என் மலர்
நீங்கள் தேடியது "DMK"
- நடிகர் விஜய் நடிகை திரிஷாவுடன் ஜோடியாக திருமண வரவேற்பு விழாவுக்கு சென்றது, அவருடைய தனிப்பட்ட விவகாரம்.
- ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கும் கண்டிப்பாக பிரசாரத்திற்கு வெகு விரைவில் வருவார்.
ஆலந்தூர்:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளாக அழைத்து அவரவர்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டு இருக்கிறார். தொகுதி ஒதுக்கீடுகள் முடிந்த பின்பு, அடுத்த கட்டமாக எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
அவ்வாறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பொழுது, எங்கெங்கெல்லாம் கடுமையான போட்டிகள் இருக்கிறதோ, அந்தத் தொகுதிகளில் தி.மு.க.வை போட்டியிட செய்து, எதிரணியினரை தோல்வி அடைய செய்து, வெற்றி கண்டுள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில், இந்த வித்தியாசமான அனுபவத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நான் முதல்முறையாக பார்த்தேன்.
முன்பெல்லாம் எங்கெல்லாம் போட்டி கடுமையாக இருக்கிறதோ? அந்தத் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுப்பார்கள். ஆனால் முதல் முறையாக, தமிழ்நாட்டு அரசியலில் ஏறக்குறைய 40 ஆண்டுகால எனது அரசியல் வாழ்க்கையில் வித்தியாசமான அணுகுமுறையை அவர் மேற்கொண்டார்.
கூட்டணி கட்சிகளை அழைத்து, கடுமையான போட்டிகள் உள்ள தொகுதிகளில், நீங்கள் வெற்றி காண முடியாது. எனவே அந்தத் தொகுதிகளை நான் எதிர்கொள்கிறேன் என்று கூறி, சவால்களை தானே சந்திக்க தயாராக கூடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எனவே தொகுதிகள் பங்கீடுகள் கூட்டணிக் கட்சிகள் இடையே நல்லபடியாக நடந்து முடியும்.
எடப்பாடி பழனிசாமி வருகிற சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த பின்பு, முதலமைச்சராக மட்டுமல்ல, அவர் எதிர்க்கட்சி தலைவராக கூட ஆக முடியாது. அவர் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் இனிமேல் அமர்வதற்கு வாய்ப்பே இல்லை.
ராகுல்காந்தி தேர்தல் நடக்கும் அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். எனவே ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கும் கண்டிப்பாக பிரசாரத்திற்கு வெகு விரைவில் வருவார்.
காங்கிரஸ் கட்சியில் போட்டியிடுவதற்கு விருப்ப மனுக்கள் கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்துவதற்கு, ஸ்கிரீனிங் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. எனவே வெகு விரைவில், நேர்காணல் தொடங்க இருக்கிறது.
நடிகர் விஜய் நடிகை திரிஷாவுடன் ஜோடியாக திருமண வரவேற்பு விழாவுக்கு சென்றது, அவருடைய தனிப்பட்ட விவகாரம். அதைப்பற்றி எல்லாம் பேசிக்கொண்டே இருப்பது நாகரிகமாக இருக்காது. கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்கீடு மகிழ்ச்சியானதாக இல்லை. ஆனாலும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று கிரீஷ் சோடங்கர் கூறி இருப்பது அவருடைய கருத்து. தொகுதிகளை மனநிறைவுடன் ஏற்றுக்கொள்கி றோம் என்பது எனது கருத்து.
இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.
- தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலம் என அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்.
- மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளது.
உங்கள் கனவ சொல்லுங்க திட்டத்தின் நிறைவாக கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிறப்புரையாற்றி வருகின்றனர்.
அதன்படி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கனவு ஆட்சியை நடத்தி வருகிறார் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
மக்களிடம் இருந்து கற்றுக்கொண்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என அண்ணா சொன்னதை போலவே முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்.
திமுக ஆட்சியில் 11.9 சதவீத பொருளாதார வளர்ச்சியோடு தமிழ்நாடு தலைநிமிர்ந்து நின்றுள்ளது.
தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலம் என அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்.
மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளது.
