என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "floods"

    • வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன.
    • பல கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

    பிலிப்பைன்ஸ் நாட்டை கல்மேகி என்ற சூறாவளி தாக்கியது. இதனால் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 40 பேர் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    சூறாவளி காரணமாக 180க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வெள்ள மீட்புப் பணிக்காக சென்ற ஹெலிகாப்டரும் மோசமான வானிலையால் விழுந்து நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சூறாவளி நாளை இரவு வியட்நாமின் மத்தியப் பகுதிகளில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வியட்நாம் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

    • பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
    • வெள்ள பாதிப்பை பார்வையிட பாஜக எம்.பி. கஜென் முர்மு சென்றார்.

    மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது.

    இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

    டார்ஜிலிங்கில் கனமழை சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். கனமழை மற்றும் நிலச்சரிவுவால் பாதிக்கப்பட்டோருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார்.

    இந்த நிலையில் நக்ரகட்டா பகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிட பாஜக எம்.பி. கஜென் முர்மு சென்றார். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் மீது சிலர் கற்களை வீசினர். இதில் பாஜக எம்.பி. முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    இந்த தாக்குதலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு நடத்தியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

    • காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
    • இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே மிரிக் பகுதியில் கனமழை வெள்ளத்தால் பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.

    நேபாளத்தில் நேற்று முதல் பெய்து வரும் கனமழை, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்திய எல்லைக்கு அருகிலுள்ள கிழக்கு நேபாளத்தின் இலாம் மாவட்டத்தில் மட்டும் ஏற்பட்ட பல நிலச்சரிவுகளில் 35 பேர் கொல்லப்பட்டனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    தலைநகர் காத்மாண்டுவில் பாகமதி உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

    இதனால் காத்மாண்டு சாலைகள் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    தென்கிழக்கு நேபாளத்தில் உள்ள கோசி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்வதால், கோசி தடுப்பணையின் 56 மதகுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன.

    மேலும் நேபாளத்தில் நாளை வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இதற்கிடையே இந்தியாவின் மேற்கு வங்க  மாநிலம் டார்ஜிலிங் அருகே மிரிக் பகுதியில் கனமழை வெள்ளத்தால் பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.

    இந்த விபத்தால் சிலிகுரி - மிரிக் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    விபத்து நடந்த பகுதியின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலம் இடிந்த விபத்தில் பலர் நீரில் அடித்துச்செல்லப்பட்டதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.    

    • 4 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் நெல் பயிர் சேதமடைந்துள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளன.
    • ராகுல் காந்தி பஞ்சாப் சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தார்.

    வெள்ளத்தால் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பஞ்சாபிற்கு மத்திய அரசு அறிவித்த ரூ.1,600 கோடி நிதி உதவி குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.

    மத்திய அரசு அறிவித்த சொற்ப உதவி பஞ்சாப் மக்களுக்கு பெரும் அநீதி இழைத்துள்ளது என்று அவர் கூறினார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு ராகுல் எழுதியுள்ள கடிதத்தில், மழைப் பொழிவால் பஞ்சாப் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. 4 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் நெல் பயிர் சேதமடைந்துள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளன.

    வெள்ளத்தால் லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகளை இழந்து, நிலங்களை பயிரிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

    பஞ்சாபில் மழையால் ரூ.20,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்கும்போது, ரூ.1,600 கோடியை மட்டும் மத்திய அரசு அறிவிப்பது நியாயமற்றது. முழு தொகையையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

    சமீபத்தில் ராகுல் காந்தி பஞ்சாப் சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தார். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குருதாஸ்பூர் விவசாயிகளிடம் பேசினார்.

    இதற்கிடையில், சமீபத்தில் பஞ்சாப் சென்ற பிரதமர், அங்குள்ள நிலைமையை வான்வழியாக ஆய்வு செய்தார். இந்த மாதம் 9 ஆம் தேதி, பஞ்சாபிற்கு ரூ.1,600 கோடி நிதி உதவியை அறிவித்தார். இந்த சூழலில், ராகுல் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

    • அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
    • மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், காய்ச்சல் மற்றும் குறைந்த இதயத் துடிப்பு காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    முன்னதாக, அவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

    மாலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவர் மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

    அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்தது. பஞ்சாபில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று பாவந்த் மான் ஆய்வு செய்து வந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

     

    • தெருக்கள் நீரோடைகளாகவும், சந்தைப் பகுதிகள் குளங்களாகவும் மாறி வருகின்றன.
    • தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர்.

    தலைநகர் டெல்லி மற்றும் பஞ்சாப் பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

    டெல்லியில் யமுனை நதி அபாய அளவைத் தாண்டி ஓடி வருவதால், பல குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பெரும்பாலான தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தெருக்கள் நீரோடைகளாகவும், சந்தைப் பகுதிகள் குளங்களாகவும் மாறி வருகின்றன.

    மஞ்சு கா தில்லா-விலிருந்து மதன்பூர் காதர் மற்றும் பதர்பூர் வரை வசிக்கும் பல குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளன.

    இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி யமுனை நதி 207 மீட்டர் உயரத்தை எட்டியது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர். பலர் சாலைகளில் அமைக்கப்பட்ட சிறிய கூடாரங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    • இமயமலையின் இந்திய பகுதியில் மொத்தம் 681 பனிப்பாறை ஏரிகள் உள்ளன.
    • இதில் 432 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன.

