என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிடிவி தினகரன்"

    • 10.12.2025 முதல் 18.12.2025 வரை விருப்பமனு பெறப்படுகிறது
    • விருப்ப மனுவிற்கான கட்டணத்தொகை தமிழ்நாட்டிற்கு ரூ.10 ஆயிரமும், புதுச்சேரிக்கு ரூ.5 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி ஆகியவை அப்படியே தொடருமா, மாறாக இவற்றில் இடம்பெற்றுள்ள கட்சிகள் விலகுமா என யூகங்களும், பேச்சுகளும் இப்போதே அடிபட தொடங்கியுள்ளன.

    இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 


    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதவில், 

    "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 10.12.2025 (புதன்கிழமை) முதல் 18.12.2025 (வியாழக்கிழமை) வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை அடையாறில் அமைந்துள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் விருப்ப மனு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விருப்ப மனுவிற்கான கட்டணத்தொகை தமிழ்நாட்டிற்கு ரூ.10 ஆயிரமும், புதுச்சேரிக்கு ரூ.5 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    • சட்ட விதியை அ.தி.மு.க. தொண்டர்கள் எல்லோரையும் கேட்டுத்தான் மாற்றினாரா?
    • 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யும் போது தொகுதி மக்களிடம் கேட்டு தான் தகுதி நீக்கம் செய்தாரா?

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியின் இல்ல விழாவிற்கு வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி. வி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய டிசம்பர் 31-ந்தேதி வரை உள்ளது. அதற்குள் கூட்டணி குறித்து அறிவிக்க வேண்டும் என்று சட்டம் ஏதும் போட்டிருக்கிறீர்களா? கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளனர். உறுதியான பின்பு கூட்டணி குறித்து தெரிவிப்பேன்.

    துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் அது எடப்பாடி பழனிசாமிக்கு தான் கொடுக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். 2017-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை அவர் செய்த துரோகங்களுக்கு ஆண்டவன் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார். வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் மூலம் அவரது துரோகத்திற்கு இறுதி தீர்ப்பு எழுதப்படும்.

    2017-ம் ஆண்டு தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எடப்பாடிக்கு ஆதரவாக இருந்து அவரை முதல்வராகிய 18 எம்.எல்.ஏ.க்கள் இவரால் ஜெயித்தவர்கள் அல்ல. இவருடைய அடையாளத்தால் அவர்கள் ஜெயிக்கவில்லை. ஆனால் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யும் போது தொகுதி மக்களிடம் கேட்டு தான் தகுதி நீக்கம் செய்தாரா?

    அதேபோல் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டுவந்த சட்ட விதிகளை எல்லாம் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு தன்னை சுற்றி சில கைத்தடிகளை வைத்துக்கொண்டார். சட்ட விதியை அ.தி.மு.க. தொண்டர்கள் எல்லோரையும் கேட்டுத்தான் மாற்றினாரா? இன்றைக்கு அ.தி.மு.க என்ற கட்சியை இல்லாமல் செய்து இரட்டை இலை சின்னம் கையில் இருக்கிறது என்ற அகம்பாவம், ஆணவம், பதவி வெறியில் பேசிக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    அ.தி.மு.க.வை இன்று எடப்பாடி பழனிசாமி மிகவும் பலவீனப்படுத்தி ஒரு வட்டார கட்சியாகவும் குடும்ப கட்சியாகவும் மாற்றி வருகிறார். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை என்றார்.

    • டிடிவி தினகரன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்து வருகிறார்.
    • அண்ணாமலையின் கூட்டணி கோரிக்கையை டிடிவி தினகரன் நிராகரித்தார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரன் தொடர்ச்சியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்து வருகிறார்.

    இதனிடையே, டிடிவி தினகரன் உடன் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அண்ணாமலையின் கோரிக்கையை டிடிவி தினகரன் நிராகரித்தார்.

    இந்நிலையில், கரூரில் திருமண விழா ஒன்றில் டிடிவி தினகரன் மற்றும் அண்ணாமலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்தோம்; கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை" என்று தெரிவித்தார். 

