என் மலர்
நீங்கள் தேடியது "எச்.ராஜா"
- திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை அகற்ற கோரி இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின.
- கந்தர் மலை அல்ல, அது சிக்கந்தர் மலை அல்ல என்று எச். ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நடித்துள்ள படம் கந்தன் மலை.
அண்மையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை அகற்ற வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது திருப்பரங்குன்றம் என்பது கந்தர் மலை, அது சிக்கந்தர் மலை அல்ல என்று எச். ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து தான் கந்தன் மலை திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் எச் ராஜா முறுக்கு மீசையுடன் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும் படத்தின் போஸ்டரில் அவருக்கு 'தர்மபோராளி' என்ற பட்டப்பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கந்தன் மலை திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை எச்.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் எச் ராஜா முறுக்கு மீசையுடன் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருக்கிறார்.
- படத்தின் போஸ்டரில் அவருக்கு ’தர்மபோராளி’ என்ற பட்டப்பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நடித்துள்ள "கந்தன் மலை" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் எச் ராஜா முறுக்கு மீசையுடன் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருக்கிறார். மேலும் படத்தின் போஸ்டரில் அவருக்கு 'தர்மபோராளி' என்ற பட்டப்பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை அகற்ற வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது திருப்பரங்குன்றம் என்பது கந்தர் மலை, அது சிக்கந்தர் மலை அல்ல என்று எச். ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆகவே திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து தான் கந்தன் மலை என்று உருவாகியுள்ளதா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
- இந்தியாவில் அதிகமான அளவில் போதைப் பொருள் பயன்படுத்தும் மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
- வைகோ அதிக சீட்டு கேட்டார் என்பதற்காக அவரது கட்சியை தி.மு.க உடைக்க தொடங்கியுள்ளது.
துவாக்குடி:
திருச்சியில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் அரசாங்கம் நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்ட போது ஜனநாயகத்தின் குரல்வளை எப்படி எல்லாம் நெறிக்கப்பட்டது. தமிழகம் எந்த அளவு பாதிக்கப்பட்டது என்பதை எடுத்து கூறும் வகையில் இந்த விழிப்புணர்வு கருத் தரங்கம் நடைபெறுகிறது. இந்த நெருக்கடி கால கட்டத்தில் தமிழகத்தில் டில்லி பாபு, கேரளா ராஜா என பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
இப்படிப்பட்ட காங்கிரஸ் உடன்தான் தற்பொழுது தி.மு.க. கூட்டணி வைத்து உள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகளில் பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றில் வளர்ச்சி அடைந்துள்ளது. 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி ஏற்ற பிறகு பொருளாதாரத்தின் 11-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரை எதிர்த்து பாகிஸ்தான் 700 டிரோன்களை இந்தியா மீது ஏவியது. அதில் ஒரு டிரோன் மட்டுமே இந்திய எல்லையில் வந்து விழுந்தது. அதுவும் வெடிக்கவில்லை மற்ற டிரோன்கள் வானிலே தகர்க்கப்பட்டது. இனி குழந்தைகளுக்கு கூட சீனாவில் தயாரிக்கப்படும் ஏரோப்ளேன் பொம்மையை வாங்க மாட்டார்கள்.
இந்தியாவில் 550 டிரோன் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளது. இதில் 100 நிறுவனங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவில் உள்ளது. அதேபோல் இந்தியாவில் தேவையான ஆயுதங்கள் இருப்பதுடன் வெளிநாட்டிற்கும் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
நமது நாட்டில் ராணுவத்தில் ஆகாஷ், பிரமோத் ஆகிய ஏவுகணைகள் உள்ளது. இது 200 கிலோ மீட்டர் தாண்டி உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கி அழிக்க கூடியது. 78 கோடி பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு காப்பீடு வசதி பெறுகின்றனர்.
தமிழகத்தில் போலீசார் கஞ்சா வழக்கு போடுகின்றனர். ஆனால் இதுவரை ஒரு கிராம் கூட சிந்தடிக் ட்ரக் பயன்படுத்தியதாக எந்த வழக்கும் பதியப்படவில்லை. இந்தியாவில் அதிகமான அளவில் போதைப் பொருள் பயன்படுத்தும் மாநிலமாக பஞ்சாப் தான் இருந்தது. தற்பொழுது தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி எங்கு உள்ளது என்று பிரச்சனை இல்லை. அவர்கள் யார் அதிகம் தருகிறார்களோ அங்கு சென்று விடுவார்கள். வைகோ அதிக சீட்டு கேட்டார் என்பதற்காக அவரது கட்சியை தி.மு.க உடைக்க தொடங்கியுள்ளது. ம.தி.மு.க. பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட்டவரை தற்பொழுது தனது கட்சியில் சேர்த்துள்ளது.
