என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "old man"
கடலூர்:
சிதம்பரம் கொத்த ட்டையில் வசிப்பவர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த வெங்கட்ராவ் (வயது 65). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் போர்மேனாக பணி செய்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக பணி செய்து வந்தார்.இவர் நேற்று இரவு பணி முடித்து வீடு திரும்பினார். அப்போது சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கட்ராவ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பரங்கிப்பேட்டை போலீசார், அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ் நிறுத்தத்தில் சுமார் 60 முதல் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் படுத்த படுக்கையாக கிடந்தார்.
- இட்லி மற்றும் தண்ணீர் பாட்டில் போன்றவை வாங்கிக் கொண்டு வந்து அந்த பெரியவரிடம் கொடுத்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் சுமார் 60 முதல் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் படுத்த படுக்கையாக கிடந்தார். இதை கண்ட பயணிகள் ஏதோ மது அருந்திவிட்டு தூங்குவதாக நினைத்தனர். இதனால் பஸ் நிறுத்த இருக்கையில் அமர்வதற்கு கூட அஞ்சினர். இந்த நிலையில் திடீரென ஒரு கைக்குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் மனிதாபிமானத்துடன் அந்த பெரியவர் மீது பரிவு காட்டினார். இதையடுத்து அந்த பெண் அங்குள்ள ஓட்டலுக்கு சென்று இட்லி மற்றும் தண்ணீர் பாட்டில் போன்றவை வாங்கிக் கொண்டு வந்து அந்த பெரியவரிடம் கொடுத்தார். அந்த பெரியவரால் எழுந்து, அமர்ந்து உட்கார முடியாத சூழ்நிலையில் படுத்த படுக்கையாக கிடப்பதால் அந்தப் பெண் அந்த பெரியவர் கையில் கொடுத்தார். அதை அவர் படுத்த நிலையிலேயே சிறிது சிறிதாக இட்லியை சாப்பிட தொடங்கினார். இந்த சம்பவத்தை அப்பகுதியில் உள்ள பயணிகள் கண்டு மெய் சிலிர்த்தனர். பொதுவாக யாராவது அனாதையாக சாலையோரம் கிடந்தால் அவரை யாரும் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. இப்படிப்பட்ட இந்த சூழ்நிலையில் இந்த பெண் நடந்து கொண்ட விதம் மனிதாபிமானத்தை உண்டாக்கியது. தற்போது இந்த பெரியவர் யார்?, எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. சமூக அறக்கட்டளை நிர்வாகத்தினர் உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாடு மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பினார்.
- கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் காம்பவுண்ட் சுவர் மீது மோதியது.
தஞ்சாவூர்:
தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை அன்னை சாவித்திரி நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 59).
சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து வெளியே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
தஞ்சை மூலிகைப் பண்ணை ரோட்டில் வந்த போது சாலை யில் மாடு ஒன்று குறுக்கே புகுந்தது.
மாடு மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பினார்.
இதில் கட்டு ப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் காம்பவுண்ட் சுவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்ச்செல்வன் பலத்த காயமடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே தமிழ்ச்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை போக்குவரத்து விசாரணை பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் அருகே, கடந்த சில தினங்க ளுக்கு முன்பு சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
- அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் அருகே, கடந்த சில தினங்க ளுக்கு முன்பு சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்னதானப்பட்டி போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்த விவரங்கள் ஏதும் தெரியவில்லை. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வசூல் செய்வதற்காக ஆட்டோவில் மங்கநல்லூர் வரை சென்றுள்ளார்.
- அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் காசி ராமன் தெருவை சேர்ந்தவர் தொப்பையன் (வயது 57). இவர் கும்பகோணம் காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
சம்பவதன்று இவர் வசூல் செய்வதற்காக ஆட்டோவில் மங்கநல்லூர் வரை சென்றுள்ளார்.
