என் மலர்
நீங்கள் தேடியது "l murugan"
- தமிழக கவர்னர் ரவி, தி.மு.க.வின் ஊழல்களுக்கு ஒரு மிகப்பெரிய தடையாக இருக்கிறார்.
- கரூர் நிகழ்வு குறித்து அறிக்கை வந்த பின் பேசுகிறேன்.
மேட்டுப்பாளையம்:
கோவை மேட்டுப்பாளையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேட்டுப்பாளையம்-அவிநாசி நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இது மத்திய அரசின் நிதி. பிரதமர் நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த நாட்டின் வளர்ச்சி வேகத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மேட்டுப்பாளையத்தை பொறுத்தவரை ஒரு பைபாஸ் சாலை வேண்டும், அதற்கான வேலைகள் தயார் செய்து கொண்டிருக்கிறோம். இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை சந்தித்து பேசியுள்ளேன்.
தமிழக கவர்னர் ரவி, தி.மு.க.வின் ஊழல்களுக்கு ஒரு மிகப்பெரிய தடையாக இருக்கிறார்.
தி.மு.க. எப்போது பார்த்தாலும், ஏதாவது ஒரு பைலை அவருக்கு அனுப்புகிறது. அதுக்கு அவர் ஒப்புதல் கொடுக்கவில்லை என்றால், உடனே அவரை ஒரு மிகப்பெரிய ஒரு எதிரியாக சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். கவர்னர் ரவி சிறப்பாக பணி செய்து கொண்டிருக்கிறார். தமிழக அரசு அவர் மீது வன்மம் கொண்டுள்ளது.
கரூர் சம்பவத்தை பொறுத்த அளவுக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. எங்களுடைய என்.டி.ஏ. கூட்டணி எம்.பிக்கள் குழு அவர்களுடைய அறிக்கைகளை கொடுத்து இருக்கிறார்கள். அந்த அறிக்கை வெளிவந்த பிறகு அதை பத்தி பேசுகிறேன்.
ஊடகங்கள் முடக்கப்படுவது தமிழக அரசின் மிகப்பெரிய அராஜகத்தை தான் காட்டுகிறது. தி.மு.க., எப்போதுமே பத்திரிகையாளர்கள், மீடியாக்களை நசுக்குவதில் கைதேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்டால் அவர்கள் நல்லவர்கள். எதிராக வெளியிட்டால் உடனே அவர்கள் கெட்டவர்கள்.
சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது எமர்ஜென்சி காலகட்டத்தை நினைவுப்படுத்துகிறது. கரூர் நிகழ்வு குறித்து அறிக்கை வந்த பின் பேசுகிறேன்.
தமிழக பா.ஜ.க. கட்சியின் சார்பில் பூத்களை வலிமைப்படுத்தும் பணி ஒவ்வொரு சட்டமன்றம் வாரியாக நடந்து கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியான எங்களது கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாக கூட்டணி கட்சித் தலைவர்கள் உடன் இணைந்து, வேலைகளை வேகப்படுத்தி செய்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பேட்டியின்போது கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர்கள் கரு.மாரிமுத்து (கோவை வடக்கு), தர்மண் (நீலகிரி), செந்தில்குமார் (ஈரோடு வடக்கு), மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், கோவை வடக்கு மாவட்ட பொது செயலாளர் விக்னேஷ், மாவட்டசெயலாளர்கள் உமாசங்கர், விவசாய அணி மாவட்ட பொது செயலாளர் ஆனந்தகுமார் சாமிநாதன், காரமடை நகர தலைவர் சதீஸ்குமார், மேட்டுப்பாளையம் நகர தலைவர் கே.ஆர்.எஸ்.சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.
- காங்கிரஸ்-தி.முக. கூட்டணி 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது வெறும் ரூ.878 கோடி மட்டும் தமிழகத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்தின் திட்டங்களுக்காக ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு நிதியை மத்திய அரசு ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் மத்திய அரசு தமிழகத்துக்கு தீட்டி வரும் திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கி கூறினார்.
மத்திய மந்திரி எல்.முருகன் அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகம் முழுவதும் பல்வேறு ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்வதில்லை என்கிற கோரிக்கையை நான் சுற்றுப்பயணம் செய்யும் போது மக்கள் என்னிடம் தெரிவித்தார்கள். அவர்களின் கோரிக்கையை நான் மத்திய அரசிடம் எடுத்து சென்றேன்.
