search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assembly elections"

    • சந்திரபாபு நாயுடு வெளியே வந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்காக ஏங்குகிறார்.
    • தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை கோபமடைய செய்துள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது. அங்கு தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது.

    சினிமா படங்களில் வரும் கொடூரமான பாத்திரங்களை நினைவூட்டி சந்திரபாபு நாயுடு மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பஸ் யாத்திரை மூலம் பிரசாரம் செய்து வரும் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில்:-

    சந்திரபாபு நாயுடு மக்களை ஏமாற்றுவதை தொழிலாக கொண்டுள்ளார். மக்களை ஏமாற்றும் பழக்கம் கொண்ட குற்றவாளியான சந்திரபாபு நாயுடுவுக்கும் மக்களுக்குமான போர் இந்த தேர்தல்.

    சந்திரபாபு நாயுடு வெளியே வந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்காக ஏங்குகிறார். அருந்ததி சினிமா படத்தில் ஒரு கல்லறையில் பேயாக பல ஆண்டுகள் வில்லன் காத்திருப்பார். பின்னர் வெளியே வந்து பழி வாங்குவார். அதே போல சந்திரபாபு நாயுடு செயல்பாடும் உள்ளது எனக் கூறினார்.


    இது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை கோபமடைய செய்துள்ளது. இது குறித்து தெலுங்குதேசம் கட்சித் தலைவர் வர்லராமையா தேர்தல் ஆணையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி பேசிய ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கருதுவதாக கூறி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 48 மணி நேரத்திற்குள் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி பதில் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    ஏற்கனவே ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்த சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியது. தற்போது ஜெகன்மோகன் ரெட்டிக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • முன்னாள் முதல் மந்திரி ஜனார்த்தன ரெட்டியின் மகன் ராம்குமார் ரெட்டி போட்டியிடுகிறார்.
    • பாரளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து, சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் வருகிற பாரளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து, சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல் மந்திரிகள் 6 பேரின் மகன்கள் போட்டியிடுகின்றனர்.

    முன்னாள் முதல் மந்திரி ராஜசேகர ரெட்டியின் மகனும், இப்போதைய முதல் மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டி, புலிவெந்துலா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

    முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், மங்களா கிரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.


    முன்னாள் முதல் மந்திரி என்.டி. ராமாராவின் மகன் நடிகர் பாலகிருஷ்ணா ஹிந்துபூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். முன்னாள் முதல் மந்திரி பாஸ்கரராவின் மகன் மனோகர், தெனாலி தொகுதியில், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.

    வெங்கடகிரி தொகுதியில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில், முன்னாள் முதல் மந்திரி ஜனார்த்தன ரெட்டியின் மகன் ராம்குமார் ரெட்டி போட்டியிடுகிறார்.

    தோனே தொகுதியில் முன்னாள் முதல் மந்திரி விஜய பாஸ்கர் ரெட்டியின் மகன் சூர்ய பிரகாஷ், ரெட்டி போட்டியிடுகிறார்.

    • வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி கிராம மக்களிடம் அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    • 2021-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மைலி கிராமத்தினர் ஒன்று கூடி ஓட்டு மொத்தமாக வாக்களிக்க மறுத்து தேர்தலையே புறக்கணித்தனர்.

    திருச்சுழி:

    தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 100 சத வீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் அலுவலர்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், விருதுநகர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெயசீலன் உத்தரவின் பேரில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஊராட்சி பகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதி ளிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று அங்குள்ள பொது மக்களை சந்தித்து வரும் தேர்தல் அலுவலர்கள், மேற்பார்வையாளர், வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் பொதுமக்களிடம் நேரில் சென்று 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் பள்ளிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட மைலி கிராமத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி கிராம மக்களிடம் அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    மேலும் திருச்சுழி உதவி வாக்குப்பதிவு அலுவலரான ராஜேஸ் மற்றும் திருச்சுழி தாசில்தார் பாண்டி சங்கர் ராஜா மற்றும் சரவணக் குமார் ஆகியோரும் பொது மக்களை நேரில் சந்தித்து 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விளக்கமாக எடுத்து ரைத்தனர்.

    கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மைலி கிராமத்தினர் ஒன்று கூடி ஓட்டு மொத்தமாக வாக்களிக்க மறுத்து தேர்தலையே புறக்கணித்தனர். அந்த பகுதியில் 300 வாக்குகள் இருந்த நிலையில் மதியம் வரை 4 பேர் மட்டுமே வாக்களித்து இருந்தனர். பின்னர் தேர்தல் அதிகாரிகளின் சமாதானத்திற்கு பிறகும் கூட மிக மிக குறைவான இரட்டை இலக்க எண்ணிக்கையிலான வாக்குகளே பதிவானது.

    இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை நிறை வேற்றி 100 சதவீத வாக்குப் பதிவை பதிவு செய்ய வேண்டுமென பொதுமக்களிடம் தேர்தல் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    • இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது
    • கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படாத ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

    தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும், மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படாத ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படவில்லை. கடைசியாக 2104-ம் ஆண்டு தாங்க அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

    இந்நிலையில், நாடு முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோதும், ஜம்மு-காஷ்மீருக்கு தேதி அறிவிக்கப்படாதது குறித்து முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா காட்டமாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக எவ்வளவோ செய்கின்றனர். ஆனால், ஜம்மு-காஷ்மீரில் நிலுவையில் உள்ள சட்டமன்ற தேர்தலை, தேர்தல் ஆணையத்தால் நடத்த முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

    • இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்தல் முடிவுகள் ஜூன் 4 -ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ஒரே கட்டமாக 175 தொகுதிகள் கொண்ட ஆந்திரப் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறுகிறது.

    ஒடிசா மாநிலத்தில் 4 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. மே 13-ம் தேதி 28 தொகுதிகளும், மே 20-ம் தேதி 35 தொகுதிகளுக்கும், மே 25-ம் தேதி 42 தொகுதிகளுக்கும், ஜூன் 1-ம் தேதி மீதமுள்ள 42 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

    தேர்தல் முடிவுகள் ஜூன் 4 -ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜெகன்மோகன் ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் தெலுங்கு தேசம் பா.ஜ.க., ஜனசேனா கட்சி கூட்டணி கட்டாயம் தேவைபடுவதாகவும் தெரிவித்தார்.
    • சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள 10 தொகுதிகள் பட்டியலை வழங்கியுள்ளார்.

    ஆந்திரா முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

    மத்திய மந்திரி அமித்ஷா அழைப்பின் பேரில் சென்ற சந்திரபாபு நாயுடு நேற்று இரவு அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இவர்களின் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்தது.

    அப்போது நாடு மற்றும் மாநிலத்தின் நலனை கருதி சந்திரபாபு நாயுடுவை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர அமித்ஷா அழைப்பு விடுத்தார்.

    ஆந்திராவில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் தெலுங்கு தேசம் பா.ஜ.க., ஜனசேனா கட்சி கூட்டணி கட்டாயம் தேவைபடுவதாகவும் தெரிவித்தார்.

    அப்போது ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் திருப்பதி, ராஜ மகேந்திரபுரம் உள்ளிட்ட 7 தொகுதிகளை பா.ஜ.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள 10 தொகுதிகள் பட்டியலை வழங்கியுள்ளார்.

    ஆந்திராவில் வரும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என நிலை உள்ளதால் பா.ஜ.க. கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவையும் அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

    ஆந்திராவில் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸுக்கு எதிராக தெலுங்கு தேசம் பா.ஜ.க.-பவன்கல்யானின் ஜனசேனா என வலுவான கூட்டணி அமைய உள்ளதால் ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஏராளமான ரசிகர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு கிடா விருந்தை மகிழ்ச்சியுடன் சுட சுட சாப்பிட்டனர்.
    • சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெற உழைக்க தயாராக வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.

    சின்னசேலம்:

    நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

    இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம், நகரம் சார்பில் புதிய பஸ் நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். இதனை தொடர்ந்து நைனார்பாளையம் முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கிடா வெட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்தனர்.

