என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூனை"

    • விநாயகர் சிலைகளுக்காக அலங்கார பந்தல்கள் அமைக்கப்பட்டு சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
    • விநாயகர் சிலை ஒன்றின் கையில் பூனை ஒன்று அமைதியாக படுத்து தூங்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

    விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே, நாக்பூர், நாசிக் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்கு வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டன.

    மேலும் விநாயகர் சிலைகளுக்காக அலங்கார பந்தல்கள் அமைக்கப்பட்டு சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி பந்தலில் உள்ள விநாயகர் சிலை ஒன்றின் கையில் பூனை ஒன்று அமைதியாக படுத்து தூங்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

    இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், விநாயகர் சிலையின் கையில் பூனை தூங்கும் காட்சிகள் உள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், சகோதரர் பாதுகாப்பான கைகளில் இருக்கிறார் என பதிவிட்டார். மற்றொருவர், அவர்கள் ஆறுதல் இருக்கும் இடத்தில் குடியேறுகிறார்கள் என பதிவிட்டிருந்தார்.



    • பீகாரில் டிரம்புக்கு வசிப்பிடச் சான்றிதழ் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது
    • நாய் பாபுவின் தந்தை குட்டா பாபு என்றும் தாய் குடியா தேவி என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    பீகார் மாநிலம் பாட்னாவில் பாபு என்ற ஒரு நாய்க்கு வசிப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

    வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கும் சமயத்தில் நடந்த இச்சம்பவம், அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு செயல்முறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியது.

    சான்றிதழ் எண் BRCCO/2025/15933581, வார்டு எண் 15, மசாவர்ஹி நகராட்சி கவுன்சில் என்றும் இந்த பகுதியில் பாபு வசித்து வருகிறார் என்றும் அந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்த சான்றிதழின் வலதுபுற ஓரத்தில் நாய் ஒன்றின் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. பாபுவின் தந்தை குட்டா பாபு என்றும் தாய் குடியா தேவி என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் வைரலான நிலையில் இந்த இருப்பிட சான்றிதழ் இன்று ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் 'Catty Boss', 'Cat Kumar' 'Cattiya Devi' Q எனக்குறிப்பிட்டு, பூனையொன்றுக்கு வசிப்பிடச் சான்றிதழ் கோரி ஆன்லைனில் விண்ணப்பம் வந்துள்ளது. இதனை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உதிதா சிங், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.

    ஏற்கெனவே சோனாலிகா டிராக்டர்', 'டொனால்ட் டிரம்ப்' பெயர்களுக்கு பீகாரில் வசிப்பிடச் சான்றிதழ் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பூனையின் நகக்கீறல் காரணமாக சிறுமி இறந்திருக்க வாய்ப்பில்லை என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • பரிசோதனை முடிவு வந்தால் தான், சிறுமி எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் பந்தளம் பகுதியை சேர்ந்த தம்பதி அஷ்ரப்-சஜினா. இவர்களது மகள் ஹன்னா பாத்திமா. 11 வயது சிறுமியான அவள், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    சிறுமியின் வீட்டில் ஒரு பூனை வளர்த்து வந்தனர். சம்பவத்தன்று அந்த பூனையின் நகம் பட்டு சிறுமி ஹன்னா பாத்திமா காயமடைந்தார். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறுமிக்கு ரேபிஸ் தடுப்பூசி முதல் தவணை அடூர் தாலுகா ஆஸ்பத்திரியில் போடப்பட்டது.

    பந்தளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுமிக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு வீடு திரும்பிய சிறுமி ஹன்னா பாத்திமாவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமி மீண்டும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

    அங்கு உடல்நிலை மேலும் மோசமானதை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமி மாற்றப்பட்டாள். அங்கு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் சிறுமி ஹன்னா பாத்திமா திடீரென இறந்தாள். பூனையின் நகக்கீறலுக்கு ரேபிஸ் தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், சிறுமி இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    ரேபிஸ் பாதித்து அவர் இறந்திருக்கக்கூடும் என்ற கருதப்படுகிறது. ஆனால் பூனையின் நகக்கீறல் காரணமாக சிறுமி இறந்திருக்க வாய்ப்பில்லை என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே டெங்கு அல்லது நிபா பாதிப்பு காரணமாக சிறுமி ஹன்னா பாத்திமா இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    சிறுமி எப்படி இறந்தார்? என்பதை கண்டறிய அவரது உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றன. பரிசோதனை முடிவு வந்தால் தான், சிறுமி எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.