பா.ம.க. கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு பி.ஜே.பி. தான் காரணம் என செல்வ பெருந்தகை கூறியது பக்கத்து வீட்டு ஜன்னலை எட்டிப் பார்ப்பது போன்றது. அப்படியொரு கேவலமான செயலை அவர் செய்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
- ஒரே நாளில் எட்டு கொலைகள் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 2026-ம் ஆண்டு தேர்தலில் அராஜக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். இந்து விரோத சக்தியை வீட்டிற்கு அனுப்புவார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஒரே நாளில் எட்டு கொலைகள் நடைபெறுகிறது. தற்போது நடக்கும் ஆட்சியில் அனைத்திலும் ஊழல் நடைபெற்று வருகிறது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்தாலே மாற்றம் ஏற்படும் அதேபோல் தற்பொழுது அமித்ஷா வருகை மாற்றத்தை ஏற்படுத்தும். முருகன் மாநாட்டிற்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்று மாநாடு நடத்தப்படும்.
கமலஹாசன் ஒரு எம்.பி., சீட்டுக்காக டார்ச் லைட்டை அடகு வைத்து விட்டார். பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் வருத்தத்துக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாஜக தலைவர் எச்.ராஜாவை போலீஸ் வாகனத்தில் ஏறுமாறு காவலர்கள் கூறினர்
- காவல் துறையினரை நோக்கி எச்.ராஜா ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில், டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியும், அதனை கண்டித்தும் தமிழ்நாடு முழுக்க இன்று (மார்ச் 17) முற்றுகை போராட்டம் நடத்த தமிழக பா.ஜ.க. சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்துக்கு வராமல் தடுக்கும் வகையில் அவர்களின் வீடுகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு வெளியே வராமல் தடுத்து நிறுத்தினார்கள். இதனையடுத்து, பாஜக தலைவர்களான அண்ணாமலை, தமிழிசையை போலீசார் கைது செய்தனர்.
இதனிடைய தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் எச்.ராஜாவை போலீஸ் வாகனத்தில் ஏறுமாறு காவலர்கள் கூறினர். அப்போது, நாய் ஏத்துற வண்டியில நான் ஏற மாட்டேன்"... நான் என்ன குற்றவாளியா? என்று கூறி காவல் வாகனத்தில் ஏற அவர் மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து எச்.ராஜாவை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
- தமிழகம் தற்போது அமைதி பூங்காவாக இல்லை.
- இப்போது 500 டாஸ்மாக் கடைகளை அதிகமாக திறந்திருக்கிறார்கள்.
மானாமதுரை:
தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா மானாமதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
தமிழக ஆளுநர் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் (தி.மு.க.) முடிவு பண்ண முடியாது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கையெழுத்தாக இருக்கும் என கனிமொழி சொன்னார். ஆனால் இப்போது இன்னும் 500 கடைகள் அதிகமாக திறந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர். அதற்கு காரணம் டாஸ்மாக். எனவே தி.மு.க.வை வேரோடு கலைவதற்கான அனைத்து செயல்களையும் பா.ஜ.க.செய்யும். தமிழகத்தில் தினமும் கொலைகள், குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. தமிழகம் தற்போது அமைதி பூங்காவாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டணி தொடர்பாக நாங்கள் மையக்குழுவில் எங்களது கருத்துக்களை தெரிவிப்போம்.
- ஒரு முடிவை மாற்ற வேண்டும் என்றால் அது மத்தியில் இருக்கும் பா.ஜனதாதான் முடிவு செய்யும்.
மதுரை:
பா.ஜனதா தேசிய செயலாளரும், மூத்த நிர்வாகியுமான எச்.ராஜா டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமீபத்தில் அரங்கத்திற்குள் நடைபெற்ற பா.ஜனதா கூட்டத்தில் தலைவர் அவ்வாறு பேசினார், இவ்வாறு பேசினார் என்று வதந்தி பரவி கொண்டிருக்கிறது. அதனை பொருட்படுத்த வேண்டாம். அவை முறையாக கூறப்பட்ட தகவல் அல்ல. அவர்கள் சொன்னதாக கசிந்த வார்த்தைகள்.
கூட்டணி தொடர்பாக நாங்கள் மையக்குழுவில் எங்களது கருத்துக்களை தெரிவிப்போம். எங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டாலும், அவர்களே முடிவு செய்து அறிவித்தாலும் அதனை செயல்படுத்துவது தான் எங்கள் கடமை.
கூட்டணி குறித்து உறுதியான முடிவுகள் அறிவிக்கும் வரை பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் பொது வெளியில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம்.
