என் மலர்
கரூர்
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் குடும்பத்தினர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
- விஜய் வருகையின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்த கரூர் டி.எஸ்.பி. செல்வராஜ் சிபிஐ அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜர் ஆனார்.
கரூர்:
கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா, இணைச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று காலை நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் குடும்பத்தினர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து விஜய் வருகையின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்த கரூர் டி.எஸ்.பி. செல்வராஜ் சிபிஐ அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜர் ஆனார். அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆம்புலன்ஸ் வாகன டிரைவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கரூர்:
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடைபெற்றபோது அங்கு வந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்தனர். இதில் இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன டிரைவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கூட்ட நெரிசல் சம்பந்தமாக தொடர்பாக ஏற்கனவே விசாரணைக்காக சி.பி.ஐ. தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டவர்களில் உயிரிழந்தவர்களின் 9 குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் இன்று சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜர் ஆனார்கள்.
அவர்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி விசாரணை நடத்தி வரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறையின் சுற்றுலா மாளிகைக்கு வந்தனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. இதனயடுத்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடந்த 2 நாட்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் உட்பட நிர்வாகிகள் 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
- சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்ட நபர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கரூர்:
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கு விசாரணை சிபிஐ அதிகாரிக்கு மாற்றப்பட்டு கடந்த மாதம் 19-ந் தேதியிலிருந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் உட்பட நிர்வாகிகள் 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த இந்துஸ்தான் ஜனதா கட்சியின் பிரமுகர் ராகுல் காந்தி, கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார், டெக்ஸ் தொழில் அதிபர் மற்றும் நொய்யல் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோகுலக்கண்ணன் உள்ளிட்டோர் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விசாரணைக்காக ஆஜராகினர்.
அதனை தொடர்ந்து கரூர் துயர சம்பவம் குறித்து நாமக்கல் மாவட்டம், ஓடு வந்தூர் தேசிய முற்போக்கு திராவிட கழக ஒன்றிய இணை செயலாளர் நவலடி என்பவர் காவல்துறை அவசர உதவி எண் 100-க்கும் அழைத்து சம்பவம் குறித்து விசாரணை செய்த நிலையில் தற்போது சிபிஐ விசாரணைக்காக ஆஜராகினர்.
குறிப்பாக கரூர் துயர சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்ட நபர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணையை தொடங்கியுள்ளனர்.
- நேற்று புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், மதியழகன், பவுன்ராஜ் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
- சிபிஐ அதிகாரிகள் விசாரணையானது சுமார் 10 மணி நேரம் நடைபெற்றது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர், தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் இருந்து 1,316 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டு ஆய்வு செய்த அவர்கள், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து கரூர் கோர்ட்டில் கடந்த அக்டோபர் 22-ந்தேதி தாக்கல் செய்தனர்.
முதல் தகவல் அறிக்கையில், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல்குமார் மற்றும் த.வெ.க.வை சேர்ந்த சிலர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
விசாரணைக்கு ஆஜராகுமாறு புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கட்சி நிர்வாகி பவுன்ராஜ் உள்ளிட்டோருக்கு சி.பி.ஐ. சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
மேலும் விஜய்யின் பிரசார வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள், த.வெ.க. சார்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த 8-ந்தேதி த.வெ.க. வக்கீல் அரசு, சென்னை பனையூர் அலுவலக நிர்வாகி குருசரண் உள்பட 3 பேர் சி.பி.ஐ. முன்பு ஆஜராகி கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்தனர்.
நேற்று காலை தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், மதியழகன், பவுன்ராஜ் ஆகிய 5 பேரும் காரில் வந்தனர். பின்னர் அவர்கள் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகினர்.
அப்போது அவர்களிடம், பிரசார கூட்டம் எத்தனை மணிக்கு தொடங்கும் என அறிவித்து இருந்தீர்கள், எத்தனை மணிக்கு விஜய் பிரசாரத்தை தொடங்கினார், கூட்டத்தில் எவ்வளவு பேர் கலந்து கொண்டனர், எவ்வளவு பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தீர்கள் என்பன உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டதாக தெரியவருகிறது. அப்போது, அவர்கள் தெரிவித்த தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். இந்த விசாரணையானது இரவு 8.20 மணி வரை சுமார் 10½ மணி நேரம் நடைபெற்றது.