    • லாங் என்ற முதியவர், குவாங்டாங் மாகாணத்தில் தனியாக வசித்து வருகிறார்.
    • லாங், தனது துணைக்கு சியான்பா என்ற பூனையை வளர்த்து வருகிறார்.

    சீனாவைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர், தான் இறந்த பிறகு தனது பூனையைப் பராமரிக்க விரும்புவோருக்கு தனது முழு சொத்தையும் கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளார்.

    லாங் என்ற முதியவர், குவாங்டாங் மாகாணத்தில் தனியாக வசித்து வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி உயிரிழந்த நிலையில், குழந்தைகள் இல்லாத லாங், தனது துணைக்கு 4 தெரு பூனைகளை எடுத்து வளர்க்க ஆரம்பித்தார்.

    இந்த 4 பூனைகளில் சியான்பா என்ற பூனை மட்டுமே இன்னும் அவருடன் உள்ளது. தான் உயிரிழந்த பிறகு இந்த பூனையை யார் பார்த்துக்கொள்வது என்று கவலைப்பட்ட லாங், சியான்பாவை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்ள கூடிய நபரை தேடி வருகிறார்.

    இந்நிலையில், அவரது பூனையை பத்திரமாக பார்த்து கொள்பவருக்கு தனது அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சேமிப்புகள் உட்பட தனது முழு எஸ்டேட்டையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

    • இந்தப் பூனைக்குட்டிகளின் மதிப்பு மட்டும் ரூ.50 லட்சத்திற்கும் மேலாகும்.
    • மணமகளின் மாமியார்களும் ரூ.6.5 லட்சம் ரொக்கம், பத்து தங்கக் கட்டிகள் மற்றும் வைர நகைகளை அளித்துள்ளனர்.

    திருமணத்தின் போது பணம், தங்கம், நிலம் என வரதட்சணை வழங்குவது வழக்கம். ஆனால், வியட்நாமைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கு, அவரது பெற்றோர் இவற்றோடு சேர்த்து 100 அரிய வகை சிவேட் பூனைக்குட்டிகளையும் வரதட்சணையாக வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தப் பூனைக்குட்டிகளின் மதிப்பு மட்டும் ரூ.50 லட்சத்திற்கும் மேல் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தப் பூனைக்குட்டிகள், உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கோபி லுவாக் காபி கொட்டைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.

    ஆசிய பனை பூனைகளுக்கு காபி விதைகள் உணவாக அளிக்கப்பட்டு, அவை முழுமையாக ஜீரணிக்கப்படாமல் கழிவு வழியாக வெளியேற்றப்படும் கொட்டைகள் சேகரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

    இந்த காபி கொட்டை தொழிலை தங்கள் மகள் தொடங்க உதவுவதற்காகவே இந்தப் பூனைகளை வரதட்சணையாக அளித்ததாகப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

    பூனைக்குட்டிகளுடன், மணமகளுக்கு 25 தங்கக் கட்டிகள், ரூ.17 லட்சம் ரொக்கம், ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிறுவனப் பங்குகள், ஏழு நிலங்கள் மற்றும் பிற விலையுயர்ந்த சொத்துக்களும் வழங்கப்பட்டுள்ளன.

    மணமகளின் மாமியார்களும் ரூ.6.5 லட்சம் ரொக்கம், பத்து தங்கக் கட்டிகள் மற்றும் வைர நகைகளை அளித்துள்ளனர்.

    • ஒரே தட்டில் சாப்பிடும் போது பூனைக்கு நாய் விட்டுக் கொடுக்கிறது.
    • பூனையும், நாயும் ஒற்றுமையாக திகழ்வதை பார்க்கும் போது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

    பெருமாநல்லூர் :

    ஊத்துக்குளி அருகே உள்ள திம்மநாயக்கன்பாளையம் சிவசக்தி நகரில் ஒரு வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளான பூனையும், நாயும் ஒற்றுமையாக திகழ்வதை பார்க்கும் போது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது .

    இந்த பூனையும் நாயும் ஒரே தட்டில் தான் உணவு அருந்துகிறது. வேறு ஒரு நாய் தட்டில் சாப்பிட வரும்போது இந்த நாய்க்கு பிடிப்பதில்லை. ஆனால் ஒரே தட்டில் சாப்பிடும் போது பூனைக்கு நாய் விட்டுக் கொடுக்கிறது. பொதுவாக பூனையை கண்டால் நாய்க்கு பிடிப்பதில்லை. ஆனால் இந்த வீட்டில் இந்த அதிசயம் நிகழ்வதை பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது.

