search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை
    X

    திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை

    • பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது.
    • மழை எச்சரிக்கை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று மதியம் முதல் பல்வேறு இடங்களில் அவ்வப்போது கன மழை பெய்து வந்தது.

    நேற்று இரவு முதல் தற்போது வரை விடிய விடிய மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக திருவாரூர், நன்னிலம், பேரளம், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், குடவாசல், கொல்லுமாங்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

    நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை ஆறு மணி வரையிலான மழை அளவு பட்டியலில் திருவாரூரில் 74 மில்லி மீட்டரும், நன்னிலத்தில் 66 மில்லி மீட்டரும், குடவாசலில் 61 மில்லி மீட்டர், வலங்கைமானில் 38 மில்லி மீட்டர், மன்னார்குடியில் 50 மில்லி மீட்டரும், நீடாமங்கலத்தில் 58 மில்லி மீட்டரும், திருத்துறைப்பூண்டியில் 62 மில்லி மீட்டரும், முத்துப்பேட்டையில் 15 மில்லி மீட்டரும் என மாவட்டம் முழுவதும் 476 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் கன மழை எச்சரிக்கை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்த மழையின் காரணமாக சம்பா நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×