என் மலர்
நீங்கள் தேடியது "News report"
- கேமரா, மைக் ஆகியவற்றை பிடுங்கி வைத்துக்கொண்டு நிருபர் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்துள்ளது.
- நிருபரை மீட்க சம்பவ இடத்திற்கு எஸ்.பி.ஜோஸ் தங்கையா அனுப்பி வைத்துள்ளார்.
கரூர் கிருஷ்ணராயபுரத்தில் அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்தது.
கடந்த 2022ம் ஆண்டு குவாரிக்கு ரூ.23.55 கோடி அளவுக்கு அபராதம் விதித்தும் கல்குவாரி செயல்பட்டு வருவதாகப் கூறப்பட்டது.
இதைதொடர்ந்து, புகார் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற திருச்சி செய்தியாளர் கதிரவனை சுற்றிவளைத்து கனிமவளக் கொள்ளை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
கேமரா, மைக் ஆகியவற்றை பிடுங்கி வைத்துக்கொண்டு நிருபர் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்துள்ளது.
கரூர் கிருஷ்ணராயபுரம் பகுதியில் குவாரியில் இருந்து நிருபர், ஒளிப்பதிவாளர் கடத்தப்பட்டு ஒரு மணி நேரம் கடந்த நிலையில், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்தனர்.
திமுக எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்ட கும்பல் நிருபர், ஒளிப்பதிவாளர், வழக்கறிஞர் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவ இடத்தில் திமுக எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்ட 50 பேர் நிருபர் உள்ளிட்ட 4 பேர் மீதும் கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
4 பேரையும் கும்பல் கடத்திய நிலையில் சுமார் ஒரு மணி நேரம் கடந்தும் யாரையும் தொடர் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இதுதொடர்பாக தகவல் அறிந்த நிலையில், நிருபரை மீட்க டிஎஸ்பி தலைமையிலான காவல் படையை சம்பவ இடத்திற்கு எஸ்.பி.ஜோஸ் தங்கையா அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வௌியானது.
இந்நிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர் உள்ளிட்ட 4 பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
- கலெக்டர் வளர்மதி தகவல்
- 3 மாத பயிற்சி வகுப்புகள் விரைவில் நடத்தப்பட உள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலை யங்களில் தலா ரூ.34 கோடியே 65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 4.0 தொழில் நுட்ப மையங்களை தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டா லின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு அரசு மற்றும் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் இணைந்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாறிவரும் தொழிற்சாலைகள் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு 4.0 தொழில்நுட்ப மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை தொழிற் பயிற்சி நிலை யத்தில் குறுகிய கால 4 மாத மற்றும் 3 மாத பயிற்சி வகுப்புகள் விரைவில் நடத்தப்ப டவுள்ளது.
அதேபோன்று அரக்கோணம் தொழிற் பயிற்சி நிலையத்திலும் வகுப்புகள் விரைவில் நடத்தப்படவுள்ளது.
இந்த தொழில்நுட்ப மையங்களின் மூலம் பயிற்சி பெறும் பயிற்சி யாளர்கள் பயிற்சி முடித்தவுடன் முன்னணி தொழிற்சா லைகளில் வேலைவாய்ப்பு பெறும் வகையிலும் மற்றும் சுயமாக தொழில் தொடங்கவும் பயனுள்ள வகையிலும் இந்த நவீன தொழிற்பயிற்சி மையங்கள் தொடங்க பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் ராணிப்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலை யத்தில் 4 பாடப் பிரிவுகளின் கீழ் 128 மாணவ மாணவி களும், அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 3 பாடப் பிரிவுகளின் கீழ் 104 மாணவர்களும் என மொத்தமாக 232 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த மாணவ மாணவிகள் இந்த 4.0 தொழில் நுட்ப மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.






