என் மலர்
நீங்கள் தேடியது "DMK"
- பெரிய பெரிய மாநாடெல்லாம் நடத்த வேண்டும் என்று இல்லை.
- மக்களை திசைதிருப்ப - ஏமாற்ற அவதூறு பரப்பும் கூட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் திராவிட மாதமான செப்டம்பர் மாதத்தின் இறுதி நாளில் ஸ்பேசஸ்-இல் சிறப்புரை வழங்கினார். அதில் பேசிய அவர், "சமூக வலைத்தளங்களை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக பார்க்காமல், சமூகத்தை முன்னேற்றுவதற்கான தி.மு.க. கொள்கைகளை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்."
"பெரிய பெரிய மாநாடெல்லாம் நடத்த வேண்டும் என்று இல்லை; நம்முடைய கருத்துகளை - கொள்கைகளை இன்னொருவரிடம் பேசுவதே, மிகப்பெரிய பரப்புரைதான். ஃபேஸ்புக் - யூடியூப் - வாட்ஸ்அப் - ட்விட்டர் - இன்ஸ்டாகிராம் - ஷேர்சாட் – டெலிகிராம் என்று நிறைய வசதிகள் வந்துவிட்டது. மக்களை திசைதிருப்ப - ஏமாற்ற அவதூறு பரப்பும் கூட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும்."
"அ.தி.மு.க.வும் - பா.ஜ.க.வும் பொய்ச் செய்திகளையும் அவதூறுகளையும் பரப்புவதற்காகவே சம்பளம் கொடுத்து வேலைக்கும் – கூலிக்குத் தனியாகவும் ஆட்களை வைத்திருக்கிறார்கள். அவர்கள் என்றைக்காவது கொள்கையைப் பேசிப் பார்த்து இருக்கிறீர்களா? சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஆதரித்து – வெறுப்பை விதைக்கும் பா.ஜ.க.வால் அதன் கொள்கையை தமிழ்நாட்டில் பேச முடியாது. அ.தி.மு.க.விற்குக் கொள்கை என்ற ஒன்றே கிடையாது," என்று தெரிவித்தார்.
- அக்டோபர் 27-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
- நவம்பர் 4, 5-ந்தேதி மற்றும் 18, 19-ந்தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.
சென்னை:
தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1.1.2024 தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதின்று வெளியிட உள்ளது.
அக்டோபர் 27-ந்தேதி முதல் டிசம்பர் 9-ந்தேதி வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும் மற்றும் பெயர்கள் நீக்கவும்-திருத்தம் செய்யவும் மனு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர 4.11.2023 (சனிக்கிழமை), 5.11.2023 (ஞாயிற்றுக்கிழமை), 18.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 19.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும், 1-1-2024 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து, அந்தப் படிவங்களை அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும்-வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும்-புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும்; தொகுயிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும், தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அக்டோபர் 27-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
அக்டோபர் 27-ந்தேதி முதல் டிசம்பர் 9-ந்தேதி வரை பெயர்களைச் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வதற்கு மனு கொடுக்க கால அவகாசம் வழங்கப்படும்.
நவம்பர் 4, 5-ந்தேதி மற்றும் 18, 19-ந்தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும். 1-1-2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள படி, சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கும் நாட்களில், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், ஊர்க்கிளை, வார்டு கழக செயலாளர்-நிர்வாகிகள் மற்றும் வாக்குச் சாவடி நிலைய முகவர்கள் ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் சிறப்பு அக்கறையோடு கழக அமைப்புகளை இப்பணியில் ஈடுபடுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்தப் பணி குறித்து கழக நிர்வாகிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை தலைமைக் கழகத்துக்கு அவ்வப்போது கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- தமிழக தேர்தல் களத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது.
- 2 சிறுபான்மையின கட்சிகளுடன் அ.தி.மு.க. சார்பில் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
சென்னை:
பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட அ.தி.மு.க. இனி எப்போதும் அந்த கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல், 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் அ.தி.மு.க. தலைமையில் தோழமை கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கப் போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி அதிரடியாக திட்டம் தீட்டியுள்ளார். பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி இருப்பதை தொடர்ந்து சிறுபான்மை ஓட்டுகளை கவரும் வகையில் காய் நகர்த்த எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்திருப்பதாக அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கடந்த பாராளுமன்ற தேர்தலை சந்தித்த அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது.