2016 - 2021 ஆண்டுகளில் 4 சிப்காட் பூங்காக்கள் மட்டுமே தொடங்கப்பட்டன. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் 33 சிப்காட் தொழிற் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
5 ஆண்டுகளில் 8 டைடல் பார்க் & டைடல் நியோ பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. 8 இடங்களில் பணிகள் நடக்கின்றன. 4 இடங்களில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளன.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- புதிதாக தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, மார்ச் 6-
தமிழக சட்டசபை தோ்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டணியில் காங் கிரஸ், தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்பட 21 கட்சிகள் உள்ளன.
தி.மு.க. கூட்டணியில் ஓரிரு நாள்களில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏணி சின்னத்திலும், மனிதநேய மக்கள் கட்சி உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்துள்ளன.
கடந்த முறை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்ட 3 தொகுதி களிலும் தோல்வி அடைந் தது. இந்த முறை அக்கட்சிக்கு ஒரு தொகுதி குறைக்கப் பட்டுள்ளது. கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 2 தொகுதி களிலும் மனிதநேய மக்கள் கட்சி வெற்றி அடைந்ததால் இந்த முறை தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட வில்லை.
புதிதாக தி.மு.க. கூட்ட ணியில் இணைந்துள்ள தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதி கள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வட தமிழகத்தில், விடு தலை சிறுத்தைகள் கட்சி மூலம் தலித் வாக்குகளையும், தே.மு.தி.க. மூலம் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட வாக்காளா்கள் மற்றும் பிற்பட்டோா் சமூக வாக்குகளை ஒருங்கி ணைத்து வெற்றி பெற வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் உத்தியாகும்.
கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இப்போது தனி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டதால் 4 தொகுதிகள் மட்டும் ஒதுக் கப்படும் என தெரிகிறது.
கடந்த முறை தலா 6 தொகுதிகளில் போட்டி யிட்ட இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கம்யூ னிஸ்டு ஆகியவை தலா 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன. எனவே இந்த இரு கட்சிகளுக்கும் தலா 4 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக இணைந்த மக்கள் நீதி மய்யத்துக்கு டாா்ச் லைட் சின்னத்தில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கடந்த முறை உதயசூரியன் சின்னத் தில் 3 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதி யில் மட்டுமே வெற்றி பெற்றதால், இந்த முறை 2 தொகுதிகள் மட்டுமே உதயசூரியன் சின்னத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவை தவிர, மனிதநேய ஜனநாயக பேரவை, கொங்கு இளைஞா் பேரவை, முக்குலத்தோா் புலிப்படை, புதிய திராவிடா் கழகம் உள்ளிட்ட சில சிறு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் 172 தொகுதிகளில் வேட்பா ளர்கள் களம் இறக்கப்பட உள்ளனர். 62 தொகுதிகளில் தனி சின்னத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டி யிட உள்ளதாக தி.மு.க. வட் டாரத்தில் கூறப்படுகிறது.
- 2016 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சில கட்சிகள் மட்டும் அங்கம் வகித்தது.
- காங்கிரசுக்கு திமுக, 28 சட்டமன்ற தொகுதியையும், ஒரு மாநிலங்களவை சீட்டையும் ஒதுக்கி உள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
திமுக கூட்டணி, அதிமுக - பாஜகவின் என்டிஏ கூட்டணி, புதுவரான விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் என அவரவர் அணியை தேர்தலை நோக்கி அனைவரும் தயார்படுத்தி வருகின்றனர்.
பாஜக, அதிமுக, அன்புமணி பாமக, டிடிவி தினகரனின் அமமுக, என்டிஏ கூட்டணியாக களம் காண உள்ள நிலையில் ஆட்சியில் உள்ள திமுக நடப்பு சட்டமன்றத் தேர்தலில் மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளது.
தற்போது திமுகவின் கூட்டணியில் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
2016 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட சில கட்சிகள் மட்டும் அங்கம் வகித்தது.
அந்த தேர்தலில் தே.மு.தி.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், த.மா.கா. ஆகிய கட்சிகள் மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கி சந்தித்தது.
ஆனால் தேர்தல் முடிவு மக்கள் நலக்கூட்டணியை சிதறவிட்டது. இந்த கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கை கோர்த்தன.
2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தற்போது மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளது.