பின்னர் பூம்புகார்- கல்லணை சாலை வழியாக ஊர் திரும்பி கொண்டிருந்தார். கல்யாணபுரம் மெயின் ரோட்டில் வந்தபோது ஆட்டோவை சாலை ஓரமாக நிறுத்த சொல்லி கீழே இறங்கி இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது சாலையை கடந்த போது அவ்வழியாக வந்த பயணிகள் ஆட்டோ அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் தொப்பையனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவிடைமருதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதி த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 12 வயது மகள் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
- இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென வயிறு பெரிதானது. பெற்றோர் அவரிடம் கேட்டபோது சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 12 வயது மகள் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் என்ற முதியவர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் உன் பெற்றோரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென வயிறு பெரிதானது. பெற்றோர் அவரிடம் கேட்டபோது சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது, அருகில் வசிக்கும் முருகேசன் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும், இதை வெளியே சொன்னால் உன் அப்பா, அம்மாவை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து முருகேசனை (52) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியின் முன்பு சம்பவத்தன்று சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார்.
- அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியின் முன்பு சம்பவத்தன்று சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் சேலம் டவுன் போலீசார் அந்த முதியவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த சேலம் டவுன் போலீசார் இறந்து போன முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கலியமூர்த்தி தூத்துக்குடி முத்தையாபுரம் ஸ்டேட் வங்கி முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற போது செல்போனை தவற விட்டுள்ளார்.
- தங்கையா என்பவர் அந்த செல்போனை கண்டெடுத்து அதனை முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே எம்.சவேரியார்புரத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. ( வயது 62). இவர் தூத்துக்குடி முத்தையாபுரம் ஸ்டேட் வங்கி முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற போது செல்போனை தவற விட்டுள்ளார். அந்த சமயம் அவ்வழியாக வந்த முத்தையாபுரம் பாரதிநகரை சேர்ந்த தங்கையா (80). என்பவர் அந்த செல்போனை கண்டெடுத்து அதனை முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து முத்தையாபுரம் போலீசார் செல்போனை தொலைத்த கலியமூர்த்தியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்போனை ஒப்படைத்த முதியவர் தங்கையாவின் கைகளால் கலியமூர்த்தியிடம் ஒப்படைத்தனர். செல்போனை மீட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த முதியவரின் செயலை முத்தையாபுரம் போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
- ராமநாதபுரத்தில் ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க சென்ற முதியவரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி நடந்துள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மூலக் கொத்தளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (61). இவர் ராமநாதபுரம் சாலைத் தெருவில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க வந் தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பெயர் முகவரி தெரியாத நபர் பணம் எடுத்து தருவதாக கூறியதையடுத்து கார்டை கொடுத்து பணம் ரூ.20,000 எடுத்து தருமாறு சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அந்த நபர் கார்டை மெசினில் சொருகி விட்டு பணத்தை டைப் செய்ததாகவும், சுப்பிரமணியன் ரகசிய எண்ணை பதிவு செய்துள்ளார். அப்போது பணம் வரவில்லை எனக் கூறி அந்த நபர் ஏற்கனவே வைத்திருந்த ஒரு போலியான ஏ.டி.எம். கார்டை கொடுத்து விட்டு சென்று விட்டார். பின்பு சுப்பிரமணியன் அரண்மனை பகுதியில் இருந்தபோது அவரது செல் போனிற்கு ரூ.42,000 பணம் எடுத்திருப்பதாக குறுந்தக வல் வந்தது.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.
- சிகிச்சை பலனின்றி நாகூர் பிச்சை பரிதாபமாக உயிரிழந்தார்.
- புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுக்கூர்:
மதுக்கூர் சிவன்கொல்லை தங்கத்தாய் காலனியைச் சேர்ந்தவர் நாகூர் பிச்சை (வயது 58).
சம்பவத்தன்று இவர் சைக்கிளில் சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த நாகூர் பிச்சையை அக்கம் பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நாகூர் பிச்சை இறந்தார்.
இது பற்றிய புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.