    இது குறித்து அந்த வீட்டின் உரிமையாளர் கோனியா கூறும் போது, நாங்கள் சிறு வயது முதல் நாயையும் பூனையையும் ஒன்றாக தான் வளர்த்து வருகிறோம். நாய்க்குட்டியாக இருக்கும் போது பூனை அதன் மேல் படுத்து தூங்கும் .  அப்போதே அவர்கள் ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுப்பதில்லை. அது இன்றுவரை தொடர்கிறது. பொதுவாக எந்த நாயும் தான் உணவருந்தும் போது வேறொரு நாயோ மற்ற விலங்கோ நெருங்கும்போது அதை சும்மா விடுவதில்லை, துரத்தும். ஆனால் இந்த நாயின் குணம் பிரமிக்க வைக்கிறது.

    • பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழையா விருந்தாளியாக வந்த அதை பார்த்து சிரித்தபடியே வினிசியஸ் நிருபர்களிடம் பேசினார்.
    • சில வினாடிகளுக்கு பிறகு அருகில் நின்ற பிரேசில் அதிகாரி அந்த பூனையை பிடித்து கீழே தூக்கிப்போட்டார்.

    தோகா:

    பிரேசில் கால்பந்து அணியின் புயல்வேக வீரர் 22 வயதான வினிசியஸ் ஜூனியர் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்த போது திடீரென பூனை ஒன்று துள்ளி குதித்து டேபிள் மீது பவ்வியமாக அமர்ந்து கொண்டது.

    பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழையா விருந்தாளியாக வந்த அதை பார்த்து சிரித்தபடியே வினிசியஸ் நிருபர்களிடம் பேசினார். சில வினாடிகளுக்கு பிறகு அருகில் நின்ற பிரேசில் அதிகாரி அந்த பூனையை பிடித்து கீழே தூக்கிப்போட்டார்.

    இந்த காட்சி இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

    • 10 அடி நீளம் உள்ள மலைபாம்பு ஒன்று பூனை ஒன்றை கடித்து கவ்வி கொண்டு இருந்தது.
    • தீயணைப்பு துறையினர் மலைபாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

    கன்னியாகுமரி :

    குலசேகரம் அருகே வெண்டலிகோடு பம்பச்சை தாழவிளை பகுதியில் கால்வாய் ஒன்று பாய்கிறது. நேற்று மாலை அந்த பகுதியில் சுமார் 10 அடி நீளம் உள்ள மலைபாம்பு ஒன்று பூனை ஒன்றை கடித்து கவ்வி கொண்டு இருந்தது.

    இது அந்த பகுதியில் உள்ள சுரேஷ் என்பவரின் பூனை என்று தெரியவந்தது. உடனே அந்த பகுதி மக்கள் குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு அலுவலர் செல்வமுருகன் தீயணைப்பு வீரர்களுடன் வந்து பார்க்கும்போது பாம்பு பூனையை கடித்து கொண்டு இருந்தது. அவர்கள் பாம்பின் பிடியில் இருந்து பூனையை விடுவித்தனர். பூனை இறந்தது தெரியவந்தது. உடனே தீயணைப்பு துறையினர் மலைபாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மலைபாம்பை பேச்சிப்பாறை அடர்ந்த காட்டு பகுதியில் விடுவதற்கு வேண்டிய நடவடிக்கை எடுத்தனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஒரு நிமிடத்தில் 9 முறை ஸ்கிப்பிங் செய்து கிட்கேட் பூனை இந்த சாதனையை படைத்துள்ளது.
    • பூனையின் வயது காரணமாக நாங்கள் குதிப்பதை குறைந்த எண்ணிக்கையில் வைத்திருந்தோம் என்றார்.

    மனிதர்கள் மட்டுமல்ல விலங்கினங்களும் கூட கின்னஸ் சாதனை படைத்து வருகின்றன. அமெரிக்காவில் உள்ள மிசூரி பகுதியை சேர்ந்த கிட்கேட் என்ற 13 வயது பூனை அதன் உரிமையாளர் திரிஷா சீப்ரிட் உதவியுடன் ஒரு நிமிடத்தில் அதிக முறை ஸ்கிப் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

    பூனை அதன் உரிமையாளருடன் சேர்ந்து ஜம்ப் ரோப்பிங் திறமையை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், ஒரு நிமிடத்தில் 9 முறை ஸ்கிப்பிங் செய்து கிட்கேட் பூனை இந்த சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனை குறித்து பூனையின் உரிமையாளரான திரிஷா சீப்ரிட் கூறுகையில், ஜம்ப் ரோப்பிங் செய்வது எனக்கும், எனது பூனைக்கும் பிடித்து வருகிறது. மேலும் பூனையின் வயது காரணமாக நாங்கள் குதிப்பதை குறைந்த எண்ணிக்கையில் வைத்திருந்தோம் என்றார்.