இதில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம், லீக், மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆம் ஆத்மி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, சமத்துவ மக்கள் கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், கொங்கு இளைஞர் பேரவை, வல்லரசு பார்வர்டு பிளாக், , ஆதி தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, ஆதி தமிழர் கட்சி, புதிய திராவிடர் கழகம், தமிழர் தேசம் கட்சி, அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம், திராவிட தமிழர் கட்சி ஆகிய 26 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் பல அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த 26 கட்சிகளில் 16 கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தி.மு.க. வழங்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே கூட்டணியில் இடம்பெற்ற தேசிய கட்சியான காங்கிரசுக்கு திமுக, 28 சட்டமன்ற தொகுதியையும், ஒரு மாநிலங்களவை சீட்டையும் ஒதுக்கி உள்ளது.
தேமுதிக, விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக என கூட்டணியில் இடம்பெற்ற மற்ற பிரதான கட்சிகளுக்கு திமுக அடுத்தடுத்து எத்தனை சீட் என்று உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் அவர் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பாரா அல்லது தேர்தலை புறக்கணிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அன்புமணி பாமக. என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால் அந்த பக்கம் ராம்தாஸ் செல்ல வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
மறுபுறம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா புதிய கட்சியை தொடங்கி உள்ளார். கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணத்தில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவத்துடனான கட்சிக்கொடியை அறிமுகம் செய்த அவர் விரைவில் கட்சி பெயரை அறிவிப்பதாக கூறியுள்ளார்.
இதற்கு மத்தியில் அதிமுக விஸ்வாசியாக ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கிய முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், அதிமுக ஏற்க மறுத்த நிலையில் திமுகவில் ஐக்கியமாகி உள்ளார். மொத்தத்தில் தமிழக தேர்தல் களம் எப்போதும் எக்கச்சக்க ட்விஸ்ட்களை சந்தித்து வருகிறது.
எல்லாவற்றையும் தாண்டி இந்த தேர்தலில் புதுவரவு விஜய் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அரசியல் வட்டாரங்களிலும், மக்கள் மத்தியிலும் சிறப்பு கவனம் இருந்து வருகிறது.
- அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்து வருகிறார்கள்.
- தி.மு.க. நிர்வாகிகள் பலரும் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கி வருகிறார்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. தற்போதைய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்து வருகிறார்கள்.
அதேபோன்று தி.மு.க. நிர்வாகிகள் பலரும் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கி வருகிறார்கள். இதனிடையே தி.மு.க.வில் விருப்ப மனு அளிப்பதற்கு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் அண்ணா அறிவாலயத்தில் இன்று வழக்கதை விட கூட்டம் அலைமோதுகிறது.
இதனிடையே தி.மு.க. சார்பில் போடி நாயக்கனூர் தொகுதியில் போட்டியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் விருப்பமனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் போடி, ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிட் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.ரவீந்திரநாத் விருப்பமனு அளித்தார்.
- மாவட்டம் தோறும் 'கோரிக்கை பெட்டிகளை' வைத்து மக்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்றுள்ளோம்.
- தமிழக அரசியலில் 'பெட்டி' என்றாலே அதற்கு அர்த்தமே வேறு.
சென்னை:
சட்டசபை தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தீவிரமாகி வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றாலும் பா.ஜ.க. தனி தேர்தல் அறிக்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக கடந்த மாதம் மக்களிடம் கருத்து கேட்க தேர்தல் அறிக்கை பெட்டிகளை தமிழகம் முழுவதும் அனுப்பி வைத்தது.
இதற்கிடையே, சென்னை அமைந்தகரையில் உள்ள தமிழக பா.ஜ.க. தேர்தல் அலுவலகத்தில், 234 சட்டசபை தொகுதிகளில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகள், கருத்துக்கள் அடங்கிய தேர்தல் அறிக்கை பெட்டிகளை, பா.ஜ.க. மாநில நிர்வாகிகளிடம், தேர்தல் அறிக்கை குழு தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார்.
இந்த நிகழ்வில், மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம், தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு மாநில அமைப்பாளர் அர்ஜூனமூர்த்தி, மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வெறும் குளிர்சாதன அறைகளில் அமர்ந்துகொண்டு உருவாக்குவது அல்ல தேர்தல் அறிக்கை, நேரடியாக மக்கள் மன்றத்துக்கே சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுள்ளோம். இதற்காக, மாவட்டம் தோறும் 'கோரிக்கை பெட்டிகளை' வைத்து மக்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்றுள்ளோம்.
