என் மலர்
நீங்கள் தேடியது "திமுக கூட்டணி"
- அனைத்து மாவட்ட தலைநகர்களில் 11ம் தேதி காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும்.
- திமுக., காங்கிரஸ்., விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன.
SIR நடவடிக்கைக்கு எதிராக திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 11ம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து மாவட்ட தலைநகர்களில் 11ம் தேதி காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
போராட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக., காங்கிரஸ்., விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன.
- வெளியூருக்கு சென்று இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்திக்க முடியவில்லை.
- ஜனவரியில் தான் கூட்டணி குறித்து ஆக்கப்பூர்வான பேச்சுவார்த்தை நடைபெறும்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுடன் தி.மு.க. கூட்டணி தலைவர் சந்தித்து பேசினார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ பரிசோதனை செய்து கொண்டார்.
தைலாபுரம் தோட்டத்தில் சிறிது நாட்கள் ஓய்வெடுத்த அவர் பின்னர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் தர்மபுரி, சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாசை சந்திக்க தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நேற்று மாலை நேரில் வந்தார்.
அப்போது அவர்கள் இருவரும் தமிழக அரசியல் நிலவரம் மற்றும் பா.ம.க. உட்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது பா.ம.க. செயல் தலைவரும், டாக்டர் ராமதாசின் மகளுமான ஸ்ரீகாந்தி, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
டாக்டர் ராமதாசை சந்தித்து விட்டு வெளியே வந்த ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் வெளியூருக்கு சென்று இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்திக்க முடியவில்லை.
இதனால் அவரை சந்தித்து நலம் விசாரித்தேன். பூரண குணமடைந்து உடல் நலத்துடன் ராமதாஸ் உள்ளார். அவர் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
கருத்து வேறுபாடு இல்லாமல் வலிமையான சக்தியாக பா.ம.க. ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை ராமதாசிடம் தெரிவித்துள்ளோம். பா.ம.க. தொண்டர்களின் விருப்பமும் அதுதான். நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என மனதார விரும்புகிறோம்.
தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வருவது குறித்து தி.மு.க. தலைவர் மற்றும் பா.ம.க. நிறுவனர் பேசக்கூடிய விஷயம். தி.மு.க. கூட்டணியில் நாங்கள் ஒரு அங்கம்.
கூட்டணி பேசும் அதிகாரம் எங்களுக்கு கிடையாது. ஜனவரியில் தான் கூட்டணி குறித்து ஆக்கப்பூர்வான பேச்சுவார்த்தை நடைபெறும்.
பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் தவறுகள் நடைபெற்றுள்ளதால் தமிழகத்திலும் தவறுகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கூட்டியிருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு தான் எங்களது நிலைப்பாடு. திருத்தப்பணி நடைபெறும் போது மக்கள் விழிப்புடனும், அரசியல் கட்சியினர் கூடுதல் கவனத்துடனும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் கரூரில் உயிரிழந்த 41 பேரின் உறவினர்களை மகாபலிபுரம் அழைத்து விஜய் சந்தித்தது குறித்த கேட்ட போது,
விஜய் அன்றைய தினமே அல்லது ஒரு சில நாட்களிலே அவர்களை சந்தித்திருக்க வேண்டும். விஜய்யின் செயல் விரும்பக்கூடியது அல்ல. கண்டிப்பாக அவர் கரூரில் சென்று சந்தித்திருக்க வேண்டும் என்றார்.
தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க காய்களை ராமதாஸ் நகர்த்தி வருவதாக கூறப்படும் நிலையில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. அவரை நேரில் சந்தித்து பேசி இருப்பது குறிப்பிடத் தக்கது.
- சிபிஐ மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- மு.வீரபாண்டியின் சிபிஐ கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
10 ஆண்டுகளாக இப்பொறுப்பில் முத்தரசன் இருந்த நிலையில், சென்னை சூளைமேட்டில் நடந்த மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிபிஐ-ன் புதிய மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,"தமிழ்நாட்டை மத அடிப்படைவாதம் சுற்றியுள்ள நிலையில், சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற உழைப்போம்" என்றார்.
