என் மலர்
நீங்கள் தேடியது "தி.மு.க."
- விஞ்ஞானத்தை பயன்படுத்தினால் தான் நன்றாக வாழ முடியும்.
- வேற்றுமையில் ஒற்றுமை தற்போது மிக அவசிய மாகிறது.
திருப்பூர்:
திருப்பூரில் மதத்தால் பிரிந்தாலும் மனதால் இணைவோம் என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் பங்கேற்று பேசியதாவது:-
விஞ்ஞானத்தை பயன்படுத்தினால் தான் நன்றாக வாழ முடியும். மதத்தால் சண்டையிட்டால் வாழ முடியாது. என்றும் மத நல்லிணக்கம் என்பது தான் முக்கியம். குரங்கை விட மோசமானவனாக மனிதன் உள்ளான். பள்ளியில் படிக்கும் போது இது போன்ற பிரச்சினைகள் கிடையாது. நான் பெரியார் புத்தகங்களை படித்த பிறகு தான் கடவுள் என்பது கற்பனை என உணர்ந்தேன்.
திருப்பூர் எவ்வளவு வளர்ந்து உள்ளது. ஆனால் அமெரிக்காகாரன் திடீரென ஆப்பு வைத்து விட்டான்வடமாநில இளைஞர்களிடம் உங்கள் ஊருக்கு செல்கிறீர்களா? என கேட்டால் அவர்களுக்கு கோபம் வந்து விடும். அந்த அளவுக்கு அவர்கள் இங்கு சிறப்பாக உள்ளனர்.
மும்பையில் பீப் ஸ்டால் இல்லை. அங்கு அவ்வளவு கொடுமை உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மராட்டி தான் பேசி வருகிறார்கள். இந்தி எதிர்ப்பு மகாராஷ்டிராவிலும் வளர்ந்துள்ளது. இந்தியாவிற்கு தமிழ்நாடு தான் முன்மாதிரியாக உள்ளது. 2026ல் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை தற்போது மிக அவசிய மாகிறது.
தமிழகத்தில் நீதிக்கட்சி முதல் தி.மு.க., ஆட்சி வரை சமூக நீதி ஆட்சி நடை பெறுகிறது. வடமாநிலங்களில் இன்னும் பெண்ணடிமை, சாதிய மோதல் நிறைந்துள்ளன. தமிழ்நாட்டு சிந்தனைகள்தான் இன்று நாடு முழுவதும் சென்று கொண்டிருக்கிறது. எனக்கு சினிமா மார்க்கெட் உள்ளது. பணம் உள்ளது. யார் ஆட்சி வந்தாலும் எனக்கு பிரச்சினை இல்லை. 2026ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்திற்கு பாதுகாப்பு.
இவ்வாறு அவர் பேசினார்.
- தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் வேண்டாம் என நினைக்கும் வாக்காளர்கள் காலம் காலமாக தமிழகத்தில் உள்ளனர்.
- அ.தி.மு.க.வின் பலமே இரட்டை இலை தான்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 'அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றுவோம்' என்ற பிரசார நடைபயணம் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது.
பா.ஜ.க. மடியில் அமர்ந்து கொண்டு நேர் எதிரான கொள்கைகளை கொண்டுள்ள கம்யூனிஸ்டு கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளை கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி எப்படி அழைக்கிறார் என்று தெரியவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் வேண்டாம் என நினைக்கும் வாக்காளர்கள் காலம் காலமாக தமிழகத்தில் உள்ளனர்.
அவர்கள் வாக்குகளை வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் கணிசமாக பெறுவார். அந்த வகையில் விஜய்க்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. ஆனால் அந்த வாக்குகள் வெற்றி பெறும் அளவிற்கு கிடைக்குமா? என்பதை என்னால் கணித்து சொல்ல முடியாது.
அ.தி.மு.க.வின் பலமே இரட்டை இலை தான். காமராஜர் குறித்த சர்ச்சை தற்போது தேவையற்றது. முதலமைச்சர், திருச்சி சிவா உள்ளிட்டோர் அந்த விமர்சனம் தொடர்பாக போதிய விளக்கம் கொடுத்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
- தி.மு.க. என்றாலே வாரிசு அரசியல்.