தமிழக அரசியலில் 'பெட்டி' என்றாலே அதற்கு அர்த்தமே வேறு. கூட்டணிக்கு முன்பாகப் பெட்டி கைமாறுகிறதா? அல்லது கூட்டணிக்குப் பின்னால் கைமாறுகிறதா? என்பதே பலருக்கும் தெரியாது. ஆனால், எங்களிடம் அந்த 'பெட்டி' கலாசாரம் கிடையாது. நாங்கள் தேர்தல் அறிக்கைக்கு முன்பாக வெறும் பெட்டியைக் கொடுத்து, மக்களின் நம்பிக்கையை நிரப்பிக் கோரிக்கை பெட்டியாகத் திரும்பப் பெற்றிருக்கிறோம்.
நாங்கள் சற்றும் எதிர்பாராத அளவுக்கு, பொதுமக்கள் பெருமளவில் ஆர்வத்துடன் தங்கள் கோரிக்கைகளை இந்தப் பெட்டிகளில் சமர்ப்பித்துள்ளனர். பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீது மக்கள் எந்த அளவுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.
இந்தக் கோரிக்கைப் பெட்டிகள் விரைவில் வாக்குப்பெட்டிகளாக மாறி, தமிழக மக்கள் எங்களுக்கு மாபெரும் வாய்ப்பினைத் தருவார்கள் என்பது உறுதி.
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு வெளியே வந்த முதலமைச்சர் "எல்லாம் முடிந்துவிட்டது" என ஒரு செய்கையைக் காட்டிவிட்டுச் சென்றார். உண்மையில் அவரது அந்தச் செய்கையைப் பார்க்கும்போது, "தி.மு.க. ஆட்சியே முடிந்துவிட்டது" என்பதைக் குறிப்பது போலத்தான் எனக்குத் தோன்றியது.
எங்களை 'அடிமைக் கூட்டணி' என்று விமர்சித்தவர்களைப் பார்த்து நான் பகிரங்கமாகக் கேட்கிறேன். தி.மு.க. -காங்கிரசுக்கு அடிமையா? அல்லது காங்கிரஸ், தி.மு.க.வுக்கு அடிமையா?.
தி.மு.க. அரசின் பொய்களை மக்கள் சந்திப்பு நிகழ்வுகளில் விஜய் மிகத் தெளிவாக எடுத்து கூறியுள்ளார். அந்த வகையில் அவரை நான் பாராட்டுகிறேன். விஜய்யின் இந்தத் தி.மு.க. எதிர்ப்பு நிலைப்பாட்டையும், கருத்துகளையும் நான் வலிமையாக ஆதரிக்கிறேன் என்றார்.
- அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான #StalinStatement-ஐ அறிவிக்க இருக்கிறேன்!
- திராவிட ஆட்சி இம்மண்ணில் மையம் கொண்ட நாளிலேயே, திராவிட மாடல் 2.0-வுக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன்...
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் 'மார்ச் 6: அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில்,
1967-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும் தமிழினத்தின் மீட்சிக்கும் விதையூன்றிய இந்த நாளில், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான #StalinStatement-ஐ அறிவிக்க இருக்கிறேன்!
திராவிட ஆட்சி இம்மண்ணில் மையம் கொண்ட நாளிலேயே, திராவிட மாடல் 2.0-வுக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன்... உங்கள் அனைவரின் ஆதரவோடும்! என்று கூறியுள்ளார்.
- சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- வழக்கில் மொத்தம் 3 பிரிவுகளில் 2 ஆண்டுகள் மற்றும் 1 ஆண்டு மற்றும் 3 மாதம் சிறை விதிக்கப்பட்டது.
தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளராக செயல்பட்டு வருபவர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி. இவர் 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குறித்தும், நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசி இருந்தார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதுமட்டுமின்றி கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது.
இதைத்தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வழக்கில் மொத்தம் 3 பிரிவுகளில் 2 ஆண்டுகள் மற்றும் 1 ஆண்டு மற்றும் 3 மாதம் சிறை விதிக்கப்பட்டது. ஏக காலத்தில் இதை அனுபவிக்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆளுநர், குஷ்புவை ஆபாசமாக பேசிய வழக்கில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை சென்னை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. கடந்த பிப்ரவரி மாதம் எழும்பூர் நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.
