search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "viduthalai siruthaigal party"

    • 1937 ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண அரசு பள்ளிகளில் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பித்தது.
    • நடராசனின் இறுதி ஊர்வலமும், தாளமுத்துவின் இறுதி ஊர்வலமும் பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றது.

    மொழிப்போர் தியாகிகளை நடராசன், தாளமுத்துவுக்கு சிலை நிறுவப்படும் என்று முதலமைச்சர் அறிவித்ததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோளை ஏற்று மொழிப்போர் ஈகியர், நடராசன், தாளமுத்து இருவருக்கும் உருவச் சிலைகள் எழுப்பப்படும் என அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    1937 ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண அரசு பள்ளிகளில் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பித்தது. அதை எதிர்த்து பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தலைமையில் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது.

    அந்தப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைது செய்யப்பட்டு, சிறைப்படுத்தப்பட்ட மாவீரன் நடராசன் 1939 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் சிறையிலேயே உயிர்நீத்தார்.

    அவரைத் தொடர்ந்து 1939 மார்ச் மாதம் 11 ஆம் நாள் தாளமுத்துவும் சிறையிலேயே உயிரிழந்தார். நடராசனின் இறுதி ஊர்வலமும், தாளமுத்துவின் இறுதி ஊர்வலமும் பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றது.

    தாளமுத்துவை அடக்கம் செய்துவிட்டு மூலக் கொத்தளம் இடுகாட்டில் உரையாற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள் " விடுதலைப் பெற்ற தமிழ்நாட்டில் பெரியாரை நடுவில் வைத்து இறந்த இரு மணிகளையும் பக்கத்தில் வைத்து உருவச் சிலை எழுப்ப வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

    இதுவரையிலும் செயல் வடிவம் பெறாமலிருந்த பேரறிஞர் அண்ணாவின் அறிவிப்பைத்தான் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் முன் வைத்தோம்.

    தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் உழைத்தவர்களைப் பெருமைப்படுத்திவரும் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோளை ஏற்று மொழிப்போர் ஈகியர் நடராசன், தாளமுத்து ஆகியோருக்குச் சிலை எழுப்பிச் சிறப்பு சேர்ப்பது பாராட்டுக்குரியது.

    பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்தவாறு அந்தச் சிலைகளைத் தந்தை பெரியார் சிலையோடு சேர்த்து நிறுவ வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    1965 ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் போலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இராசேந்திரனின் நினைவு நாள் இன்று( 27.01.2025).

    முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் நுழைவு வாயிலில் அவருக்குச் சிலை எழுப்பியுள்ளார்.

    அந்தச் சிலையின் பீடத்தை மேம்படுத்தி அழகுபடுத்த வேண்டுமென்றும், அவரை அடக்கம் செய்த பரங்கிப்பேட்டையில் இராசேந்திரனுக்கு நினைவு மண்டபம் ஒன்றை எழுப்பி அவரது ஈகத்தைப் பெருமைப்படுத்த வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • குற்றவாளி ஞானசேகரனுக்கு பிணை வழங்கக்கூடாது.
    • குற்ற பத்திரிகை தாக்கல் செய்து சிறையில் வைத்து விசாரிக்க வேண்டும்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக ஆதங்கத்துடன் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, " நாளை காலை 10 மணிக்கு என் வீட்டின் முன்பு என்னை நானே சாட்டையால் 6 முறை அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளேன். திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன். 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். முருகப்பெருமானிடம் முறையிட போகிறேன்.

    நாளை முதல் எனது அரசியல் வேறு மாதிரி இருக்கும். ஆரோக்கியமான அரசியல், நாகரீகமான அரசியல், விவாதம், மரியாதை எல்லாம் இருக்காது" என்றார்.

    இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார்.

    அப்போது, அண்ணாமலையின் போராட்ட அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    இதுகுறித்து பதில் கூறிய திருமாவளவன் கூறியதாவது:-

    அண்ணா பல்கலைக்கழக விவகாரம் வேதனைக்குரியது. ஞானசேகரன் உடனடியாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குற்றவாளி கைது செய்யப்பட்டது ஆறுதல் அளிக்கிறது.

