என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heavy Rain"

    • சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தண்ணீரில் மாட்டிக்கொண்டன.
    • தொடர்ந்து மழை வெள்ளம் பல பகுதிகளில் வடியாததால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

    ஊட்டி:

    தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அவற்றை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை மிதமான காலநிலை நிலவிய நிலையில் மதியத்திற்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்தது.

    மதியம் 12 மணிக்கு தொடங்கிய கனமழை 2 மணி வரை கொட்டியது. ஊட்டியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இந்த மழையால் மத்திய பஸ் நிலையம், அரசு தாவரவியல் பூங்கா, தலைகுந்தா, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி சாலை முழுவதும் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது.

    அதேபோல் ரெயில் நிலைய பாலத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் சுற்றுலா பயணிகள் படகு இல்லம் செல்ல முடியாமல் மாற்றுப்பாதையில் சென்றனர்.

    ரெயில் நிலைய காவல் நிலையத்தை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கு பணியில் இருந்த காவலர்கள் வெளியேறினர். ரெயில்வே பாலத்தில் பஸ்கள் மற்றும் ஒரு சில கார்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன.

    ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் குளம் போல் காட்சியளித்தது. அந்த பகுதியில் இருந்து வெளியேறிய மழைநீர் சாலையே தெரியாத அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தண்ணீரில் மாட்டிக்கொண்டன. இதனால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து மழை வெள்ளம் பல பகுதிகளில் வடியாததால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்து வருகிறது. நேற்று கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குடைபிடித்த படி மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.

    • காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில், மின்னல் தாக்கியதில் 6 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கோராபுட், கட்டாக், கோர்த்தா, நயாகட், ஜாஜ்பூர், பாலேசோர் மற்றும் கஞ்சம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை, மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை மற்றும் மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 18-ந்தேதி வரை பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, இன்று நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

    நாளை ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

    நாளை மறுநாள் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு.

    18-ந்தேதி தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரம் மதிய வேளையில் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். 

    • தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும்.
    • கேரளாவில் வருகிற 27-ந்தேதி வாக்கில் தான் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

    தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யலாம்.

    தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கோடை மழை பெய்து வரும் நிலையில், இந்திய வானிலை மையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

    மேலும், கேரளாவில் வருகிற 27-ந்தேதி வாக்கில் தான் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளளது. 

    • இறந்தவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆவர்.
    • மொபைல் நெட்வொர்க்குகள் இல்லாததால் நிவாரண நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றன.

    மத்திய ஆபிரிக்க நாடான காங்கோவில் தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள கசாபா கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது. 

    உள்ளூர் நிர்வாகத்தின் கூற்றுப்படி, இறந்தவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆவர்.

    வெள்ளத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனர், சுமார் 150 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இந்த வெள்ளப்பெருக்கினால் கசாபா நதியின் நீர்மட்டம் உயர்ந்து, பெரிய பாறைகள், மரங்கள் மற்றும் சேறு கிராமத்திற்குள் பாய்ந்து வீடுகளை அழித்தது.

    வெள்ளம் நீரினால் பரவும் நோய்கள், சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்க வழிவகுக்கும் என்று உள்ளூர் அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

    கனமழை காரணமாக நிவாரணப் பணிகளும் சிரமங்களை எதிர்கொள்கின்றன. கசாபா கிராமம் டாங்கன்யிகா ஏரியின் கரையில் அமைந்துள்ளது மற்றும் மொபைல் நெட்வொர்க்குகள் இல்லாததால் நிவாரண நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றன.

    பேரழிவைத் தொடர்ந்து காங்கோ அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச உதவியைக் கோரியுள்ளது.

    • இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • தமிழகம், புதுவையில் மிதமான மழையுடன் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை பூவிருந்தவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக காற்றுடன் கூடிய மிதமான மழைப்பொழிவு இருந்தது.

    காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இந்த திடீர் மழை வெப்பத்தை தணித்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகம், புதுவையில் மிதமான மழையுடன் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூரில் 13ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதேபோல், நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வரும் 14, 15ம் தேதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும், அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குஜராத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • மழை தொடர்பான சம்பவங்களில் 14 பேர் உயிரிழந்தனர்.

