என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க அரசு ரூ.5 ஆயிரம் அல்ல ரூ.50 ஆயிரம் கொடுத்தாலும் அ.தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும்- டி.டி.வி. தினகரன்
    X

    தி.மு.க அரசு ரூ.5 ஆயிரம் அல்ல ரூ.50 ஆயிரம் கொடுத்தாலும் அ.தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும்- டி.டி.வி. தினகரன்

    • தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
    • அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஓர் அணியில் இணைந்து விட்டோம் என்ற பயம் வந்துவிட்டது.

    மதுரை:

    மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் வீரவெற்றி பாண்டியன் இல்ல திறப்பு விழா நடைபெற்றது. இதில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு புதிய வீட்டை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    விஜய், திரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் கூறியது, அவரது தனிப்பட்ட விமர்சனம். இருந்தாலும் அவர் தனிப்பட்ட விமர்சனத்தை தவிர்ப்பது நல்லது. மகளிர் உரிமை தொகை ரூ.5 ஆயிரம் அல்ல, ரூ.50 ஆயிரம் கொடுத்தாலும், அ.தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும். தி.மு.க. அரசு முடிவுக்கு வந்துவிடும்.

    கூலிப்படை தான் தமிழ்நாட்டில் உருவாகி உள்ளது. போதைப்பொருள் பழக்கம் அதிகமாகி உள்ளது. தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. குழந்தைகள் முதல் மூதாட்டி வரை பாலியல் நடக்கிறது. அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஓர் அணியில் இணைந்து விட்டோம் என்ற பயம் வந்துவிட்டது.

    தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக உள்ளது. புதிய கட்சிகள் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது. அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்துள்ளது. காங்கிரஸ் உண்மையில் தி.மு.க. கூட்டணியில் இருக்க போகிறார்களா, இல்லையா என்பதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படாது. அ.ம.மு.க. குக்கர் சின்னத்தில் போட்டியிடும், அதிகாரத்தில் பங்கு கேட்பது எங்கள் கட்டிஷனில் இல்லை. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தொகுதியில் தோற்கடிக்க சபரீசன் திட்டமா என்ற கேள்விக்கு, சபரீசன் அல்ல மாரீஸ்ஸன் வந்தாலும் கவலை இல்லை, தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சிக்கு மக்கள் அனுமதி தந்ததில்லை, இந்த தேர்தலில் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம் என்றார்.

    Next Story
    ×