    குற்றவாளிக்கு பிணை வழங்கக்கூடாது. குற்ற பத்திரிகை தாக்கல் செய்து சிறையில் வைத்து விசாரிக்க வேண்டும்.

    ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் தொடர்பு இருப்பதுபோல் காட்டுவது ஆதார அரசியல்.

    அண்ணாமலை பரபரப்பு அரசியல் செய்ய விரும்புகிறார். அதிமுக எதிர்க்கட்சி இல்லை. பாஜக தான் எதிர்க்கட்சி என காட்ட நினைக்கிறார்.

    லண்டன் போயிட்டு வந்த பிறகு அண்ணாமலை ஏன் இப்படி ஆனார் என தெரியவில்லை.

    அண்ணாமலையின் போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியவையாக மாறிவிட கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எங்களின் கவலை அதிமுக பலவீனப்பட்டால் அந்த இடத்தில் பாஜக வந்து அமர்ந்துவிடும் என்பது தான்.
    • திமுக தேர்தல் கட்சி, ஆண்ட கட்சி, ஆளுகின்ற ஆட்சி அதை விமர்சிக்கலாம், விமர்சிக்காமல் இருக்க முடியாது.

    சென்னையில் நடைபெற்ற 'என் பெயர் அம்பேத்கர்' என்ற நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்துக்கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திராவிட கட்சிகளுடன் முரண்பாடு, மாறுபட்ட கருத்துக்கள், விமர்சனங்கள் எங்களுக்கும் உண்டு.

    ஆனால், திராவிட கட்சிகளை பலவீனப்படுத்திவிட்டு சனாதன கட்சிகள் உள்ளே வர அனுமதிக்க முடியாது.

    அதிமுக பாஜகவை விட்டு வெளியே வந்தால் தான் எங்களை தற்காத்துக் கொள்ள முடியும் என ஏன் சொல்கிறோம் என புரியாமல் அவதூறு பரப்புகிறார்கள்.

    எங்களின் கவலை அதிமுக பலவீனப்பட்டால் அந்த இடத்தில் பாஜக வந்து அமர்ந்துவிடும் என்பது தான்.

    திமுக தேர்தல் கட்சி, ஆண்ட கட்சி, ஆளுகின்ற ஆட்சி அதை விமர்சிக்கலாம், விமர்சிக்காமல் இருக்க முடியாது.

    திமுகவை விமர்சிப்பது என்ற போர்வையில் ஒட்டுமொத்த திராவிட அரசியல் சித்தாந்தத்தையே விமர்சிப்பது ஆபத்தானது.

    எந்த பதவிக்கும் ஆசைப்படாமல், எதிர்பார்க்காமல் செயல்பட்டு வருகிறோம்.

    திமுகவுக்கு முட்டு கொடுக்கிறீர்களா என்று கேட்கிறார்கள், திமுக திராவிட அரசியலை பேசுகின்ற ஒரு அரசியல் கட்சி.

    திராவிட அரசியல் என்பது திமுக அரசியலோடு மட்டுமே சுருங்கி விடக் கூடியது அல்ல.

    திராவிட அரசியல் என்பது ஒரு நொடிய பாரம்பரியம் உள்ள ஆரிய எதிர்ப்பு அரசியல். அதனால்தான் என்ன பாதிப்பு, விமர்சனங்கள் வந்தாலும் திமுக கூட்டணியில் விசிக நீடிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விசிக-ல் இருந்து தான் முழுமையாக விலகுவதாக, அக்கட்சியின் தலைவர் தொல்,திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜூனா கடிதம்
    • ஆதவ் அர்ஜூனா வி.சி.கவில் இருந்து விலகியது தொடர்பாக இயக்குனர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக ஆதவ் அர்ஜூனா அறிவித்துள்ளார்.

