search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மழையால் வீடுகள், விவசாய கிணறுகள் இடிந்தன
    X

    தொடர் மழையால் இடிந்து விழுந்த விவசாய கிணற்றை படத்தில் காணலாம்.

    தொடர் மழையால் வீடுகள், விவசாய கிணறுகள் இடிந்தன

    • மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் தொடர் மழையால் வீடுகள், விவசாய கிணறுகள் இடிந்தன.
    • சில கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த தொடர்மழையால் வீடுகள், விவசாயக் கிணறு இடிந்து விழுந்தன.

    மேற்கண்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கிராம பகுதிகளில் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் தினமும் அந்த சாலைகளில் செல்வோர் விபத்துகளில் சிக்கி காயம் அடைகிறார்கள்.

    மேலும் பாசனக்கண்மாய்கள் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்னதாகவே மழைத் தண்ணீர் வரத்தால் வேகமாக நிரம்பியது. சில கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதையடுத்து இப்பகுதியில் விளைநிலங்களில் நடவு பணிகள் தீவிரமடைந்துள் ளன.

    தொடர்மழையால் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் மொத்தம் நான்கு வீடுகள் முழுமையாகவும், சில வீடுகள் பகுதியாகவும் இடிந்தன. மேலும் நேற்று திருப்பாச் சேத்தி அருகே மாரநாடு விலக்கு பகுதியில் முத்து என்பவரது 72 அடி உயர பெரிய அளவிலான விவசாயக்கிணறு இடிந்து உள்ளே விழுந்தது.

    கிணற்றுக்குள் இருந்த இரு தண்ணீர் இரைக்கும் மோட்டார்களும் மண்ணுக் குள் புதைந்தன. இந்தக் கிணற்றுக்கு அருகே உள்ள கட்டடத்தின் தரைத்தளமும் இடிந்து கிணற்றுக்குள் விழுந்ததால் அந்தக் கட்டி டமும் கீழே விழுந்து மண் ணுக்குள் புதையும் நிலையில் உள்ளது.

    மழையால் இடிந்து போன வீடுகள் உள்ளிட்ட சேதம் குறித்து வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். மழையால் நடவுப் பணி தொடங்கியுள்ளதால் மானாமதுரை, திருப் புவனம், இளையான்குடி பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் விவசாயிகள் உரம் வாங்க குவிந்து வருகின்றனர்.

    Next Story
    ×