என் மலர்
நீங்கள் தேடியது "சாவு"
- பூட்டிய வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்
- ஜான்ரோஸ் இறந்தது எப்படி? என்பது மர்மமாக உள்ளது.
அருமனை :
குலசேகரம் கோட்டூர் கோணத்தை சேர்ந்தவர் ஜான்றோஸ் (வயது 65). இவர், குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள குஞ்சாலுவிளை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த தோட்டம் திருவனந்த புரத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கு சொந்த மானதாகும். ஜான்ரோஸ் அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார். வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் வீட்டுக்கு சென்று வருவார்.
இந்நிலையில் அவரது மகன் கில்பர்ட்டின் நிச்சய தார்த்தம் இன்று நடைபெற இருந்தது. இதற்காக ஜான்ரோஸ் நேற்று வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தார்.
ஆனால் அவர் வர வில்லை. இதனை தொடர்ந்து மனைவி ராணி, மகனுடன் இன்று காலை அருமனை குஞ்சாலு விளையில் தனது கணவர் தங்கி இருக்கும் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவுகள் திறக்காமல் இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் ஜான் ரோஸ் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அருமனை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுனில் குமார், விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தோட்டத்தின் உரிமையாளர் பிரசாந்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ஜான்ரோஸ் இறந்தது எப்படி? என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜான் ரோசின் மரண செய்தி கேட்டு கோட்டூர் கோணம் பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
- இன்டர்நெட் வசதி சரியாக கிடைக்காததால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எமிஸ் டெஸ்ட் நடத்த இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
- நடராஜபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மனைவி அன்னாள் ஜெயமேரி (வயது 52).
டால்மியாபுரம்,
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நடராஜபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மனைவி அன்னாள் ஜெயமேரி (வயது 52).
இவர் புள்ளம்பாடி அருகே ஆலம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 22 ஆண்டுகளாக பணிபு ரிந்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்டத்தின் கீழ் எமிஸ் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.
இப்பகுதியில் இன்டர்நெட் வசதி சரியாக கிடைக்காததால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எமிஸ் டெஸ்ட் நடத்த இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், அன்னாள் ஜெயமேரி நேற்று மாணவர்களுக்கு எமிஸ் ஆன்லைன் தேர்வு நடத்தியுள்ளார். அப்போது நாட் அசஸ்மென்ட் என்று தகவல் கிடைத்ததால் அருகில் உள்ள ஆசிரியரிடம் இது குறித்து கேட்டு க்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று மயங்கி கீழே விழுந்த அவருக்கு சக ஆசிரியர்கள் முதலுதவி சிகிச்சை செய்து புள்ளம்பாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ெஜயமேரி இறந்துவிட்டதாக கூறினர்.
இச்சம்பவம் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் கிராமமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுபோன்று புள்ளம்பாடி ஒன்றியத்தில் பல்வேறு பள்ளிகளில் இன்டர்நெட் வசதி சரியாக கிடைக்காத காரணத்தால் இந்த எமிஸ் ஆன்லைன் டெஸ்ட் நடத்த முடியாமல் பல்வேறு ஆசிரியர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் .
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து இந்த எமிஸ் ஆன்லைன் டெஸ்ட் க்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
- தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் முத்துராம லிங்க நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வபோதகர் (வயது32). வெல்டிங் தொழி லாளி. இவரது மனைவி ஜெனிட்டா (23). இவர்க ளுக்கு 3 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. 2 வயதில் பெண் குழந்தை உள்ளார். செல்வபோதகர் தனது தாய்-தந்தையுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவர்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. பெரியவர்கள் பேசி சமாதானம் செய்து வைத்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் செல்வபோதகர் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மனைவி செல்போனில் அழைத்த போது சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.
பின்னர் கணவரின் தம்பியிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
அவர் விசாரித்த போது விருதுநகர்-சாத்தூர் நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையம் ரெயில்வே பாலம் அருகே செல்வபோதகர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீசில் ஜெனிட்டா புகார் கொடுத்தார்.
அதில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவர் மனஉளைச்சலில் இருந்ததாகவும், இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆலங்குடி அருகே வம்பன் கிராமத்தை சேர்ந்தவர் போலீஸ் ஏட்டு மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்
- ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுக்கோட்டை,
ஆலங்குடி அருகே வம்பன் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன் (வயது 45). இவர் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், ஆலங்குடிக்கு வந்த வைத்தீஸ்வரன் ஆம்பு ஆறு பாலம் அருகே கீழே விழுந்து கிடந்தார். இதை அந்தவழியாக சென்றவர்கள் பார்த்து வைத்தீஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து வைத்தீஸ்வரன் மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்பத்தகராறு காரணமாக ராஜேஸ்வரன் கடந்த 14–ந்தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
- கண்ணனை ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
நெல்லை:
ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை அம்பலவாசக தெருவை சேர்ந்தவர் மணிராஜ். இவரது மகன் ராஜேஸ்வரன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் குடும்பத்தகராறு காரணமாக கடந்த 14–ந்தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ராஜேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் கண்ணன் (38). லாரி டிரைவர். நேற்றிரவு கண்ணன் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். அவரை உறவினர்கள் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கண்ணன் இறந்தார்.