    ஆதவ் அர்ஜூனாவை 6 மாதங்கள் இடைநீக்கம் செய்து கட்சியின் தலைமை அறிவித்திருந்த நிலையில், கட்சியில் இருந்து தான் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து தான் முழுமையாக விலகுவதாக, அக்கட்சியின் தலைவர் தொல்,திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜூனா கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், "நான் என்றும் மதிக்கும் அன்புத் தலைவருக்கு வணக்கம்" என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அந்த கடிதத்தில், "கட்சியிலிருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன்" என அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், ஆதவ் அர்ஜூனா வி.சி.கவில் இருந்து விலகியது தொடர்பாக இயக்குனர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இயக்குனர் வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தாமாகவே கட்சியிலிருந்து நீக்குவார்கள் அதிலிருந்து அரசியல் செய்யலாம் என்று காத்திருந்த செல்வந்தருக்கு அண்ணன் திருமா அவர்களின் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. அதனால் தானாகவே கட்சியிலிருந்து விலகிவிட்டார். எதுவாயினும் விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது நன்றே.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திருமாவளவனின் வரிகளும் சுட்டிக்காட்டி ஆதவ் அர்ஜூரா பதிவு வெளியிட்டுள்ளார்.
    • விசிகவில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா அதிரடியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா அதிரடியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், திருமாவளவனின் வரிகளும் சுட்டிக்காட்டி ஆதவ் அர்ஜூரா பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆயிரம் கைகள் மறைத்தாலும்…!

    'அதிகாரத்தை அடைவோம்' என்று எழுச்சித் தமிழர் எந்த முழக்கத்தோடு இந்த கட்சியைக் கட்டமைத்தாரோ அந்த அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எனது பயணத்தைக் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்சியை அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பணியினையே நான் முழுமையாக மேற்கொண்டேன். கட்சியின் பிரச்சார வியூகத்தையும் கொள்கை வழியிலேயே கட்டமைத்தேன். நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் தோழர்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் இருப்பேன்.

    தலைவரின் கையெழுத்திட்ட துணைப் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற போது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது தலைவரின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன்.

    தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து முழங்கிக்கொண்டு இருப்பதே நேர்மையான மக்கள் அரசியலாக இருக்கும் என்ற எனது உள்ளார்ந்த எண்ணத்தை தோழர்கள் மத்தியில் இப்போதும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக, 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை' என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் உடைத்தெறிந்து, ஜனநாயக வழியில் அதைப் பெறும் போராட்டத்தில் பங்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன். கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாகப் பயணிக்கிறேன். மக்களே ஜனநாயகத்தின் நீதிபதிகள்.

    கருத்தியல் பேசிக்கொண்டு ஊழலை உருவாக்கும் போலி கருத்தியல்வாதிகளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் காட்டுவோம். மத பெரும்பான்மைவாதம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமைத்தனம், சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல், எளிய மக்களுக்கு எதிரான ஆதிக்க மனநிலை என இந்த சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

    புரட்சியாளர் அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கி அரசியல் பயணத்தைத் துவங்கினேன். அந்த கொள்கைகளின் வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும். புரட்சியாளர் அம்பேத்கர் சுட்டிக்காட்டியது போல், 'சிந்திப்பதற்கான சுதந்திரமே, உண்மையான சுதந்திரம்' என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு புதிய ஜனநாயகத்தை உருவாக்குவோம். எனது சிறுவயதிலிருந்து ஏமாற்றம், தோல்விகள், இழப்புகள் எனக் காலம் தந்த நெருக்கடிகளே என்னை உத்வேகத்துடன் பயணிக்கச் செய்தன. கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையினையும் அந்த காலத்தின் கரங்களில் ஒப்படைக்கிறேன்.

    ஆயிரம் கைகள் மறைத்தாலும்…

    ஆதவ(ன்) மறைவதில்லை!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அமெரிக்கா மாதிரி வெள்ளை, கருப்பு என்கிற பிரிவு இங்கு கிடையாது.
    • தமிழ்நாடு மீனவர்களை காக்க தவறிய அரசு இந்த ஒன்றிய அரசு.

    சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது, மேலவீதி பகுதியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    சாதியம் தான் என் எதிரி. என் வாழ்க்கையில் சாதிக்கு இடமில்லை. என் சினிமாக்களிலும் அப்படிதான். பிறகு, சினிமாவிற்கு ஏன் ஜாதி பெயர் வைக்கிறீர்கள் என்று கேட்கலாம். குடியின் கொடுமையைப் பற்றி நான் ஒரு குறும்படம் எடுக்க நேர்ந்தால், அதன் மையப் பாத்திரம் யாராக இருப்பான் ? ஒரு குடிகாரனாகத் தான் இருப்பான். அவன் இல்லாமல் அந்த கருத்தை சொல்ல முடியாது.

