்-5, கெங்கவல்லி-3, எடப்பாடி-1 என மாவட்டம் முழுவதும் 37 மி.மீ. மழை பெய்தது.

    ×