இந்நிலையில், கரூர் சி.பி.ஐ. அலுவலகத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் இன்று 2-வது நாளாக விசாரணைக்கு ஆஜராகினர். நேற்று 10 மணி நேரம் விசாரணை நடந்த நிலையில் இன்று 2-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மாநகரப் பொருளாளா் பவுன்ராஜ் தவிர மற்ற 4 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
- கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி இருந்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- த.வெ.க. நிர்வாகிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கரூர்:
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி இருந்து கடந்த ஒரு மாதமாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற பகுதியிலுள்ள பொதுமக்கள், கடைக்காரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அதன் உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அடுத்த கட்டமாக கூட்ட நெரிசலில் பலியானவர்கள் வீடுகளுக்கு சென்றும் விசாரணை நடத்தினார்கள். காயம் அடைந்தவர்களிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட 5 பேர் இன்று சிபி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டுள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்தனர். சி.பி.ஐ. அதிகாரிகள் முன்னிலையில் அவர்கள் ஆஜராகினர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு தெ.வெ.க. நிர்வாகிகள் அளித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த த.வெ.க. தொண்டர்கள், மகளிர் அணியினர் கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகை முன்பாக குவிந்துள்ளனர்.
- டிடிவி தினகரன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்து வருகிறார்.
- அண்ணாமலையின் கூட்டணி கோரிக்கையை டிடிவி தினகரன் நிராகரித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரன் தொடர்ச்சியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்து வருகிறார்.
இதனிடையே, டிடிவி தினகரன் உடன் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அண்ணாமலையின் கோரிக்கையை டிடிவி தினகரன் நிராகரித்தார்.
இந்நிலையில், கரூரில் திருமண விழா ஒன்றில் டிடிவி தினகரன் மற்றும் அண்ணாமலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்தோம்; கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை" என்று தெரிவித்தார்.
- கரூர் துயர சம்பவத்தின் போது மற்ற காங்கிரஸ் தலைவர்களை போலவே விஜய்யிடம் ராகுல் காந்தி பேசினார்.
- தற்போது நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் என்பது வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் கிடையாது. குடியுரிமை திருத்தம்.
கரூர்:
கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி கரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமூக வலைதளங்கள் காங்கிரஸ்- தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க உள்ளதாக ஆதாரமற்ற தகவல்களை வெளியிடுகின்றன.
ஆனால் காங்கிரசுக்கு விஜய் அறிமுகம் இல்லாதவர் அல்ல. காங்கிரஸில் சேருவது குறித்து விவாதிக்க 2010 ல் அவர் ராகுல் காந்தியை சந்தித்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அது நடக்கவில்லை.
கரூர் துயர சம்பவத்தின் போது மற்ற காங்கிரஸ் தலைவர்களை போலவே விஜய்யிடம் ராகுல் காந்தி பேசினார்.
சமூக ஊடகங்களில் நாம் பார்ப்பதை அடிப்படையாகக் கொண்டு கூட்டணிகளை முடிவுக்கு கொண்டு வர முடியாது. நாங்கள் ஏற்கனவே திமுக கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். கூட்டணி விஷயங்களை பற்றி விவாதிக்க இன்னும் நேரம் இருக்கிறது.
தற்போது நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் என்பது வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் கிடையாது. குடியுரிமை திருத்தம்.
பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யாமல் வாக்காளர் பட்டியல் திருத்தம் மட்டும் செய்கின்றனர். இதற்கு அஸ்ஸாமில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறுகின்றனர்.
இதுபோல எஸ்.ஐ.ஆர் வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பில் இல்லாத தமிழகம், கேரளாவில் எஸ்.ஐ.ஆர் செயல்படுத்துவதன் நோக்கம் என்ன? தேர்தல் ஆணையம் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஒரு நிலைப்பாடும் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் வேறு ஒரு நிலைப்பாடும் என இரட்டை நிலைபாடுகளுடன் செயல்படுகிறது. பா.ஜ.க.வின் ஒரு அணி போல தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்றார்.
- இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆவணங்களை முதலில் கரூர் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
- சி.பி.ஐ. தனது மாதாந்திர விசாரணை அறிக்கையை திருச்சி கோர்ட்டில் சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பர்க்கப்படுகிறது.
