என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்தவர் சாவு
- மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.
- லிப்ட் கேட்டு சென்றுள்ளார்.
கரூர்
நச்சலூர் அருகே உள்ள தமிழ்ச்சோலையை சேர்ந்தவர் முத்தன் (வயது 56). இவர் கடந்த 24-ந்தேதி நெய்தலூர் காலனிக்கு செல்வதாக அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். மந்தையூர் பிரிவு சாலை பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் முத்தன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முத்தனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முத்தன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து முத்தனின் மகன் சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






