என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vietnam"

    • உலகத்திலேயே வெள்ளத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக வியட்நாம் திகழ்கிறது.
    • வியட்நாம் மக்கள் தொகையில பாதிபேர் மிகவும் பாதிப்பு அடையக்கூடிய இடத்தில் வசித்து வருகின்றனர்.

    வியட்நாமில் கடந்த ஒருவாரமாக பெய்த கனமழையால் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக, அந்நாட்டின் பேரிடர் தடுப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

    இந்த மாதம் தொடக்கத்தில் கல்மேகி சூறாவளி மற்றும் கனமழையால் வியட்நாம் வெள்ளம் கரைபுரண்டு ஓடி பெரிய அழிவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த ஒருவாரமாக பெய்த கனமழை மேலும் புரட்டிப்போட்டுள்ளது.

    கனமழை காரணமாக பல வியட்நாமின் மத்திய மலைப் பகுதிகளில் அதிக அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ரெயில் தண்டவாளங்கள், சாலை வழிகள் மிகப்பெரிய அளவில் சேதம் அடைந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்து இன்றி சிரமப்பட்டனர்.

    உலகத்திலேயே வெள்ளத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக வியட்நாம் திகழ்கிறது. வியட்நாம் மக்கள் தொகையில பாதிபேர் மிகவும் பாதிப்பு அடையக்கூடிய இடத்தில் வசித்து வருகின்றனர்.

    தென்கிழக்கு ஆசியா முழுவதும் காலநிலை மாற்றத்தால் தீவிர புயல்கள் மற்றும் மழையால் அழிவுக்கான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் அடிக்கடி நிகழும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

    • வியட்நாமின் பொருளாதார தலைநகரான ஹோ சி மின் நகரத்திலிருந்து சென்றுகொண்டிருந்தது.
    • கணவாய் இருபுறமும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டதால் சிக்கல் ஏற்பட்டது.

    வியட்நாமில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து மீது பாறைகள் விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.

    வியட்நாமின் பொருளாதார தலைநகரான ஹோ சி மின் நகரத்திலிருந்து 32 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணியளவில் கான் லே மாகாணத்தில் கணவாய் ஒன்றில் இடையே பேருந்து சென்றுகொண்டிருந்தது.

    அப்போது ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்தின் மேல் பாறைகள் விழுந்ததால் பேருந்தின் முன்பகுதி நசுங்கியது.

    பல பயணிகள் பேருந்தில் சிக்கிக் கொண்ட நிலையில் கனமழையால் கணவாய் இருபுறமும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டதால், மீட்புப் படையினரால் பல மணி நேரம் சம்பவ இடத்தை அடைய முடியவில்லை.

    நள்ளிரவுக்குப் பிறகுதான் மீட்புப் படையினர் பலரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் உடல்களும் மீட்கப்பட்டன.

    கான் லே மாகாணத்தில் பல மலைப்பகுதிகளில் கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

    • வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன.
    • பல கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

    பிலிப்பைன்ஸ் நாட்டை கல்மேகி என்ற சூறாவளி தாக்கியது. இதனால் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 40 பேர் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    சூறாவளி காரணமாக 180க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வெள்ள மீட்புப் பணிக்காக சென்ற ஹெலிகாப்டரும் மோசமான வானிலையால் விழுந்து நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சூறாவளி நாளை இரவு வியட்நாமின் மத்தியப் பகுதிகளில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வியட்நாம் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

    • டெல்லியில் இருந்து இரவு 9:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:50 மணிக்கு குவாங்சோ சென்றடையும்.
    • ஏர்பஸ் ஏ320 ரக விமானங்கள் பயன்படுத்தப்படும்.

    கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர். இதனால் இரு நாடுகளிடையே விரிசல் வலுப்பெற்றது.

    எல்லை பிரச்சனைகள் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

    சமீபத்தில் சீனாவில் நடந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து சீனாவுக்கும் இடையே நேரடி விமானங்களை நவம்பர் 10 முதல் இயக்க உள்ளதாக இந்திய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ (IndiGo) அறிவித்துள்ளது.

    அதன் அறிவிப்பின்படி, புதிய நேரடி தினசரி விமானங்கள் டெல்லி மற்றும் சீனாவின் குவாங்சோ நகருக்கு இடையே நவம்பர் 10 முதல் தொடங்கவுள்ளன.