கரூர்:
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி இருந்து கடந்த ஒரு மாதமாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற பகுதியிலுள்ள பொதுமக்கள், கடைக்காரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், அதன் உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அடுத்த கட்டமாக பாதிக்கப்பட்டவர்களிடம் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முதற்கட்டமாக நேற்று முன்தினம் கரூர் வேலுச்சாமிபுரம் மற்றும் கோதூர் பகுதிகளில் உள்ள உயிரிழந்தோர் மற்றும் படுகாயம் அடைந்தோர் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். நேற்று 2-வது நாளாக சம்பவத்தில் காயமடைந்த கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த உஷா மற்றும் அவரது மகள் திவ்யா ஆகியோரின் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஒரு பெண் அதிகாரி உள்பட 3 சிபிஐ அதிகாரிகள் நேற்று மதியம் அவர்களின் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை ஒரு மணி நேரம் நடந்தது. என்ன காயம் ஏற்பட்டது? எத்தனை நாள் சிகிச்சை பெற்றீர்கள்? எந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது? கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது நிலவிய சூழ்நிலை போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி அதை வாக்குமூலமாக பதிவு செய்தனர்.
இன்று 3-வது நாளாக கூட்டம் நெரிசலில் காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் நேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆவணங்களை முதலில் கரூர் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். பின்னர் சில தினங்களுக்கு முன்பு வழக்கு விசாரணை திருச்சி குற்றவியல் தலைமை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து திருச்சி கோர்ட்டில் விரைவில் விசாரணை தொடங்க உள்ளது. சி.பி.ஐ. தனது மாதாந்திர விசாரணை அறிக்கையை திருச்சி கோர்ட்டில் சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பர்க்கப்படுகிறது.
- பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையுறு இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும்.
- ஆர்ப்பாட்டத்திற்கு வரும் நபர்களின் வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நிறுத்தவேண்டும்.
கரூரில் த.வெ.க. சார்பில் தேர்தல் ஆணையத்தால் நடைபெற்று வருகிற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு குளறுபடிகளை கண்டித்து கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இதற்காக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன் போலீஸ் அனுமதி கேட்டு கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தார்.
இதையடுத்து 6 முக்கிய நிபந்தனைகளை விதித்து போலீஸ் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஆர்ப்பாட்டத்திற்கு மேடை அமைப்பதற்கு அனுமதி இல்லை, பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையுறு இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும்.
பள்ளி, கல்லூரி மற்றும் போட்டி தேர்வுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் நடத்தவேண்டும், மேலும் சிறப்பு அழைப்பாளர்கள் யாரேனும் வெளிமாவட்டத்தில் இருந்து வந்தால் தகவல் தெரிவிக்கவேண்டும்.
ஆர்ப்பாட்டத்திற்கு வரும் நபர்களின் வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நிறுத்தவேண்டும். ஆர்ப்பாட்டத்திற்கு கூம்பு வடிவ ஒலி அமைப்புகள் பயன்படுத்கூடாது ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
- கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
- இதுவரை மொத்தம் 80-க்கும் மேற்பட்டோர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.
கரூர்:
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்சுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர்கள் ஆகி யோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி இருக்கும் கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 7 பேர் இன்று வந்தனர். அவர்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகினர்.
அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது நடந்தது என்ன? என்பது குறித்த பல்வேறு கேள்விகளை அவர்களிடம் அதிகாரிகள் கேட்டனர்.
அதற்கு ஆஜர் ஆனவர்கள் அளித்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 80-க்கும் மேற்பட்டோர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.
- விஜய் பேசி கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
- கரூர் மின்வாரிய அதிகாரி கண்ணன் சிபிஐ முன் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.
சிபிஐ விசாரணைக்காக மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் நேரில் ஆஜராகியுள்ளனர்.
கரூர் மின்வாரிய அதிகாரி கண்ணன் சிபிஐ முன் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்.
கரூரில் நடைபெற்ற தாவெக கூட்டத்தில் விஜய் பேசி கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
விஜய் பேசி கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என மின்வாரியம் தரப்பில் கூறியிருந்தது.
இந்நிலையில், மின்வாரிய அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
- கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தவெக அலுவலக உதவியாளர் குரு சரணிடமும் அண்மையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கரூர்:
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ந்தேதி விஜய் பங்கேற்ற த.வெ.க. பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்சுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர்கள் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலக உதவியாளர் குரு சரணிடமும் அண்மையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிபிஐ அதிகாரிகள் தங்கி இருக்கும் கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு இன்று (புதன்கிழமை) காலை 11 மணியளவில் நெரிசலில் சிக்கி காயம் அடைந்த மூன்று பேர் சிபிஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகினர்.
அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






