என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் சம்பவம்: டெல்லி சிபிஐ முன்பாக நாளை ஆஜராகிறார் விஜய்
- டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு நாளை காலை 11 மணிக்கு விஜய் ஆஜராகிறார்.
- டெல்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கரூர் பெருந்துயரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக நாளை காலை 7 மணிக்கு தவெக தலைவர் விஜய் டெல்லி செல்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை 7 மணிக்கு விமானம் மூலமாக விஜய் டெல்லி புறப்படுகிறார்.
கடந்த 6ம் தேதி சம்மன் அனுப்பிய நிலையில் டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு நாளை காலை 11 மணிக்கு விஜய் ஆஜராகிறார்.
மேலும், கரூர் பெருந்துயரம் தொடர்பாக விசாரணைக்காக டெல்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் நாளை டெல்லி செல்லும் நிலையில் டெல்லி காவல்துறைக்கு மின்னஞ்சல் மூலமாக தவெக கடிதம் எழுதியுள்ளது.
தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி காவல்துறைக்கு தவெக நிர்வாகி நிர்மல்குமார் மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பியுள்ளது.
Next Story