    ஏற்கனவே அக்டோபர் 26 முதல் கொல்கத்தா மற்றும் குவாங்சோ இடையே தினசரி விமானப் சேவையை தொடங்குவதாக இண்டிகோ அறிவித்திருந்த நிலையில் தற்போது டெல்லியில் இருந்தும் நேரடி விமான சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதன்படி தினசரி, இண்டிகோ விமானம், டெல்லியில் இருந்து இரவு 9:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:50 மணிக்கு குவாங்சோ சென்றடையும்.

    பின்னர் குவாங்சோவில் இருந்து அதிகாலை 5:50 மணிக்கு புறப்பட்டு காலை 10:10 மணிக்கு டெல்லி வந்துசேரும்.

    அதேபோல் டெல்லி மற்றும் வியட்நாமின் ஹனோய் நகருக்கு இடையே புதிய நேரடி தினசரி விமானச் சேவை டிசம்பர் 20 முதல் தொடங்கவுள்ளதாகவும் இண்டிகோ இன்று அறிவித்துள்ளது.

    இந்த இரண்டு வழித்தடங்களிலும் இண்டிகோவின் ஏர்பஸ் ஏ320 ரக விமானங்கள் பயன்படுத்தப்படும்.

    "உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா இடையேயான சேவைகள் மீண்டும் தொடங்குவது, கலாச்சார பரிமாற்றம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கு அபரிமிதமான ஆற்றலை வழங்குகிறது" என்று இண்டிகோவின் விற்பனைப் பிரிவுத் தலைவர் வினய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகக் கூறி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு 50% கூடுதல் வரி விதித்த பிறகு இந்தியா-சீனா உறவு வலுப்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. 

    • வியட்நாமில் நிலம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இழப்பீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு உரிமை இல்லை.
    • 990 ஹெக்டேர் நிலம் வாழைப்பழங்கள், லாங்கன்கள் மற்றும் பல பயிர்களால் நிறைந்துள்ளது. இங்குள்ள அனைத்து விவசாயிகளும் தலைமுறை தலைமுறையாக இங்கு வசித்து வருகின்றனர்.

    வியட்நாமில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குடும்பத்தின் மூலம் அமைக்கப்படவுள்ள கோல்ஃப் கிளப் மைதானத்திற்காக 990 ஹெக்டேர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சொற்ப பணம் மற்றும் சில மாதங்களுக்கான அரிசி ரேஷனாக வழங்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

    இந்த கோல்ஃப் மைதான திட்டத்தை Kinhbac City என்ற வியட்நாம் நிறுவனம், டிரம்ப் நிறுவனத்திற்கு $5 மில்லியன் உரிம கட்டணம் செலுத்தி செயல்படுத்த உள்ளது.

    டிரம்பின் இந்த ஒப்பந்தம் வியட்நாம் மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது

    அதிகாரிகள், ஒரு சதுர மீட்டருக்கு $12 முதல் $30 வரை இழப்பீடு தருவதாக தெரிவித்துள்ளனர்.

    வியட்நாமில் நிலம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இழப்பீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு உரிமை இல்லை.

    ஹங் யென் மாகாணத்தில் உள்ள ஒரு விவசாயிக்கு, 200 சதுர மீட்டர் நிலத்திற்கு $3,200 மற்றும் சில மாதங்களுக்கு அரிசி மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இது வியட்நாமில் ஒரு வருட சராசரி சம்பளத்தை விடக் குறைவு.

    990 ஹெக்டேர் நிலம் வாழைப்பழங்கள், லாங்கன்கள் மற்றும் பல பயிர்களால் நிறைந்துள்ளது. இங்குள்ள அனைத்து விவசாயிகளும் தலைமுறை தலைமுறையாக இங்கு வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆடம்பர விளையாட்டுக்காக அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டங்கள் எழுந்துள்ளன. 

    • வியட்நாமின் ஹா லாங் விரிகுடாவில் ஒரு சுற்றுலாப் படகு திடீரென கவிழ்ந்தது.
    • இந்த விபத்தில் கடலில் மூழ்கி 34 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ஹனோய்:

    வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனோயில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஹா லாங் வளைகுடா பகுதிக்கு படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. ஹா லாங் கடலோர பகுதியில் திடீரென சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. படகில் பயணித்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் கடலில் தத்தளித்த 11 பேரை உயிருடன் மீட்டனர். இந்த விபத்தில், 8 குழந்தைகள் உள்பட 34 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மாயமான 8 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுதொடர்பாக மீட்புக் குழுவினர் கூறுகையில், திடீரென வீசிய சூறைக்காற்றால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.