குத்தாலம்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தை மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கொண்டார். அப்போது மாலை மயிலாடுதுறை சின்ன கடைவீதியில் ரோடு ஷோ மூலம் வாகனத்தில் நின்றவாறு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
50 மாத தி.மு.க. ஆட்சியில் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கொடுக்கவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என பயம் வந்துவிட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்கள் குறித்து கவலைப்படவில்லை. வீட்டு மக்களை பற்றிதான் கவலைப்படுகிறார். தி.மு.க. என்றாலே வாரிசு அரசியல். மன்னர் ஆட்சி இந்தியாவில் ஒழிக்கப்பட்டது. மீண்டும் மன்னர் ஆட்சி அமைப்பதற்கு மு.க.ஸ்டாலின் துடிக்கிறார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடுமையான நெருக்கடி தரப் போகிறார்கள். வி.சி.க. ஆட்சியில் பங்கு கேட்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்கின்றன. தேர்தல் நெருங்கும்போது சில கட்சிகள் தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியே வரும். தி.மு.க. ஆட்சியல் நேர்மையான அதிகாரிகளுக்கு மதிப்பில்லை. மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரேசனின் வாகனத்தை பறித்துள்ளனர். முதலமைச்சர் 'ஓரணியில் தமிழ்நாடு' மூலம் தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேருங்கள் என வீடு, வீடாக செல்கிறார். மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது பெட்டியில் மனு வாங்கினார்கள், ஆட்சிக்கு வந்தவுடன் பெட்டியில் உள்ள மனுக்களை எடுத்து தீர்வு காண்பேன் என தொவித்தனர். இப்படி கூறிவிட்டு எதற்கு 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை தொடங்கி மக்களை ஏமாற்றுகின்றனர்.
தி.மு.க. ஆட்சியில் மளிகை பொருட்கள் முதல் கட்டுமான பொருட்கள் வரை அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. ஆனால் எதை பற்றியும் கவலைப்படாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வருகிற பொதுத் தேர்தலிலும் தி.மு.க. தனி மெஜாரிட்டி பெரும் அளவுக்கு மக்கள் வெற்றியை கொடுப்பார்கள்.
- மக்கள் பெரும்பான்மை பலத்துடன் உள்ள ஆட்சியைத்தான் தந்து கொண்டு இருக்கின்றனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத் தேர்தலுக்கு பிறகு வெற்றி பெறும் கட்சிகள் தனித்து ஆட்சி அமைக்குமா? கூட்டணி ஆட்சி அமைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இப்போதே பேசும் பொருளாகி விட்டது.
ஆளும் கட்சியான தி.மு.க. 200 தொகுதிகளை வெல்ல இலக்கு நிர்ணயித்து உள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி என்று தி.மு.க. தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் கூறுகையில், 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் வரும். அதில் காங்கிரசார் மந்திரி சபையில் இடம் பெறுவார்கள் என்றும் பேசி வருகின்றனர்.
திருச்சி மணப்பாறையில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி பேசும் போது, 'நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர் மந்திரி சபையில் இடம் பெறுவார்கள்' என்று கூறினார்.
தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சிதான் மலரும். கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொண்டால்தான் அந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் பேசி இருக்கிறார்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவிக்கையில், 'திருச்சி வேலுச்சாமி ஒரு மூத்த தலைவர். அவரது கூற்றுகள் எப்போதும் சரியானவை' என்று கூறி இருந்தார்.
இது பற்றி தி.மு.க. செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது இதுவரை சாத்தியம் இல்லை. மக்கள் பெரும்பான்மை பலத்துடன் உள்ள ஆட்சியைத்தான் தந்து கொண்டு இருக்கின்றனர். அதேபோல் வருகிற பொதுத் தேர்தலிலும் தி.மு.க. தனி மெஜாரிட்டி பெரும் அளவுக்கு மக்கள் வெற்றியை கொடுப்பார்கள். எனவே கூட்டணி அரசாங் கங்களுக்கு ஏற்ற சூழ்நிலை தமிழ்நாட்டில் இல்லை.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகே இது குறித்தும் விவாதிக்கலாமே தவிர இப்போது அதற்கான அவசியம் எதுவும் ஏற்படவில்லை.
இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
- ஏழை மக்களுக்காக என்ன திட்டத்தை நீங்கள் கொண்டு வந்தீர்கள்.
- உதாரணமாக டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 கூடுதலாக வசூலிக்கிறார்கள்.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்றத் தொகுதி நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைசருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
உங்களது எழுச்சியை பார்க்கும்போது அடுத்த ஆண்டு நடைபெறுகிற தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் என்பதை காட்டுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் எந்த திட்டம் கொண்டு வந்தாலும் ஒரு குழு போடுவார். அதோடு அந்த திட்டத்தை கைவிட்டு விடுவார். இந்த அரசாங்கம் ஒரு குழு அரசாங்கமாக மாறிவிட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் ஏதாவது திட்டம் இந்த தொகுதிக்கு வந்ததா? அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டத்தை முடக்கியது தான் அவருடைய சாதனையாகும். ஏழை மக்களுக்காக என்ன திட்டத்தை நீங்கள் கொண்டு வந்தீர்கள். கொள்ளையடிப்பதற்கு மட்டுமே திட்டங்களை கொண்டு வருகிறார்கள். உதாரணமாக டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 கூடுதலாக வசூலிக்கிறார்கள். இதன் மூலம் வருடத்திற்கு 5,400 கோடி கொள்ளையடித்தது தான் தி.மு.க. அரசு.
இந்த ஊழல் அரசாங்கம் தொடர வேண்டுமா? இது மட்டுமல்ல ஊழல் இல்லாத துறையே இல்லை. இப்படி ஊழல் மலிந்த ஒரே அரசு தி.முக. அரசு. இதற்கெல்லாம் முடிவு கட்ட வரும் தேர்தல் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலாகும். அ.தி.மு.க. ஆட்சியில் முடிவுற்ற பணிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறப்பு விழா காணும் முதலமைச்சர் தான் ஸ்டாலின்.
அ.தி.மு.க. ஆட்சியில் மயிலம் தொகுதியில் சிப்காட்டில் காய்கனி பதப்படுத்தும் பூங்கா 1000 கோடி ரூபாயில் கொண்டு வர திட்டமிடப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு விட்டது. அந்த பூங்கா அமைந்து இருந்தால் பல்லாயிரக்கணக்கானோர்க்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். அதுவும் இந்த ஆட்சியில் பறிபோய் விட்டது.
மரக்காணத்தில் 1500 கோடி ரூபாயில் குடிநீர் தேவைக்காக கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினேன். ஆனால் அந்த திட்டத்தையும் இந்த அரசு ரத்து செய்து விட்டது. இப்படிபட்ட மக்கள் விரோத அரசு இருக்க வேண்டுமா? மக்களுக்கு குடிநீர் வாங்குவதை கூட பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு முதலமைச்சர் ஸ்டாலின் ஆவார்.
ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்தோம். அதை ஸ்டாலின் ரத்து செய்துவிட்டார். ஏன் இந்த ஏழை மாணவர்கள் படிக்கக்கூடாதா? அவர்கள் படிப்பது உங்களுக்கு கசக்கிறதா. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாகும்.
இந்த மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக வருவதற்கு எங்களது அரசு துணை நிற்கும். 2026-ல் மாற்றம் வரும். மக்களுக்கு ஏற்றம் வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து செஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக கேரளா செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. செஞ்சி ஆற்றுப்பாலம் அருகில் இருந்து அ.தி.மு.க. கொடி கட்டிய இரண்டு சக்கர வாகனங்களில் ஏராளமான தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர்.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
- ஒரே நாளில் எட்டு கொலைகள் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 2026-ம் ஆண்டு தேர்தலில் அராஜக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். இந்து விரோத சக்தியை வீட்டிற்கு அனுப்புவார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஒரே நாளில் எட்டு கொலைகள் நடைபெறுகிறது. தற்போது நடக்கும் ஆட்சியில் அனைத்திலும் ஊழல் நடைபெற்று வருகிறது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்தாலே மாற்றம் ஏற்படும் அதேபோல் தற்பொழுது அமித்ஷா வருகை மாற்றத்தை ஏற்படுத்தும். முருகன் மாநாட்டிற்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்று மாநாடு நடத்தப்படும்.
