என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heavy Rain"

    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
    • கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் கால்வாயின் பெரும் பகுதி காணாமல் போய்விட்டது.

    சென்னை:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து டிட்வா புயலாக மாறியது. இந்த புயல் கரையை நெருங்காமல் கடலோர பகுதிகள் வழியாக பயணித்த நிலையில் வறண்ட காற்று கலந்ததால் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.

    சென்னைக்கு அருகே 30 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது.

    'டிட்வா' புயல் வலுவிழந்த போதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் பல பகுதிகளில், இன்றும் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.

    சென்னை புறநகர் பகுதியான செங்குன்றம், புழல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கன மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளை மழை நீர் சூழ்ந்தது.

    இரவு முழுவதும் இப்பகுதியில் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த பகுதியில் பாலாஜி அவென்யூ என்ற இடம் அருகே உள்ள ஆர்.சி. கட்டிடத்தின் பின்புறம் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மழை வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்தது.

    புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாடியநல்லூர் ஊராட்சி பாலாஜிநகர், குமரன்நகர், சன்சிட்டி நகர், விளாங்காடு பாக்கம் ஊராட்சி மல்லிமா நகர், நியூ ஸ்டார்சிட்டி, மற்றும் பாலாஜி கார்டன், தணிகைநகர், வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட பாபா நகர் உள்ளிட்ட பகுதியில் சுமார் 2 ஆயிரம் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் வீடுகளுக்குள் ஏராளமானோர் தவித்து வருகிறார்கள். 2 நாட்களாகவே இங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் வீடுகளுக்குள் முடங்கியிருந்தனர். வெள்ளம் வரும் என்ற அச்சத்தில் சிலர் வீடுகளை விட்டு வெளியேறி வேறு பகுதிக்கு சென்றனர். பலர் வீட்டு மாடிகளில் தஞ்சம் அடைந்தனர்.

    இந்த சூழலில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். அத்தியாவசிய தேவைகளுக்காக கூட வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே கால்வாய் நீருடன் அப்பகுதி தனியார் ஆலை கழிவுகளும், சாக்கடையும் கலந்து வருகின்றன.

    மழை வெள்ளத்துடன் கழிவுநீரும் கலந்து வந்தததோடு பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளும் வீடுகளுக்குள் புகுந்தன.

    குமரன் நகர் பகுதியில் தாழ்வான பகுதியில் இருந்த 15 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அப்பகுதியில் 2 முதியவர்கள், 9 பெண்கள் உள்பட 25 பேர் தண்ணீரில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. அவர்களால் வெளியில் வர முடியவில்லை. இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. செங்குன்றம் தீயணைப்பு நிலைய அதிகாரி சீனிவாசன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்றனர்.

    25 பேரையும் ரப்பர் படகு மூலம் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர்கள் தீர்த்தங்கரை சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வெள்ள பாதிப்பு குறித்து அப்பகுதியை சேர்ந்த மணி கூறுகையில், புழல் ஊராட்சி ஒன்றியத்தில் கால்வாய்கள், நீர்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகள் காரணமாக மழைநீர் கால்வாய் வழியாக செல்லாமல் ஊருக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பலமுறை போராடியும் நடவடிக்கை இல்லை.

    இதனால் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் நடைபெற்று உள்ளன. கடந்த ஆண்டுகளில் பெரிய மழை பெய்ததால் குடியிருப்புகளில் புகுந்த மழைநீர். இந்த ஆண்டு தொடர் மழையால் மழைநீர் புகுந்துள்ளது. புழல் ஊராட்சி ஒன்றியத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால், சமூக ஆர்வலர்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் மீது, அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அரசுக்கு வருவாய் இழப்பும், இடர்பாடுகளும் தொடர்கின்றன.

    மேலும் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். இதுபோன்ற மழைக்காலங்களில் அதிகாரிகள் வெளியில் இருந்து பார்வையிட்டு செல்வது வழக்கமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பாதிப்புக்குள்ளான இப்பகுதி மக்களுக்கு தீர்வும் கிடைக்கவில்லை.

    மேலும் தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

    புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விளாங்காடுபாக்கம், தீர்த்த பிரியப்பட்டு, அழிஞ்சிவாக்கம், பிராண்ட்லைன் உள்ளிட்ட 7 ஊராட்சிகள் உள்ளன. இது சென்னையை ஒட்டிய புறநகர் கிராமப்பகுதிகள் ஆகும்.