    • இந்தப் பூனைக்குட்டிகளின் மதிப்பு மட்டும் ரூ.50 லட்சத்திற்கும் மேலாகும்.
    • மணமகளின் மாமியார்களும் ரூ.6.5 லட்சம் ரொக்கம், பத்து தங்கக் கட்டிகள் மற்றும் வைர நகைகளை அளித்துள்ளனர்.

    திருமணத்தின் போது பணம், தங்கம், நிலம் என வரதட்சணை வழங்குவது வழக்கம். ஆனால், வியட்நாமைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கு, அவரது பெற்றோர் இவற்றோடு சேர்த்து 100 அரிய வகை சிவேட் பூனைக்குட்டிகளையும் வரதட்சணையாக வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தப் பூனைக்குட்டிகளின் மதிப்பு மட்டும் ரூ.50 லட்சத்திற்கும் மேல் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தப் பூனைக்குட்டிகள், உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கோபி லுவாக் காபி கொட்டைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.

    ஆசிய பனை பூனைகளுக்கு காபி விதைகள் உணவாக அளிக்கப்பட்டு, அவை முழுமையாக ஜீரணிக்கப்படாமல் கழிவு வழியாக வெளியேற்றப்படும் கொட்டைகள் சேகரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

    இந்த காபி கொட்டை தொழிலை தங்கள் மகள் தொடங்க உதவுவதற்காகவே இந்தப் பூனைகளை வரதட்சணையாக அளித்ததாகப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

    பூனைக்குட்டிகளுடன், மணமகளுக்கு 25 தங்கக் கட்டிகள், ரூ.17 லட்சம் ரொக்கம், ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிறுவனப் பங்குகள், ஏழு நிலங்கள் மற்றும் பிற விலையுயர்ந்த சொத்துக்களும் வழங்கப்பட்டுள்ளன.

    மணமகளின் மாமியார்களும் ரூ.6.5 லட்சம் ரொக்கம், பத்து தங்கக் கட்டிகள் மற்றும் வைர நகைகளை அளித்துள்ளனர்.

    • மக்களவையில் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
    • மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு அவையில் பேசுவதற்கு விதிகள் உள்ளன என்றார் அமித்ஷா.

    புதுடெல்லி:

    மக்களவையின் கண்ணியத்தை நிலைநிறுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை விதிகளை ராகுல் காந்தி பின்பற்றவேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார்.

    இதற்கிடையே, மக்களவையில் தனக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து ராகுல் காந்தியின் விமர்சனம் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா கூறியதாவது:

    மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு அவையில் பேசுவதற்கு விதிகள் உள்ளன. அவற்றை விருப்பப்படி நடத்த முடியாது என்பது தெரியாமல் இருக்கலாம்.

    பட்ஜெட் மீதான விவாதத்தில் அவருக்கு (ராகுல் காந்திக்கு) 42 சதவீத நேரம் வழங்கப்பட்டது. அப்போது யார் பேசுவது என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

    ஆனால் பாராளுமன்றத்தில் ஒரு தீவிர விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, அவர் வியட்நாமில் இருந்தார், அவர் திரும்பி வந்ததும், தனது விருப்பப்படி பேச வலியுறுத்தத் தொடங்கினார்.

    பாராளுமன்றம் விதிகள் மற்றும் நடைமுறைகளின்படி இயங்குகிறது. காங்கிரஸ் கட்சியைப் போல அல்ல, ஒரு குடும்பத்தால் நடத்தப்படுகிறது, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பேசலாம். நான் சொல்வதற்கு வருந்துகிறேன், அவர்கள் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

    • ராகுல் காந்தி தன்னுடைய சொந்த மக்களவை தொகுதியில் நீண்ட நேரம் செலவழிப்பதில்லை.
    • திடீரென வியட்நாம் மீது அதிக பாசம் வைப்பதற்கான காரணம் என்ன?

    காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அவரது தொகுதியை விட, வியட்நாமில் அதிக நேரம் செலவிட்டுள்ளார். வியட்நாம் மீதான அசாதாரண பாசம் குறித்து விளக்க வேண்டும் என பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:-

    ராகுல் காந்தியை எங்கே? அவர் வியட்நாம் சென்றுள்ளதாக கேள்விப்படுகிறேன். அவர் தன்னுடைய சொந்த மக்களவை தொகுதியில் நீண்ட நேரம் செலவழிப்பதில்லை. திடீரென வியட்நாம் மீது அதிக பாசம் வைப்பதற்கான காரணம் என்ன?

    வியட்நாம் மீதான அசாதாரண பாசம் குறித்து ராகுல் காந்தி விளக்க வேண்டியது அவசியம். அவர் அங்கே அடிக்கடி செல்வது மிகவும் வினோதமானது. ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவர். அவர் இந்தியாவில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

    பாஜக ஐடி துறை தலைவர் அமித் மாள்வியா எக்ஸ் பக்கத்தில் "எதிர்க்கட்சித் தலைவர் என்ற முக்கிய பதவியை ராகுல் காந்தி வகிக்கிறார். மேலும் அவர் மேற்கொண்ட ஏராளமான ரகசிய வெளிநாட்டுப் பயணங்கள், குறிப்பாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது தேசியப் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன." எனத் தெரிவித்துள்ளார்.

    • வியட்னாம் போர் 20 வருடங்கள் நடந்தது
    • 1973ல் அமெரிக்க படை வியட்னாமில் இருந்து வெளியேறியது

    1955 முதல் 1975 வரை வட வியட்னாம் மற்றும் தெற்கு வியட்னாம் ஆகியவற்றுக்கிடையே நீண்ட போர் நடந்தது. இப்போரில் சீனாவும், ரஷியாவும் வட வியட்னாமிற்கு ஆதரவு வழங்கின. தெற்கு வியட்னாமிற்கு அமெரிக்கா மற்றும் கம்யூனிஸத்திற்கு எதிரான நாடுகள் கூட்டாக ஆதரவு வழங்கின.

    வியட்னாம் போர் என அழைக்கப்படும் இப்போர், சுமார் 20 ஆண்டுகள் நடைபெற்றது. இதில் தீவிரமாக பங்கேற்ற அமெரிக்க ராணுவத்தால் வியட்னாம் நாட்டு கொரில்லா போர்முறையினை சமாளிக்க முடியவில்லை. இதனையடுத்து, 1973 ஆண்டு அமெரிக்க படை தெற்கு வியட்னாமை விட்டு வெளியேறியது.

    இந்நிலையில், ஜி20 18-வது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேற்று வியட்னாம் தலைநகர் ஹேனோய் சென்றார். அங்கு அவர் அந்நாட்டுடன் ஒருங்கிணைந்த மூலோபாய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.

    வியட்னாம் போர் முடிந்து சுமார் 50 வருட காலம் கழித்து, அந்நாட்டுடன் முக்கிய இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் நீண்டகால நட்பு நாடான வியட்னாம் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் புரிவது சீனாவை அமெரிக்கா தனிமைப்படுத்த எடுக்கும் நடவடிக்கையாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

    ஆனால், இதனை மறுத்த ஜோ பைடன், "பனிப்போர் காலத்தை கடந்து நாம் சிந்திக்க வேண்டும். அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கு ஒரு நிலையான, வளரக்கூடிய பொருளாதார தளத்தை அமைத்து கொள்வதற்கு நாங்கள் பல முயற்சிகள் எடுக்கிறோம். சர்வதேச சமூகத்தில் வியட்னாம் ஒரு நட்பான, நம்பிக்கையான மற்றும் பொறுப்புள்ள கூட்டாளி. சீனாவை கட்டுப்படுத்தவோ, தனிமைப்படுத்தவோ அமெரிக்கா விரும்பவில்லை," என்று தெரிவித்தார்.

    அமெரிக்காவிற்கு வியட்னாம் 127 பில்லியன் டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்வதும், 2022-ல் வியட்னாமை விட 4 மடங்கு அதிகம் சீனா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததும் குறிப்பிடத்தக்கது.

