search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "regime"

    • தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டியுள்ளார்.
    • முதல்வர் பல்வேறு திட்டங்களை நிறுத்தி விட்டார்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியத்தில் உள்ள கச்சை கட்டியில் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். இந்த முகாமை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தமிழக மக்களுக்கு விடியல் தருவோம் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் தாலிக்கு தங்கம் திட்டம், கறவை மாடுகள் ஆடுகள் வழங்கும் திட்டம், பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறுத்திவிட்டார்.

    தமிழகத்தில் கனிம வள கொள்ளை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சட்ட மன்றத்தில் எடப்பாடியார் தொடர்ந்து வலியுறுத்தினார்.

    தூத்துக்குடி மாவட்ட த்தில் மணல் திருட்டு குறித்து கிராம நிர்வாக அதிகாரி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் பட்டப்பகலில் அவரை அவரது அலுவலகத்தில் வெட்டி கொலை செய்து ள்ளனர். இதற்கு ரூ.1 கோடியை முதல்-அமைச்சர் ஸ்டாலின் கொடுத்துள்ளார். பணம் கொடுத்தால் போதுமா? உயிர் திரும்பி வருமா? அவர் என்ன பாவம் செய்தார்?.

    இன்றைக்கு அரசு ஊழியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அப்படி இருக்கும்போது சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். சரவணன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • தி.மு.க. ஆட்சியை அகற்றாவிட்டால் தமிழகம் பாலைவனமாகும் என மதுரையில் எச்.ராஜா பரபரப்பாக பேசினார்.
    • திராவிட மாடல் என்பது தமிழகத்தை குடிபோதை நாடாக மாற்றியது என்றார்.

    மதுரை

    மதுரையில் பா.ஜ.க. வக்கீல் பிரிவு பொறுப் பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் மாநில வக்கீல் அணி தலைவர் வணங்காமுடி, மாவட்ட தலைவர் அய்யப்பராஜா, துணைத்தலைவர்கள் நிரஞ்சன்குமார், அருண், தமிழரசன், அமிழ்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேசுகையில், தமிழகத்தில் இந்து விரோத மனபான்மை அதிகரித்து வருகிறது. நாம் தற்போது நெருக்கடியான காலக்கட்டத்தில் உள்ளோம். திராவிட தீயசக்திகளின் கைகளில் தமிழகம் சிக்கியுள்ளது. தி.மு.க.வை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றாவிட்டால், தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். திராவிட மாடல் என்பது தமிழகத்தை குடிபோதை நாடாக மாற்றியது என்றார்.

    கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா சுசீந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமல் தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சி செய்து வருகிறது என கும்பகோணத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.
    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கும்பகோணம் அரசினர் கல்லூரியில் முன்பு பார்ப்பன மாணவர்களுக்கு தனி பானை, மற்ற சாதி மாணவர்களுக்கு தனி பானை இருந்த போது அந்த தண்ணீர் பானையினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மிகப்பெரிய அளவிலே நடைபெற்று அதற்கு தீர்வு காணப்பட்டது. பின்னர் பெரியார் அனுமதி பெற்று 1943-ம் ஆண்டு திராவிட கழகம் சார்பில் பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட திராவிடர் மாணவர் கழகம் இன்று 75 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய பவள விழாவை கொண்டாடுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் இதில் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    மாணவர்களின் கல்வியை பாதிக்கக்கூடிய வகையில் மத்திய அரசு தன்னுடைய பணிகளை செய்து வருகிறது. நீட் தேர்வு என்பது எவ்வளவு குளறுபடியாக இருக்கிறது. அதேபோல் ஆர்.எஸ்.எஸ். திட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு அம்சம் திட்டம் என்று கூறி வேதங்கள் மற்றும் பழைய புராணங்கள் முன்னிலை படுத்தப்படுகிறது.

    மத்திய அரசை பற்றி ஆழ்ந்த முடிவெடுக்கக்கூடிய மாநாடாக இந்த மாநாடு உள்ளது. இந்த மாநாட்டில் சில புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளோம். நீட் தேர்வை மாநிலப் பட்டியலில் இணைக்க வேண்டும். ஆனால் தற்போது நடைமுறையில் மத்திய அரசு மாநில அரசுகளை மரியாதைக்கு கூட கவனிப்பதில்லை. நீட் தேர்வு தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கவில்லை. அனைத்து மாநிலத்திலும் உள்ள ஒடுக்கப்பட்ட கிராமப்புற மாணவர்களை வெகுவாக பாதித்துள்ளது.


    எனவே நீட் தேர்வு மற்றும் கல்வித்துறையிலே இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை எதிர்த்து தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம் மிகப்பெரிய பிரசாரத்தை நடத்த உள்ளது. அரசியல் சட்டத்தையே தற்போது அரசு மதிப்பதாக தெரியவில்லை. ஆளுநருடைய ஆட்சி இருந்தால் மட்டுமே ஆளுநருக்கு வேலை. அல்லது நெருக்கடி நிலை ஏற்படும்போது டெல்லிக்கு தகவல் கொடுப்பது மட்டும் தான் அவருடைய வேலை. ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று போட்டி அரசாங்கம் நடத்துவது அவருடைய வேலை அல்ல.

    ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமல் தமிழகத்தில் பா.ஜ.க தற்போது ஆட்சி செய்து வருகிறது. முட்டை ஊழலுக்கு 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பது கேவலமாக இருக்கிறது. பசுமை வழிச்சாலையால் யாருக்கு பலன் என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KiVeeramani #BJP
    பிரதமர் மோடியின் ஆட்சி கோடீஸ்வரர்களின் ஆட்சியாக உள்ளது என்று வேதாரண்யத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திருநாவுக்கரசர் பேசினார். #Congress #Thirunavukkarasar #Modi
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் நாகை தெற்கு மாவட்ட காங். செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

    காவிரி மேலாண்மை வாரியத்தில் உறுப்பினர் நியமனம் செய்ய கர்நாடகாவை தமிழக அரசு தான் முனைப்போடு முன்னின்று செயல்பட வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களுக்கு தீர்வு காணாமல் பாசிச போக்கை கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கது.

    தற்போது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. 35 லட்சம் உறுப்பினர் கொண்டதை 50 லட்சமாக உயர்த்த மாவட்ட, நகர, பேரூர் தலைவர்கள் பாடுபட வேண்டும். தமிழக காங்கிரசில் காலியாக உள்ள பொறுப்புகளுக்கு உரிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மாவட்ட, மாநில, நகர அளவில் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    சாதி, மத பேதங்களை கடந்த கட்சி காங்கிரஸ் கட்சியாகும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அந்த கட்சியில் சூழ்நிலை சரியில்லை. ஓ.பி.எஸ். இ.பி.எஸ். அணிகள் ஆட்சி இருக்கும் வரைதான். தற்போது மாமா, மாப்பிள்ளை (திவாகரன், தினகரன்) கட்சிகளும் புதிதாக கிளம்பியுள்ளது. அனைவரும் அ.தி.மு.க.வை தோற்றுவித்த எம்.ஜி.ஆரை மறந்து விட்டனர். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போன்ற ஒரு சிலரை தவிர சினிமாவில் இருந்து வந்த யாரும் முதல்வராக முடியாது.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைக்கு பின்னர் நடந்த தேர்தலில் (1991) காங்கிரஸ் தனித்து நின்றிருந்தால் ஆட்சியை பிடித்திருக்கும். 50 ஆண்டுகளுக்கு பிறகும் காங்கிரஸ் கட்சி வலுவாகதான் உள்ளது. கட்சிக்கு குளுக்கோஸ் ஏற்ற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். கட்சி தெம்பாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி வரவேண்டும் என்ற இலக்கோடு கட்சித் தலைவர்கள் பணியாற்ற வேண்டும். தூய்மையான ஆட்சி நடத்திய காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்பதில் தவறில்லை. தற்போதைய பிரதமர் மோடி பல்வேறு பொய்களை சொல்லி ஆட்சியை பிடித்துள்ளார். அவரது பொய்யை நம்பி மக்கள் ஓட்டு போட்டு ஏமாந்து விட்டனர். மோடியின் ஆட்சி கோடீஸ்வரர்களின் ஆட்சியாக உள்ளது. வரும் தேர்தலில் மோடிக்கு பிறகு நிலையான ஆட்சியை தரக்கூடியவர் ராகுல் தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar #Modi
    ஒரு கோடி வடமாநில இளைஞர்களை தமிழகத்தில் நுழைத்து வாக்குரிமை பெற்று தமிழகத்தில் ஜெயிக்க பா.ஜனதா சதிதிட்டம் தீட்டிவருவதாக ராதாரவி குற்றம்சாட்டியுள்ளார்.
    தரங்கம்பாடி:

    நாகை வடக்கு மாவட்டம், மயிலாடுதுறை மூவலூர் தேரடி வீதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95 -வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நடிகர் ராதாரவி கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது.

    தி.மு.க. வை விட்டு விலகிச் சென்றவர்கள் அனைவரும் தற்போது வைகோ, வந்தது போல மீண்டும் தி.மு.க.விடமே வந்து சேர்வார்கள். அ.தி.மு.க. இரண்டு தலைமைகள் கொண்ட கட்சியாக மாறியுள்ளது. இது நிலைத்து இருக்க வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க. சிதறி சின்னா பின்னமாகிவிடும்.

    தி.மு.க. வில் 2-வது தலைவராக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளார்.

    சினிமாவில் போராடி வெற்றி பெற வேண்டும் என்று பேசுகிற ரஜினி நிஜத்தில் தனது உரிமைகளுக்காக போராடுபவர்களை சமூக விரோதிகள் என்று சொல்லி மக்களை குழப்புகிறார்.