அதன்படி நாளை (18-ந்தேதி) முதல் 38 ரெயில்கள், 38 ரெயில் நிலையங்களில் நின்று செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பிறப்பித்துள்ளார்.
ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, இருங்கூர், சிங்காநல்லூர், வள்ளியூர், மேலப்பாளையம், ஆரல்வாய்மொழி, நாங்குனேரி, கொடைக்கானல் சாலை, வாடிப்பட்டி உள்ளிட்ட 38 ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்லும்.
பிரதமர் மோடியை பொறுத்தவரையில் தமிழக நலனுக்காக கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார். இந்த நிதியாண்டில் மட்டும் ரெயில்வே துறைக்கு ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் மத்தியில் காங்கிரஸ்-தி.முக. கூட்டணி 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது வெறும் ரூ.878 கோடி மட்டும் தமிழகத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 77 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. எழும்பூர் ரெயில் நிலையம் மட்டும் ரூ.800 கோடி செலவில் விமான நிலையங்களுக்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக ரெயில்வே துறையில் 2,587 கிலோ மீட்டர் நீளமுள்ள ரெயில்வே பாதைகள் அமைக்கும் பணிகள் ரூ.33,467 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரெயில்களும் தமிழக பயணிகளின் நலனுக்காக விடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது.
38 ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்வதன் மூலமாக 13 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன் அடைவார்கள்.
சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள் விரிவுபடுத்தப்பட்டு மேம்பாட்டு பணிகளும் நடைபெற்றுள்ளன. கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்தின் திட்டங்களுக்காக ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு நிதியை மத்திய அரசு ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரெயில் நிலையங்களில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக சு.வெங்கடேசன் எம்.பி. கூறி இருப்பது தவறான தகவல் ஆகும். ரெயில்வே துறையில் மட்டுமின்றி உற்பத்தி துறையின் கீழ் உள்ள பாதுகாப்பு துறைகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தி உள்ளார். இதன் மூலம் பிரதமர் மோடி தமிழக மக்கள் மீதும், தமிழ் மீதும் கொண்டு உள்ள அக்கறையை புரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. தலைவர்கள் பலர் எங்களோடு தொடர்பில் இருக்கிறார்கள்.
- பல விஷயங்களில் வாயை திறக்காமலேயே இருந்துள்ளார்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான எல்.முருகன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்துக்கு மத்திய மந்திரி அமித்ஷா வருகிற 22-ந்தேதி வருகைதர உள்ளார். நெல்லையில் 5 பாராளுமன்ற தொகுதிகளுக்கு உள்பட்ட பூத் கமிட்டி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 பாராளுமன்ற தொகுதிகளின் பூத் கமிட்டி நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.
பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருவது பற்றி உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.
கேள்வி:- அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைக்கு தி.மு.க. பயப்படாது என்று முதலமைச்சர் கூறி இருக்கிறார். தி.மு.க. எம்.பி. கனிமொழியும், 'நாங்கள் ஈடி-க்கும், மோடிக்கும் பயப்பட மாட்டோம்' என்று கூறி இருக்கிறார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:-அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய 2 அமைப்புகளும் தன்னிச்சையான அமைப்புகளாகும். அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தங்களது வேலைகளை அந்த அமைப்பின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலுமே இதுபோன்ற சோதனைகளை அவர்கள் மேற்கொண்டு உள்ளனர். ஆனால் தி.மு.க.வினர் அதுபற்றி மத்திய அரசு மீது குறை கூறுவது நியாயமானதாக இல்லை.
தமிழகத்தை பொறுத்தவரையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி தயாராகி வருகிறது.
எங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்கிற கோஷத்தோடு மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படி மக்கள் ஆதரவுடன் அவரது பிரசார யாத்திரை எழுச்சி பெற்றிருப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயத்தில் உள்ளார். எனவே தான் இது போன்ற குற்றச்சாட்டுகளை அவரும், தி.மு.க.வினரும் கூறி வருகிறார்கள்.
கேள்வி:-அ.தி.மு.க.வில் இருந்து மைத்ரேயன், அன்வர் ராஜா உள்ளிட்ட 2-ம் கட்ட தலைவர்கள் விலகிச் சென்று தி.மு.க.வில் இணைந்திருப்பதால் அது கூட்டணியை பலவீனப்படுத்தி விடாதா?