    • நீ என்னப்பா பைத்தியம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதை போல் டிடிவி தினகரன் பேசி வருகிறார்.
    • டிடிவி தினகரனை நம்பி சென்றவர்கள் நிலை பற்றி அவர் யோசித்தது உண்டா?

    மதுரையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதற்கு உதயகுமார் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் மேலும் கூறியதாவது:-

    ஜெயலலிதா 10 ஆண்டுகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் டிடிவி தினகரனின் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது.

    நீ என்னப்பா பைத்தியம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதை போல் டிடிவி தினகரன் பேசி வருகிறார்.

    டிடிவி தினகரனை நம்பி சென்றவர்கள் நிலை பற்றி அவர் யோசித்தது உண்டா?

    டிடிவி தினகரனுடன் இருந்த தங்கத்தமிழ் செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் திமுக சென்றபோது ஏன் கவலைப்படவில்லை?

    பொதுவெளியில் டிடிவி தினகரன் எதை வேண்டுமானாலும் பேசிவிடலாமா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொடநாடு கொலை, கொள்ளை நடந்தபோது சசிகலா சிறையில் இருந்தார்.
    • முன்னாள் அமைச்சர்கள் குறித்த கோப்புகள் போயஸ் கார்டனில் இருந்தன.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

    * கொடநாடு கொலை, கொள்ளை நடந்த சூழ்நிலையை யோசித்து பாருங்கள்.

    * கொடநாடு கொலை, கொள்ளை நடந்தபோது சசிகலா சிறையில் இருந்தார்.

    * கொடநாடு கொலை, கொள்ளை நடந்த சமயத்தில் நான் டெல்லியில் விசாரணையில் இருந்தேன்.

    * எடப்பாடி பழனிசாமி கொடநாடு பங்களாவுக்கு போய் கோப்புகளை தேடி கொண்டிருந்தார்.

    * கொடநாடு பங்களாவில் எந்த ஃபைலை தேடினார்கள்.

    * முன்னாள் அமைச்சர்கள் குறித்த கோப்புகள் போயஸ் கார்டனில் இருந்தன.

    * முன்னாள் அமைச்சர்கள் குறித்த கோப்புகளை நான் தான் கிழித்தெறிந்தேன்.

    * கொடநாடு கொலை, கொள்ளை நடந்தபோது யார் ஆட்சி நடந்து கொண்டிருந்தது?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால் கடுமையான போட்டியாக அமையும்.
    • 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தான் செல்லும்.

    சென்னை அடையாறில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக- தவெக இடையே தான் போட்டி.

    2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தான் செல்லும்.

    விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால் கடுமையான போட்டியாக அமையும்.

    மனோஜ் பாண்டியன் திமுகவிற்கு சென்றது வருத்தமளிக்கிறது. இருப்பினும், மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்.

    பல கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடக்க கட்டத்தில் உள்ளது. இறுதி முடிவு எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செங்கோட்டையனை விட வயதில் சிறியவரானாலும் எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்து தகுதியும் உள்ளது.
    • ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட துரோகி தான் டி.டி.வி. தினகரன்.

    மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இ.பி.எஸ்.-ஐ விட செங்கோட்டையன் வயதில் மூத்தவர் அவ்வளவு தான்.

    * ராகுல் காந்தி கூட தான் வயதில் சிறியவர், ஆனால் தலைவர்கள் அவர் பின்னால் இருக்கிறார்கள்.

    * செங்கோட்டையனை விட வயதில் சிறியவரானாலும் எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்து தகுதியும் உள்ளது.

    * கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி A1 குற்றவாளி என்றால் சிறையில் தள்ளி விடலாமே?

    * ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட துரோகி தான் டி.டி.வி. தினகரன்.

    * டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வத்திற்கு நடுவில் செங்கோட்டையன் மாட்டிக்கொண்டார்.

    * இங்கு ராஜாவாக இருந்த செங்கோட்டையன் அங்கு கூஜா தூக்குவது போல் ஆகிவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரட்டை இலை பலவீனப்பட்டாலும் பரவாயில்லை என கட்சி பதவியை பிடித்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
    • தி.மு.க.வின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நான் துரோகியா?