    உலக வர்த்தகத்தில் சீனாவின் உள்நாட்டு தயாரிப்பும், ஏற்றுமதியும் மிக பெரியது என்றும் அதனை வியட்னாம் ஈடு செய்வது கடினம் என்பதாலும் இந்த ஒப்பந்தத்தின் பலன் சில வருடங்கள் கடந்துதான் தெரிய வரும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • டென்சன் நியூமோசெஃபாலஸ் எனும் அரிய வகை மூளை நோய் கண்டுபிடிக்கப்பட்டது
    • மது அருந்த சென்ற இடத்தில் ஒரு கைகலப்பில் முகத்தில் தாக்கப்பட்டார்

    வியட்நாம் நாட்டை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டது. அத்துடன் அவருக்கு நாசியிலிருந்து நீர் வடிதல் பிரச்சனையும் இருந்து வந்தது.

    இதையடுத்து, அந்நாட்டின் வடமத்திய கடற்கரை பகுதியின் டாங் ஹாய் (Dong Hoi) நகரில் உள்ள கியூபா ஃப்ரெண்ட்ஷிப் மருத்துவமனையில் (Cuba Friendship Hospital) சிகிச்சைக்காக சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த நரம்பியல் துறை தலைமை மருத்துவர், டாக்டர். குயன் வேன் மேன் (Dr. Nguyen Van Man) சிடி ஸ்கேன் பரிசோதனைக்கு பரிந்துரைத்தார். பரிசோதனையின் முடிவில் அந்த நோயாளியின் மூளையில் டென்சன் ந்யூமோசெஃபாலஸ் (tension pneumocephalus) எனும் அரிய நிலை இருப்பது தெரிய வந்தது. இது மூளையில் உள்ள அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு அபாய நிலை.

    இதற்கான காரணம் என்னவென்று மேலும் பரிசோதித்த போது மருத்துவர்களே வியக்கும் வண்ணம், அந்த நோயாளியின் நாசி வழியாக சென்று மூளைக்குள் இரண்டு சாப்ஸ்டிக்ஸ் குச்சிகள் பதிந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதை எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.

    சீனா, கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உணவை எடுத்து உண்ண பயன்படுத்தும் குச்சிகள் எவ்வாறு நாசிக்குள் ஏறியது என மருத்துவர்கள் வியப்படைந்தனர்.

    இது குறித்து அந்த நோயாளியிடம் கேட்ட போது, அதற்கு அவர், 5 மாதங்களுக்கு முன் மது அருந்த சென்ற இடத்தில் ஏற்பட்ட ஒரு கைகலப்பில் அவர் முகத்தில் யாரோ ஒரு பொருளால் குத்தியதை மட்டும் நினைவுகூர்ந்தார். ஆனால், அப்போதே அவர் மருத்துவமனைக்கு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நாசியில் எந்த பொருளையும் கண்டு பிடிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

    அந்த நோயாளி தற்போது நல்ல உடல்நலத்துடன் விரைவில் வீடு திரும்ப உள்ளார்.

    • 12.5 பில்லியன் டாலர் மோசடி செய்ததாக 67 வயதான ரியல் எஸ்டேட் பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லான் 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்
    • 12.5 பில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ஆகும்

    வியட்நாம் நாட்டில் 12.5 பில்லியன் டாலர் நிதி மோசடி செய்ததாக 67 வயதான ரியல் எஸ்டேட் பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லான் 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

    12.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி) என்பது வியட்நாம் நாட்டின் 2022 ஜிடிபியில் கிட்டத்தட்ட 3% ஆகும்.

    2012 முதல் 2022 வரை சைகோன் ஜாயின்ட் ஸ்டாக் கமர்ஷியல் வங்கியை அவர் சட்டவிரோதமாக கட்டுப்படுத்தி, ஆயிரக்கணக்கான போலியான நிறுவனங்கள் மூலமாகவும், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலமாகவும் இந்த நிதி மோசடியை அவர் செய்துள்ளார் என்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது

    இந்த வழக்கை தெற்கு வியட்நாமில் உள்ள ஹோ சி மின் நகரில் உள்ள நீதிமன்றம் விசாரித்தது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    வியட்நாமில் நடைபெற்று வரும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் தீவிரமடைந்த நிலையில் தான் பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லான் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். இவரின் கைதை அடுத்து அப்போது ஜனாதிபதி பதவியில் இருந்த வோ வான் துவாங் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்தகைய ஊழல்களால் வியட்நாமில் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் 1,300 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அந்நாட்டின் சந்தையில் இருந்து விலகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    ×