- ரூ.100 கோடி மதிப்பில் சுமார் 15 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
- அரசு விழாவிற்கு பின்னர் பாளை கே.டி.சி. நகரில் உள்ள மாதா மாளிகையில் நடக்கும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
நெல்லை:
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக இன்று மாலை காரில் நெல்லைக்கு வந்தடையும் உதயநிதி ஸ்டாலினுக்கு நெல்லை சங்கர் நகரில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் திரண்டு தாரை தப்பட்டை, செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.
அப்போது ரூ.100 கோடி மதிப்பில் சுமார் 15 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
பின்னர் கே.டி.சி.நகரில் அமைக்கப்பட்டுள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பிலான பெட்ரோல் பங்க், கூட்டுறவு துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள், விஜயாபதி விஸ்வாமித்திரர் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு பணிகளை திறந்து வைக்கிறார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் சுகுமார், ராபர்ட் புரூஸ் எம்.பி., நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மேயர் ராம கிருஷ்ணன், துணை மேயர் ராஜூ, மாநகர தி.மு.க. பொறுப்பாளர்கள் (மேற்கு) சுப்பிரமணியன், (கிழக்கு) தினேஷ், கிறிஸ்தவ தேவாயலங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய தலைவர் விஜிலா சத்யா னந்த், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன் உள்ளிட் டோர் பங்கேற்கின்றனர்.
அரசு விழாவிற்கு பின்னர் பாளை கே.டி.சி. நகரில் உள்ள மாதா மாளிகையில் நடக்கும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதில் கட்சியின் 28 சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட திரளான அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி பல்வேறு ஆலோசனைகளை உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
தொடர்ந்து இரவு தென்காசி மாவட்டத்திற்கு சாலை மார்க்கமாக செல்கிறார். இரவில் குற்றாலத்தில் தங்கும் உதயநிதி ஸ்டாலின் நாளை(வெள்ளிக்கிழமை) காலை அங்கு நடைபெறும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அங்கிருந்து மாலையில் புறப்பட்டு வள்ளியூர் வரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆஸ்பத்திரியை திறந்து வைக்கிறார்.
அவரது வருகையையொட்டி நெல்லை மாநகர பகுதி முழுவதும் சாலையின் இருபுறங்களிலும் கட்சி கொடிகள், விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி நெல்லை மாநகர போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். நெல்லை மாநகரில் டிரோன் பறக்க தடை விதித்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நிகழ்ச்சிகளில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், பாளை வடக்கு ஒன்றிய செயலாளர் வேலன்குளம் கண்ணன், தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மனோஜ்குமார், வக்கீல் மாயா, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் அனுராதா ரவிமுருகன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
- திமுக அரசின் "குற்றவாளிகள் கைது" நடவடிக்கையைக் கண்டு குற்றவாளிகள் யாரும் பயந்த மாதிரியே தெரியவில்லை!
- இப்படி முடிந்துவிட்டதை எல்லாம் திரும்பப் பெற ஒரே வழி, உங்களுடைய விடியா ஆட்சிக்கு முடிவு கட்டுவதே!
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்திற்குள், இருசக்கர வாகனங்களில் அரிவாள் மட்டும் பட்டாக்கத்திகளுடன் வந்த ஒன்பது மர்மநபர்கள், கண்ணால் கண்டவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இதே மாதிரியான தாக்குதல் 2 நாட்களுக்கு முன்பு தான் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்துள்ளது. அதன் ரத்த ஈரம் காய்வதற்குள் அதேபோன்றதொரு தாக்குதல் மீண்டும் நடக்கிறது என்றால், இவை சொல்லவரும் செய்தி என்ன?
சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், ஒரு கையாலாகாத வெறும் பொம்மை முதல்வராக இருக்கிறார் என்பது தானே?
திமுக அரசின் "குற்றவாளிகள் கைது" நடவடிக்கையைக் கண்டு குற்றவாளிகள் யாரும் பயந்த மாதிரியே தெரியவில்லை!
பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புகுந்து தைரியமாக இப்படி ஒரு கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது என்றால், இங்கே நடக்கும் #சமூக_அநீதி_திமுகஅரசு இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என்று தானே மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?