- அதிமுக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு சுட்டிக்காட்டியது.
- இபிஎஸ்-க்கு இப்படி எல்லாம் பேச வேண்டும் என்று யாரோ சொல்லித் தருகிறார்கள் என்றுதான் நான் கருதுகிறேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டசி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுகவை பாஜகவை விழுங்கி சரித்துவிடும் என்று திரும்ப திரும்ப விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்புணர்வோடு சுட்டிக் காட்டியது. கவலையோடு சுட்டிக்காட்டியது.
அதிமுக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு சுட்டிக்காட்டியது.
ஆனால், அதை அப்படியே திருப்பி விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக விழுங்கிவிடும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார்.
அவருக்கு இப்படி எல்லாம் பேச வேண்டும் என்று யாரோ சொல்லித் தருகிறார்கள் என்றுதான் நான் கருதுகிறேன். அவராகவே இந்த கருத்தை சொல்கிறார் என்று என்னால் ஏற்க முடியவில்லை.
அதிமுகவிற்கு எதிராக பேசுவதாக அவர் கருதுகிறார் என்று நினைக்கிறேன். அதிமுக தொண்டர்கள் நான் எதற்காக சொல்கிறேன் என்று அவர்கள் புரிந்துக்கொள்வார்கள். எடப்பாடி பழனிசாமியும் உணருவார்.
ஆனால், சேராத இடத்தில் சேர்ந்திருக்கின்ற சூழலில் அவர் இப்படி எல்லாம் பேசுகிறார் என்று நான் கருதுகிறேன். அப்படி பேசினால் வருத்தப்படுவதற்கும் எதுவுமில்லை.
2021ம் ஆண்டில் இருந்து ஓரிரு பொதுத்தேர்தலைத் தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணியில் தான் விசிக பயணிக்கிறது. மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து இன்று ஒரு மாநில கட்சியாக உருவாகி இருக்கிறது. அங்கீகாரம் பெற்றிருக்கிறது.
விசிக வளர்ச்சி அடைந்திருக்கிறதே தவிர.. வீழ்ச்சி அடையவில்லை. ஆகவே அவர், திரித்துப் பேசுவதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைப்பு
- எடப்பாடி பழனிசாமி கூட்டணி அழைப்புக்கு விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு மறுப்பு.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் கடலூர் மாவட்டம் சிதரம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, திமுக கூட்டணியில் சீட்டுகளை குறைத்து விடுவார்கள் என்று, அதிமுகவுடன் கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும், அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் என்றார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி கூட்டணி அழைப்புக்கு விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்," திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலிமையாக உள்ளது. நாங்கள் இந்த கூட்டணியில்தான் தொடர்வோம்.
அதிமுக ஆட்சி காலத்திலும் கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டது" என்றார்.
- அம்பேத்கர் வழியில் நடப்பதை பற்றி சொல்வதற்கு முதலமைச்சருக்கு அருகதை கிடையாது.
- கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தான் செய்கிறார்கள்.
சென்னை:
மத்திய மந்திரி எல்.முருகன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திரமோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மற்றும் ஆட்சி பொறுப்பு குறித்து அமித்ஷா என்ன சொல்கிறாரோ அது தான் முடிவு. அவர் எங்கள் தேசிய தலைவர். அவர் சொல்வதுதான் வேதவாக்கு.
தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன், வைகோ மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியேறும் சூழலில் இருக்கிறது. தி.மு.க. கூட்டணி சுக்கு நூறாக உடைய போகிறது.
எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது. தமிழக அரசிடம் நிதி இல்லாததால் தான் அறநிலையத்துறை நிதியை எடுத்து செலவு செய்கிறார்கள். கோவிலை விட்டு அரசாங்கம் வெளியேற வேண்டும்.