    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கயிறு கட்டி மாட்டை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
    • கிணற்றில் பார்த்த போது பூனை தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண் டிருந்தது தெரியவந்தது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நேசமணி நகர் பெஞ்ச மின் தெரு ரேஷன் கடை பின்புறம் 70 அடி ஆழம் கொண்ட கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் இருந்து பூனையின் சத்தம் கேட்டது.

    அந்த பகுதி மக்கள் கிணற்றில் பார்த்த போது பூனை தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண் டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கயிறு மூலமாக கிணற்றின் உள்ளே இறங்கி பூனையை மீட்க நட வடிக்கையை மேற்கொண்ட னர். சுமார் 1 மணி நேரத் திற்கு பிறகு பூனை பத்திரமாக மீட்கப்பட்டது.

    இதேபோல் தேரேக் கால்புதூர், சண்முகா நகர் பகுதியில் உள்ள கால்வா யில் மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மாடு சேற்றில் சிக்கியது. சேற்றில் சிக்கிய மாடு வெளியே வர முடியாமல் தவித்தது.

    மாட்டை மீட்க பொதுமக்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் முடியவில்லை. இதை யடுத்து தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கயிறு கட்டி மாட்டை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட மாட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    • நாகப்பாம்பு வீட்டுக்குள் நுழைய முயல்வதும், இதனை வளர்ப்புப்பூனை சீறியபடி தடுக்க முயல்வதும் தெரியவந்தது.
    • சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

    கோவை:

    கோவை கவுண்டம்பாளையம், சரவணாநகரை சேர்ந்தவர் விஜர். இவர் தனது வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் விஜர் குடும்பத்தினர் சம்பவத்தன்று வீட்டில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது விஜர் வீட்டு வளாகத்தில் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது.

    தொடர்ந்து அந்த பாம்பு வீட்டுக்குள் நுழைய முயன்றது. இதற்கிடையே அங்கு நின்றிருந்த வளர்ப்பு பூனை தற்செயலாக நாகப்பாம்பை பார்த்தது. அது உடனடியாக பாம்பை நோக்கி சீறிக்கொண்டு வந்தது. இருந்தபோதிலும் அந்த பாம்பு வீட்டுக்குள் நுழைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. வீட்டு வாசலில் பூனையின் சீறலை தற்செயலாக கேட்ட விஜர் குடும்பத்தினர் உடனடியாக அங்கு வந்து பார்த்தனர். அப்போது நாகப்பாம்பு வீட்டுக்குள் நுழைய முயல்வதும், இதனை வளர்ப்புப்பூனை சீறியபடி தடுக்க முயல்வதும் தெரியவந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனடியாக வீட்டுக்கதவை மூடினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். பாம்பு வீட்டுக்குள் நுழைய முயல்வதையும், அதனை பூனை தடுத்து நிறுத்துவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அந்த காட்சியை செல்போனில் படம் பிடித்தனர்.

    பூனையின் எதிர்ப்பால் பாம்பு அடங்கி அங்கிருந்து வெளியேறிச் சென்றது. இந்த காட்சிகளை வீடியோ எடுத்த சிலர் அதனை இணையத்தில் பரப்பினர். தற்போது சமூகவலை தளத்தில் அந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

    • ரைஸ் மில்லில் உள்ள வளாகத்தில் மீன் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
    • பூனை பால் குடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் சுற்றி திரிகிறது.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-போளூர் நெடுஞ்சாலையில் தனியார் ரைஸ் மில் ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த ரைஸ் மில்லில் உள்ள வளாகத்தில் மீன் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் யாராவது உள்ளே நுழையாமல் இருப்பதற்காக பூனை மற்றும் நாயை வளர்த்து வருகின்றனர்.

    இங்குள்ள பூனை, நாயுடன் ஒன்றாக சேர்ந்து கொஞ்சி விளையாடி வருகிறது.

    அந்த நாயும் பாசத்துடன் பூனைக்கு பால் கொடுக்கிறது.

    இதனால் பூனை பால் குடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் சுற்றி திரிகிறது. சில நாய்கள் தன்னுடைய குட்டிகளுக்கு பால் கொடுக்க மறுக்கிறது. ஆனால் இங்குள்ள நாய் பூனைக்கு பால் கொடுப்பதை அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    ×