2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. தோல்வியை தழுவியது. ஆளும் கட்சியான தி.மு.க.விடம் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே அ.தி.மு.க. தோல்வி அடைந்திருந்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த அரசியல் நோக்கர்கள், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதாலேயே அ.தி.மு.க. தோல்வியை தழுவி இருப்பதாக தெரிவித்திருந்தனர். இதனை கருத்தில் கொண்டே தற்போது பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறி இருக்கிறது.
தமிழக தேர்தல் களத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த அணிக்கு எதிராக வலுவான புதிய கூட்டணியை அமைத்தால் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற முடியும் என்பதால் அதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி வேகப்படுத்தி உள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த பா.ம.க., தே.மு.தி.மு.க. கட்சிகளை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் இந்த கட்சிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பூவை ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளன.
இந்த கட்சிகளுடன் மேலும் பல புதிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்ப்பதற்கு அ.தி.மு.க. தனி ஆவர்த்தனம் மேற்கொண்டு வருகிறது.
பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்கிற முடிவில் உறுதியாக இருப்பதாக அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டி சிறுபான்மை கட்சிகள் சிலவற்றையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் மூலம் சிறுபான்மையினரின் ஓட்டுகளை கணிசமாக பெற்று பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற முடியும் என்பதே அ.தி.மு.க.வின் கணக்காக உள்ளது. அதற்கேற்ப சிறுபான்மை கட்சிகள் சிலவற்றுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் அமையப் போகும் புதிய கூட்டணி வலுவானதாக இருக்கும். சிறுபான்மையினரின் ஓட்டுகளையும் பெற்று அ.தி.மு.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதுதொடர்பாக 2 சிறுபான்மையின கட்சிகளுடன் அ.தி.மு.க. சார்பில் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதில் இறுதி உடன்பாடு ஏற்பட்டு கூட்டணி தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் அ.தி.மு.க.வின் கூட்டணி ரகசிய பேச்சுகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
- கட்டாரங்குளத்தில் தி.மு.க. சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் தி.மு.க. ஆட்சியின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி தெருமுனை கூட்டம் மானூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அருள்மணி ஏற்பாட்டில் மானூர் அருகே கட்டாரங்குளத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் ஆ.க. மணி முன்னிலை வகித்தார். தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் தீட்டப்பட்ட திட்டங்கள் தொடர்பான சாதனை விளக்க துண்டு பிரசுரம் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி நிர்வாகிகள் சார்பில் வழங்கப்பட்டது. மத்திய மாவட்ட முன்னாள் பொருளாளர் அருண்குமார் சிறப்புரை யாற்றினார்.
கூட்டத்தில் வட்ட செய லாளர்கள் பத்மராஜ், ஆவின் கல்யாணி, இலக்கிய அணி மாவட்ட தலைவர் நெல்லை ரவி, இளைஞரணி துணை அமைப்பாளர் மிக்கேல், விவசாய அணி தலைவர் போத்தி கண்ணு, வேதநாயகம், மகளிர் தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் அனிதா, துணை அமைப்பாளர் தேவிகா, மகளிர் அணி நிர்வாகிகள் ஜெனி, அருணாச்சலம், தகவல் தொ ழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரபா அருள்மணி, எம ராஜன், மாணவரணி மாவட்ட துணை அமைப்பா ளர் ஆறுமுகராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- எத்தனை ஆண்டுகள் ஆனாலும் யாராலும் வீழ்த்த முடியாத இயக்கம் தி.மு.க. என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.
- துணை அமைப்பாளர்கள் ரமேஷ் கண்ணா, குமரகுரு, சத்தி யேந்திரன், கோபிநாத், தௌபீக் ரகுமான் உள் ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் தி.மு.க. மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட அமைப் பாளர் சம்பத் ராஜா தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் ராஜா, இன்பா, ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம், பரமக்குடி முருகேசன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க.வின் நம்பிகை யாக இருப்பது இளைஞரணி.இளைஞரணி நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை எடுத்துக்கூறி இளை ஞர்களை இணைக்க வேண்டும்.