    இதில் ஏராளமான ரசிகர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு கிடா விருந்தை மகிழ்ச்சியுடன் சுட சுட சாப்பிட்டனர். இந்த விருந்து சின்னசேலம் ஒன்றிய தலைவர் செல்வசுதா, நகரத் தலைவர் கில்லி செல்வம், ஒன்றிய அமைப்பாளர் மகேந்திரன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது மேலும் கட்சி நிர்வாகிகளிடையே 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெற உழைக்க தயாராக வேண்டும் என அறிவுறுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் சின்னசேலம் நகரம் மற்றும் ஒன்றியம் சார்பில் ஏராளமான ரசிகர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 

    • ஜெகன்மோகன் ரெட்டியின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள்.
    • சர்மிளா போன்றவர்கள் தங்களுக்கு வாக்குரிமை உள்ள மாநிலத்துக்கு நிச்சயம் திரும்பிச் செல்வார்கள்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா தடா அருகே சுற்றுலா விடுதிகளைத் திறந்து வைத்தார்.

    ஓங்கோலு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட போவதாக வதந்தி பரப்பி வருகின்றனர். ஆனால், தொடர்ந்து 2 முறை தனக்கு ஆதரவளித்த நகரி சட்டமன்றத் தொகுதியில் இந்த முறையும் போட்டியிடுவேன்.

    ஆரம்பத்தில் சீட் கிடைக்காது என்றார்கள். இப்போது வேறு எங்காவது சென்று போட்டியிடுவேன் என்று வேறு ஒரு கதையை உருவாக்கிவிட்டார்கள்.

    ஜெகன்மோகன் ரெட்டியின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள்.

    சந்திரபாபு நாயுடு, நாரா லோகேஷ், பவன் கல்யாண், சர்மிளா போன்றவர்கள் தங்களுக்கு வாக்குரிமை உள்ள மாநிலத்துக்கு நிச்சயம் திரும்பிச் செல்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கரண்பூர் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தலில் அமைச்சர் சுரேந்திர பால் சிங் தோல்வி அடைந்தார்
    • பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சுரேந்திர சிங்கை காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர் சிங் 12,750-வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்

    ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் நவம்பர் 25ம் தேதி மற்றும் டிசம்பர் 3ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. கரண்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர் உயிரிழந்ததால், அந்த தொகுதியில் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. அதனை தொடர்ந்து, கரன்பூர் சட்டமன்ற தொகுதியில் ஜன.5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா தலைமையிலான அமைச்சரவையில் கடந்த மாதம் 30ம் தேதி இணை அமைச்சராக பதவியேற்ற சுரேந்தர் பால் சிங் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். காங்கிரஸ் தரப்பில் குர்மீத் சிங்கின் மகன் ரூபிந்தர் சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஜன.5 அன்று தேர்தல் நடைபெற்ற நிலையில், 81.38 சதவீத வாக்குகள் பதிவானது.

    அதனைத்தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சுரேந்திர சிங்கை காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர் சிங் 12,750-வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தோல்வியால் ராஜஸ்தான் அமைச்சர் பதவியை சுரேந்திர பால் சிங் இழந்துள்ளார்.

    • 2023ம் ஆண்டில் வடகிழக்கு மாநிலங்கள் உள்பட 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்தது.
    • இதில் பா.ஜ.க. 3 மாநிலங்களிலும், கூட்டணி கட்சிகளோடு 3 மாநிலங்களிலும் ஆட்சியை பிடித்தது.

    வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சி


    கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து என 3 வடகிழக்கு மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது. திரிபுராவில் பாஜக, ஐபிஎஃப்டி கட்சி கூட்டணி ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. மேகாலயாவில் பா.ஜ.க, தேசிய மக்கள், ஐக்கிய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை அடங்கிய மேகாலயா ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது. நாகாலாந்தில் என்.டி.பி.பி மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

    கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ்


    கடந்த மே மாதம் நடந்த கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்தி காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமை நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து சித்தராமையா முதல் மந்திரியாகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றனர். பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாதந்தோறும் 2,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.

    5 மாநில தேர்தலில் பா.ஜ.க. அபாரம்


    மிசோரம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. பதவியை தக்கவைத்தது. சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை பறித்தது பா.ஜ.க. இதனால் 3 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. தெலுங்கானாவில் காங்கிரசும், மிசோரமில் எதிர்க்கட்சியும் ஆட்சியைப் பிடித்தன.