சமீபத்தில் நான் டெல்லிக்கு செல்ல கோவை விமான நிலையத்தில் காத்திருந்தபோது அங்கு எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், ஆகியோரை பார்த்து பேசினேன். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
ஒரு முடிவை மாற்ற வேண்டும் என்றால் அது மத்தியில் இருக்கும் பா.ஜனதாதான் முடிவு செய்யும். இது மாநிலத்தில் உள்ள தலைவர்களோ, நிர்வாகிகள் குழுவோ முடிவு செய்ய முடியாது. எங்கள் கருத்துக்களை மத்திய குழுவிடம் சொல்லலாம்.
தி.மு.க. உடைந்த பானை. இனி ஒட்டாது. தி.மு.க. தமிழகத்தில் ஒரு கட்சியாக இருக்காது. பல்வேறு கட்டங்களில் விரிசல் ஏற்படும். தி.மு.க.வின் டி.என்.ஏ. மாறிவிட்டது. கருணாநிதிக்கு பிறகு தலைவர் சொல்வதற்கு கட்டுப்படும் நிலை இல்லை. இதனை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரம் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- தி.மு.க. ஆட்சியை அகற்றாவிட்டால் தமிழகம் பாலைவனமாகும் என மதுரையில் எச்.ராஜா பரபரப்பாக பேசினார்.
- திராவிட மாடல் என்பது தமிழகத்தை குடிபோதை நாடாக மாற்றியது என்றார்.
மதுரை
மதுரையில் பா.ஜ.க. வக்கீல் பிரிவு பொறுப் பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் மாநில வக்கீல் அணி தலைவர் வணங்காமுடி, மாவட்ட தலைவர் அய்யப்பராஜா, துணைத்தலைவர்கள் நிரஞ்சன்குமார், அருண், தமிழரசன், அமிழ்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேசுகையில், தமிழகத்தில் இந்து விரோத மனபான்மை அதிகரித்து வருகிறது. நாம் தற்போது நெருக்கடியான காலக்கட்டத்தில் உள்ளோம். திராவிட தீயசக்திகளின் கைகளில் தமிழகம் சிக்கியுள்ளது. தி.மு.க.வை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றாவிட்டால், தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். திராவிட மாடல் என்பது தமிழகத்தை குடிபோதை நாடாக மாற்றியது என்றார்.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா சுசீந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திட குழு அமைத்துள்ளது பாஜக
- இந்த மாநில அளவிலான குழுவில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திடவும். ஒருங்கிணைத்திடவும் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது என பாஜக அறிவித்துள்ளது.
இந்த மாநில அளவிலான குழுவில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக தேசிய இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேத்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.இராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்து தெரிவித்ததாக எச்.ராஜா மீது வழக்கு தொடரப்பட்டது
- தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தாக்கல் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்
கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்து தெரிவித்ததாக பாஜக நிர்வாகி எச்.ராஜாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, எச்.ராஜா மீது ஈரோடு டவுன் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை 3 மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்கள்தானா? என நீதிபதி ஜெயசந்திரன் கேள்வி எழுப்பினார். அதற்கு எச்.ராஜா தரப்பு, "ஆம்" என்று பதில் அளித்தது.
இதனை தொடர்ந்து வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, விசாரணையை சந்திக்க அறிவுறுத்தி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
- பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்து தெரிவித்ததாக எச்.ராஜா மீது வழக்கு தொடரப்பட்டது.
- தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்து தெரிவித்ததாக பாஜக நிர்வாகி எச்.ராஜாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, எச்.ராஜா மீது ஈரோடு டவுன் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை 3 மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கடந்த மாதம் 29-ம் தேதி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில், பெண்களுக்கு எதிராக ஆபாசமாக கருத்து தெரிவித்ததாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி எச்.ராஜா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் எச்.ராஜாவின் வாதத்தை ஏற்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், அவரின் மனுவை இன்று தள்ளுபடி செய்தனர்
- இந்து வாழ்வியலே சனாதானம்.
- இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த மேல்சிறுணை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா. ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சனாதானம் என்பது என்ன? என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது. இந்து வாழ்வியலே சனாதானம்.
சனாதனத்தில் கூறியுள்ள உணவு, கல்வி, மருத்துவம் போன்றவை தற்பொழுது மிகப் பெரிய வியாபாரமாக மாறிவிட்டது, சனாதனம் பற்றிய எதிர்ப்பு தமிழகத்தில் 180 ஆண்டுகளுக்கு மேலாக காதில் விழுந்து கொண்டிருக்கிறது.
சனாதன தர்மத்தில் கூறியுள்ளது போல் கட்டணம் இல்லாமல் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சானாதனத்தை தொடர்ந்து எதிர்த்து பேசி வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனால் விரைவில் தமிழ்நாட்டில் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடத்தை போலீசார் அவசர அவசரமாக சுட்டுக் கொன்றது ஏன்? இதில் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே எதிர்கட்சிகள் அனைவரும் சி.பி.ஐ. விசாரணை கொண்டு வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