தி.மு.க.வை வீழ்த்தி விடாலாம் என நினைக்கி றார்கள். ஆனால் அது எத்தனை ஆண்டுகள் ஆனா லும் நடக்காது. யார் பெரியவன் என்ற சண்டையில் தான் பா.ஜ.க.-–அதி.மு.க. கூட்டணி முறிந்துள்ளது. இது நிரந்தரமல்ல. நாளையே சேர்ந்து விடுவார்கள். அதை பற்றி நமக்கு கவலையில்லை.
முதல்-அமைச்சரின் செயல்பாட்டை மக்களிடம் கொண்டு சென்று 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் துணை அமைப்பாளர்கள் ரமேஷ் கண்ணா, குமரகுரு, சத்தி யேந்திரன், கோபிநாத், தௌபீக் ரகுமான் உள் ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில இளைஞரணி மாநாட்டில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பது, தொகுதி வாரியாக கலைஞர் நூலகம் அமைப்பது, இல்லம் தேடி இளைஞரணி உறுப்பி னர்கள் சேர்ப்பது, மாரத் தான் போட்டி நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது.
- இந்தியா கூட்டணியில் தி.மு.க. முக்கிய கட்சியாக விளங்குகிறது.
- கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலை எதிர்கொள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்போதே தங்களை தயார்படுத்தி வருகிறது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையில் ஒரு கூட்டணியும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அமைத்துள்ள 'இந்தியா' கூட்டணியும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது.
இந்தியா கூட்டணியில் தி.மு.க. முக்கிய கட்சியாக விளங்குகிறது. தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணிக்கு பலம் சேர்க்கும் வகையில் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
அதுமட்டுமின்றி பிரதமர் மோடி ஆட்சியை பற்றி கடுமையாக விமர்சித்தும் வருகிறார்.
இப்போது முழுக்க முழுக்க தேர்தல் பணிகளில் அதில் கவனம் செலுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அண்மையில் கூட்டி பல்வேறு ஆலோசனை வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குச்சாவடி முகவர்கள் (பி.எல்.ஏ.2) கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மண்டல அளவில் இந்த கூட்டத்தை கூட்டி தேர்தல் வியூகம் குறித்து பேசி வருகிறார்.
தேர்தலுக்கு இன்னும் 5, 6 மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவும் தி.மு.க. ஆயத்தமாகி வருகிறது.
இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கி விட்டன. தமிழகத்தில் தி.மு.க.வும் தேர்தல் கூட்டணி அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் காதர் மொய்தீன் தலைமையில் அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. கூட்டணியில் இருப்பதை உறுதி செய்துவிட்டு வந்துள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின்போது ராமநாதபுரத்தில் தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நவாஸ்கனி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
இந்த முறையும் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வந்து உள்ளனர்.
ஆனாலும் தி.மு.க.வில் தொகுதி உடன்பாடு வரும் போது பேசி கொள்ளலாம் என்று கூறிவிட்டனர்.
இதே போல் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதே போல் ஒவ்வொரு கட்சியிலும் அறிவாலயம் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
இதுகுறித்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டபோது தி.மு.க.வில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குழு அமைத்து அறிவிப்பு வெளியிடுவார். இதே போல் ஒவ்வொரு கட்சியிலும் குழு அமைப்பார்கள். அதன் பிறகே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார்.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2019-ம் பாராளுமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, ஐ.ஜே.கே., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இந்த தேர்தலில் ஐ.ஜே.கே. கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி விட்டது. அதற்கு பதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே வரும் வாரங்களில் ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணியை உறுதிப்படுத்த அண்ணா அறிவாலயம் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- முன்னேற்றம் மற்றும் நிலையான ஆட்சிக்காக என்றும் அவர் நினைவுகூறப்படுவார்.
- இன்னும் பல்லாண்டுகள் அவரது சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கட்டும்!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! உலகளாவிய நிதி நெருக்கடியின் போது, பிரதமராக அவரது தலைமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பு இந்தியாவின் எதிர்காலத்தை மறுவடிவமைத்தது.
அவரது ஆர்ப்பாட்டமில்லாத, அறிவார்ந்த மற்றும் பணிவான அணுகுமுறை எக்காலத்திலும் தலைமைத்துவத்திற்கு மதிப்புமிக்க படிப்பினைகளை வழங்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. முன்னேற்றம் மற்றும் நிலையான ஆட்சிக்காக என்றும் அவர் நினைவுகூறப்படுவார். இன்னும் பல்லாண்டுகள் அவரது சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கட்டும்!