சமூக நீதி விடுதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. அங்கு எந்த வசதியும் இல்லை. விடுதியை முதலமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும். இந்த அரசு எல்லா துறையிலும் தோல்வி அடைந்து விட்டது.
அம்பேத்கர் வழியில் நடப்பதை பற்றி சொல்வதற்கு முதலமைச்சருக்கு அருகதை கிடையாது.
இந்த அரசுக்கு தமிழக மக்கள் மீது எந்த நலனும் இல்லை. 4 ஆண்டுகளாக எந்த திட்டமும் செய்யவில்லை. கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தான் செய்கிறார்கள்.
இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
- மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு எடுக்கும்.
- வைகோ கோபப்படுவதால் அவர் இழந்தது தான் அதிகம். கோபப்பட்டாலும் அவர் நல்ல மனிதர்.
கே.கே.நகர்:
ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி யாக ம.தி.மு.க. விளங்குகிறது என்பதை எடுத்துரைக்கும் வகையில் செப்டம்பரில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தது தவறானது என்பதை வைகோ வெளிப்படையாக கூறி உள்ளார். அதற்காக அ.தி.மு.க. தீண்டகூடாத கட்சி அல்ல. எம்.ஜி.ஆரையோ ஜெயலலிதாவையோ அவர் இழிவுபடுத்தி எதுவும் கருத்து கூறவில்லை.
மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு எடுக்கும்.
ம.தி.மு.க. வின் தொண்டர்களையோ நிர்வாகிகளையோ தி.மு.க.வில் சேர்க்கவில்லை.
ம.தி.மு.க.வில் இன்னும் சிலர் ஒதுங்கி இருக்கிறார்கள். தலைமைக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேறு சில இயக்கங்களில் இணையலாம். அது அவர்களின் உரிமை.
கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தலைவர் தான் முடிவு எடுப்பார்.
ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் காலி நாற்காலிகளை படம் எடுத்த பத்திரிக்கையாளர்களை அடிக்க வேண்டும் என வைகோ கூறவில்லை.
வைகோ கோபப்படுவதால் அவர் இழந்தது தான் அதிகம். கோபப்பட்டாலும் அவர் நல்ல மனிதர்.
பொடா சட்டம் வந்த பொழுது வைகோ அதை ஏற்றுக்கொள்ள கூடாது என பாராளுமன்றத்தில் பேசினார். பொடாவில் பத்திரிக்கை துறையினரையும் கைது செய்யலாம் என இருந்தது அதை மட்டுமாவது நீக்க வேண்டும் என பேசியவர் வைகோ.
கூட்டணியில் 12 இடங்கள் வேண்டும் என ம.தி.மு.க. எங்கும் கேட்கவில்லை, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணி தலைமையுடன் பேசி தேர்தல் நேரத்தில் தலைவர் முடிவெடுப்பார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தமிழகத்தில் ஜெயலலிதா காலத்திலேயே கோவில் நிதியில் இருந்து கல்வி நிறுவனங்கள் கட்டினார்கள்.
- ஜெயலலிதாவை பழித்து பேசியவர்களுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளது.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் இயக்க சீரமைப்பு குறித்து மாவட்ட அளவிலான முதன்மை பயிற்சியாளர்கள் அறிமுகக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். இயக்க சீரமைப்பு மேலாண்மைக்குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என். ஹெக்டே ஆகியோர் உரையாற்றினர்.
முன்னதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக காங்கிரஸ் இயக்கத்தை சீரமைக்க, பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் கிராம கமிட்டி முதன்மை பயிற்சியாளர்கள் 100 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 12,525 பஞ்சாயத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிப்பார்கள்.
கிராம கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு 72 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் முழுமை பெறும். அனைத்து மாவட்டங்களிலும் கிராம கமிட்டி உறுப்பினர்களுக்கு நவீன அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் ஆயத்த பணிகளை முழுமையாக செய்து வருகிறோம்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளை கேட்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. சட்டமன்ற கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் கூடுதல் தொகுதிகளை கேட்டது அவரது சொந்த கருத்து.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வலிமையை நாங்கள் மேலிடத்தில் தெரிவிப்போம். கூடுதல் தொகுதி பெறுவது, ஆட்சியில் பங்கு போன்றவை குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும். அவர்களின் அனுமதி பெற்று தான் நான் எதுவும் சொல்ல முடியும். இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் பேசும்போது தொண்டர்களின் மனசாட்சியாக நான் செயல்படுவேன்.