    • யார் ஆட்சிக்கு வருவார்கள் என்ற கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • பா.ஜ.க. கட்சி 25 முதல் 29 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிகிறது.

    இந்தியாவில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை காலம் வரும் டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் நிறைவடைகிறது.

    சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஐந்து மாநிலங்களில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்ற ரீதியில் கருத்து கணிப்புகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தனியார் நிறுவனம் (லோக் போல்) நடத்திய ஆய்வில், சத்தீஸ்கர் மாநிலத்தில் 56 முதல் 60 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

    பா.ஜ.க. கட்சி 25 முதல் 29 இடங்களில் வெற்றி பெறும் என்றும், பி.எஸ்.பி. ஒன்று அல்லது இரண்டு இடங்களில் வெற்றி பெறலாம் என்றும் இதர வேட்பாளர்கள் ஒரு இடத்தில் வெற்றி பெறலாம் என்று தெரியவந்துள்ளது. இதே போன்று தெலுங்கானா மாநிலத்திலும் அதிகபட்சம் 44 சதவீத வாக்குகளை பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 61 முதல் 67 இடங்களிலும், பி.ஆர்.எஸ். கட்சி 45 முதல் 51 இடங்களிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆறு முதல் எட்டு இடங்களிலும், பா.ஜ.க. இரண்டு அல்லது மூன்று இடங்களிலும், இதர வேட்பாளர்கள் ஒரு இடத்திலும் வெற்றி பெறலாம் என்று தெரியவந்துள்ளது.

    • கடந்தவாரம் முதல்-மந்திரி அசோக் கெலாட் 1000 பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச மொபைல்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
    • திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்களை டிஜிட்டல் கல்வியறிவுடன் இணைப்பதாகும்.

    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவி காலம் நிறைவடைவதை தொடர்ந்து விரைவில் இங்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கவும், மீண்டும் ஆட்சி அமைக்கவும் காங்கிரஸ் கட்சி பல்வேறு அதிரடி வியூகங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது.

    அதே வேளையில் இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. இதனிடையே ஆளும் காங்கிரஸ் கட்சி பெண்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளது. ஏற்கனவே வீடுகளுக்கு 200 யூனிட்டுக்கு கீழ் மின் கட்டணம் கிடையாது என அறிவித்துள்ள நிலையில் தற்போது அரசு செயல்படுத்தி வரும் இலவச செல்போன் திட்டம் பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்திரா காந்தி ஸ்மார்ட்போன் யோஜனா என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் மொத்தம் 1 கோடியே 40 லட்சம் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 40 லட்சம் பெண்களுக்கு இலவசமாக செல்போன் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை கடந்தவாரம் முதல்-மந்திரி அசோக் கெலாட் 1000 பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச மொபைல்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மொபைலுடன் இலவச இணையமும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்களை டிஜிட்டல் கல்வியறிவுடன் இணைப்பதாகும். இதனால் மாநில அரசு நடத்தும் பல்வேறு திட்டங்களைப் பற்றிய தகவல்களை அவர்கள் எளிதாகப் பெற முடியும் மற்றும் அவர்கள் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த மாநில அரசு தெரிவித்து உள்ளது.

    இந்த திட்டத்தில் பெண்களுக்கு ரியல்மி, ரெட்மி பிராண்டு ஸ்மார்ட் போன்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒரு மொபைல்போனின் விலை ரூ.5,999 மற்றும் ரூ.6,499 என்கின்றனர்.

    அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள், அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு அல்லது ஐ.டி.ஐ. படிக்கும் மாணவிகள் மற்றும் அரசிடம் இருந்து சமூக ஓய்வூதியம் பெறும் விதவை பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. பின்னர் படிப்படியாக அனைத்து பெண்களுக்கும் வழங்கப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    அசோக் கெலாட்டை வீழ்த்த பா.ஜ.க. பல்வேறு வியூகங்களை வகுத்த நிலையில் இந்த இலவச ஸ்மார்ட்போன் திட்டம் பெண்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு தனி மதிப்பை பெற்று கொடுத்துள்ளது. இதனால் பா.ஜ.க. திணறும் நிலை ஏற்பட்டு உள்ளது. தேர்தல் நெருங்கும்போது இரு கட்சிகளும் போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபடும் என தெரிகிறது.

    ×