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- "மகளிர் உரிமை மாநாடு" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
- தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மகளிர் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
சென்னை:
தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னையில் அக்டோபர் 14-ந் தேதி மகளிர் உரிமை மாநாடு நடைபெற உள்ளது.
இந்த "மகளிர் உரிமை மாநாடு" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மகளிர் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 4 முன்னாள் அமைச்சர்கள் திருட்டுத்தனமாக டெல்லி சென்றுள்ளார்கள்.
- வருகிற தேர்தலில் அடிமைகளையும், அதன் எஜமானர்களையும் விரட்டி அடிக்க வேண்டும்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஹள்ளியில் தி.மு.க. ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இன்று புதுப்பிரச்சினை காலையில் ஒருவர் கூட்டணி இல்லை என்கிறார். மாலையில் கூட்டணி என்கிறார். 4 முன்னாள் அமைச்சர்கள் திருட்டுத்தனமாக டெல்லி சென்றுள்ளார்கள்.
அ.தி.மு.க. என்றால் அது அமித்ஷா.தி.மு.க. தான். இவர்கள் இருவரும் நாடகம் ஆடுகிறார்கள். தேர்தலின்போது இணைந்து வருவார்கள். ஒருவர் திருடர் மற்றொருவர் கொள்ளைக்காரர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், கலைஞர் குடும்பம் தான் வாழ்கிறது என்று மோடி பேசுகிறார். ஆமா கலைஞரின் குடும்பம் தான், தி.மு.க. என்கிற குடும்பம் தான் பிழைக்கிறது. ஆனால் உங்களால் அதானி குடும்பம் தான் பிழைத்து வருகிறது. அதானியும், மோடியும் ஒன்றாக விமானத்தில் சென்றனர். இதுகுறித்து புகைப்படத்துடன் ராகுல் காந்தி விளக்க வேண்டும் என கேட்டார். ஆனால் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு சென்று வெற்றி பெற்றார். இதுதான் இந்தியா கூட்டணிக்கான வெற்றி.
வருகிற தேர்தலில் அடிமைகளையும், அதன் எஜமானர்களையும் விரட்டி அடிக்க வேண்டும். நம்முடைய கூட்டம் கொள்கை கூட்டம் என்பதை நிரூபிக்க வேண்டும். நமது முதலமைச்சர் செயல்படுத்திய திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும்.
- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும்.
சென்னை:
அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகாவில் அவர்கள் முழு அடைப்பு நடத்துவது பற்றி நான் ஒன்றும் சொல்ல தேவையில்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஒவ்வொருவரும் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்த ஆரம்பித்தால், சுப்ரீம் கோர்ட்டுக்கு என்று கொடுக்கப்பட்டிருக்கிற தனி அதிகாரம் என்ன ஆகும் என்பதை அரசியல் தெளிவு தெரிந்தவர்கள் உணர வேண்டும்.
அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டும் தங்களுடைய கருத்துக்கு எதிர்ப்பு வருவதை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதையும் சுப்ரீம் கோர்ட்டு தான் தீர்மானிக்க வேண்டும்.
13.9.2023 முதல் 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. நாளையுடன் அந்த 15 நாள் கெடு முடிகிறது. இடையில் கர்நாடகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தாலும் நமக்கு தர வேண்டிய தண்ணீரை தந்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் 2500 கனஅடி, 3000 கனஅடி என்று வழங்கியவர்கள் படிப்படியாக இன்று காலை நிலவரப்படி 7 ஆயிரம் கனஅடி திறந்து விட்டுள்ளனர்.
இன்னும் நமக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரவேண்டி இருக்கிறது. நாளைக்குள் இந்த தண்ணீர் வந்துவிடும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் ஆன்லைனில் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் நமக்கு தேவையான 12,500 கனஅடி தண்ணீரை தர வேண்டும் என்று வற்புறுத்துவோம்.
காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும்.
பாஜக கூட்டணியில் இருக்கக் கூடாது என்பதை உணர்ந்துதான் அதிமுக முடிவு செய்துள்ளது. அதிமுக கூட்டணி முறிவு, அவர்கள் வீட்டில் நடப்பது, அதைப்பற்றி நாம் கருத்து கூற முடியாது.
அதிமுக- பாஜக கூட்டணியில் இருக்க வேண்டுமா? இருக்கக்கூடாதா என்பதை அந்த கட்சி தலைவர்கள் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.