பதில்:-2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சி அமைக்கும். அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி படுதோல்வி அடையும். தேர்தல் நேரத்தில் இது போன்று ஒரு கட்சியினர் மாற்று கட்சிகளுக்கு செல்வது வழக்கமானது தான். நான் தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த போது தி.மு.க.வில் இருந்து விலகி பலர் பா.ஜ.க.வில் சேர்ந்து உள்ளனர்.
இப்போது தி.மு.க. தலைவர்கள் பலர் எங்களோடு தொடர்பில் இருக்கிறார்கள். பா.ஜ.க.வில் இணைவதற்காக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அது போன்று யார்-யார் எங்களிடம் பேசுகிறார்கள், இணைப்பு விழா எப்போது நடைபெறும் என்பதையெல்லாம் இப்போதே சொல்ல முடியாது. ஆனால் நிச்சயமாக தி.மு.க.வில் இருந்து பலர் வெளியில் வருவார்கள்.
கேள்வி:-தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் திருமாவளவன் மாறுபட்ட கருத்துக்களை கூறி இருக்கிறாரே?
பதில்:-தி.மு.க. கூட்டணியில் தன்னை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக திருமாவளவன் இதுபோன்று மாறி மாறி பேசி வருகிறார். கூட்டணியில் இருந்து எங்கே வெளியேற்றி விடுவார்களோ என்கிற அச்சத்தில் அவர் உள்ளார். அவருக்கு தேவை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீட் தான். பட்டியல் இன மக்களை பற்றி அவர் எப்போதுமே கவலைப்பட்டது இல்லை.
கடந்த தி.மு.க. ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எதிராக பல சம்பவங்கள் நடந்துள்ளன. அவை எதற்குமே திருமாவளவன் முறையாக குரல் கொடுக்கவில்லை. பல விஷயங்களில் வாயை திறக்காமலேயே இருந்துள்ளார். இன்றைக்கு பட்டியல் இன மாணவ-மாணவிகள் படிக்கும் பள்ளிக்கூடங்கள் எந்தவித வசதிகளும் இல்லாமல் உள்ளன.
நான் பட்டியல் இனத்தில் காலனியில் இருந்து வந்தவன். நான் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பொறுப்பில் இருந்தபோது பல மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன். அப்போது பட்டியல் இன மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் நிலையை நானே நேரில் பார்த்து இருக்கிறேன். அவைகளை நல்ல நிலைக்கு கொண்டு வரவும் வலியுறுத்தி இருக்கிறேன். அதுபற்றியெல்லாம் திருமாவளவன் பேச மாட்டார்.
எனவே முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பட்டியல் இன மாணவர்கள் படிக்கும் பள்ளிகளை நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்ய வேண்டும். தூய்மை பணியாளர்கள் விஷயத்தை பொறுத்தவரையில் தகுதியான நபர்களுக்கு மாற்றுப் பணிகளையும் வழங்க வேண்டும். அவர்களை தூய்மை பணியாளர்களாக மட்டுமே எப்போதும் வைத்திருக்கக் கூடாது.
உதாரணத்துக்கு ஓட்டுனர் வேலை தெரிந்தவராக தூய்மை பணியாளர் ஒருவர் இருந்தால் வாய்ப்பு வரும் போது அவருக்கு டிரைவர் பணியை வழங்கலாம். அதே நேரத்தில் கல்வியறிவு பெற்றவராக இருந்தால் அவர்களுக்கு அலுவலக உதவியாளர் பணிகளை வழங்கலாம்.
கேள்வி:-ரெயில்வே பயணிகளின் பாதுகாப்பு தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறதே?
பதில்:-ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்கு மத்திய அரசு ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது பற்றி ரெயில்வே துறையிடம் எடுத்து கூறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அம்பேத்கர் வழியில் நடப்பதை பற்றி சொல்வதற்கு முதலமைச்சருக்கு அருகதை கிடையாது.
- கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தான் செய்கிறார்கள்.
சென்னை:
மத்திய மந்திரி எல்.முருகன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திரமோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மற்றும் ஆட்சி பொறுப்பு குறித்து அமித்ஷா என்ன சொல்கிறாரோ அது தான் முடிவு. அவர் எங்கள் தேசிய தலைவர். அவர் சொல்வதுதான் வேதவாக்கு.
தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன், வைகோ மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியேறும் சூழலில் இருக்கிறது. தி.மு.க. கூட்டணி சுக்கு நூறாக உடைய போகிறது.
எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது. தமிழக அரசிடம் நிதி இல்லாததால் தான் அறநிலையத்துறை நிதியை எடுத்து செலவு செய்கிறார்கள். கோவிலை விட்டு அரசாங்கம் வெளியேற வேண்டும்.
சமூக நீதி விடுதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. அங்கு எந்த வசதியும் இல்லை. விடுதியை முதலமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும். இந்த அரசு எல்லா துறையிலும் தோல்வி அடைந்து விட்டது.
அம்பேத்கர் வழியில் நடப்பதை பற்றி சொல்வதற்கு முதலமைச்சருக்கு அருகதை கிடையாது.
இந்த அரசுக்கு தமிழக மக்கள் மீது எந்த நலனும் இல்லை. 4 ஆண்டுகளாக எந்த திட்டமும் செய்யவில்லை. கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தான் செய்கிறார்கள்.
இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
- பா.ஜ.க. ஆட்சி செய்கிற மத்தியபிரதேசத்தில் எஸ்.சி., எஸ்.டி. விடுதியை பார்த்து விட்டு கற்றுக் கொண்டு வாருங்கள்.
- பல கிராமங்களில் இன்னும் தீண்டாமை கொடுமை இருக்கிறது.
சென்னை:
சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ.சி. மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பிரதமரின் மக்கள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் சேவைகள் மற்றும் பிரதம மந்திரி திவ்யாஷா மையத்தின் சார்பில் மாற்று திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான இலவச உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் இன்று நடந்தது.
இதில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் இன்றைக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய கேலிக் கூத்தை அரங்கேற்றி இருக்கிறார். எஸ்.சி.,எஸ்.டி. மாணவர்கள் படிக்கின்ற விடுதியை சமூக நீதி விடுதி என்று பெயர் வைத்து இருக்கிறார். நான் அவரிடம் கேட்கிறேன். அவர் ஏதாவது ஒரு விடுதியை போய் பார்த்து இருக்கிறாரா? அந்த விடுதிகளின் தரம் மிகவும் மோசமாக இருக்கும்.
எஸ்.சி.,எஸ்.டி. விடுதியில் ஒரு மாணவர் படிக்கிறார் என்றால் அவர் அதை விட ஒரு கொடுமையை வாழ்க்கையில் அனுபவித்து இருக்கவே முடியாது. அது போன்ற விடுதிகளில் பெயரை மட்டும் மாற்றினால் சரியாகி விடுமா? எதுவுமே நடக்காது.
பா.ஜ.க. ஆட்சி செய்கிற மத்தியபிரதேசத்தில் எஸ்.சி., எஸ்.டி. விடுதியை பார்த்து விட்டு கற்றுக் கொண்டு வாருங்கள். அங்கு சிறப்பான வசதியை செய்து கொடுத்திருக்கிறோம். கர்நாடகா, தெலுங்கானாவிலும் போய் பார்த்து விட்டு வாருங்கள்.
தமிழகத்தில் உள்ள விடுதியில் எந்த அடிப்படை வசதியும் கிடையாது. மாணவர்களுக்கு சொறி சிரங்கு ஏற்படுகிறது. எந்த விடுதியிலும் சுத்தம் கிடையாது. தமிழகம் முழுவதும் இது தான் நிலை.
சென்னை சட்டக் கல்லூரியில் உள்ள விடுதியின் நிலையும் இதுதான். மாணவர்கள் மீது முதலமைச்சருக்கு பற்று இருந்தால் அவர் ஒவ்வொரு விடுதியையும் சென்று பார்த்து விட்டு அதன் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கி அதை மேம்படுத்த வேண்டும்.
அதே போல் காலனிகளை ஒழித்து விட்டோம் என்கிறார். பல கிராமங்களில் இன்னும் தீண்டாமை கொடுமை இருக்கிறது. இரட்டை சுடுகாடு இருக்கிறது. பல கிராமங்களில் கோவில்களுக்கு போக முடியாத சூழ்நிலை இருக்கிறது.