இப்படி மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதல்வர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? "முடிந்துவிட்டது" என தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.
ஆமாம் மு.க.ஸ்டாலின் அவர்களே....
உங்கள் ஆட்சியில்
சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது!
பெண்கள் பாதுகாப்பு முடிந்துவிட்டது!
சமூகநீதி முடிந்துவிட்டது!
மொத்தத்தில், தமிழக மக்களின் நிம்மதியே முடிந்துவிட்டது!
இப்படி முடிந்துவிட்டதை எல்லாம் திரும்பப் பெற ஒரே வழி, உங்களுடைய விடியா ஆட்சிக்கு முடிவு கட்டுவதே! அதை மிக விரைவில் தமிழக மக்கள் "சிறப்பாக செய்ய" காத்திருக்கிறார்கள்!
இடைக்காட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.
- வாழையடி வாழையாக இந்த நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.
- மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றதில் நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-துர்கா ஸ்டாலின் ஆகியோர் நடத்தி வைத்தனர்.
பின்னர் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :-
இது "எங்கள் குடும்பம்" என்று சொல்வதா, "கழகக் குடும்பம்" என்று சொல்வதா, ஒட்டுமொத்தமாகச் சொன்னால் "நமது குடும்பம்" என்ற நிலையிலேதான் இந்த மணவிழா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கக்கூடிய அன்பில் கழகப் பணி இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய உங்களுக்கு நான் அதிகம் சொல்லவேண்டிய அவசியமில்லை. தலைவர் கலைஞரிடத்தில் எந்த அளவிற்கு நட்புக் கொண்டிருந்தார். தலைவர் கலைஞருக்கு எந்த அளவிற்குத் துணையாக இருந்தார். திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையிலே கழகத்தை உருவாக்குவதற்கு, கழகம் இன்றைக்கு கம்பீரமாக ஓங்கி நிற்பதற்கு காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்த அன்பில் கடைசி வரையிலே கழகத்திற்கு, தலைவர் கலைஞருக்குப் பக்கபலமாக இருந்தவர்.
அதைத் தொடர்ந்து அவருடைய மகன், என்னுடைய ஆருயிர் நண்பன் அன்பில் பொய்யாமொழி எனக்கு எந்த அளவிற்குப் பக்கபலமாக இருந்தார் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆகவே ஒரு உற்ற நண்பனாக மட்டுமல்ல, என்னுடைய வாழ்விலே ஏற்பட்டிருக்கக்கூடிய பல்வேறு வளர்ச்சிக்குக் காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்தவர் நம்முடைய அன்பில் பொய்யாமொழி.
ஆகவே இப்படித் தொடர்ந்தது அந்த உறவு. அதற்குப் பின்னால் இங்கே வரவேற்புரையாற்றிய உதயநிதி குறிப்பிட்டதைப் போல, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இன்றைக்கு எங்களுடைய குடும்பத்திலே, குறிப்பாக உதயநிதியிடத்திலே எந்த அளவுக்கு நட்போடு பழகி, அவர் இன்றைக்கு வளர்ந்து சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்று, அமைச்சராகவும் பொறுப்பேற்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, ஒரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருப்பவர்தான் நம்முடைய அன்பில் மகேஷ் பொய்யாமொழி .
சட்டமன்றத்தில் உரையாற்றினாலும் சரி, பல்வேறு நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டு உரையாற்றினாலும் சரி, எந்தப் புள்ளிவிவரத்தையும் கையிலே வைத்துக் கொள்ளாமல் எதையும் படபடவென்று கம்ப்யூட்டரைப் போல பேசக்கூடிய ஆற்றலைப் பெற்றவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அவரைப் பார்த்து எல்லோரும் பாராட்டுகிற போது அவருடைய தந்தை என்னுடைய அருமை நண்பர் பொய்யாமொழி எந்த அளவுக்கு சந்தோஷப்படுவாரோ, அதைவிட அதிகமாக நான் சந்தோஷப்பட்டிருக்கிறேன். இப்போதும் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
ஆகவே இது இப்படித் தொடர்ந்து இன்னும் அன்பிலோடும் முடியவில்லை, தலைவர் கலைஞரோடும் முடியவில்லை, என்னோடும் முடியாது. நம்முடைய அன்பில் பொய்யாமொழியோடு முடியாது. அதேபோல நம்முடைய உதயநிதி, மகேஷோடு முடியப் போவதில்லை. உதயநிதியினுடைய மகன் இன்பனாக இருந்தாலும் சரி, மகேஷினுடைய மகன் இனியனாக இருந்தாலும் சரி, அவர்களுடைய நட்பும் இன்றைக்குத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஆகவே வாழையடி வாழையாக இந்த நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு எந்தச் சூழ்நிலையில் வந்திருக்கிறேன் என்பதும் உங்களுக்குத் தெரியும். நேற்று இரவு வரை கூட்டணிக் கட்சியோடு பேசி ஒரு ஒப்பந்தத்தை முடித்துவிட்டுதான், அதுவும் வெற்றிகரமாக முடித்து எல்லோரும் பாராட்டக்கூடிய வகையிலே முடித்துவிட்டுதான் இன்றைக்கு வந்திருக்கிறேன்.