    இமயமலையின் இந்திய பகுதியில், 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இமயமலையின் இந்திய பகுதியில் மொத்தம் 681 பனிப்பாறை ஏரிகள் உள்ளன. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 432 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன.

    இந்தப் பகுதிகளில் பனிப்பாறை ஏரிகள் விரிவடைவதால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • அனைத்து அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் குறிப்பாக மத்திய அரசு பஞ்சாபிற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
    • 37 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் இவ்வளவு பயங்கரமான பேரழிவைச் சந்தித்துள்ளது.

    கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பஞ்சாப் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

    இந்நிலையில் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் குறிப்பாக மத்திய அரசு பஞ்சாபிற்கு உதவுமாறு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், "இன்று பஞ்சாப் எதிர்கொள்ளும் பேரழிவு சாதாரண வெள்ளம் அல்ல,  37 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் இவ்வளவு பயங்கரமான பேரழிவைச் சந்தித்துள்ளது.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன, இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட நமது சகோதர சகோதரிகள் ஒரே அடியில் வீடற்றவர்களாகிவிட்டனர். அவர்களின் வாழ்நாள் முழுவதும் சம்பாத்தியமும் கனவுகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

    நாட்டிற்கு ஏற்பட்ட எந்தவொரு பேரிடரையும் பஞ்சாப் எப்போதும் எதிர்த்து நிற்கிறது. இன்று, பஞ்சாப் நெருக்கடியில் உள்ளது. இந்த கடினமான நேரத்தில் பஞ்சாப் மக்களுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவுமாறு எனது நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

    ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை பஞ்சாப் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குகிறார்கள். இந்த பயங்கரமான துயரத்திலிருந்து பஞ்சாபைக் காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைவோம்." என்று அழைப்பு விடுத்துள்ளார். 

    • படகு மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.
    • உணர்ச்சிவசப்பட்ட ​​ பகவந்த் மான் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

    கனமழை மற்றும் வெள்ளத்தால் பஞ்சாப் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

    இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கட்டி ராஜோ கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.

    படகு மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.

    இதன்போது உள்ளூர் கிராம மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    இதன்போது ஒரு வயதான பெண்மணி தனது துயரத்தைப் பகிர்ந்து கையெடுத்து வணங்கிறார்.  அப்போது உணர்ச்சிவசப்பட்ட பகவந்த் மான் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பு குறித்து ஆராய்ந்து பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் அரசாங்கம் முழு இழப்பீடு வழங்கும் என்று பகவந்த் மான் உறுதியளித்தார்.

    • மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
    • நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

    இந்நிலையில் மும்பையில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் 'ஸ்பைடர் மேன்' உடையணிந்த ஒரு நபர் வைப்பரைக் கொண்டு தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் காட்சி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    'இன்னும் நிறைய தண்ணீரை அகற்ற வேண்டும்' என்ற நகைச்சுவையான தலைப்புடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, கிட்டத்தட்ட 2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

    இந்த வீடியோவுக்கு மும்பைவாசிகள், நகைச்சுவையாகவும்,  மும்பையின் உள்கட்டமைப்பை அரசு மேம்படுத்தாததால் ஏற்படும் இன்னல்கள் குறித்தும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

    • ரெயில் தண்டவாளங்களில் 17 அங்குலம் வரை தண்ணீர் தேங்கியதால், புறநகர் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
    • மும்பை மோனோ ரெயில் ஒன்று நடுவழியில் அந்தரத்தில் சிக்கிய நிலையில் அதில் இருந்த சுமார் 500 பயணிகள் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டனர்.

    மகாரஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 300 மி.மீ. மழை பெய்துள்ளது. நகரில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

    இந்நிலையில் அடுத்த 48 மணிநேரம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

    மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழையால் மிதி (Mithi) நதி அபாயக்கட்டத்தை தாண்டியதால், அப்பகுதியில் இருந்த 400 முதல் 500 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    மும்பை விமான நிலையத்தில் 304 புறப்படும் விமானங்களும், 198 உள்வரும் விமானங்களும் தாமதமாகின. 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ரெயில் தண்டவாளங்களில் 17 அங்குலம் வரை தண்ணீர் தேங்கியதால், புறநகர் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

    தாழ்வான பகுதிகளான தாதர், மாதுங்கா, பரேல், சியோன் போன்ற இடங்களில் வெள்ள நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கி வருகிறது.  

    இதற்கிடையே மும்பை மோனோ ரெயில் ஒன்று நடுவழியில் அந்தரத்தில் சிக்கிய நிலையில் அதில் இருந்த சுமார் 500 பயணிகள் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டனர்.

    • தாழ்வான பகுதிகள் முற்றிலுமாக நீரில் மூழ்கி, இயல்பு வாழ்க்கை முடங்கியது.
    • சாலைகளில் தண்ணீர் ஆறுகளை போல ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    டெல்லியில் நேற்றும் இன்றும் பெய்த பலத்த மழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகள் முற்றிலுமாக நீரில் மூழ்கி, இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    பஞ்ச்குயன் மார்க், மதுரா சாலை, பாரத் மண்டபத்தின் நுழைவாயிலில் உள்ள சாலைகள், சாஸ்திரி பவன், ஆர்.கே. புரம், மோதி பாக் போன்ற பகுதிகள் நீரில் மூழ்கின.பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் ஆறுகளை போல ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    இந்நிலையில், டெல்லி ஹரிநகரில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பழைய பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த, குடிசைப் பகுதியை சேர்ந்தவர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×