சிவகாசியில் பட்டாசு விபத்து தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு பாதுகாப்பு விதிமுறைகளை தமிழக அரசு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சுற்றுப்பயணம் தொடங்குகிறார். எனது தொகுதியில் இருந்து தொடங்கும் இந்த சுற்றுப் பயண தொடக்க விழாவில் நானும் பங்கேற்கிறேன். சிறுபான்மை மக்கள் பா.ஜ.க.வுக்கும், அதன் கூட்டணிக்கும் ஆதரவு கொடுக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் காளிதாஸ் தத்தாத்ரேயா சவான், மருத்துவ கண்காணிப்பாளர் புஷ்பலதா, துணை மருத்துவ கண்காணிப்பாளர்கள் சிவகுமார், பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர்.
- இந்தியா முழுவதும் மாவட்ட அளவில் 206 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
- நவீன சாதனங்களை உருவாக்க வேண்டும் என ஆண்டு தோறும் பட்ஜெட்டில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் 25 சதவீத நிதி ஒதுக்கப்படுகிறது.
திருச்சி:
முப்படை ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்றது. சி.டி.ஏ.ஜெயசீலன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய இணை மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவிலேயே முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.
இந்த முகாமின் மூலம் நூற்றுக்கணக்கான ஓய்வுதாரர்களுக்கு 1.5 கோடி ரூபாய் நிலுவையில் இருந்த ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் இது போன்ற ஓய்வு முகாம்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இன்று மாலைக்குள் 6 ஆயிரம் ஓய்வூதியதாரர்களின் குறைகள் தீர்க்கும் தீர்க்கப்படும். இந்தியா முழுவதும் மாவட்ட அளவில் 206 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இன்றைக்கு நமக்கான ஆயுத தளவாடங்களை நாமே தயாரித்துக் கொள்ள முடிகிறது.
ஒரு காரிடார் உத்தரபிரதேசத்திலும் 2-வது தமிழகத்தில் திருச்சி, கோயம்புத்தூரில் டிபன்ஸ் காரிடார் உருவாக்கப்படுகிறது. ஏறத்தாழ 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ராணுவ தளவாடங்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ராணுவ தளவாடங்களை நாமே உற்பத்தி செய்து கொள்கிறோம். பல்வேறு நாட்களாக விடுக்கப்பட்ட கோரிக்கையான ஒரே பதவி ஒரே ஊதியம் திட்டத்தை பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. முப்படைகளுக்குமான முதன்மை அதிகாரி பதவி உருவாக்கப்பட்டது. நவீன சாதனங்களை உருவாக்க வேண்டும் என ஆண்டு தோறும் பட்ஜெட்டில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் 25 சதவீத நிதி ஒதுக்கப்படுகிறது.
நம்முடைய நம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சுமார் 5,000 மீட்டர் உயரத்தில் பறக்க கூடிய ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தனது ஸ்டூடியோவுக்கு வந்த ஏ.ஆர்.ரகுமான் திரைப்படம் சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
- மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஸ்டூடியோவுக்கு நேரில் வந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை திடீரென சந்தித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள அய்யர்கண்டிகை கிராமத்தில் திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான பிரமாண்ட ஸ்டூடியோ உள்ளது. நேற்று தனது ஸ்டூடியோவுக்கு வந்த ஏ.ஆர்.ரகுமான் திரைப்படம் சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாலை 6.30 மணியளவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் அங்கு நேரில் வந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பு இரவு 7.10 வரை நீடித்தது.
இவர்களின் இந்த திடீர் சந்திப்பு உறுதிபடுத்தப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கு நமது கலாசாரம் சம்பந்தப்பட்ட 'சத்யம், சிவம், சுந்தரம் எனும் வெவ்ஸ்' என்ற குறும்படத்துக்கு இசை அமைத்து கொடுத்ததால் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை அவர் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து நன்றி சொன்னதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதற்கான எந்த விவரங்களும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னை தாம்பரத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
- கீழடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறை தமிழ்நாடு அரசுக்கு இல்லை.
உலகில் உள்ள 191 நாடுகளில் 11-வது சா்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
சர்வதேச யோகா தினத்தையொட்டி சென்னை தாம்பரத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று எல்.முருகன் யோகா செய்தார்.
இதையடுத்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணம் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இருக்கும்.
* தோல்வி பயத்தில் கீழடி, தொகுதி மறுசீரமைப்பை தி.மு.க. கையில் எடுத்துள்ளது.
* கீழடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறை தமிழ்நாடு அரசுக்கு இல்லை.
* அடிமைப்படுத்திய ஆங்கில மொழியில் இருந்து வெளியே வரவேண்டும் என்றுதான் அமித்ஷா கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்னும் 3 மாதங்களுக்குள் பாஜக கூட்டணி விரிவடையும்.
- வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைவது உறுதி.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை இப்போதே அனைத்து கட்சிகளும் ஆரம்பித்துவிட்டன. 2019 ஆம் ஆண்டு உருவான திமுக கூட்டணி 2026 தேர்தலிலும் தொடரவுள்ளது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கவுள்ளது.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், "2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை திமுக ஒதுக்கவேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திமுக கூட்டணி விரைவில் உடையும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய எல்.முருகன், "திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி பாஜக கூட்டணிக்கு வர தயாராக உள்ளது. இதற்காக அந்த கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் 3 மாதங்களுக்குள் பாஜக கூட்டணி விரிவடையும். இந்தக் கட்சி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த கட்சி தான்.
விரைவில் திமுக கூட்டணி உடையும். இதனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைவது உறுதி. புதிதாக வரவிருக்கும் கட்சிகள் யார் என்று பொறுத்திருந்து பாருங்கள். எல்லாவற்றையும் இப்போதே சொல்லிவிட்டால் அரசியலில் எதிர்பார்ப்பு இருக்காது" என்று தெரிவித்தார்.
- மோடி தலைமையிலான அரசின் கொள்கை முடிவுகளால் நாடு வளர்ச்சி பெற்றுள்ளது கண்கூடாக தெரிகிறது.
- ராகுல் காந்தி கண்களை மூடிக்கொண்டு கருத்து தெரிவிக்கிறார்.
புதுச்சேரி:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டு கால சாதனை விளக்க புத்தக்கத்தை புதுச்சேரி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் வெளியிட்டு மத்திய அமைச்சர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3-வது முறையாக ஆட்சியை பிடித்து 11 ஆண்டுகளை முடித்து 12-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மோடி தலைமையிலான அரசின் கொள்கை முடிவுகளால் நாடு வளர்ச்சி பெற்றுள்ளது கண்கூடாக தெரிகிறது.
2014-ம் ஆண்டுக்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் முடிவு எடுக்கும் தைரியமற்றவர்களாக இருந்தனர். அதோடு 2-ஜி, காமன்வெல்த் என அனைத்து துறைகளிலும் ஊழல், முறைகேடுகள் தலைவிரித்தாடியது. பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு சேவை, சிறந்த நிர்வாகம், ஏழைகளின் நலன் ஆகியவற்றை முன்வைத்து நாட்டை சீரான வளர்ச்சிக்கு கொண்டு சென்றார்.
நாடு சுதந்திரம் அடைந்து 100-வது ஆண்டை 2047-ல் அடியெடுத்து வைக்கும்போது வல்லரசாக்க திட்டமிட்டு பிரதமர் செயல்பட்டு வருகிறார். புதுச்சேரியிலும் பல்வேறு மத்திய அரசு திட்டங்கள் 100 சதவீதம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட இலவச ரேஷன் அரிசியானது தற்போது ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
சேதராப்பட்டில் கிடப்பில் கிடந்த 750 ஏக்கர் புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 4000-ம் பேருக்கு அரசு வேலை தரப்பட்டுள்ளது. பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றும் பணி தொடர்கிறது.
ராகுல் காந்தி கண்களை மூடிக்கொண்டு கருத்து தெரிவிக்கிறார். அவர் கண்ணை திறந்து நாட்டின் வளர்ச்சியை பார்க்க வேண்டும். நம்மால் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் மூலம் பாகிஸ்தானுக்கும், தீவிரவாதிகளுக்கும் "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கை மூலம் பதிலடி தந்துள்ளோம். உலகத்துக்கும் ஒரு செய்தி சொல்லியுள்ளோம்.
மணிப்பூரில் அமைதி நிலவ பிரதமர் நேரடியாக கவனம் செலுத்தி வருகிறார். 2026-ல் தேசிய ஜனநாயகக்கூட்டணி தமிழகத்தில் பெரும் வெற்றி பெறும். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைந்ததில் இருந்து தி.மு.க. கூட்டணி கலகலத்து போயுள்ளது.