    தாம்பரத்தில் இருந்து நெல்லை வரை தமிழகத்திலேயே ஓடும் ரெயிலுக்கு ‘அந்த்யோதயா’ என்ற இந்தி பெயரை வைத்துள்ளனர். அந்த ரெயிலுக்கு தமிழகத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பச்சைக் கொடியை காட்டி தொடங்கி வைக்கிறார்.

    தமிழகத்தில் தி.மு.க. இருக்கும் வரை இந்தியை திணிக்க முடியாது.

    தற்போது தமிழை மறக்கடிக்க வெளி மாநிலங்களில் இருந்து ஒரு கோடி வடமாநில இளைஞர்களை தமிழகத்தில் நுழைத்து வாக்குரிமை பெற்று தமிழகத்தில் ஜெயிக்க பா.ஜனதா சதிதிட்டம் தீட்டிவருகிறது. தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்க இன்னும் 250 ஆண்டுகளாவது ஆகும். எதனையும் எதிர்க்க தயாராக தி.மு.க. தொண்டர்கள் இருக்க வேண்டும்.

    நீட் தேர்வை தமிழக மாணவர்கள் கேரளாவில் சென்று எழுதினால் என்ன தவறு? என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். வர இருக்கிற தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்திலும், தமிழிசை வெளிமாநிலத்திலும் நின்று ஜெயிக்க முடியுமா?

    இவ்வாறு ராதாரவி பேசினார். #DMK #RadhaRavi #ADMK #BJP
    புரட்சி ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்க முயன்ற 104 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து துருக்கி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

    இஸ்தான்புல்:

    துருக்கி நாட்டில் தயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

    2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந் தேதி அவரது ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் சிலர் புரட்சியில் ஈடுபட்டனர். இதற்கு போலீசாரின் ஒரு பிரிவினரும், அரசு ஊழியர்களும் உதவி செய்தனர்.

    ஆனால், இந்த புரட்சி சில மணி நேரங்களில் முறியடிக்கப்பட்டது. இதனால் ஆட்சி தப்பியது.

    இந்த புரட்சியில் அதிபருக்கு எதிராக வெளிநாடுகளில் இருந்து செயல்படும் சில தலைவர்கள் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அவர்களது தூண்டுதலின் அடிப்படையில் ராணுவ வீரர்கள் புரட்சியில் ஈடுபட்டனர்.

    அந்த புரட்சியின் போது நடந்த கலவரத்தில் 260 பேர் உயிர் இழந்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    புரட்சியில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில், ராணுவ வீரர்கள், போலீசார், அரசு ஊழியர்கள், புரட்சிக்கு உதவிய பொதுமக்கள் என 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். 1 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    புரட்சிக்கு காரணமாக இருந்த நபர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    இதில், புகார் கூறப்பட்ட 280 ராணுவ வீரர்கள் மீதான விசாரணை தனியாக நடந்தது. இதை விசாரித்த நீதிபதி 104 வீரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். 21 பேருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனையும், 31 பேருக்கு 7-ல் இருந்து 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டன. பலர் விடுவிக்கப்பட்டனர்.

    புரட்சி தொடர்பான இன்னும் பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. #tamilnews

    திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்ற தமிழக முதலமைச்சர் முன் சாமியாடிய நபர், தமிழகம் சீரழிந்துவிட்டதாக குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருப்பதி:

    திருப்பதியில் நேற்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வராக சாமி கோவிலில் தரிசனம் செய்த பின்னர் ஹயக்ரீவர் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்றார்.

    அப்போது கோவிலில் உள்ள அர்ச்சகர் போன்று இருந்த ஒருவர் திடீரென சாமியாடினார். அவர் எடப்பாடியை என்ன வந்து பார்த்துட்டு போகச்சொல்லு. தமிழ்நாடு சீரழிந்து போய்ட்டு. வரச் சொல்லுடா முதல்ல என்று பலத்த சத்தத்துடன் சாமியாடினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே முதல்வரின் பாதுகாப்பு படையைச் சேர்ந்த போலீசார் விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.



    இதில் அவர், ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த ஸ்ரீராமலு என்று தெரியவந்தது. அவரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். அவரை எச்சரித்து விடுவித்தனர்.

    நான் இந்த மலையில் இருக்க பகவான் எனக்கு அருள்பாலித்துள்ளார். 1 வாரமாக இங்கு தங்கி உள்ளேன்.

    எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் தமிழகம் சீரழிந்துவிட்டது. அனைத்தும் முடங்கி கிடக்கிறது. இதனால் பெருமாள் எனது ரூபத்தில் வந்து அவரை சந்திக்க வேண்டும் என்றார். அதனால் தான் அவரை சந்திக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால் அவர் என்னை சந்திக்காமல் அலட்சியப்படுத்தி சென்றுவிட்டார் என்றார்.

    ×