    சென்னை நகருக்குள் ஆண்டுதோறும் ஏற்பட்டு வரும் மழை வெள்ள பிரச்சனைகளால் சென்னை நகர்ப்பகுதிகளில் வாடகை வீடுகளில் வசிக்கும் பலர் புறநகர் பகுதிக்கு குடி பெயர்ந்தனர். புழல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மட்டும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சார்பில் பிளாட்டுகள் அமைக்கப்பட்டு ஏராளமான புதுப்புது குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன.

    இந்த நகரங்களில் பிளாட்டுகள் வாங்கி பலரும் வீடு கட்டி உள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இந்த பகுதியில் 15-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உருவாகி உள்ளன. பல்வேறு தொழில் நிறுவனங்களும் தொடங்கப்பட்டு உள்ளன. வயல்வெளி பகுதிகள் குடியிருப்புகளாக மாறியது.

    இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் ஒரு பாசன் கால்வாய் செல்கிறது. புதிய குடியிருப்புகள், நிறுவனங்கள் அமைந்ததன் காரணமாக இந்த பாசன கால்வாய் ஆக்கிரமிப்பால் தூர்ந்து போனது.

    கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் கால்வாயின் பெரும் பகுதி காணாமல் போய்விட்டது. சோழவரம் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் இந்த கால்வாய் மூலம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வட பெரும்பாக்கம் வழியாக கடலுக்கு செல்கிறது. ஒவ்வொரு வருடமும் மழை காலங்களில் இந்த பகுதியில் வீடுகளை தண்ணீர் சூழ்வது வாடிக்கையாகிவிட்டது.

    எனவே கால்வாயை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த அக்டோபர் மாதம் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதனால் தற்காலிகமாக கால்வாய் சீரமைக்கப்பட்டது. இந்த சூழலில் தான் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் மழையினால் இந்த பகுதியை மீண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    தாம்பரம் அருகில் உள்ள ஊரப்பாக்கத்தில் ஜெகதீசன்நகர், செல்வராஜ்நகர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 20 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    பலத்த மழை காரணமாக திருமழிசை அருகே உள்ள மேப்பூர் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 600 வீடுகளை மழை நீர் சூழ்ந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஊராட்சியில் உள்ள விஷ்ணு பிரியா நகரில் 10 தெருக்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள். பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் சேதம் அடைந்து உள்ளன.

    மொத்தத்தில் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ள நீரை வடியவைக்கவும், மீட்பு நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

    • தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தற்போது நகர்கிறது.
    • கனமழை தொடர்பாக சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    சென்னை அருகே வங்கக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 12 மணி நேரம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தற்போது நகர்கிறது.

    கடற்கரை நோக்கி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் நேற்று காலையில் இருந்தே மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

    சென்னையில் மழையின் தாக்கம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். கனமழை தொடர்பாக சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

    • சென்னை அருகே வங்கக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 12 மணி நேரம் நீடிக்கும்.
    • வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை அருகே வங்கக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 12 மணி நேரம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தற்போது நகர்கிறது.

    கடற்கரை நோக்கி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் நாளை மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) பெய்யும். சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னைக்கு 40 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
    • கனமழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.

    சென்னை எழிலகத்தில உள்ள கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சென்னைக்கு 40 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

    * ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டதே அதீத மழைக்கு காரணம்.

    * நாளை காலை காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.

    * பயிர்சேத விவரங்களை உடனடியாக கணக்கெடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    * கனமழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.

    * தற்போதைய மழையில் 85 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்திருக்க வாய்ப்பு உள்ளது.

    * கனமழையால் தற்போது வரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    * நீர்நிலைகள் தூர்வாராதது தொடர்பாக இ.பி.எஸ். அரசியலுக்காக பேசுகிறார்.

    * நாளை காலை வரை விட்டு விட்டு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    * சென்னையில் மட்டும் 11 தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. குழுவிற்கு 30 பேர் என 330 தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் தற்போது தயார் நிலையில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாரிமுனையில் 26.5 செ.மீ. மழை பெய்துள்ளது.
    • பேசின்பாலம், மணலி புதுநகரில் தலா 20 செ.மீ., நுங்கம்பாக்கம் 17. செ.மீ. என அதிகனமழை பெய்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாரிமுனையில் 26.5 செ.மீ. மழை பெய்துள்ளது. சராசரியாக 13 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் இயல்பைவிட எண்ணூரில் 26.4 செ.மீ., ஐஸ்அவுஸ் 23 செ.மீ., பேசின்பாலம், மணலி புதுநகரில் தலா 20 செ.மீ., நுங்கம்பாக்கம் 17. செ.மீ. என அதிகனமழை பெய்துள்ளது.

    தமிழகத்தல் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டம் எண்ணூரில் 26 செ.மீ. மழை பெய்து உள்ளது.