இன்றைக்கு நீங்கள் எல்லாம் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கலாம். கூட்டணி ஒப்பந்தத்தை முடித்துவிட்டு காரில் ஏறுகிற போது கையை எடுத்து இப்படி ஒரு சொல். அந்த ஆக்ஷனோடு நான் ஏறிய காட்சியைப் பார்த்திருப்பீர்கள். அது நான் திட்டமிட்டு செய்தது அல்ல. ஏதோ காரில் ஏற வருகிற போது அங்கே எதிரே நின்று கொண்டிருக்கக்கூடிய பத்திரிகையாளர்கள் எல்லாம் என்னை பார்த்து "என்ன முடிந்துவிட்டதா, முடிந்துவிட்டதா?" என்று கேட்டார்கள். "முடிந்துவிட்டது" என்று சொன்னேன், அவ்வளவுதான். அது இன்றைக்கு பெரிய வைரலாகி "எல்லாம் முடிந்துவிட்டது, ஆல் ஃபினிஷ்டு" அப்படின்னு சொல்ற மாதிரி இன்றைக்கு அந்த காட்சிகள் எல்லாம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதையெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
ஆகவே அந்த மகிழ்ச்சியோடுதான் வந்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, இந்தத் திருமணத்தை முடித்துவிட்டு ராஜ்யசபாவிற்கு வேட்பாளர்களாக இரண்டு பேரை அறிவித்திருக்கிறோம். கூட்டணிக் கட்சிக்கு இரண்டு பேருக்குக் கொடுத்திருக்கிறோம். இரண்டு இடங்களைக் கொடுத்திருக்கிறோம். அந்த நான்கு பேரும் சென்னையில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இருக்கிறார்கள். இன்றுதான் கடைசி நாள். நான் வந்தே தீர வேண்டும் என்று அவர்கள் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். நாம் வழக்கமாகச் செல்வது உண்டு.
ஆகவே இதை முடிச்சுட்டு உடனடியாக நான் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கின்ற காரணத்தினால்தான் வேகவேகமாக வந்து வேகவேகமாகத் திருமணத்தை முடித்து வைத்துவிட்டு நான் செல்லவிருக்கிறேன். இன்றைக்கு அந்த இல்லத்தில் நடைபெறக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றதில் நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். ஆகவே பொய்யாமொழி இருந்து இந்த விழாவை நடத்துகிறபோது எந்த அளவுக்கு மகிழ்ச்சியடைவாரோ, அதைவிடப் பன்மடங்கு மகிழ்ச்சியை நான் அடைந்து கொண்டிருக்கிறேன் என்பதை மாத்திரம் எடுத்துச் சொல்லி, மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் பல்லாண்டுக் காலம் எல்லா நலமும் பெற்றுச் சிறப்போடு வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தி.மு.க.-2, காங்கிரஸ்-1, தே.மு.தி.க.-1 இடங்களில் போட்டியிடுகிறது.
- அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க.-1, பா.ம.க.-1 போட்டியிடுகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். தி.மு.க. கூட்டணியில் மொத்தமுள்ள 4 இடங்களில் தி.மு.க.-2, காங்கிரஸ்-1, தே.மு.தி.க.-1 இடங்களில் போட்டியிடுகிறது.
அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க.-1, பா.ம.க.-1 ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தீவிரம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
அதன்படி, திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
திமுக கூட்டணி கட்சி தலைவரகளும் வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.