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 2026 தேர்தலில் தென்மாவட்ட மக்கள் மிக மோசமான தோல்வியை எடப்பாடி பழனிசாமிக்கு பரிசாக அளிப்பர்.

    * பசும்பொன்னுக்கு வந்த செங்கோட்டையனை நீக்கிய இ.பி.எஸ். முடிவை தென்மாவட்ட மக்கள் அவமானமாக கருதுவார்கள்.

    * ஹிட்லரை போல செயல்பட்டுக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி கட்சியின் அடிப்படை விதியை மாற்றி விட்டார்.

    * இரட்டை இலை பலவீனப்பட்டாலும் பரவாயில்லை என கட்சி பதவியை பிடித்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    * தி.மு.க.வின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நான் துரோகியா?

    * கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு காரணமான இ.பி.எஸ்.தான் தி.மு.க.வின் பி டீம்.

    * தகுதியே இல்லாத எடப்பாடி பழனிசாமி வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க போகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செங்கோட்டையன் பசும்பொன்னுக்கு வந்தது அரசியல் நிகழ்ச்சி அல்ல.
    • முதலமைச்சராக்கிய சசிகலாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கிய துரோகி எடப்பாடி பழனிசாமி.

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நிகழ்ச்சி ஏற்பாடுகளை செங்கோட்டையன் பார்வையிட்ட பின்னரே ஜெயலலிதா ஒப்புதல் அளிப்பார்.

    * செங்கோட்டையன் பசும்பொன்னுக்கு வந்தது அரசியல் நிகழ்ச்சி அல்ல.

    * அ.தி.மு.க.விற்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் செங்கோட்டையன் ஈடுபடவில்லை.

    * முதலமைச்சராக்கிய சசிகலாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கிய துரோகி எடப்பாடி பழனிசாமி.

    * செங்கோட்டையனை தகுதியே இல்லாத எடப்பாடி பழனிசாமி நீக்கியது கொள்ளிக்கட்டையால் தலையை சொறிவதற்கு சமம்.

    * ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் என்னைப் பார்த்து துரோகி என எடப்பாடி பழனிசாமி பேசுவது சிரிப்பாக உள்ளது.

    * யாரையும் துரோகி என சொல்லுவதற்கு கூட எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியே இல்லை.

    * செங்கோட்டையன் சொன்னதுபோல துரோகத்திற்கு நோபல் பரிசு பெறும் தகுதி இ.பி.எஸ்.-க்கு தான் உள்ளது.

    * அ.தி.மு.கவிலிருந்து செங்கோட்டையனை நீக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை. அவர் அழிவை தேடிக்கொள்கிறார்.

    * தகுதியில்லாத எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகியான செங்கோட்டையனை நீக்குவதா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு குற்றச்சாட்டை செங்கோட்டையன் கூறினார்.
    • செங்கோட்டையன் தி.மு.க.வை எதிர்த்து சட்டமன்றத்தில் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது.

    சேலம்:

    சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    * வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு குற்றச்சாட்டை செங்கோட்டையன் கூறினார்.

    * செங்கோட்டையன் தி.மு.க.வை எதிர்த்து சட்டமன்றத்தில் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது.

    * சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்பவர்கள்தான் ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றோர்.

    * தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விரும்புகிறார்கள்.

    * 2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு பி டீமாக செயல்படுவது தான் அவர்களின் விருப்பம் என்றார்.

    • ஈரோடு பகுதியில் மாய உலகத்தை உருவாக்கி சிற்றரசு போல செயல்பட்டவர் செங்கோட்டையன்.
    • அ.தி.மு.க.வில் முறையாக உட்கட்சி தேர்தல் நடத்தி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்.

    சேலம்:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    இதையடுத்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    * கிட்டத்தட்ட 6 மாதங்களாக செங்கோட்டையனின் நடவடிக்கை கட்சிக்கு எதிரானதாக இருந்தது.

    * ஜெயலலிதா விசுவாசியாக இருந்தால் செங்கோட்டையன் ஏன் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    * நான் முதலமைச்சராக ஆன பின்னர் தான் செங்கோட்டையன் மீண்டும் அமைச்சரானார்.