தமிழகத்தில் ஜெயலலிதா காலத்திலேயே கோவில் நிதியில் இருந்து கல்வி நிறுவனங்கள் கட்டினார்கள். அதனை தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார்.
அ.தி.மு.க. திராவிட கட்சி அல்ல. அந்த காலம் மலையேறி போச்சு.. ஜெயலலிதாவை பழித்து பேசியவர்களுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகால போலீஸ் காவலில் மரணம் அடைந்தவர்களை த.வெ.க. தலைவர் விஜய் சந்திப்பதாக வரும் செய்திகளை பார்த்தால் அவர் அரசியல் செய்வதாக தெரிகிறது. அவரது அரசியல் வேறு, எங்கள் அரசியல் வேறு.
பெருந்தலைவர் காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்ற குடியாத்தத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் 13-ந்தேதி சென்னையில் தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முப்பெரும் விழா நடக்கிறது. இதை சிறப்பாக நடத்த இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில், முன்னாள் மாநில தலைவர்கள் கே.வி.தங்க பாலு, திருநாவுக்கரசர், மாநில துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், கே.விஜயன், எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், அசன்மவுலானா, துரை சந்திரசேகர், பொதுச்செயலாளர் பி.வி.தமிழ்செல்வன், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன், மற்றும் வழக்கறிஞர் நரேஷ் குமார், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஓட்டேரி சாலைக்கு இரட்டைமலை சீனிவாசன் பெயரை சூட்டிய மாநகராட்சிக்கும் தமிழக அரசுக்கும் நன்றி.
- அ.தி.மு.க.வுடன் விஜய் கட்சி சேர்ந்தால் கூட்டணி பலமாக இருக்கும் என்ற வியூக கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை.
இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளையொட்டி சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்து செம்மார்ந்த வீரவணக்கம் செலுத்தி உள்ளோம். திராவிட அரசியலில் முன்னோடி, நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் அம்பேத்கருக்கு முன்னோடியாக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர்.
ஓட்டேரி சாலைக்கு இரட்டைமலை சீனிவாசன் பெயரை சூட்டிய மாநகராட்சிக்கும் தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி கல்லூரி விடுதிகளுக்கு சமூகநீதி விடுதி என்று பெயரை மாற்றம் செய்து அறிவித்த முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதனை விடுதலை சிறுத்தை வரவேற்கிறது.
தேர்தல் களப்பணிகள் விடுதலை சிறுத்தைகள் முதன்மையானது அல்ல. தேர்தல் நெருங்கி வரும்போது அதனை தீவிரப்படுத்துவோம். அ.தி.மு.க.வுடன் விஜய் கட்சி சேர்ந்தால் கூட்டணி பலமாக இருக்கும் என்ற வியூக கேள்விகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கின்றன. இந்த கூட்டணி கட்டுக்கோப்பான கூட்டணி. அதில் உறுதியாக இருக்கிறோம். தி.மு.க. கூட்டணியில் இருந்தே தேர்தலை சந்திப்போம். புதிய மாவட்டச் செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்ற முடியாது. பெரும்பாலான வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றியுள்ளது.. முக்கிய சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பனையூர் பாபு எம்எல்ஏ, தலைமை நிலைய செய லாளர் பாலசிங்கம், பாவலன், சேகுவாரா, மேலிட பொறுப்பாளர்கள் செல்லத்துரை, இரா. செல்வம், மாவட்டச் செயலாளர்கள் சேத்துப்பட்டு இளங்கோ, கரிகால் வளவன், சௌந்தர், வக்கீல் அப்புனு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- திராவிட இயக்கத்தை அழிக்க வேண்டும் என சனாதன சக்திகள் செயல்படுகின்றன.