    பாரிமுனை-25 செ.மீ., ஐஸ்அவுஸ்-22, மணலிபுதூர், பொன்னேரி தலா 21 செ.மீ., பேசின்பாலம், சென்னை கலெக்டர் அலுவலகம், பெரம்பூர் தலா 20 செ.மீ., மணலி, செங்குன்றம் தலா 19 செ.மீ., விம்கோ நகர், வடபழனி, டி.ஜி.பி. ஆபிஸ், மேடவாக்கம் தலா 18 செ.மீ., அயனாவரம், தண்டையார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, கத்திவாக்கம் தலா 17 செ.மீ.,

    புழல், சாலிகிராமம், சைதாப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம் தலா 16 செ.மீ., பெரம்பூர், அமைந்தகரை தலா 15 செ.மீ., எம்.ஜி.ஆர். நகர், சோழவரம், நாராயணபுரம், அடையார் தலா 14 செ.மீ., காசிமேடு, வேளச்சேரி, அண்ணா பல்கலைக்கழகம் தலா 13 செ.மீ. மழை பெய்துள்ளது.

    • அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக பலவீனமடைய வாய்ப்பு உள்ளது.
    • 4 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை கனமழை தொடரும்.

    வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக பலவீனமடைய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் இருந்து 250 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.

    இந்நிலையில் 4 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரெட் அலர்ட்.
    • ஒரு மணி நேரமாக இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

    சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    மேலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று பிற்பகலில் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், சென்னையில் எழும்பூர், புதுப்பேட்டை, அடையாறு, பட்டினப்பாக்கம், மெரினா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதேபோல், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களிலும் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

    சென்னையில் காலை முதல் பெய்து வந்த கனமழை சுமார் ஒரு மணி நேரமாக இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால், அலுவலகம் முடிந்து வீட்டிற்கு செல்பவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    • அதி கனமழைக்கான ரெட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
    • பிற்பகலில் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போத ரெட் அலர்ட்.

    சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    மேலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று பிற்பகலில் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டிட்வா புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்கிறது.
    • டாப்ளர் வானிலை ரேடர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகரும் டிட்வா புயல், அடுத்த மூன்று மணி நேரத்தில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்கிறது.

    சென்னையில் இருந்து 150 கி.மீ தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. வேதாரண்யத்தில் இருந்து 170 கி.மீ தொலைவிலும், கடலூருக்கு 90, காரைக்காலுக்கு 120, புதுவைக்கு 90 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    மேலும்,டிட்வா புயலின் நகர்வை காரைக்கால் மற்றும் சென்னையில் உள்ள டாப்ளர் வானிலை ரேடர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • டிட்வா புயலால் மயிலாடுதுறையில் 140-220 மிமீ மழை பெய்துள்ளது.
    • தஞ்சாவூர் மற்றும் திருவாரூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரத்தில் நல்ல மழை பெய்துள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 250 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், டிட்வா புயல் வலுவிலந்துவிட்டது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிழந்துவிட்டது. மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று சுழலாக டிட்வா புயல் மாறிவிட்டது. டிட்வா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிட்டது. டிட்வா புயலால் மயிலாடுதுறையில் 140-220 மிமீ மழை பெய்துள்ளது. தஞ்சாவூர் மற்றும் திருவாரூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இன்று மாலை சென்னையை நெருங்கும்போது புயலின் சுழற்சியால் மீண்டும் மேகங்கள் உருவாக வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார். 

    • டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 250 கி.மீ தொலைவில் உள்ளது
    • டிட்வா புயலின் நகரும் வேகம் 7 கிலோ மீட்டரில் இருந்து 5 கிலோ மீட்டராக குறைந்துள்ளது

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 250 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து குறைந்தபட்சமாக 25 கி.மீ தூரத்தில் நிலவ வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், டிட்வா புயல் இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    மேலும், டிட்வா புயலின் நகரும் வேகம் 7 கிலோ மீட்டரில் இருந்து 5 கிலோ மீட்டராக குறைந்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானது.
    • சென்யார் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது

    மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானது. சென்யார் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் தாழ்வுப் பகுதி நவம்பர் 29ம் தேதி புயலாக மாறக்கூடும் என வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இது புயலாக உருவெடுக்கும் பட்சத்தில் 'டிட்வா' என பெயரிடப்படும் என்றும் டிட்வா புயலால் தமிழகத்திற்கு நவம்பர் 29,30ம் தேதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக ஹேமச்சந்திரன் கூறியுள்ளார்.

    ×