இதனால் அந்த தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் தடுமாற்றத்தை வெளிப்படுத்தி பேசிவருகிறார்கள்.
தமிழகத்தில் 2024 பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி இல்லாமல் சந்தித்து கணிச ன வாக்கு பெற்றுள்ளோம். தற்போது கூட்டணி அமைந்துள்ளதால் பலம் பெற்றுள்ளோம். இதனால் தி.மு.க.வினர் தூக்கத்தை தொலைத்துள்ளனர். தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி விரட்டியடிக்கப்படும் நாள் நெருங்கி விட்டது.
புதுவையின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை கருத்துகளை முதலமைச்சர் ரங்கசாமி பிரதமரிடம் தெரிவித்து வருகிறார். புதுச்சேரிக்கு தேவையான நிதி, திட்டங்களை மத்திய அரசு அளித்து வருகிறது.
திராவிடர் கழகம் என்றாலே கலவரம்தான். அவர்கள் தங்களை போலவே பிறரையும் நினைத்து கலவரம் ஏற்படுத்த வருவதாக கூறுகிறார்கள்.
திருப்பரங்குன்றம் முருகன் மாநாடு தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உலகம் முழுவதும் இருந்து முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள். இந்த மாநாடு திருப்பரங்குன்றத் தில் நடந்த சம்பவத்தில் காயம் அடைந்த முருக பக்தர்களுக்கு மருந்தாக அமையும். கூட்டணி பற்றி கட்சி தேசிய தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். தமிழகம் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொதுத்தேர்வு முடிவுகளில், வெற்றி பெற்றுள்ள மாணவ-மாணவியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- தேசத்தின் வருங்கால வளர்ச்சியில் உங்களது முழு பங்களிப்பை கொடுக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், வெற்றி பெற்றுள்ள மாணவ-மாணவியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்த கட்டமாக உங்கள் வாழ்வில் முன்னேற உயர் கல்வியை மிக நேர்த்தியாக தேர்வு செய்து அதிலும் வெற்றி வாகை சூடி, தேசத்தின் வருங்கால வளர்ச்சியில் உங்களது முழு பங்களிப்பை கொடுக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திமுக அரசு, தமிழகம் முழுவதும் பாஜகவினர் மீது வன்முறையை ஏவி வருகிறது.
- பாஜக தொண்டர்கள் மீது காவல் துறையினர் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக இன்று நடத்திய போராட்டத்தில் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், போலீசாரின் கைது நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எல். முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில், திமுக ஆட்சியில் டாஸ்மாக் துறையில் நடைபெற்றுள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறையின் அறிக்கையால் ஆடிப்போயுள்ள திமுக அரசு, இது தொடர்பான தகவல்கள் மக்களைச் சென்றடையாமல் தடுப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஊழலை தமிழக மக்களிடத்தில் எடுத்துச் சென்று, உண்மையை அம்பலப்படுத்தி வருகிறது நமது தமிழக பாரதிய ஜனதா கட்சி.
இதனால் ஆத்திரமடைந்துள்ள திமுக அரசு, தமிழகம் முழுவதும் பாஜகவினர் மீது வன்முறையை ஏவி வருகிறது. டாஸ்மாக் துறையில் நடைபெற்றுள்ள 1000 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திட முயன்ற பாஜக தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
பாஜக தொண்டர்கள் மீது காவல் துறையினர் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் சகோதரர் அண்ணாலை, பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.ஆர்.சரஸ்வதி, மாநில துணைத் தலைவர் @KaruNagarajan
அவர்கள், மாநிலச் செயலாளர் @VinojBJP
உள்ளிட்ட, தமிழக பாஜக-வின் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையை ஏவி பாஜக போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கனவு காண்கிறார். அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக சரித்திரம் இல்லை.
வரலாறு காணாத ஊழல் செய்து பணம் குவித்து, அதன் மூலம் அரசியல் செய்யும் வித்தகர்களான திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் மீதும், முக்கிய நிர்வாகிகள் மீதும் தொடுக்கப்பட்டிருக்கும் இந்த அதிகார துஷ்பிரயோகச் செயலை, உடனடியாக தமிழக காவல்துறை கைவிட வேண்டும் என்பதை கடுமையாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