    * ஈரோடு பகுதியில் மாய உலகத்தை உருவாக்கி சிற்றரசு போல செயல்பட்டவர் செங்கோட்டையன்.

    * ஜெயலலிதாவின் புகைப்படம் இல்லாததால் விழாவில் பங்கேற்கவில்லை என செங்கோட்டையன் கூறியிருந்தார்.

    * குற்றவாளி சசிகலா, தப்பித்தது தமிழகம் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவர் ஓ.பன்னீர்செல்வம்.

    * அ.தி.மு.க. பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    * சேர்க்க வேண்டுமென செங்கோட்டையன் கூறியவர்கள் உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள், பிரிந்து சென்றவர்கள் அல்ல.

    * அ.தி.மு.க.வில் முறையாக உட்கட்சி தேர்தல் நடத்தி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்.

    * அ.தி.மு.க.வின் சட்டவிதிப்படி தான் அனைத்தும் நடக்கிறது என்பது செங்கோட்டையனுக்கு தெரியாதா?

    * அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக செயல்பட்டால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.

    * அதிமுகவைப் பற்றி பேச டிடிவி தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை.

    * கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அ.தி.மு.க. ஆட்சியில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

    • முதல் நாளிலேயே அவருக்கு இந்த நிலை என்றால் வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை கட்சியினர் அறிவார்கள்.
    • யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் அவர்களுக்கு மரியாதை கிடைக்கும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 54-ம் ஆண்டு பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் அனைத்து பொருட்களும் கடுமையாக விலை உயர்ந்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    4½ ஆண்டுகள் மக்களைப்பற்றி கவலைப்படாமல் தற்போது உங்களுடன் ஸ்டாலின் என மனுக்களைப் பெற்று வருகிறார். தேர்தலின்போது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து விட்டு மக்களை ஏமாற்றினர். ரூ.1000 கொடுத்து விட்டு ரூ.5000 வரை மக்களிடம் இருந்து பறிக்கின்றனர். டி.டி.வி.தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் போன்றவர்கள் வெளியே சென்று விட்டதால் அ.தி.மு.க. அழிந்து விட்டதாக பேசுகின்றனர். அ.தி.மு.க.வை அழிக்க யாராலும் இயலாது. தன்னை வளர்த்த இயக்கத்தை மறந்து விட்டு செங்கோட்டையன் எதிர் முகாமிற்கு சென்றுள்ளார்.

    தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும்போது தினகரன், ஓ.பன்னீர்செல்வத்திற்கு நடுவில் அவர் சிக்கிக்கொண்டார். முதல் நாளிலேயே அவருக்கு இந்த நிலை என்றால் வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை கட்சியினர் அறிவார்கள். யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் அவர்களுக்கு மரியாதை கிடைக்கும். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சகிகலா உதவியாளராக இருந்தார். டி.டி.வி.தினகரன் போன்ற அவரது குடும்பத்தினர் ஜெயலலிதா வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்தனர். அந்த சொத்துக்களை வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ளனர். இதனை மத்திய அரசு கண்டு பிடித்துள்ளது. விரைவில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்கள் மீது வழக்கு பதியப்படுவது உறுதி.

    சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் ஆகியோர் யாரை ஒருங்கிணைக்கப் போகிறார்கள் என தெரியவில்லை. அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அனைவரும் சரண் அடைந்து விட்டனர். இவர்கள் தனியாக கட்சி ஆரம்பித்து மக்களை சந்திக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தி ஊரை ஏமாற்றுகின்றனர். இவர்கள் 4 பேருடன் வேறு யாராவது ஒன்று இரண்டு பேர் இருந்தால் அவர்களும் அ.தி.மு.க.வுக்கு வந்துவிடுவார்கள்.

    பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்ததால் அ.தி.மு.க.பற்றி தவறான கருத்துகளை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பரப்பி வருகின்றனர். தி.மு.க.வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் அ.தி.மு.க.வுடன் சேரும். வருகிற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலரும் என்று பேசினார். 

    ×