கமலஹாசன் ஒரு எம்.பி., சீட்டுக்காக டார்ச் லைட்டை அடகு வைத்து விட்டார். பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் வருத்தத்துக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.
- 40 தொகுதிகளில் களம்மிரங்குவதற்கு பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்பதே அ.தி.மு.க. பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் கணக்காக உள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய அ.தி.மு.க., தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் அந்தக் கட்சிக்கு தேர்தலில் தோல்வியே கிடைத்தது.

இதைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணிக்கு காய் நகர்த்திய எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அணியில் இருந்து கட்சிகளை இழுத்து புதிய கூட்டணியை அமைத்து விடலாம் என திட்டமிட்டார். ஆனால் அதற்கான சூழல் ஏற்படவே இல்லை .
இந்த நிலையில் தான் அ.தி.மு.க. மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் சேர உள்ளன.
ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த டி.டி.வி. தினகரன் ஓ. பன்னீர்செல்வம், டாக்டர் கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன் ஆகியோரும் இந்த கூட்டணியிலேயே தொடர உள்ளனர்.
இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான புதிய கூட்டணி மெகா கூட்டணியாகவே மாறி இருக்கிறது. இப்படி அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எத்தனை இடங்களை குறி வைத்து காய் நகர்த்தி வருகின்றன என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.
2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ஜ.க. 20 தொகுதிகளில் போட்டியிட்டது. தற்போது இரண்டு மடங்கு கூடுதலாக அந்த கட்சி தொகுதிகளை எதிர்பார்க்கிறது. இதன் மூலம். 40 தொகுதிகளில் களம்மிரங்குவதற்கு அந்த கட்சி திட்டமிட்டு உள்ளது.
பா.ம.க.விற்கு 15 தொகுதிகள் தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் தினகரனுக்கு 10 தொகுதிகள் என முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஓ.பன்னீ செல்வதற்கு தற்போது நான்கு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களை தக்க வைக்கும் வகையில் நான்கு இடங்களை ஒதுக்க லாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தவிர மீதமுள்ள சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளை ஒதுக்கி கொடுப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டணியில் 150 இடங் களில் போட்டியிடுவதற்கு அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ள தன் மூலம் மீதமுள்ள 84 தொகுதிகளையும் பார திய ஜனதா கட்சியிடம் கொடுத்துவிட்டு அவர்கள் மூலமாக மற்ற கட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக வும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. , பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு கள் எவை? எவை? என்பது பற்றிய பட்டியலை தயா ரித்து வைத்துள்ளன.அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி உறுதியாகி இருப்பது போல மற்ற கட்சிகளுடனும் கூட்டணியை இறுதி செய்த பிறகு யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என் கிற விவரங்களை தேர்தல் நேரத்தில் வெளியிடுவ தற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியும் தங்களுக்கு செல் வாக்கு உள்ள பகுதியான கொங்கு பகுதியில் குறிப் பிடத்தக்க தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிட வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளது. இதே போன்று பாட்டாளி மக்கள் கட்சி வடமாநிலங்களில் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை பெறுவதிலும் கவனம் செலுத்த தொடங்கி யுள்ளது.
இப்படி கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகள் தங்களுக்கு தேவையான இடங்களை பெறுவதில் தீவிரம் காட்ட தொடங்கி யுள்ளது.இதன்மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க, கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக விரைவில் இறுதி செய்யப் பட்டு தொகுதி பங்கீடும் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
- சட்டசபையில் நான் பேசும் போது மட்டும் மைக் ஆப் செய்யப்பட்டு வருகிறது.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் 6 மாதத்தில் பல கட்சிகள் இணையும்.
கோவை:
பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பா.ஜ.க என்பது ஜனநாயக ரீதியில் இயங்கூடிய ஒரு கட்சி. பா.ஜ.க தலைவராக இருந்த அண்ணாமலை தனது பதவியில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். கட்சி பணியிலும் சரி, தேர்தல் பணியிலும் சரி அவர் சிறப்பாகவே தனது பணியை செய்துள்ளார்.
பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் ஏற்கனவே அமைச்சர், எம்.எல்.ஏ.வாக இருந்தவர். கட்சி விரிவுபடுகிற போது கட்சியில் இணைபவர்களுக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கி அவர்களின் செயல்பாட்டை பா.ஜ.க. பார்த்து வருகிறது. நயினார் நாகேந்திரன் தலைமையில் பா.ஜ.க. கட்சி சிறப்பாக செயல்படும். அவரது செயல்பாட்டால் நன்மைகள் கிடைக்கும்.
நான் மாநில தலைவராக அல்ல, தேசிய தலைவராக இருக்கிறேன். இந்தி தெரியாத எனக்கு பெரிய பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கிறது பா.ஜ.க. பொறுப்பு வேண்டும் என்று நானாக எப்போதும் கேட்டதில்லை. கட்சி கொடுக்கும் பணிகளை செய்கிறேன்.
தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்படும். இந்த கூட்டணியின் ஒரே நோக்கம் 2026-ல் தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்புவது தான்.
2026-ம் ஆண்டில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்போம். கூட்டணி ஆட்சி பற்றி தலைவர்கள் முடிவு செய்வார்கள்.
சட்டசபையில் நான் பேசும் போது மட்டும் மைக் ஆப் செய்யப்பட்டு வருகிறது. மற்ற கட்சி தலைவர்கள் பேசும் போது அவர்களின் பேச்சு நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆனால் நான் பேசுவது மட்டும் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. சட்டசபையில் பேரவை தலைவரின் செயல்பாடு திருப்தியாக இல்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் 6 மாதத்தில் மேலும் பல கட்சிகள் இணையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தமிழகத்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 21.63 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
- புதிதாக 18.10 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பஞ்சநதி கோட்டை கிராமத்தில் அதி திறன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
தமிழகத்தில் முதல் முதலாக தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள பஞ்சநதிக்கோட்டையில் ரூ. 1.41 கோடி மதிப்பில் அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அதிதிறன் கொள்முதல் நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கு 15 டன் கொள்முதல் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 21.63 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நிகழாண்டு இதுவரை 27.72 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் நிலையம் நிகழாண்டு இதுவரை 3.61 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 400 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. புதிதாக 18.10 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கு அச்சடிக்கப்பட்டு விரைவில் வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் மட்டும் அல்லாமல் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி ஒரு பொற்கால ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என கூறினோம். அதுபோல் வெற்றி பெற்று சாதித்து காட்டினோம்.
தற்போது 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 200 என்ற இலக்கை அடைவோம் என முதலமைச்சர் கூறி இருக்கிறார். ஆனால் அதையும் தாண்டி 234 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ் மொழி வளர்ச்சிக்கு எதுவும் செய்யாமல் மொழியை வைத்து அரசியல் செய்து வருவதாக பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
- பா.ஜ.க.வினர் தி.மு.க. அரசை கண்டிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
திருப்பூர் :
தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற கவனம் செலுத்தாமல் தமிழ் மொழியை பாதுகாப்பதாக கூறி தமிழ் மொழி வளர்ச்சிக்கு எதுவும் செய்யாமல் மொழியை வைத்து அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் தி.மு.க. அரசை கண்டிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
- பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க.வினர் மீது வழக்குகள் போடப்பட்டது.
- வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளோம் என்றார்.
பல்லடம் :
அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட வழக்கிலிருந்து தி.மு.க.வினர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட வழக்கிலிருந்து பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் நகரமன்ற தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம், முன்னாள் நகர செயலாளர் லோகநாதன், நகர பொருளாளர் குங்குமம் ரத்தினசாமி,முன்னாள் மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் மோகன்தாஸ் காந்தி, நகர பிரதிநிதி சம்பத் உள்ளிட்டோர் மீது வழக்குகள் ேபாடப்பட்டது. அந்த வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளோம் என்றார்.
- அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட தாலுகாக்களில் 44 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
- பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என அதில் ஆவுடையப்பன் கூறியுள்ளார்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட தாலுகாக்களில் 44 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பிசான சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
இப்பகுதியில் உள்ள வடக்கு, தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் பாசன விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை செய்ய அத்தியாவசியமாகவும், அவசரமாகவும் உள்ளதால், பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.