    அகமதாபாத்:

    குஜராத்தில் கடந்த சில தினங்களாக இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

    அடுத்த சில நாட்களுக்கு குஜராத்தில் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் பருவம் தவறிய மழை பெய்துள்ளது. கேடா, காந்தி நகர், மெஹ்சானா மற்றும் வதோதரா மாவட்டங்களில் 25 முதல் 40 மி.மீ. மழை பெய்துள்ளது.

    மின்னல், மின்சாரம் பாய்தல், மரங்கள், வீடுகள் மற்றும் விளம்பர பலகைகள் இடிந்து விழுந்தது போன்ற மழை தொடர்பான சம்பவங்களில் 14 பேர் உயிரிழந்தனர்.

    கேடா மாவட்டத்தில் 4 பேர், வதோதராவில் 3 பேர், அகமதாபாத், தாஹோத் மற்றும் ஆரவல்லியில் தலா 2 பேர் மற்றும் ஆனந்த் மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர் என தெரிவித்தனர்.

    • சுமார் 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.
    • 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த வாழை, மா மரங்கள், பப்பாளி, சோளம், நெல் சேதமடைந்தது.

    ஆந்திராவில் உள்ள சித்தூர், பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் இரவு 7 மணி வரை சூறாவளி காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    சுமார் 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.

    இதனால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்தன. 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த வாழை, மா மரங்கள், பப்பாளி, சோளம், நெல் சேதமடைந்தது. ஸ்ரீகாகுளத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த சந்திப் என்பவர் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    திருப்பதி சம்சுக்தி நகரில் டிரான்ஸ்பார்மர் பழுது பார்த்துக் கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி இறந்தார். இதே போல் மாநிலம் முழுவதும் இடி மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்.

    • சினிமா பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • சந்தோஷ் திரையரங்கிற்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னையில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்த நிலையில், சென்னை பூந்தமல்லியில் உள்ள சந்தோஷ் திரையரங்கின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்துள்ளது.

    இதனால், சினிமா பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்தநிலையில் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், ரசிகர்கள் வெளியேற்றப்பட்டு சந்தோஷ் திரையரங்கிற்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈவிபி பிலிம் சிட்டி அருகே ஈவிபி திரையரங்கம் அண்மையில் சந்தேஷ் திரையரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதுடன் வானம் இருட்டியது.
    • காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதுடன் வானம் இருட்டியது.

    இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    மேலும், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள்து. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதுடன் வானம் இருட்டியுள்ளது.

    சென்னை புறநகர் பகுதிகளிலும் காற்று பலமாக வீசவதால் வெளியில் செல்ல முடியாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர். இருப்பினும், காலை முதல்  வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென வானம்  மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இது வெயிலை தணித்து இதமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால், பொது மக்கள் உற்சாகமாக உள்ளனர். மேலும், பலத்த மழை  பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மயைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • சிக்கிமின் தலைநகரான காங்டாக்கிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுங்டாங்.
    • அனைத்து அனுமதிகளையும் அதிகாரிகள் ரத்து செய்தனர்.

    வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் நேற்று  பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நிலச்சரிவைத் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் அவர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    சிக்கிமின் தலைநகரான காங்டாக்கிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுங்டாங்கில் சுமார் 200 சுற்றுலா வாகனங்கள் சிக்கித் தவிப்பதாகவும், பயணிகள் அங்குள்ள ஒரு குருத்வாராவில் தங்கியிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    லாச்சென்-சுங்தாங் சாலையில் முன்ஷிடாங்கிலும், லாச்சுங்-சுங்தாங் சாலையில் லெமா பாப் பகுதியிலும் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.

    மறு அறிவிப்பு வரும் வரை வடக்கு சிக்கிமிற்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்ப வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அனைத்து சுற்றுலா நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இன்று (ஏப்ரல் 25), சுற்றுலாப் பயணிகள் இந்தப் பகுதியைப் பார்வையிட வழங்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் அதிகாரிகள் ரத்து செய்தனர். லாச்சுங் மற்றும் லாச்சென் நகரங்களுக்கான போக்குவரத்து அமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    ×