    அதுபோல், சாதி வெறியனை மையப்படுத்தி தான், படத்தின் நிறைவு கருத்தை சொல்ல முடியும். அவன் பாழான கதையையும், பண்பட்ட கதையையும் கூறுவதால் அது சாதியை உயர்த்திப்பிடிப்பது ஆகாது. விமர்சிப்பதாகும். இது பதில் அல்ல. விளக்கம்.

    ஆனால், சாதியே இல்லை என்கிறீர்கள். சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிறீர்களே என்று கேட்கலாம். இன்னும் எத்தனை பேர் அடிகோட்டு விளிம்பில் இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரிய வேண்டும்.

    ஏனென்றால், இங்கு அமெரிக்கா மாதிரி வெள்ளை, கருப்பு என்கிற பிரிவு கிடையாது. மாநிறத்தில் இருப்பவனும் விளங்கு போட்டு இருப்பான். கருப்பாக இருப்பவனும் விளங்கு போட்டு இருப்பான். அவனை எல்லாம் விடுவிக்க வேண்டும்.

    தமிழ்நாடு மீனவர்களை காக்க தவறிய அரசு இந்த ஒன்றிய அரசு. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் எப்போதும் இல்லாத அளவில் நம் மீனவர்கள் கைதாவதும், சிறையில் அடைக்கப்படுவதும் இன்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

    ஒன்றிய அரசு என்று சொன்னால் இவர்களுக்கு கோபம் வருகிறது. இவர்கள் ஒன்றிய அரசு கிடையாது. மக்களோடு ஒன்றாத அரசு.

    இதனால் தான் திருமாவளவனோடு தோள் உரசி களம் காண்கிறேன்.

    தமிழ்நாட்டின் குரலாக ஸ்டாலின் திகழ்கிறார்.. இளைஞர்களின் குரலாக தம்பி உதயநிதி திகழ்கிறார்.. குரலற்றவர்களின் குரலாக பெருஞ்சிறுத்தை திருமாவளவன் இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிதம்பரத்தில் 6-வது முறையாக விசிக தலைவரான தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார்.
    • பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி.

    பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அதன்படி, சிதம்பரத்தில் 6-வது முறையாக விசிக தலைவரான தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார்.

    விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார்.

    பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற்கொண்டது.

    அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் தொல். திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    கடந்த தேர்தலிலும் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது.

    இந்நிலையில், மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    நாம் தமிழர், மதிமுக உள்ளிட்ட கட்சிகளை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறையை கண்டித்து விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் மணிப்பூர் மாநில அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    விளாத்திகுளம்:

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறையை கண்டித்து விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வடக்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் கதிரேசன் மற்றும் பெஞ்சமின், பிராங்கிளின், மோட்சம், பிரபாவளவன், சடையாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொண்டரணி வில்லாளன் ரெஸ்லின் வரவேற்று பேசினார். இதில் மணிப்பூர் மாநில அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் கோவில்பட்டி நகர செயலாளர் கருப்பசாமி பாண்டியன், ஒன்றிய செயலாளர் மாடசாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் மனுவேல், தொழிலாளர் அணி அமைப்பாளர் பரமசிவம், விளாத்திகுளம் நகர செயலாளர் அழகு முனியசாமி, கணேசன், மகளிர் அணி சிவனம்மாள், முடியப்பராஜ், சேகர், சங்கர், பெரியசாமி, கதிரேசன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் மோகன் நன்றி கூறினார்.

    ஆரணி அருகே விடுதலை சிறுத்தை சாலை மறியல்

    ஆரணி:

    ஆரணி அருகே கொடிகம்பத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் செய்தனர்.

    ஆரணி அருகே உள்ள 12 புத்தூர் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் கட்சி கொடிகம்பம் வைக்கப்பட்டுள்ளது. இந்த கொடிகம்பத்தை நேற்றிரவு மர்ம கும்பல் தீவைத்து எரித்து தப்பிச்சென்று விட்டனர்.