- 2026 தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றார் வைகோ.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துள்ளார்.
அப்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த நிலையில் சந்தித்துள்ளார்.
முதலமைச்சரை சந்தித்த பின்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கலைஞருக்கு நான் அளித்த வாக்குறுதிப்படி, என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதியாக இருப்பேன்.
2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும்.
திராவிட இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. திராவிட இயக்கத்தை அழிக்க வேண்டும் என சனாதன சக்திகள் செயல்படுகின்றன.
இமயத்தைக் கூட அசைத்து விடலாம், திராவிட இயக்கத்தை அசைக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இரட்டை இலக்க என்கிற வார்த்தை கூட என் வாயில் இருந்து வரவில்லை.
- மதிமுக 12 தொகுதிகளை கோருகிறது என்று தலைப்புச் செய்தியாக போட்டுவிட்டீர்கள்.
சென்னை எழும்பூரில், மதிமுக சார்பில் அதன் தலைவர் வைகோ தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது அவர் கூறியதாவது:-
திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளை நான் கேட்கவே இல்லையே. பொய்களை பரப்புவதற்கு என்றே ஒரு கூட்டம் இருக்கிறது.
கூட்டத்தின்போது அந்த ஒன்றரை மணி நேரத்தில் இரட்டை இலக்க என்கிற வார்த்தை கூட என் வாயில் இருந்து வரவில்லை.
அங்கீகாரம் வேண்டும் என்றால் 8 சட்டமன்ற உறுப்பினர்களாவது ஜெயிக்க வேண்டும். அதன் அடிப்படையில் 12 தொகுதிகள் கேட்கலாம். ஆனால், அதுகூட என்னுடைய முடிவு அல்ல. தலைமைக் கழகம்தான் தீர்மாணிக்கும் என்று முதன்மைச் செயலாளர் பதில் அளித்தார்.
ஆனால், இரட்டை இலக்க மட்டும் எடுத்துக்கொண்டு செய்தியாளர்கள் மதிமுக 12 தொகுதிகளை கோருகிறது என்று தலைப்புச் செய்தியாக போட்டுவிட்டீர்கள்.
8 தொகுதியில் ஜெயிச்சா தான் அங்கீகாரம் கிடைக்கும் என்றால் அதைவிட கூடுதலாக கேட்போம் என்று பொதுக்குழுவில் கூறினோம். ஆனால், அதுகுறித்து எதுவும் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ம.க.வில் குழப்பம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
- ராமதாஸ், அன்புமணி இடையிலான பிரச்சனையை சரி செய்ய நான் யார்?
திண்டிவனம்:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இன்று தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தார். அவர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார். பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை செல்வபெருந்தகை பார்த்து நலம் விசாரித்தார். அப்போது டாக்டர் ராமதாஸ் உடன் இருந்தார். இந்த நிலையில் செல்வபெருந்தகை டாக்டர் ராமதாசை சந்தித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமதாசுடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை கூறுகையில்,
* ராமதாசுடனான சந்திப்பு அரசியலுக்கு அப்பாற்பட்ட சந்திப்பு.
* சந்திப்பில் கூட்டணியும் இல்லை, அரசியலும் இல்லை.
* கூட்டணியில் பா.ம.க. இணைவது தொடர்பாக தி.மு.க. தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்.
* பா.ம.க.வில் குழப்பம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
* பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு பா.ஜ.க.வே காரணம்.
* எங்கெல்லாம் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளதோ, அந்த கட்சிகளை உடைத்து விடுவர், அதுதான் வாடிக்கை.
* அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தையும் பா.ஜ.க. விரைவில் சுவாகா செய்துவிடும்.
* ராமதாஸ், அன்புமணி இடையிலான பிரச்சனையை சரி செய்ய நான் யார்?
* தமிழ்நாட்டிற்கு தேவையான முடிவை ராமதாஸ் எடுப்பார் என்றார்.