- வலையை இழுத்த மீனவர் கடலில் தவறி விழுந்து இறந்தார்.
- தொண்டி கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு மீனவ கிரா மத்தை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ (வயது 47). இவர் நேற்று சக மீனவர்களுடன் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். கடலில் வலையை விரித்தி ருந்த நிலையில் மீன்கள் சிக்கியதும் அதனை பட குக்கு இழுத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஜான் பிரிட்டோ நிலை தடுமாறு கடலுக்குள் விழுந்தார். இதைப்பார்த்த படகில் இருந்த மற்ற மீன வர்கள் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் அவர் கடலில் மூழ்கினார்.
நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் உயிருக்கு ஆபத் தான நிலையில் அவரை மீட்டவர்கள் கரை திரும்பி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அற் குற்குள் ஜான் பிரிட்டோ பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தொண்டி கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மனைவியை மிரட்ட விளையாட்டாக தூக்கு மாட்டிய மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்
- திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புது தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 28) இவர் இரு சக்கரம் வாகனத்தை பழுது பார்க்கும் வேலை பார்த்து வருகிறார்.மேலும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த ஜெயக்குமார் மனைவி நிர்மலாவுடன் சண்டை போட்டதாக தெரிகிறது. இதனால் மனைவி அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்தார். உடனே மனைவியை மிரட்டி பணிய வைக்கும் நோக்கத்தில் வீட்டிற்கு வெளியே வந்த சைக்கிளை ஜெயக்குமார் வீட்டுக்குள் தூக்கி வந்தார். பின்னர் மின்விசிறிக்கு கீழே அந்த சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி மேலே ஏறி நின்று கழுத்தில் நைலான் கழுத்தை மாட்டி தூக்கு போடுவது போல் பா வ்லா காட்டினார். அப்போது எதிர்பாராத விதமாக சைக்கிள் ஸ்டாண்ட் நழுவி அந்த சைக்கிள் நகர்ந்தது. அடுத்த நொடி ஜெயக்குமார் கழுத்தில் மாட்டி இருந்த நைலான் கயிறு அவரது கழுத்தை இறக்கியது. அதிர்ச்சி அடைந்த மனைவி கணவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் டாக்டர் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட்டு தனமாக மனைவியை ஏமாற்ற தற்கொலை நாடகம் மாடிய மெக்கானிக் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்திள்ளது.
- வாய்க்காலில் நீச்சல் பழகிய பள்ளி மாணவன் உயிரிழந்தார்
- இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெருந்துறை,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி மகன் சஞ்சை (வயது 17). இவர் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பெருந்துறை ஈரோடு ரோடு கீழ்பவானி வாய்க்காலில் தனது தந்தை உறவினர் கோபால் உதவியுடன் இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு நீச்சல் பழகினார். அப்போது இடுப்பில் இருந்த கயிறு திடீரென்று அவிழ்ந்ததால் தண்ணீரில் முழ்கி உயிரிழந்தார். இதையடுத்து பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சஞ்சையின் உடலை மீட்டனர். பின்னர் இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சென்ட்ரிங் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தார்
- புகா ரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ஈரோடு,
கோவை மாவட்டம் வெள்ள க்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகன் சிவராமன் (வயது 42). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார்.இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் சம்பவத்தன்று சென்னிமலை முதலைமடை எல்.பி.பி வாய்க்கால் பாலம் அருகே நீரில் மூழ்கி பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து அவரது சகோதரி சிவ லட்சுமி சென்னிமலை போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். புகா ரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புன்னம் சத்திரம் அருகே மேஸ்திரி திடீரென மரணமடைந்துள்ளார்
- வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே குட்டக்கடை வசந்தம் காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (45). கட்டிட மேஸ்திரி. ரமேஷ்க்கு கடந்த 10 வருடங்களாக குடிப்பழக்கம் இருந்து வந்தததாக கூறப்படுகிறது. இதனால் ரமேஷ் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னிமலைக்கு சென்று சித்த வைத்தியம் பார்த்து வந்தார். இந்நிலையில் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். காலை அவரது மனைவி சுமதி எழுந்து ரமேஷை எழுப்பிய போது ரமேஷ் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுஅவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ரமேஷின் மனைவி சுமதி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கரூர் மாவட்டம் புகளூர் வாய்க்காலில் விழுந்து தொழிலாளி சாவு
- படகு மூலமாக தேடி தீயணைப்பு படையினரால் உடல் மீட்கப்பட்டது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன்(65). கூலித் தொழிலாளி. இவர் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் அருகே உள்ள புகளூர் வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தபோது தண்ணீருக்குள் விழுந்து மூழ்கி விட்டார். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் நிலையை அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். படகு மூலமாக தேடும் பணி நடைபெற்ற போது முனிநாதபுரம் அருகே தண்ணீரில் வாய்க்காலில் ஓரத்தில் மிதந்து கொண்டு இருந்த அர்ஜுனன் சடலத்தை கைப்பற்றினர்.