    இன்று காலை கொடிக்கம்பம் எரிக்கபட்டிருப்பதை கண்ட விடுதலை சிறுத்தையினர் ஆரணி-பூசிமலைக்குப்பம் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது எங்கள் கட்சிகொடியை சேதப்படுத்திய மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றனர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    காரைக்குடி,

    காரைக்குடி பெரியார் சிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பேச்சினைக் கண்டித்தும், அதற்காக அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார் தலைமை தாங்கினார். மாநில தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இளையகவுதமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நில உரிமை மீட்பு இயக்கத்தின் மாநில துணை செயலாளர் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் தமிழேந்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் கணேசன், காரைக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் சேசு ராஜேந்திரன் உள்பட கலந்து கொண்டனர்.

    இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை மற்றும் சார்பு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் நிறைவுற்ற நிலையில் அவர்கள் திடீரென பஸ் மறியலுக்கு முயன்றனர்.

    அவர்களை போலீசார் தடுத்து அனுப்பி வைத்தனர். அதன்பின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனை சந்தித்து எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.
    திருமாவளவனை விமர்சித்து பேசிய எச்.ராஜாவை கைது செய்ய கோரி விடுதலை சிறுத்தையினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை விமர்சித்து பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசி இருந்தார்.

    இதை கண்டித்தும், அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் புதுவை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதுவை - விழுப்புரம் சாலையில் மூலகுளத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு உழவர்கரை தொகுதி செயலாளர் தீந்தமிழன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அன்பரசன், விடுதலை வளவன், ஆற்றல் அரசு, அங்காளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    15 நிமிடத்திற்கும் மேலாக மறியல் செய்ததால் அப்பகுதியில் போக்கவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட சுமார் 45 பேரை கைது செய்தனர்.

    இதுபோல் தவளகுப்பம், புதுவை- கடலூர் சாலை 4 முனை சந்திப்பில் வி.சி.க. வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொகுதி செயலாளர் வெண்மணி தலைமை தாங்கினார். சுடர்வளவன், இன்பதமிழன், புரட்சி வளவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் அமுதவன், தமிழ்மாறன், தமிழ்வளவன், உள்ளிட்ட 150 பேர் இதில் கலந்து கொண்டனர்.

    சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீ சார் அப்புறப்படுத்த முயற்சித்தனர். அப்போது போலீசாருக்கும் அங்கிருந்த வர்களுக்கும் தள்ளு முள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து தவளகுப்பம் போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இந்த திடீர் மறியலால் கடலூர்- புதுவை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கோட்டக்குப்பம் பைபாஸ் ரவுண்டானா அருகே நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் விழுப்புரம் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் தமிழ்மொழி தலைமை தாங்கினார்.

    தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட துணை செயலாளர் பாவலன் முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை செயலாளர் அப்துல் சமது உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

    திருமாவளவன் பற்றி அவதூறாக பேசிய எச். ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பற்றி அவதூறாக பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கடலூர் ஒன்றியம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரை செல்வன் தலைமையில் ரெட்டிச் சாவடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் சம்பத், தொகுதி அமைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கோ‌ஷம் எழுப்பப்பட்டது.

    கட்சியின் நிர்வாகிகள் முத்து, ஏழுமலை, ராஜ் குமார், காட்டு ராஜா, சத்திய ராஜ், திருநாவுக்கரசு, தலித் செவ்வேந்தன் உள்பட பலர் கலந்து கொண் டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று ரெட்டிச் சாவடி போலீஸ் நிலையத்தில் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்தனர்.

    இதேபோல் மாவட்ட செயலாளர் முல்லை வேந் தன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நெல்லிக்குப்பம் அண்ணா சிலை அருகில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பின்னர் கட்சி நிர்வாகிகள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த எச் ராஜா உருவபொம்மையை சாலைக்கு கொண்டு வந்து தீ வைத்து எரித்தனர். கண்டன கோ‌ஷம் எழுப்பினர். அங்கிருந்த நெல்லிக்குப்பம் போலீசார் எரிந்து கொண்டிருந்த உருவபொம்மையை அனைத்து எடுத்து சென்றனர்‌ பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர். பின்னர் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×